seevagachinthamani - 8



     7 கனகமாலையார் இலம்பகம்



#1557
இரங்கு மேகலை அல்குல் இன் கனி தொண்டை அம் துவர் வாய்
அரங்க கூத்திகண் அன்பின் மனையவள் துறந்து செல்பவர் போல்
பரந்த தீம் புனல் மருதம் பற்று விட்டு இன மயில் அகவும்
மரம் கொல் யானையின் மதம் நாறு அரும் சுரம் அவன் செலற்கு எழுந்தான்

#1558
கலவ மா மயில் எருத்தில் கடி மலர் அவிழ்ந்தன காயா
உலக மன்னவன் திருநாள் ஒளி முடி அணிந்து நின்றவர் போல்
பலவும் பூத்தன கோங்கம் பைம் துகில் முடி அணிந்து அவர் பின்
உலவு காஞ்சுகியவர் போல் பூத்தன மரவம் அங்கு ஒருங்கே

#1559
ஓங்கு மால் வரை வரையாடு உழக்கலின் உடைந்து உகு பெரும் தேன்
தாங்கு சந்தனம் தரள தழுவி வீழ்வன தகைசால்
ஆங்கண் மால் உலகு அளப்பான் ஆழி சங்கமொடு ஏந்தி
தேம் கொள் மார்பு-இடை திளைக்கும் செம்பொன் ஆரம் ஒத்து உளவே

#1560
வீழ்ந்து வெண் மழை தவழும் விண் உறு பெரு வரை பெரும் பாம்பு
ஊழ்ந்து தோல் உரிப்பன போல் ஒத்த மற்று அவற்று அருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின மதுகரம் பாட
சூழ்ந்து மா மயில் ஆடி நாடகம் துளக்குறுத்தனவே

#1561
கருவி தேன் என தூங்கும் கதிர் அணி இறுங்கொடு தினை சூழ்
பொருவில் யானையின் பழு போல் பொங்கு காய் குலை அவரை
அருவி ஐவனம் கரும்பும் அடக்கரும் கவை கதிர் வரகும்
உருவ எள் பயறு உழுந்தும் அல்லவும் எல்லை இன்று உளவே

#1562
யானை வெண் மருப்பு உலக்கை அறை உரல் ஐவனம் இடித்த
தேன் நெய் வாசவல் குவவி தீம் கனி வாழையின் பழனும்
ஊனை உண்டவர் உருகும் பசும் தினை பிண்டியும் ஒருங்கே
மானின் நோக்கியர் நோக்கி வழி-தொறும் ஈவது அ வழியே
#1563
குறிஞ்சி எல்லையின் நீங்கி கொடி முல்லை மகள் மகிழ்ந்து ஆட
செறிந்த பொன் இதழ் பைம் தார் கொன்றை அம் செல்வற்கு குரவம்
அறிந்து பாவையை கொடுப்ப தோன்றி அம் சுடர் ஏந்த
நிறைந்த பூம் குருந்து உகு தேன் நீர் பெய்து ஆர்த்தன சுரும்பே
#1564
அரக்கு உண் பஞ்சிகள் திரட்டி அரு மணி மரகத பலகை
பரப்பி இட்டன போல கோபங்கள் பயிர் மிசை பரவ
உரைத்த மென் தயிர் பித்தை கோவலர் தீம் குழல் உலவ
நிரை கண் மா மணி கறங்க நீள் நிலம் கடந்தனன் நெடியோன்
#1565
வள்ளி வாரிய குழியின் வளர் பொன்னும் வயிரமும் இமைக்கும்
சுள்ளி வேலியின் நீங்கி துறக்கம் புக்கிடும் என சூழ்ந்து
வெள்ளி வெண் திரள் விசித்து நிலத்தொடு தறி புடைத்தவை போல்
துள்ளி வீழ் உயர் அருவி வன கிரி தோன்றியது அவணே
#1566
அண்ணல் தான் செலும் முன்னா அணி மலர் பூம் பொழில் அதனுள்
வண்ண மா சுனை மா நீர் மணி தெளித்து அனையது ததும்பி
தண் என் தாமரை கழுநீர் நீலம் தாது அவிழ் ஆம்பல்
எண் இல் பன் மலர் கஞலி இன வண்டு பாண் முரன்று உளதே
#1567
கானகத்தின் ஏகுகின்றான் கடி பொழில் கவின் கண்டு எய்தி
தானத்தில் இருத்தலோடும் தையலாள் ஒருத்தி-தானே
வானத்தின் இழிந்து வந்த வானவர் மகளும் ஒப்பாள்
நானமும் பூவும் சாந்தும் நாற வந்து அருகு நின்றாள்
#1568
குறிஞ்சி பூம் கோதை போலும் குங்கும முலையினாள் தன்
நிறைந்த பொன் கலாபம் தோன்ற நெடும் துகில் விளிம்பு ஒன்று ஏந்தி
செறிந்தது ஓர் மலரை கிள்ளி தெறித்திடா சிறிய நோக்கா
நறும் புகை தூதுவிட்டு நகை முகம் கோட்டி நின்றாள்
#1569
அணிகல அரவத்தாலும் அமிழ்து உறழ் நாற்றத்தாலும்
பணிவரும் சிங்க நோக்கில் பணை எருத்து உறழ நோக்கி
மணி மலர் நாகம் சார்ந்து வழையோடு மரவ நீழல்
துணிவரும் சாயல் நின்றாள் தோன்றல் தன் கண்ணின் கண்டான்
#1570
கண்டவன் கண்ணின் நோக்க நடுங்கி தன் காதில் தாழ்ந்த
குண்டலம் சுடர ஒல்கி கொடி நடுக்குற்றது ஒப்ப
நுண் துகில் போர்வை சோர நுழை மழை மின்னின் நிற்ப
எண் திசை மருங்கும் நோக்கி இயக்கி-கொல் இவள் மற்று என்றான்
#1571
எண்ணத்தில் இயக்கி என்றே இருப்ப மற்று எழுதலாகா
வண்ண பூம் கண்கள் அம்பா வாள் நுதல் புருவம் வில்லா
உள் நிறை உடைய எய்வான் உருவ சாதகத்துக்கு ஏற்ப
பெண் நலம் கிடந்த பேதை பெண் நலம் கனிய நின்றாள்
#1572
முறுவல் முன் சிறிய தோற்றா முகை நெறித்து அனைய உண்கண்
குறு நெறி பயின்ற கூந்தல் குறும் பல் கால் ஆவி கொள்ளா
சிறு நுதல் புருவம் ஏற்றா சேர் துகில் தானை சோர
அறியுநர் ஆவி போழும் அநங்கனை ஐங்கணையும் எய்தாள்
#1573
வடு பிளவு அனைய கண்ணாள் வல்லவன் எழுதப்பட்ட
படத்து-இடை பாவை போன்று ஓர் நோக்கினள் ஆகி நிற்ப
அடி பொலிந்தார்க்கும் செம்பொன் அணி மணி கழலினான் அம்
மடத்தகை குறிப்பு நோக்கி மனத்து இது சிந்திக்கின்றான்
#1574
கடி மாலை சூடி கருப்பூரம் முக்கி
தொடை மாலை மென் முலையார் தோள் தோய்ந்த மைந்தர்
கடை மாலை மற்று அவரே கண் புதைப்ப செல்லும்
நடை மாலைத்து இ உலகம் நன்று-அரோ நெஞ்சே
#1575
நாவி அகலம் எழுதி நறு நுதலார்
ஆவி தளிர்ப்ப அவர் தோள் மேல் துஞ்சினார்
தூவி ஒழி புள்ளின் தோன்றி துயர் உழப்ப
காவி நெடும் கண் புதைத்து ஆங்கு அகல்வார் நெஞ்சே
#1576
இன் புகை ஆர்ந்த இழுதார் மென் பள்ளி மேல்
அன்பு உருகு நல்லார் அவர் தேள் மேல் துஞ்சினார்
தம் புலன்கள் குன்றி தளர தம் காதலார்
அன்பு உருகு கண் புதைத்து ஆங்கு அகல்வர் நெஞ்சே
#1577
என்பினை நரம்பில் பின்னி உதிரம் தோய்த்து இறைச்சி மெத்தி
புன் புறம் தோலை போர்த்து மயிர் புறம் பொலிய வேய்ந்திட்டு
ஒன்பது வாயில் ஆக்கி ஊன் பயில் குரம்பை செய்தான்
மன் பெரும் தச்சன் நல்லன் மயங்கினார் மருள என்றான்
#1578
வினை பெரும் தச்சன் நல்லன் மெய்ம்மை நாம் நோக்கல் உற்றால்
எனக்கு உற்று கிடந்தது என்று ஆங்கு இரு கணும் புதைத்து வைக்கும்
நினைப்பினால் பெரியர் என்னான் நீந்தினார் கலைகள் என்னான்
மனத்தையும் குழைய செத்தும் மாண்பினன் மாதோ என்றான்
#1579
என்று அவன் இருப்ப மாதர் என் வரவு இசைப்பின் அல்லால்
ஒன்றும் மற்று உருகல் செல்லான் என்று எடுத்து ஓதுகின்றாள்
மன்றல் அம் தோழிமாருள் வனத்து-இடை பண்ணை ஆட
குன்று-இடை குளிர்க்கும் மின் போல் குழாம் மழை முகட்டில் செல்வான்
#1580
மயில் இனம் இரிய ஆங்கு ஓர் மட மயில் தழுவி கொண்ட
வெயில் இளம் செல்வன் போல விஞ்சையன் என் கொண்டு ஏக
துயிலிய கற்பினாள் தன் துணைவி கண்டு இடுவித்திட்டாள்
அயில் இயல் காட்டுள் வீழ்ந்தேன் அநங்க மா வீணை என்பேன்
#1581
தாய் இலா குழவி போல சா துயர் எய்துகின்றேன்
வேய் உலாம் தோளினார்-தம் விழு துணை கேள்வ நின் கண்டு
ஆயினேன் துறக்கம் பெற்றேன் அளித்து அருளாதுவிட்டால்
தீயினுள் அமிர்தம் பெய்த ஆங்கு என் உயிர் செகுப்பல் என்றாள்
#1582
மணி எழு அனைய தோளும் வரை என அகன்ற மார்பும்
தணிவரும் கயத்து பூத்த தாமரை அனைய கண்ணும்
பணிவரும் பகுதி அன்ன முகமும் என்று அயர்ந்து காம
பிணி எழுந்து அவலிக்கின்ற பேதை நீ கேள் இது என்றான்
#1583
போதொடு நானம் மூழ்கி பூம் புகை தவழ்ந்து முல்லை
கோதை கண் படுக்கும் கூந்தல் குரை வளி பித்தோடு ஐயேய்
ஏதம் செய் மலங்கள் நெய்த்தோர் இறைச்சி என்பு ஈருள் மூளை
கோதம் செய் குடர்கள் புன் தோல் நரம்பொடு வழும்பிது என்றான்
#1584
விழுக்கொடு வெண் நஞ்சு அல்லா உகிர் மயிர் உமிழ் கண் பீளை
புழு பயில் குரம்பை பொல்லா தடி தடி கீழ்ந்த-போழ்தில்
விழித்து யார் நோக்குகிற்பார் பிள்ளையார் கண்ணுள் காக்கை
கொழிப்பரும் பொன்னின் தோன்றும் கொள்கைத்தால் கொடியே என்றான்
#1585
உருவம் என்று உரைத்தி-ஆயின் நிறைந்த தோல் துருத்தி தன்னை
புருவமும் கண்ணும் மூக்கும் புலப்பட எழுதி வைத்தால்
கருதுவது ஆங்கு ஒன்று உண்டோ காப்பிய கவிகள் காம
எரி எழ விகற்பித்திட்டார் இறைச்சிப்போர் இதனை என்றான்
#1586
காதல் மாமன் மட மகளே கரும் குழல் மேல் வண்டு இருப்பினும்
ஏதம் உற்று முரியும் நுசுப்பு என்று உன் இயல்பு ஏத்துவேன்
ஓதம் போல உடன்று உடன்று நைய நீ ஒண் தாமரை
கோதை போல்வாய் ஒளித்து ஒழிதல் கொம்பே குணன் ஆகுமே
#1587
வண்ண திங்கள் மதி முகத்த வாளோ கரும் கயல்களோ
உண்ணும் கூற்றோ ஒளி வேலோ போதோ உணர்கலேனால்
பண்ணின் தீம் சொலாய் படா முலை பாவாய் கொடியே பாங்கின்
உண்ணும் தேனே அமிர்தே என் இன்னுயிரே எங்கணாயோ
#1588
இலவம் போது ஏர் எழில் தகைய சீறடிகள் அஞ்சி ஒல்கி
புலவன் சித்திரித்த பொன் சிலம்பு நக பூ நிலத்து மேல்
உலவும்-போழ்தும் என் ஆவி மலர் மேல் மிதித்து ஒதுங்குவாய்
கலவ மஞ்ஞை அனையாய் கண் காதல் ஒழிகல்லேனால்
#1589
பணி செய் ஆயத்து பந்தாடுகின்றாயை கண்டு மாழ்கி
பிணி செய் நோயேன் யான் கிடப்ப பிறர்-வாய் அது கேட்டலும்
துணிக போதும் என விடுத்தாய் போந்தேன் துயர் உழப்ப நீ
மணி செய் மேகலையாய் மாற்றம் தாராய் மறைந்து ஒழிதியோ
#1590
இயக்கி நின்னோடு இணை ஒக்கும் என்று நலம் செகுப்பான்
மயக்கி கொண்டு போய் வைத்தாய் என் மாதரை தந்து அருள் நீ
நயப்ப எல்லாம் தருவல் என தொழுது நல் யானை தன்
வய பிடி கெடுத்து மாழாந்தது ஒப்ப மதி மயங்கினான்
#1591
மல்லல் தொல் வளத்து மத்திம நல் நாட்டு வண் தாமரை
புல்லும் பேரூர் புகழ் தத்தன் காதல் சின தத்தைக்கும்
செல்வ நாமற்கும் சித்திரமாமாலைக்கும் சுற்றத்தார்க்கும்
அல்லல் செய்தேன் அவண் சென்றால் என் உரைக்கேன் என் செய்கேனோ
#1592
உண்ணு நீர் வேட்டு அசைந்தேன் என உரைப்ப காட்டுள் நாடி
நண்ணி பொய்கை தலைப்பட்டு நல் தாமரை இலையினுள்
பண்ணி நீர் கொண்டு வந்தேன் படா முலை பாவாய் என்று
அண்ணல் ஆற்றாது அழுது அழுது வெந்து உருகி நைகின்றானே
#1593
குழை கொள் வாள் முகத்து கோல் வளையை காணான் குழைந்து அழுகின்ற
அழகன் சொல்லும் அணி செய் கோதை காமமும் கண்டும் கேட்டும்
முழவு தோளான் முறுவலித்து ஈங்கே இரு நீ என்று
இழைய சொல்லி இறையான் இளையானை எய்தினானே
#1594
என்னை கேளீர் என் உற்றீர் என்ன பெயரீர் என்றாற்கு
பொன் அம் குன்றின் பொலிந்த தோள் நம்பி ஒரு பொன் பூம் கொடி
என்னும் நீராளை ஈங்கே கெடுத்தேன் என் பாவத்தால்
பல் நூல் கேள்வி உடையேன் யான் பவதத்தன் என்பேன் என்றான்
#1595
கைப்பொருள் கொடுத்தும் கற்றல் கற்ற பின் கண்ணும் ஆகும்
மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கு ஓர் துணையும் ஆகும்
பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம் புகழும் ஆம் துணைவி ஆக்கும்
இ பொருள் எய்தி நின்றீர் இரங்குவது என்னை என்றான்
#1596
அன்பு நூலாக இன் சொல் அலர் தொடுத்து அமைந்த காதல்
இன்பம் செய் காம சாந்தின் கைபுனைந்து ஏற்ற மாலை
நன் பகல் சூட்டி விள்ளாது ஒழுகினும் நங்கைமார்க்கு
பின் செலும் பிறர் கண் உள்ளம் பிணை அனார்க்கு அடியது அன்றே
#1597
பெண் எனப்படுவ கேண்மோ பீடு இல பிறப்பு நோக்கா
உள் நிறை உடைய அல்ல ஓர் ஆயிரம் மனத்தவாகும்
எண்ணி பத்து அங்கை இட்டால் இந்திரன் மகளும் ஆங்கே
வெண்ணெய் குன்று எரி உற்றால் போன்று மெலிந்து பின் நிற்கும் அன்றே
#1598
சாம் எனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த-காலை
பூமனும் புனைதல் இன்றி பொற்புடன் புலம்ப வைகி
காமனை என்றும் சொல்லார் கணவன் கைதொழுது வாழ்வார்
தே மலர் திருவோடு ஒப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பர்
#1599
அன்னள் நின் தோழி ஐயா அவள் என்னை கண்ட கண்ணால்
பின்னை தான் பிறரை நோக்கா பெரு மட மாது-தன்னை
என்னை யான் இழந்து வாழுமாறு என இரங்கினானுக்கு
அன்னளோ என்று நக்கான் அணி மணி முழவு தோளான்
#1600
இனையல் வேண்டா இ மந்திரத்தை ஓதி நீ ஒருவில் ஏ அளவு
அனைய எல்லை சென்றால் இயக்கி கொணர்ந்து அருளும் நீ
புனை செய் கோல் வளையை கைப்படுதி என்று ஆங்கு அவன் போதலும்
அனைய மாதரை கண்டு ஆங்கு அடி புல்லி வீழ்ந்து அரற்றினான்
 
 
#1601
பட்ட எல்லாம் பரியாது உரைத்தான் அவளும் கேட்டாள்
விட்டாள் ஆர்வம் அவன்-கண் இவன் மேல் மைந்து உறவினால்
மட்டார் கோதை மனை துறந்தாள் மைந்தனும் மங்கை மேலே
ஒட்டி விள்ளா ஆர்வத்தனன் ஆகி உருவம் ஓதினான்
#1602
மெழுகு செய் படம் வீழ் முகில் மத்தகத்து
ஒழுகும் வெள் அருவி திரள் ஓடை சூழ்ந்து
இழுகு பொன் மதத்தின் வரை குஞ்சரம்
தொழுது வேய் முதல் தூசம் கொண்டு ஏறினான்
#1603
நிரைத்த தீவினை நீங்க நெடும் கணார்
வரை-கண் ஏறலின் வால் அரி பொன் சிலம்பு
உரைத்து மின் இருள் மேல் கிடந்தாலும் ஒத்து
அரைத்து அலத்தகம் ஆர்ந்தது ஒர் பால் எலாம்
#1604
சாந்தும் கோதையும் தண் நறும் சுண்ணமும்
ஆய்ந்த பூம் புகையும் அவியும் சுமந்து
ஏந்து பொன் விளக்கு ஏந்தி இடம் பெறா
மாந்தர் சும்மை மலிந்த ஒர் பால் எலாம்
#1605
துறந்த மன்னவர் தூ முடி தோள் வளை
நிறம் கொள் ஆரம் பைம் பூண் நிழல் குண்டலம்
பிறங்கு வெம் கதிர் மின்னொடு பின்னி வீழ்ந்து
உறங்குகின்றன போன்ற ஒர் பால் எலாம்
#1606
கருவி தேன் கலை கையுற கீண்டுடன்
மருவி பைம் கறி வாரி பழம் தழீஇ
வெருவி நாகம் பிளிற்ற விரைந்து உராய்
அருவி நின்று அதிரும் ஒரு பால் எலாம்
#1607
வெம் கதிர் கடவுள் வியன் தேர் வரை
தங்கு சந்தன கோட்டு-இடை பட்டு என
பொங்கு மான் குளம்பின் குடை பொன் துகள்
மங்குலாய் திசை யாவையும் அல்கின்றே
#1608
சுனைய நீலமும் சுள்ளியும் சூழ் மலர்
நனைய நாகமும் கோங்கமும் நாறு இணர்
சினைய சண்பகம் வேங்கையோடு ஏற்றுபு
முனைவன் மேல் துதி முற்று எடுத்து ஓதினான்
#1609
முனிமை முகடு ஆய மூவா முதல்வன்
தனிமை தலைமை தனது தான் என்ப
தனிமை தலைமை தனது தான் என்றால்
பனி மலர் தூய் நின்று பழிச்சவாறு என்னே
#1610
மலர் ஏந்து சேவடிய மால் என்ப மாலால்
அலர் ஏந்தி அஞ்சலி செய்து அஞ்சப்படுவான்
அலர் ஏந்தி அஞ்சலி செய்து அஞ்சப்படுமேல்
இலரே மலர் எனினும் ஏத்தாவாறு என்னே
#1611
களி சேர் கணை உடைய காமனையும் காய்ந்த
அளி சேர் அற வழி அண்ணல் இவன் என்பர்
அளி சேர் அற வழி அண்ணல் இவனேல்
விளியா குண துதி நாம் வித்தாவாறு என்னே
#1612
இன்னணம் ஏத்தி இறைவன் அடி தொழுது
அன்னம் உறங்கும் மணி வரை மேல் நின்று
பொன் அம் கழலான் இழிந்து பொழி மழை
மின்னின் நடந்து மிகு சுரம் சென்றான்
#1613
மாலை கதிர் வேல் மலங்க மணி மலர்க்கு
ஓலை விடு கண் உருகு கொடி இடை
ஏலம் கமழ் குழல் ஏழையவர் அன்ன
ஆலை கரும்பின் அக நாடு அணைந்தான்
#1614
வழைச்சறு சாடி மட்டு அயின்று மள்ளர் தாம்
கழை கரும்பு எறிந்து கண் உடைக்கும் எந்திரம்
மழை குரல் என மயில் அகவ வார் செந்நெல்
புழை கடை புனல் அலைத்து ஒழுகும் பொற்பிற்றே
#1615
தாமரை மலர் தலை அடுத்து தண் கமழ்
தூ மலர் குவளை கால் அணைத்து தோல் அடி
காமரு பெடை தழீஇ அன்னம் கண்படும்
தே மலர் தடம் தழீஇ திசைகள் மல்கின்றே
#1616
கண் பயில் இளம் கமுகு எருத்தின் காய் பரீஇ
கொண்டு இள மந்திகள் எறிய கோட்டு-இடை
திண் கனி முசு கலை சிதறும் தேம் பொழில்
மண்டு அமர் கடந்தவன் மகிழ்வொடு ஏகினான்
#1617
களிறு மாய் கதிர் செந்நெல் கழனி நாட்டு-இடை
ஒளிறு வேல் நரபதி நகரம் ஒய்யென
பிளிறு வார் இடி முரசு ஆர்ப்ப பெய் கழல்
வெளிறு இலா கேள்வியான் விருப்பொடு எய்தினான்
#1618
புற நகர் மணமகன் ஒருவன் போதர்வான்
இறைமகன் வினாயினான் என்ன பேரவே
துறை வளர் நாட்டொடு நகரம் சொல் என
அறிக என்று அலரி வாய் கமழ கூறினான்
#1619
மத்திம தேசமாம் நாடு மற்று இ நாட்டு
எ திசை நிதியமும் இறைகொண்டு இல்லவர்க்கு
உய்த்தும் ஊர் கொடுப்பவரே ஏமமாபுரம்
இ திசைக்கு ஐய நீ புதியை போன்ம் என
#1620
அன்னதே என்றலின் அடிசில் காலமால்
என்னொடு பேசினாய் தவிர் மற்று ஈங்கு என
பொன் நகர் புக்க பின் அறிவல் போக என்றான்
வில் மரீஇ வாங்கிய வீங்கு தோளினான்
#1621
புணர் மருப்பு யானையின் புயல் கொள் மும்மதம்
மணமகள் கதுப்பு என நாறும் மாநகர்
துணை மலர் கண்ணியும் செம்பொன் மாலையும்
இணை மலர் தாரினான் இடறி ஏகினான்
#1622
வண்டு கொப்புளித்து உணும் மாலை மார்பனை
கண்டு உவப்பு அளித்தவர் கடைக்கண் ஏக்கற
மண்டப பளிக்கு அறை மருங்கு ஒர் மா நிழல்
கொண்டு அவற்கு அளித்தது ஓர் குளிர் கொள் பொய்கையே
#1623
வண் சிறை பவள செ வாய் பெடை அன்ன மடமை கூர
தண் கய நீருள் கண்ட தன் நிழல் பிறிது என்று எண்ணி
கண்டனம் கள்வ மற்று உன் காதலி தன்னை நீர் கீழ்
பண்டையம் அல்லம் வேண்டா படுக்க என்று ஊடிற்று அன்றே
#1624
செயிர்ப்பொடு சிவந்து நோக்கி சேவலின் அகல சேவல்
அயிர்ப்பது என் நின்னை அல்லால் அறியலேன் அன்றி மூக்கின்
உயிர்ப்பது உன் பணியினாலே ஊடல் நீ என்று பல்-கால்
பயிர்ப்பு அற சிறகால் புல்லி பணிந்து பாண் செய்தது அன்றே
#1625
கலை உணர் மகளிர் நெஞ்சில் காமத்தின் கனிந்த ஊடல்
நிலை உணர் மைந்தர் நீக்கி நெறியினால் புணர்ந்தது ஒப்ப
அலர் மிசை பெடையின் ஊடல் அன்பு கொள் சேவல் நீக்கி
குலவிய புணர்ச்சி நோக்கி குன்று அனான் சிந்திக்கின்றான்
#1626
தன்னை யான் முகத்தை நோக்கின் தான் முலை முகத்தை நோக்கும்
பின்னை யான் பலவும் பேசில் தான் ஒன்று மிழற்றும் பைம் பூண்
பொன் அவாம் சுணங்கு போர்த்த பொங்கு இள முலையினாள் என்
முன்னையாள் போன்று தத்தை முகத்துளே தோன்றுகின்றாள்
#1627
பரிவு உற்றால் பயன் இன்றியும் பாவைமார்
முரிவு உற்றார்களின் மூர்ச்சனை செய்பவால்
பிரிவில் தோன்றிய பேர் அன்பு எனப்படும்
எரியின் மூழ்கி இறந்துபடும்-கொலோ
#1628
வாளி அம்பு அன வாள் தடம் கண்ணி தன்
தோளும் மென் முலை பாரமும் தொல் நலம்
நாளும் நாளினும் நைந்து நைந்து உள் சுட
பூளை மெல் அணை மேல் புரளும்-கொலோ
#1629
உருகி வாடி என் உற்றது-கொல் என
கருகி வாடிய காமரு கோதை தன்
இரு கண் நீரும் இடை முலை பாய்ந்து உக
குருகு பாய் தடம் ஆக அழும்-கொலோ
#1630
வண்டு வாழ் பயில் கோதை மணம் முதல்
கண்ட ஞான்று தன் கண் எனும் கைகளால்
நொண்டு கொண்டு பருகிய நோக்கம் ஒன்று
உண்டு என் ஆவி உருக்கி இடுவதே
#1631
காதலாள் உடலுள் உயிர் கைவிடின்
ஏதம் என் உயிர் எய்தி இறக்கும் மற்று
ஆதலால் அழிவு ஒன்று இலள் அல்லதூஉம்
மாதர் விஞ்சையும் வல்லளும் அல்லளோ
#1632
காதல் மிக்குழி கற்றவும் கைகொடா
ஆதல் கண்ணகத்து அஞ்சனம் போலுமால்
தாது துற்றுபு தங்கிய வண்டு அனார்க்கு
ஏதம் இற்று என எண்ணும் என் நெஞ்சு-அரோ
#1633
நற வெம் கோதையர் நல் நலம் காதலான்
மற வெம் காமத்து வந்துற்ற தீவினை
பறவை தேர் நரகத்து பதைக்குங்கால்
அறிவன் அல்லது அங்கு ஆர் சரண் ஆகுவார்
#1634
வேட்கை ஊர்தர விம்முறவு எய்திய
மாட்சி உள்ளத்தை மாற்றி மலர் மிடை
காட்சிக்கு இன் பொய்கை காமர் நலன் உண்டு
மீட்டும் அங்கு இருந்தான் விடை ஏறு அனான்
#1635
நேரார் நேரும் நீள் நிதி துஞ்சும் நிறை கோயில்
ஆரா வெம் போர் ஆய் தடமித்தன் அரசற்கும்
நாரார் கற்பின் நாகு இள வேய் தோள் நளினைக்கும்
சீரால் தோன்றி செல்வமோடு எல்லாம் திருத்தக்கான்
#1636
விண்டார் தேய்க்கும் வெம் பரி மான் தேர் விசயன் என்று
உண்டா நின்றான் தன் புகழ் ஊழி உலகு ஏத்த
வண்டு ஆர் சோலை வார் மணம் நாற புகுகின்றான்
கண்டான் சேர்ந்தான் காளையை கல்வி கடலானே
#1637
இ நாட்டு இ ஊர் இவ்விடம் எய்தார் இவண் வாழ்வார்
எ நாட்டு எ ஊர் எ பெயராய் நீ உரை என்றாற்கு
அ நாட்டு அ ஊர் அ பெயர் அல்லா பெயர் சொன்னான்
பொய்ம் நாட்டேனும் பொய் அல ஆற்றால் புகழ் வெய்யோன்
#1638
வாமான் திண் தேர் வள்ளலும் உள்ளம் மிகை கொண்டு எம்
கோமாற்கு உய்ப்பன் கொள் பயன் மிக்கோன் கொலை வேலான்
ஏ மாறு இல்லா இந்திரனேயும் இவன் ஒவ்வான்
போமாறு ஆய்வென் பொற்போடு கூடும் வகை என்றான்
#1639
பூம் கழலானை புண்ணிய நம்பி முகம் நோக்கி
ஈங்கு இது நின் நாடு இ பதி நின் ஊர் இது நின் இல்
வீங்கிய திண் தோள் வெல் புகழாய் நின் கிளை என்றாற்கு
ஆங்கு அது எல்லாம் அண்ணலும் நேர்ந்து ஆங்கு அமைக என்றான்
#1640
மன்னவன் சிறுவன் ஆங்கு ஓர் மாங்கனி உண்ணல் உற்று
மின் அவிர் கணையின் பல்-கால் பிழைப்பு எய்து மீண்டு நிற்ப
பொன் அவிர் கழலினான் அ பொரு சிலை கணையின் வாங்கி
இன் அமிர்து ஊறுகின்ற இரும் கனி அற எய்திட்டான்
#1641
எய்த அ கணையும் மாவின் இரும் கனி அதுவும் பூமிக்கு
எய்த அ சிலையின் எல்லை அணுகலும் ஏந்தல் நோக்கி
எய்த அ இடத்து நின்றே எய்த அ தட கை கொண்டாற்கு
எய்த சென்று ஐயன் ஆர தழுவிக்கொண்டு இதனை சொன்னான்
#1642
வண் சிலை கொண்டவாறும் வார் கணை தொடுத்தவாறும்
கண் கணை வைத்தவாறும் கல் செய் தோள் இருந்தவாறும்
திண் சரம் விட்டவாறும் சென்ற கோல் போந்தவாறும்
கண்டு எலாம் வியந்து நோக்கி வில் உடை கடவுள் என்றான்
#1643
மரா மரம் ஏழும் எய்த வாங்கு வில் தட கை வல் வில்
இராமனை வல்லன் என்பது இசை அலால் கண்டது இல்லை
உரா மனம் இவன் கண் இன்றி உவக்குமா செய்வல் என்று
குரா மலர் காவின் நீங்கி கோயிலே கொண்டு புக்கான்
#1644
வழிவரல் வருத்தம் ஓம்பி வயிர பூண் அணிந்த மார்பன்
அழி கவுள் யானை வேந்தற்கு அவன் திறம் அறிய சொன்னான்
மொழி எதிர் விரும்பி மன்னன் மூரி வில் தடக்கையாற்கு
கழி பெரு முகமன் கூறி காதலம் காளை என்றான்
#1645
கிலுத்தம் கூர் பரங்கள் என்னும் இரண்டினுள் கிலுத்தம் சார்ந்து
நலத்தகு விரல்கள் ஐந்தின் இம்பர் மூ விரலின் நீளம்
சிலை தழும்பியானை தோலின் நூற்று உரை சிறுமீன் ஒத்த
இலக்கண கிடக்கை கண்டே ஏவினுக்கு அரசன் என்றான்
#1646
அண்ணல் அம் சிலை வலாருள் அமோக மா ஆசானின் பின்
விண் நகு வெள்ளி வெற்பின் விஞ்சையர் உலகின் அல்லால்
மண்ணகத்து இல்லை என்பார் வாயினை மடங்க வந்தான்
புண்ணகத்து உறையும் வேலான் என புகழ்ந்து அரசன் சொன்னான்
#1647
வில் திறல் நம்பி தேற்றான் விருந்தினன் இவனும் அன்றி
மற்றும் ஓர் நால்வர் உள்ளார் மாண்பினால் வளர்ந்தது இல்லை
கொற்றம் நீ கொடுக்கல் வேண்டும் குறை என குருசில் நேர்ந்தான்
அற்றை நாள் ஆதி ஆக அவர்களும் பயிலுகின்றார்
#1648
கழலின் செந்தாமரை அடிகள் புல்லி தம் காதல் கூர
நிழலின் நீங்கார் நினைத்தன நினைப்பின் அமைவான் ஆக்கி
அழலின் சாராது அகலாது ஒழுக ஒரு நாள் அவன் போகி
பொழிலின் மிக்கதனில் புக்கான் மணமகளிர் போல் பொலிந்ததே
#1649
பாசி பாசத்து பைம்பொன் நிரை தாலி பூத்த வேங்கை
மாசில் வெண் துகிலை நீர் தோய்த்து மேல் போர்த்த வண்ணமே போல்
காசில் மட்டு ஒழுக பூத்த அழிஞ்சில் கண் ஆர் கவின் கொண்டன
பேசில் செம் தலைய வெண் கறைய புன்கம் பொரி அணிந்தவே
#1650
கோடு தையா குழிசியோடு ஆரம் கொள குயிற்றிய
ஓடு தேர் கால் மலர்ந்தன வகுளம் உயர் சண்பகம்
கூடு கோழி கொழு முள் அரும்பின அம் கோசிக
ஆடை பூத்தன பாதிரி வெண்கடம்பு பந்து அணிந்தவே
 
 
#1651
வெருகு வேட்ப சிரிப்பன போல் முகைத்த முல்லை வெய்ய வாய்
அரவு பைத்து ஆவித்து அன்ன அம் காந்தள் அவிழ்ந்து அலர்ந்தன
குரவம் கொண்ட குறும்பூழ் போல் கொழும் கால் முகை சுமந்தன
குருதி கூர் எயிறு கூத்தியர் கண் கொண்ட கொடி தளவமே
#1652
சொன்ன நல் மலரும் அல்லனவும் வீழ் பலவின் சூழ் சுளைகளும்
நன்மை நூலின் நயம் தோன்ற நன் பொன் விரல் நுதியினால்
பன் மணியும் முத்தும் பவளமும் பைம்பொன்னும் கோத்தால் ஒப்ப
என்ன அமரரும் மருள தொடுத்தான் இன மாலையே
#1653
ஊன் உண் சிங்க குழவி எயிற்று ஏர் ஒளி எயிற்றினான்
தேன் உண் போதின் பிணையலும் பந்தும் புனைந்து தேம் ஆர்ந்த
நானம் தோய்த்து நனை கலவை நாறும் மதம் தெளித்த பின்
பால் நுண் தீம் சொல்லாள் ஓர் படுவி வண்டு ஆர்ப்ப வந்து இறைஞ்சினாள்
#1654
நெடிய வாள் கண்கள் வாயா இமைப்பு எனும் சொல்லின் மற்று எம்
கொடியிற்கு ஒத்த இவை என்றாள் நம்பியும் கொள்க என்றான்
வடுவும் வேலும் மலரும் கயலும் வனப்பு அழித்த கண்
அடி அம் சிலம்பினாட்கு உய்த்து இறைஞ்சி காட்ட அவள் கொண்டாள்
#1655
கொண்டு கோதை மலர் எழுத்து மெல் விரலின் மேல் தாங்கி நோக்கும்
வண்டு சேர்ந்த குழலாள் வரும் முலைகள் பாய வண் தார்
விண்டு தேன் துளிப்ப வேல் தடம் கண் தாம் ஆடும் நாடகம்
கண்டு வாழாதவர் வாழ்க்கை எல்லாம் சவரர் வாழ்க்கையே
#1656
ஆம்பல் நாறும் அரக்கார் பவள வாயார் அமுதம் அன்னார்
பாம்பு பைத்து ஆங்கு அனைய பவழ பட அரவு அல்குலார்
தாம்பலரும் மருட்ட அகில் தவழும் தண் பூவணை
காம்பின் மென் தோள் கவின் வளர வைகல் கலப்பு என்பவே
#1657
ஆகம் தான் ஓர் மணி பலகையாக முலைகள் நாய் ஆக
போகக்கு ஏற்ற புனை பவழ அல்குல் கழகம் ஆக
ஏக இன்ப காம கவறாடல் இயைவது அன்றேல்
ஆக நோற்றிட்டு அடங்கல் ஆண்மைக்கு அழகு என்பவே
#1658
பின்னிவிட்ட பிடி தட கை இரண்டு போன்று திரண்டு அழகார்
கன்னி கலிங்கம் அகில் ஆர்ந்து கவவி கிடந்த குறங்கினாள்
மின்னு குழையும் பொன் தோடும் மிளிர எருத்தம் இடம் கோட்டி
என்னும் இமையாள் நினைந்து இருந்தாள் இயக்கி இருந்த எழில் ஒத்தாள்
#1659
கொடு வெம் சிலையை கொளை அமைத்து கொதி நீர் பகழி கொள வாங்கி
கடு வெம் குறவன் எயப்பட்ட கன்னி பிணையின் நிலை கலங்கி
தொடி தோள் நடப்ப தோள் தேம்ப துணை வெம் முலைகள் பசப்பு ஊர
நெடு மா தோகை மென் சாயல் நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றாள்
#1660
ஒன்றே எயிற்றது ஒரு பெரும் பேய் உலகத்தை அங்காந்து
நின்றால் போல நிழல் உமிழ்ந்து நெடு வெண் திங்கள் எயிறு இலங்க
இன்றே குருதி வான வாய் அங்காந்து என்னை விழுங்குவான்
அன்றே வந்தது இ மாலை அளியேன் ஆவி யாதாம்-கொல்
#1661
வருந்தி ஈன்றாள் மறந்து ஒழிந்தாள் வளர்த்தாள் சொல் கேட்டு இல் கடிந்தாள்
முருந்தின்-காறும் கூழையை முனிவார் நின்னை என் முனிவார்
பொருந்திற்று அன்றால் இது என்னாய் பொன்றும் அளித்து இ உயிர் என்னாய்
திருந்து சோலை கரும் குயிலே சிலம்ப இருந்து கூவுதியால்
#1662
பெரு வெண் திங்கள் மால் அக பூ மலைந்து பெட்ப நகுகின்றது
உருவு கொண்ட குரல் அன்றில் உயிர் மேல் ஆம்பல் உலாய் நிமிரும்
ஒரு பெண்பாலேன் யான் ஆக உலகம் எல்லாம் பகை ஆகி
எரி கொன்று ஈன்ற இலை பலி போல் இருத்தியால் என் இன்னுயிரே
#1663
வேம் என் நெஞ்சம் மெய் வெதும்பும் விடுக்கும் ஆவி வெய்துயிர்க்கும்
பூ மென் குழலார் புறம் நோக்கி நகுவார் நகுவது ஆயினேன்
தாம மார்பன் தான் புனைந்த தண் என் மாலை புணை ஆக
யாம கடலை நீந்துவேன் யாரும் இல்லா தமியேனே
#1664
செம்பொன் கடம்பன் செ வேலும் காமன் சிலையில் தொடுத்து அலர்ந்த
அம்பும் வென்ற வரி நெடும் கண் அ மா மதி வாள் முகத்தினாள்
வம்பு பூத்து முருகு உலாய் தேன் கொப்புளித்து நின்றது ஓர்
கொம்பு வெம் தீயிடைப்பட்டது ஒத்தாள் விரை செய் கோதையே
#1665
மணி நிற மாமை சாயல் வளையொடு வண்டு மூசும்
அணி நிற போர்வை ஆய அரும் பெறல் நாணும் விற்று
பணி நலம் புதியது உண்டான் பன் மலர் மாலை கொண்டேன்
பிணி நிற புறம் சொல் என்னும் பெரும் ஞிமிறு ஆர்ப்ப என்றான்
#1666
காதலான் காதல் போல அகன்று நீண்டு அலர்ந்த வாள் கண்
போது உலாம் கோதை மாதர் புனைந்து அலர் தொடுத்த மாலை
ஆதலால் அலரது ஆகாது ஒழியுமே அழுங்கல் என்று
மாது உலாம் மழலை செ வாய் மட கிளி மொழிந்தது அன்றே
#1667
என்னை உள்ளம் பிணித்து என் நலம் கவர்ந்த ஈர்ம் தாரினான்
தன்னை யானும் பிணிப்பேன் என தன் மணி செப்பினுள்
மன்னும் மாலை கொடுத்து அவனுக்கு உய்த்து ஈ என தொழுது கொண்டு
அன்னம் என்ன ஒதுங்கி சிலம்பு அரற்ற சென்று அணுகினாள்
#1668
அணுகி முன் நின்ற அநங்கவிலாசினி அம் கை கூப்பி
பிணையல் நீட்ட பெரும் தகை அஃது ஏலான் முகம் நோக்கலும்
துணையில் தோகை என் நங்கைக்கு தொங்கல் தொடுப்பாயும் நீ
மணி செய் மென் தோள் மருந்து நீ ஆருயிரும் நீயேல் என்றாள்
#1669
மன்னர் கோயில் உறைவார் பொறி செறித்த மாண்பினரே
என்ன அஞ்சினாய் என்று அவனை நக்காட்கு அஃது அன்று கோதாய்
இன்ன கொள்கையேற்கு ஏலாது என்ன இலங்கு எயிற்றினாள்
அன்னம் அன்ன நடையினாள் தான் வருந்தும் என நேர்ந்தான்
#1670
குலிகம் ஆர்ந்த கொழும் தாமரை அன்ன வண் கை நீட்டி
ஒலியல் ஏற்றான் இஃது ஊழ் வினையால் உள்ளம் சுடுமால் என்ன
இலை கொள் பைம் பூண் இள முலையாள் போகி கனகமாலை
மெலிய வெம்பி நைகின்றாள் உய்யும் வகை தொடங்கினாள்
#1671
நீர் செய் காந்த மணி கூந்தளம் பாவை நீண்டு அழகிய
ஏர் செய் சாந்தின் கழுநீர் விரை கமழும் பூக்கள் கோத்த
வார் செய் தண் தாமரை வளை அமை வரையின் வெள் அருவி நீர்
சீர் செய் கோமகளை சேர்த்தினாள் சீதம் செய்யாது ஒழிந்தனவே
#1672
பவ்வ தங்கண் பிறந்து பனி பெயர்க்கும் தண் ஊற்றது ஆகி
எவ்வம் மன்னர் பட உலகம் விற்கும் அரு மணியினை
செவ்வன் நூலில் சித்திரிக்கப்பட்டதனை சேர்த்தி பின்னும்
மவ்வல் நாறும் குழலாட்கு மற்றும் இவைகள் நாடினாள்
#1673
களி செய் கோசிக நீர் விழ கடி மாலை மேல் தொடர்ந்து கீழ்
நளி செய் தண் பூஞ்சலம் சயனம் ஆக்கி நல் நீர் பிலிற்றும் வாய்
குளிர் கொள் சாந்து ஆற்றி பொன் ஆலவட்டம் கொண்டு ஏந்தி வீச
சளி கொள் சந்தின் கொழும் சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள்
#1674
கொம்மை வெம் முலையில் சாந்தம் குளிர் செயாது ஆவி வாட்ட
அம் மென் மாலை முகம் கரிய நீர் துளும்ப நின்று நீடி
வெம்மை மிக்கது வீரன் தொடுத்த விளங்கு மாலை
பொம்மல்_ஓதிக்கு தானே துணை ஆம் புணை ஆயிற்றே
#1675
வாச நீலம் கழுநீர் குவளை படை சாற்றி வந்து
ஓசனை கண் உடையும் நெடும் கண் கனகமாலை
தாசி தூது ஆக தாமம் புணை ஆக செல்லும் நாளுள்
காசில் கல்வி கடலை கரைகண்டார் காளைமாரே
#1676
பொரு சரம் சலாகை வெய்ய புகன்றனர் துரக்குமாறும்
வரு கணை விலக்குமாறும் வாள் அமர் நீந்துமாறும்
கருவியுள் கரக்குமாறும் கணை புறம் காணுமாறும்
விரிய மற்று அவர்க்கு காட்ட வீற்று இருந்து அவரும் கற்றார்
#1677
வேல் உடை தடக்கையார்கள் வேழ மேல் சென்ற-போழ்தில்
கால்-இடை கரக்குமாறும் கை-இடை திரியுமாறும்
வால்-இடை மறியுமாறும் மருப்பு-இடை குளிக்குமாறும்
நூல் இடை கிடந்தவாறே நுனித்தவன் கொடுப்ப கொண்டார்
#1678
கொடி நெடும் தேரின் போரும் குஞ்சரம் குறித்த போரும்
கடு நடை புரவி போரும் கரப்பற கற்று முற்றி
இடன் அறிந்து இலங்கும் வை வாள் இரும் சிலை குந்தம் மூன்றும்
உடன் அறிந்து உம்பரார்க்கு உரைப்பரும் தகையர் ஆனார்
#1679
தானையுள் அன்றி நின்ற தனி இடம் ஒற்றி மன்னர்
தானை மேல் சென்ற-போழ்தும் வென்றியில் தளர்தல் இன்றி
தானையை உடைக்கும் வெம் போர் தருக்கினார் மைந்தர் என்று
தானை சூழ் மன்னற்கு உய்த்தார் மன்னனும் தருக என்றான்
#1680
மழையொடு சூழ்ந்து கொண்ட வான் துகள் சிலையின் நீக்கி
குழை முகம் நெற்றி நக்க கோல வில் பகழி வாங்கி
இழை பக இமைப்பின் எய்திட்டு எறிந்து மின் திரிவவே போல்
விழைவுறு குமரர் புக்கு சாரியை வியத்தர் ஆனார்
#1681
விசயனே விசயன் வில் போர் கதம்பனே முருகன் வேல் போர்
திசை எலாம் வணக்கும் வாள் போர்க்கு அந்தணன் செம்பொன் நாமன்
அசைவு இலான் யானை தேர் போர்க்கு அலசனே அசல கீர்த்தி
வசை இலான் புரவி சேன் என்று யாவரும் புகழப்பட்டார்
#1682
காவலன் மக்கள் ஆக்கம் கண்டு கண் குளிர்ந்து நோக்கி
ஏவலான் அரசன் ஒன்றோ இரு_பிறப்பாளன் அல்லார்க்கு
ஆவது அன்று இன்ன மாட்சி அவனை யான் நிகளம் பெய்து
காவல் செய்திடுவல் வல்லே காளையை கொணர்-மின் என்றான்
#1683
கல்வியும் கொடிது போலும் காவலன் காளை-தன்னை
ஒல்லலன் சிறைசெய்கின்றான் என்றவன் கருதிற்று ஓரார்
பல் சனம் பரிந்து நிற்ப பார்த்திப குமரன் சேர்ந்தான்
வில் வலான் கொண்டு வேந்தன் வேறு இருந்து இதனை சொன்னான்
#1684
புள் முழுது இறைஞ்சும் கோட்டு பொரு களிறு அனைய தோன்றல்
மண் முழுது அன்றி வானும் வந்து கைகூட தந்தாய்
கண் முழுது உடம்பில் பெற்றேன் காளை கைம்மாறு காணேன்
பண் முழுது உடற்றும் தீம் சொல் பாவை நின் பாலள் என்றான்
#1685
முடி கெழு மன்னன் சொல்ல மொய் கொள் வேல் குருசில் தேற்றான்
வடிவு அமை மனன் ஒன்று ஆக வாக்கு ஒன்றா மறுத்தலோடும்
தடி சுவைத்து ஒளிறும் வேலான் தன் கையால் முன் கை பற்றி
இடி முரசு அனைய சொல்லால் இற்றென விளம்புகின்றான்
#1686
பூ இயல் கோயில் கொண்ட பொன் அனாள் அனைய நங்கை
காவியம் கண்ணி வந்து பிறத்தலும் கணிகள் ஈண்டி
மூவியல் திரிதல் இன்றி சாதக முறையில் செய்தார்
ஏ இயல் சிலையினாய்க்கே உரியள் என்று உரைப்ப நேர்ந்தான்
#1687
வார் உலாம் முலையினாட்கும் வரி சிலை தடக்கையாற்கும்
சீர் உலாம் கோலம் செய்தார் செப்பினார் வதுவை நல் நாள்
பார் எலாம் அறிய நின்று படா முரசு ஆர்ப்ப தீ வேட்டு
ஏர் உலாம் கோதை இன்பத்து இள நலம் பருகுகின்றான்
#1688
மோட்டு இளம் குரும்பை அன்ன முலை கடா களிறு முத்தம்
சூட்டிய ஓடை பொங்க நாண் எனும் தோட்டி மாற்றி
ஆட்டிய சாந்தம் என்னும் முகபடாம் அழித்து வெம் போர்
ஓட்டற ஓட்டி பைம் தார் உழக்கி இட்டு வந்த அன்றே
#1689
ஒண் மணி குழை வில் வீச ஒளிர்ந்து பொன் ஓலை மின்ன
வண்ண மேகலைகள் ஆர்ப்ப வான் சிலம்பு ஒலிப்ப முத்தும்
கண்ணியும் பசும்பொன் நாணும் கதிர் முலை புடைப்ப காமர்
அண்ணல் அம் குமரன் தன்னொடு ஆய்_இழை ஆடினாளே
#1690
மூசு தேன் வாரி அல்குல் பட்ட பின் முலைகள் என்னும்
மாசு அறு கந்தின் மென் தோள் மணி தொடர் கொளுத்தி வாள் கண்
ஆசு அறு வயிர தோட்டி நுதல் அணிந்து அமுத செ வாய்
காசு அறு கவளம் ஆக களிறு கோள் பட்டது அன்றே
#1691
ஒப்பு இணை தனக்கு இலாதான் உறு வரை அகலம் மூழ்கி
செப்பு இணை அனைய செம் கேழ் வன முலை பொருது சேப்ப
கற்பக மரத்தை புல்லி கைவிடாது ஒழிந்து காம
துப்புரவு உமிழும் காமவல்லியின் தோற்றம் ஒத்தாள்
#1692
காய்வுறு வேட்கை தன்னால் கங்குலும் பகலும் விள்ளான்
வேய் வெறுத்து அமைந்த தோளான் விழு திரை அமுதம் என்று
சேய் நலம் கடந்த செல்வன் திரு நலம் தெளித்திட்டு ஆற்ற
வாய்விடாள் பருகி இட்டாள் மட கிள்ளை மருட்டும் சொல்லாள்
#1693
திரை இடை கொண்ட இன் நீர் அமுது உயிர்பெற்றது என்னும்
உரை உடை கோதை மாதர் ஒளி நலம் நுகர்ந்து நாளும்
வரை உடை மார்பன் அங்கண் வைகினன் என்ப-மாதோ
கரை கடல் அனைய தானை காவலன் காதலானே
#1694
வாளினால் மிடைந்த கண்ணாள் வரு முலை தடத்துள் வைகி
தோளினால் மிடைந்து புல்லி தொண்டை வாய் அமுதம் மாந்தி
காளை செல்கின்ற நாளுள் கட்டியங்காரன் மூதூர்
மீளி வேல் குருசிற்கு உற்றார்க்கு உற்றது விளம்பலுற்றேன்
#1695
வெண் மதி இழந்த மீன் போல் விடலைக்கு தம்பி மாழாந்து
ஒண் மதி சூழ்ச்சி மிக்கான் உள்ளுழி உணர்தல் செல்லான்
புள் மதித்து உடைந்த போது பொழிந்து மட்டு ஒழுகும் நன் நாட்டு
உள் மதி வருந்த நாடி ஒளி நகர் எய்தினானே
#1696
வெள்ளி வெண் மலைக்கு வேந்தன் ஒரு மகள் வேல் கண் பாவை
ஒள் இழை அவளை கேட்பான் உறு வலி செல்லும் ஆங்கண்
வள் இதழ் கோதை தானே இட்டது ஓர் வண்ணம்-தன்னை
கொள்ள தான் முரலலுற்று கோல் அமை வீணை கொண்டாள்
#1697
ஆடக செம்பொன் ஆணி ஆன் நெய் வார்ந்து அனைய நுண் கோல்
மாடகம் நொண்டு கொண்டு மாத்திரை நிறைய வீக்கி
சூடகம் அணிந்த முன் கைத்தொகு விரல் சேப்ப எற்றி
தோடு அலர் கோதை கீதம் துணிவினில் பாடுகின்றாள்
#1698
இறும் மருங்குல் போது அணியின் என்று இனைந்து கையின்
நறு மலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார்
நண்ணார் துறப்ப நனி வளையும் தோள் துறப்ப
கண் ஓவா முத்து உறைப்ப தோழி கழிவேனோ
#1699
பூ மாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல்
ஏமாராது என்று இனைவார் எண்ணார் துறந்தார்
எண்ணார் துறப்ப இன வளையும் தோள் துறப்ப
மண் ஆர் வேல் கண் துயிலா தோழி மருள்வேனோ
#1700
வண்டு ஊத அம் மருங்குல் நோம் என்று பூ மாலை
கொண்டு ஓச்சும் காதலார் கூடார் துறந்தார்
கூடார் அவர் துறப்ப கோல் வளையும் தோள் துறப்ப
தோடார் பூம் கண் துயிலா தோழி துயர்வேனோ
 
 
#1701
ஊன் தகர்த்த அனைய போன்றும் ஊடு எரி முளைப்ப போன்றும்
தோன்று பூ இலவத்து அங்கண் தொகை அணில் அனைய பைம் காய்
கான்ற மென் பஞ்சி ஆர்ந்த மெல்லணை யாழ் கை நீக்கி
தேன் தயங்கு இணர் பெய் கோதை சிந்தையின் நீட்டினாளே
#1702
நுண்ணிய வரியொடு திரண்டு நோக்குநர்
கண் மனம் கவற்றிய காமர் தொண்டை வாய்
அண்ணலை நினைந்து வெய்துயிர்ப்ப ஆய் நலம்
வண்ணத்தின் மழுங்கி வாள் கண்ணி வாடினாள்
#1703
மின் தவழ் மணி வரை மாலை மார்பனை
பொன் தவழ் இள முலை பொருது புல்லும் நாள்
என்று-கொல் என நினைந்து இருந்த செவ்வியுள்
சென்றனன் சீவகற்கு இளைய செல்வனே
#1704
ஐ விலின் அகல நின்று ஆங்கு அடி தொழுது இறைஞ்சினாற்கு
மை விலை பெற்ற கண்ணாள் மைந்தனை மருண்டு நோக்கி
கை விலும் கணையும் இல்லா காமன் போந்து இருக்க என்ன
மொய் வெல்லும் குருதி வேலான் மூவில் கண் இறைஞ்சி நின்றான்
#1705
திங்கள் வாள் முகமும் நோக்கான் திரு முலை தடமும் நோக்கான்
அம் கதிர் கலாபம் மின்னும் அணி அல்குல் பரப்பும் நோக்கான்
செம் கயல் கண்ணினாள் தன் சீறடி சிலம்பு நோக்கி
எங்கு உளார் அடிகள் என்னா இன்னணம் இயம்பினானே
#1706
பொறி குலாய் கிடந்த மார்பின் புண்ணியன் பொன்றினானேல்
வெறி குலாய் கிடந்த மாலை வெள் வளை முத்தம் நீக்கி
நெறியினால் நோற்றல் என்றோ நீள் எரி புகுதல் ஒன்றோ
அறியலென் கொழுநன் மாய்ந்தால் அணி சுமந்து இருப்பது என்றான்
#1707
காய் தழல் கவரப்பட்ட கற்பக மரத்தின் கன்றி
ஆய் கழல் குருசில் வாடி அற்பு தீ அழலுள் நிற்ப
வாய் மொழிந்து உரைக்கல் உற்றாள் வனை குழல் கற்றை வண் தார்
தோய் பிழி துளிக்கும் கண்ணி சுரும்பு சூழ் கொம்பு அனாளே
#1708
மது முகத்து அலர்ந்த கோதை மாற்றம் மைந்தற்கு உரைப்பாள்
கொதி முக குருதி வை வேல் குருசிலோ நம்மை உள்ளான்
விதி முக மணங்கள் எய்தி வீற்று இருந்து இன்பம் உய்ப்ப
மதி முகம் அறியும் நாமே வாடுவது என்னை என்றாள்
#1709
வேண்டியது எமக்கு நேரின் வில் வலாய் நும் ஐயனாரை
காண்டி என்று உரைப்ப காளை எழுமையும் அடிமை நேர
மாண்டது ஓர் விஞ்சை ஓதி மதி முகம் தைவந்திட்டாள்
நீண்டது பெரிதும் அன்றி நினைத்துழி விளக்கிற்று அன்றே
#1710
பொற்பு உடை அமளி அங்கண் பூவணை பள்ளி மேலால்
கற்பக மாலை வேய்ந்து கரும் குழல் கை செய்வானை
முற்பட கண்டு நோக்கி முறுவல் கொள் முகத்தன் ஆகி
வில் படை நிமிர்ந்த தோளான் தொழுது மெய் குளிர்ந்து நின்றான்
#1711
செய்த விஞ்சையை தே_மொழி மாற்றலும்
மையல் நெஞ்சொடு வண்டு இமிர் தாரினான்
பொய்யது அன்மையின் பூம் கழலான் அடிக்கு
எய்துகேன் அருளாய் என்று இறைஞ்சினான்
#1712
மதுக்கை மாலையும் வண்டு இமிர் சாந்தமும்
புது கச்சு ஆர்ந்த பொன் வாளும் சுரிகையும்
கதுப்பின் நானமும் காமர் கலங்களும்
பதி-கண் தம் என பாவையும் ஏவினாள்
#1713
மணியின் மேல் புறம் போர்த்து அன்ன மா கதிர்
துணிய வீசும் துளங்கு ஒளி மேனியன்
பணியின் பல் கலம் தாங்குபு சென்ற பின்
அணி செய் கோதை அம் காமினி ஓதினாள்
#1714
சாந்தினால் மெழுகி தட மா மலர்
ஆய்ந்த தாமங்கள் நாற்றி அகில் புகை
ஏந்தி இட்டு இளையாரொடு நீங்கினாள்
காந்தி வண்டு உணும் கற்பக கோதையே
#1715
தூமம் ஆர்ந்த துகில் அணை பள்ளி மேல்
காமன் தம்பியின் காளை கிடந்த பின்
ஏமமாபுரத்து இட்டது ஓர் மா தெய்வம்
நாம நல் ஒளி நந்தனை என்பவே
#1716
மின்னும் பூணும் மிளிர் கதிர் ஆரமும்
பொன்னும் பூத்தது ஓர் கற்பக பூ மரம்
அன்ன காளை அமர் துயில் தேறினான்
மன்னும் வெம் சுடர் மாக்கல் இவர்ந்ததே
#1717
செய்ய வாய் நெடிய கண்ணாள் செல்க என விடுக்கப்பட்ட
வெய்ய வாள் தட கை வீரன் இருத்தலும் விசயன் என்பான்
கையவாம் சிலையினானை கண்டு வந்து அருகு சேர்ந்தான்
பையவாய் பரந்த அல்குல் பாவையர்க்கு அமிர்தம் அன்னான்
#1718
தெய்வமே கமழும் மேனி திரு ஒளி கலந்த மார்பின்
ஐய நீ யாரை என்றாற்கு அவன் உரை கொடாதுவிட்டான்
பையவே பெயர்ந்து போகி பனி மலர் கோதை மார்பின்
மையல் அம் களிறு போலும் மைத்துனற்கு இதனை சொன்னான்
#1719
சந்தன களியும் பூவும் தமனிய குடத்துள் நீரும்
கெந்தம் நாறு அகிலும் முத்து கிளர் ஒளி விளக்கும் ஏந்தி
அந்தில் வில் பயிற்றும் தானம் வழிபட ஆங்கு சென்றாள்
மந்திர மடந்தை அன்னாள் வசுந்தரி வந்து சொன்னாள்
#1720
ஆர் அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே
நீரிதின் கிடந்தது என்-கொல் என்று யான் நினைந்து போகி
சேர் துணை கழற சென்றேன் செல்வியோடு ஆங்கு கண்டேன்
போர் பல கடந்த வேலோய் மாயம்-கொல் போற்றி என்றாள்
#1721
கணை கடி கண்ணி சொல்ல காணிய யானும் சென்றேன்
மணி இலங்கு ஒண் பொன் வை வாள் கேடக மருங்கு வைத்த
இணை கடி சீயம் அன்னான் இளமையும் வனப்பும் ஏரும்
துணை அமை வடிவும் சொல்லி நின் பொறி ஒற்றிக்கொண்டான்
#1722
நீண்ட தோள் நெடிய செம் கண் நீலமாய் சுரிந்த குஞ்சி
பூண்டது ஓர் ஆர மேனி பொன் உரைத்து இட்டது ஒக்கும்
காண்தகு காதில் தாழ்ந்த குண்டலம் குவளை பைம் தார்
ஆண்தகை அழகன் யார்-கொல் அறியலன் அவனை என்றான்
#1723
இனத்து-இடை ஏறு போலும் எறுழ் வலி உரைத்த மாற்றம்
மனத்து-இடை மகிழ்ந்து கேட்டு மைந்தன் நந்தட்டனே ஆம்
புனத்து-இடை மயில் அனாளால் பொருள் உரை பெற்று வந்தான்
என தவிராது சென்று ஆங்கு எய்தினள் என்ப அன்றே
#1724
கரு முகில் பொடித்த வெய்யோன் கடல்-இடை நடப்பதே போல்
திருமுகம் சுடர நோக்கி சீவகன் சென்று சேர்ந்தான்
தருமனை அரிதின் கண்ட தனஞ்சயன் போல தம்பி
திரு மலர் தட கை கூப்பி சேவடி தொழுது வீழ்ந்தான்
#1725
தாமரை தட கை கூப்பி தாள் முதல் கிடந்த தம்பி
தாமரை தடத்தை ஒத்தான் தமையனும் பருதி ஒத்தான்
தாமரை குணத்தினானை மு முறை தழுவிக்கொண்டு
தாமரை செம் கணானும் தன் உறு பரிவு தீர்ந்தான்
#1726
என் உறு நிலைமை ஓராது எரி உறு தளிரின் வாடி
பொன் உறு மேனி கன்றி போயினீர் பொறி இலாதேன்
முன்னுற இதனை ஓரேன் மூரி பேர் ஒக்கல் எல்லாம்
பின்னுறு பரிவு செய்தேன் பேதையேன் கவலல் என்றான்
#1727
ஆக்கமும் கேடும் உற்றீர் அடிகளே அல்லீர் மேலை
பூ குலாம் அலங்கல் மாலை புள் கொடியாற்கும் உண்டே
வீக்கு வார் முலையினார் போல் வெய்துயிர்த்து உருகி நைய
நோக்கினீர் என்னை என்றான் நுதி அழல் குட்டம் ஒப்பான்
#1728
குரவரை பேணல் இன்றி குறிப்பு இகந்து ஆய பாவம்
தரவந்த பயத்தினால் இ தாமரை பாதம் நீங்கி
பருவரும் துன்பம் உற்றேன் பாவியேன் என்று சென்னி
திருவடி மிசையின் வைத்து சிலம்ப நொந்து அழுதிட்டானே
#1729
பரிந்து அழுகின்ற தம்பி பங்கயம் அனைய செம் கண்
பொருந்துபு துடைத்து வேண்டா புலம்புதல் காளை என்று
மருந்து அனாள் உறையும் கோயில் மடுத்து உடன் கொண்டு புக்கான்
அருந்ததி கற்பினாளை அடி பணிந்து அவனும் கண்டான்
#1730
கொழுநனை குறிப்பினாலே குமரன் யார் என்று நோக்க
கழுமிய கற்பினாய் நின் மைத்துனன் ஐயன் என்ன
எழுமையும் பெறுக இன்ன இளம் கிளை சுற்றம் என்றாள்
கொழு மலர் தடம் கண் செ வாய் குவி முலை கொம்பு அனாளே
#1731
குட வரை அனைய மார்பில் குங்குமம் எழுதி கோல
வட வரை வைர சாதி வால் ஒளி கலந்த பைம் பூண்
தட வரை மார்பின் மின்ன தம்பியோடு அமிர்தம் உண்டான்
பட அரவு அல்குலாளும் பான்மையால் விருந்து செய்தாள்
#1732
விருந்து அவள் செய்த பின்றை தம்பியும் தானும் வேறா
இருந்துழி என்னை காணது உற்றதை எவன்-கொல் என்று
பொருந்தினார் செய்தது எல்லாம் புரை விடுத்து உரைமோ என்ன
கரும் கழல் செம் கண் பைம் தார் காளை ஈது உரைக்கின்றானே
#1733
புண் உமிழ் குருதி போர்த்த பொரு களம் போன்று தோன்றி
அண்ணல் அம் கதிரும் அத்தம் அடைந்து செ வான் கொள் அந்தி
துண்ணென களத்தின் நீங்கி தொல் நகர் புறத்து தொக்கே
எண்ணு-மின் செய்வது என்றான் பதுமுகன் எரியும் வேலான்
#1734
மின் என மிளிரும் பைம் பூண் புத்திசேன் வெகுண்டு வெய்ய
கல் நவில் தோளினானை காண்கலேம்-ஆயின் இன்னே
மன்னனை வாளினாலே வானகம் காட்டி மூதூர்
தன்னையும் சவட்டி போகி சாமியை சார்தும் என்றான்
#1735
சிலையொடு திரண்ட திண் தோள் தேவ மாதத்தன் என்பான்
மலை உடை உருமின் சீறி மாற்றலன் உயிரை உண்டல்
இலை உடை கண்ணியீர்க்கு இஃது எளிது நம் குருசில் உண்மை
உலைவினோடு இன்மை ஆராய்ந்து ஒறுப்பதே துணி-மின் என்றான்
#1736
பவ்வத்து பிறந்த வெய்ய பருதி போல் திறலினாற்கு
தெவ்வரை கிழங்கினோடும் தின்று நீ சொன்னவாறே
எவ்வத்தை தணித்தும் என்றான் சீதத்தன் என்னலோடும்
மவ்வல் அம் மணந்த தண் தார் பதுமுகன் இதனை சொன்னான்
#1737
நம்பி நந்தட்டன் கேட்க நங்கட்கு குரவர் உள்ளார்
தம் பரிவு அகற்றி ஓம்பி நீர் கடன் மரபு தாங்கு இ
கம்பம் செய் பரிவு நீங்கி கற்பிப்பார்க்கு உவர்த்து சொல்லார்
இம்பர் இ உலகம் ஒப்பாய்க்கு என்னை யான் உரைப்பது என்றான்
#1738
ஓம் படை சாற்றல்-பாலது உள்ளவர்க்கு ஆகும் அன்றே
ஆம் புடை என்-கண் இல்லை அங்கை என் கண்களாக
தேம் படு தாரினீர்க்கும் செல்வற்கும் செய்வ செய்தேன்
காம்பு அடு காட்டு தீயின் கனன்று உடன் எழுக என்றேன்
#1739
கோட்டு இளம் குழவி திங்கள் இரண்டு அன்ன எயிற்று கோளே
வேட்ட ஓர் சிங்கம் சூழ்ந்த வேங்கையின் இனத்தின் வெய்ய
வாள் படை எழுந்து வாழ்க சீவகன் என்னும் ஆங்கண்
பாட்டினை ஒருவன் எங்கள் பரிவற பாடினானே
#1740
வருவர் நம் கேள்வர் இன்னே வாள் நுதல் பசலை தீர
உருகி நைந்து உடன்று முன் கை வளை உக மெலிய வேண்டா
அருவி மும்மதத்த யானை அதிர்ந்துழி கார் என்று எண்ணி
தெரிவில பேதை முல்லை பூத்தன தெளி இது என்றான்
#1741
பாட்டினை கேட்டலோடும் பழம் பகை நட்பும் ஆமே
ஓட்டியும் கோறும் அன்றே நம்பி தான் உண்மை பெற்றால்
நாட்டிடம் பரந்து போகி நாடுதும் நாங்கள் என்னா
ஈட்டமும் வேறும் ஆகி இலைப்புரை கிளைத்திட்டேமே
#1742
மணி பொதி துகிலின் தோன்றும் மஞ்சு சூழ் வரைகள் நாடி
அணி நகர் யான் சென்று எய்தி மாலை-தன் மனையை சேர்ந்தேன்
துணை மலர் காந்தள் ஊழ்த்து சொரிவ போல் தோன்றி முன்கை
அணி வளை நலத்தோடு ஏக அங்ஙனம் இருந்து நைவாள்
#1743
என்னை கண்டு அடிசில் ஆக்க ஐயர்க்கு என்று அவலம் நீங்க
பொன்னை கண்டு அனைய சாயலவர் புரிந்து அடிசில் ஏந்த
துன்னி நோய் உற்ற மஞ்ஞை தோற்றம் போல் இருந்த நங்கை
பின்னை நாள் குவளை நீர் வீழ் பெற்றிய கண்ணள் ஆகி
#1744
அடிகளை இன்றி நீரே உண்ணவும் வல்லீர் ஆனீர்
கடியிர் நீர் ஐய நீரே என கசிந்து உருகி காய் பொன்
கொடி துகள் ஆர்ந்த வண்ணம் குழைந்து மாநிலத்து வீழ்ந்த
பெடை மயில் சாயலாள் தன் பேது கண்டு ஆங்கு மீண்டேன்
#1745
செல்வனை இன்று நாடி சேவடி தொழுதல் ஒன்றோ
அல்லது இ உடம்பு நீங்க வேற்றுலகு அடைதல் ஒன்றோ
எல்லை இ இரண்டின் ஒன்றை இ பகல் முடிப்பல் என்னா
மல்லிகை கோதை ஐம்பால் மலைமகள் மனையை சேர்ந்தேன்
#1746
மணி ஒலி வீணை பண்ணி மாண்ட கோல் தடவ மாதர்
அணி முலை தடத்தின் ஒற்றி வெப்பரால் தட்பம் மாற்றி
பிணை மலர் கோதை கீதம் பாட யான் பெரிதும் பேதுற்று
இணை மலர் கண்ணிக்கு ஒவ்வா இளி வரு கிளவி சொன்னேன்
#1747
சொல்லிய என்னை நோக்கி துளங்கல் நும் அடிகள் பாதம்
புல்ல யான் புணர்ப்பல் என்று பொழுது போய் பட்ட பின்றை
எல் இருள் விஞ்சை ஓதி இ வழி இடுவித்திட்டாள்
சொல்லு-மின் அடிகள் நீரும் போந்தவாறு எனக்கும் என்றான்
#1748
தாதையார் உவப்ப செய்வான் தாழ் கச்சில் பிணிப்புண்டு ஐய
போதரா நின்ற-போழ்தில் போர் புலி குழாத்தின் சீறி
காதல் நம் சுற்றம் எல்லாம் கை இலங்கு எஃகம் ஏந்தி
சாதலே புரிந்து தோன்றும் தன்மை அ நகரில் கண்டேன்
#1749
கண்ட பின் நின்னை காண்பேன் கரு வரை உலம்பி பல்-கால்
விண்டுவும் உடைய வாலின் வெடித்துராய் வெகுண்டு நோக்கா
எண்திசையோரும் எள்க குஞ்சரம் இரிய பாயும்
ஒண் திறல் சிங்கம் அன்ன கதழ் ஒளி உடற்சி கண்டேன்
#1750
சினம் தலை பெருக்கி தீ கோள் உறுப்பினை சுருக்கி தீ போல்
அனன்று நில்லாத கண்ணால் நிறுத்தின செவியிற்று ஆகி
முனம் புக அடக்கி பின் போந்து இருந்து பாய்வான் அமைந்த
இனம் தலை புலியோடு ஒக்கும் தோழர் நின்னிடத்தில் கண்டேன்
 
மேல்
 
#1751
கூட நீர் நின்ற பெற்றி கண்டு இப்பால் நோக்குவேற்கு ஓர்
கேடகம் வாளொடு ஏந்தி கெடுக இ நகரம் என்னா
மாடத்தின் உச்சி நின்ற மலை மகள் தன்மை கண்டே
ஆடவர்க்கு உழுவை ஒப்பாய் அஞ்சினேன் அதன்-கண் என்றான்
#1752
பெண் இடர் விடுப்ப வாழ்வின் சாதலே பெரிது நன்று என்று
எண்ணினேன் நமர்கள் வீயும் இயல்பினான் நெருங்கப்பட்டு
கண்ணி நான் இயக்கன் தன்னை சிந்தித்தேன் கடவுள் வாழ்த்தி
அண்ணல் வந்து அழுங்க தோன்றி ஆங்கு என்னை கொண்டு போந்தான்
#1753
மந்திரம் மூன்றும் தந்து வானவன் விடுப்ப செல்வேற்கு
இந்திர திருவில் சூழ்ந்த இன மழை குழாத்தின் வேழம்
கொந்து அழல் காட்டு தீயால் வளைப்புண்ட குழாத்தை நோக்கி
சிந்தித்து கவன்று நிற்ப திரு மழை பொழிந்தது அன்றே
#1754
வெல் களிற்று அச்சம் நீக்கி விரைவொடு வனத்தின் ஏகி
பல்லவ தேயம் நண்ணி தனபதி என்னும் மன்னன்
நல் வனப்பு உடைய தேவி திலோத்தமை பெற்ற நம்பி
செல்வன் மற்று உலோகபாலன் திருமகள் பதுமை என்பாள்
#1755
அரி குரல் கோழி நாமத்து அரவு அவள் கடித்தது ஆக
திரு விழை அவளை தீர்த்தேன் தீர்வு இலா நண்பு வேண்டி
பொரு களி யானை மன்னன் புனை இழை அவளை தந்தான்
இரு மதி கழிந்த பின்றை இடை இரா பொழுதில் போந்தேன்
#1756
வாவி புள் நடையினாளை வஞ்சித்து தக்க நாட்டை
மேவி யான் காணலுற்று சார்தலும் இப்பர் உள்ளான்
தூவி பொன் மாட மூதூர் சுபத்திரன் என்னை கண்டே
ஆவி கண் அறிவு போல அளவளாய் அன்புபட்டான்
#1757
பண் அமை தேரின் ஏறி அவனொடு யான் இருந்து போகி
விண் உயர் செம்பொன் மாடத்து இழிந்து அவண் விளங்க புக்கேன்
வெண்ணிலா முத்தம் சூழ்ந்த வெம் முலை தடம் கணாளை
மண் எலாம் செல்ல நின்ற மகிழ்ச்சியின் மகிழ்ந்து தந்தான்
#1758
அ வழி இரண்டு திங்கள் கழிந்த பின் அவள் இல் நீங்கி
இ வழி நாடு காண்பான் வருதலும் இறைவன் கண்டே
செ வழிபாடர் ஆகி சிலை தொழில் சிறுவர் கற்ப
மை வழி நெடும் கணாளை தந்தனன் மதலை என்றான்
#1759
தான் உழந்து உற்ற எல்லாம் தம்பியை உணர கூறி
தேன் உழந்து அரற்றும் தாரான் குரவரை சிந்தித்தாற்கு
வான் இழிந்து ஆங்கு கண்ணீர் மார்பகம் நனைப்ப கையால்
ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் ஒற்றி மற்று இதனை சொன்னான்
#1760
திண் பொருள் எய்தலாகும் தெவ்வரை செகுக்கல் ஆகும்
நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணல் ஆகும்
ஒண் பொருள் ஆவது ஐயா உடன் பிறப்பு ஆக்கல் ஆகா
எம்பியை ஈங்கு பெற்றேன் என் எனக்கு அரியது என்றான்
#1761
தேனில் பால் என செல்வன் தம்பியோடு
ஆனியம் பல கழிய ஆயிடை
வேனில் குன்று என தோழர் வெந்து மெய்
ஊனின் நைகின்றார் செய்வது உன்னினார்
#1762
நாடு-மின் இனி நாங்கள் செய்வது என்று
ஈடினால் இருந்து எண்ணி நால்வரும்
ஆடும் மஞ்ஞை அம் சாயல் தத்தை மெய்
வாடல் ஒன்றிலள் வஞ்சம் ஆம்-கொலோ
#1763
கள்ளம் உண்டு எனில் காண்டும் நாம் என
மெள்ள எய்தினார் வினவ கூறினாள்
வள்ளற்கு உற்றதும் மறைந்த வண்ணமும்
வெள்ளி வெண் மலை வேந்தன் பாவையே
#1764
மற்று அவள் சொல்ல கேட்ட மைந்தர்கள்
இற்ற தம் உயிர் இயல்பின் பேர்த்து அவண்
பெற்ற மாந்தரின் பெரிது மெய் குளிர்ந்து
அற்றம் அன்மையின் அவலம் நீங்கினார்
#1765
திருவின் சாயல் தன் சீறடி சிலம்பு
உருவ குஞ்சி-வாய் உறுத்தி ஒய்யென
உருகும் உள்ளத்தின் உடம்பு வீங்கினார்
பருகு காதலின் பாடி ஆடினார்
#1766
பைத்து அரவ திரை சிந்திய பல் கதிர்
மொய்த்து எரி நித்திலம் வைத்து அன பல்லினள்
இ திருவின் உருவம் தொழுதார் தமது
எ துயரும் கெடும் என்று இன சொன்னார்
#1767
ஐயனை யாம் அவண் எய்துவம் ஆய்_இழை
நொய்தின் உரை பொருள் உண்டு எனின் நொய்து என
மை எழுத்து ஊசியின் மாண்டது ஓர் தோட்டு-இடை
கை வளர் கோதை கரந்து எழுத்திட்டாள்
#1768
ஆங்கு உருக்கார் அரக்கு இட்டு அதன் மீமிசை
பூம் குழையால் பொறி ஒற்றுபு நீட்ட
தேம் குழலாள் தொழுதாள் திசை செல்க என
பாங்கர் அங்கு படர்குற்றனர் அன்றே
#1769
வேந்து இரிய கணை வித்திய வெம் சிலை
காய்ந்து இரிக்கும் புருவ கரும் கண்ணியர்
ஆய்ந்து அரிக்கும் நறவம் மலர் மாலையை
வேய்ந்து அரிக்கும் மிஞிறு ஆர்ப்ப விடுத்தாள்
#1770
அலங்கு வெண் மதி ஐப்பசி அடைய அ பகலே
நிலம் கொண்டு ஓங்கின நிரம்பின புகர் சுழி உடைய
உலம்பி முன் இரு தாள்களும் உமிழ்வன போல்வ
விலங்கு பாய்வன விடு கணை விலக்குவ கலிமா
#1771
அள்ளல் சேறு அரு மணல் புனல் அரு வரை படினும்
உள்ளம் போல் செல்வ உரன் அசைவு இல்லன அமருள்
கொள்ளி மண்டிலம் போல் கொடிபட திரிந்திடுவ
வெள்ளி மால் வரை தாழ்வதில் மேம்பட பிறந்த
#1772
ஈர் ஐஞ்ஞூற்றினை இருபதின் முரணிய தொகைய
வீரர் ஏறின விளங்கு ஒளி பக்கரை அமைந்த
தாரும் புட்டிலும் அரற்றுவ சாமரை அணிந்த
ஓரும் கூடின மள்ளரும் ஒலித்து எழுந்தனரே
#1773
வடித்த போத்தொடு வன் செலல் அத்திரி
கடுத்த ஒட்டகம் கால் செல்வ யாவையும்
நொடிப்பின் மாத்திரை நூற்று வில் ஏகுவ
எடுத்த பண்டம் இயைந்து உடன் என்பவே
#1774
ஞாலம் விற்பன பைங்கிளி நல் நிறத்து
ஆலும் மா பவள குளம்பு ஆர்ந்தன
காலின் நொய்யன கண் வெளவு காட்சிய
நால்கு பண்ணினர் நால்வரும் ஏறினார்
#1775
நாளும் புள்ளும் நயத்தகு நல் நிலை
கோளும் ஓரையும் கொண்ட நிமித்தமும்
ஆளும் மாந்தரின் ஆய்ந்து கொண்டு ஆயிடை
தாளின் ஊக்குபு சாத்தொடு எழுந்தவே
#1776
பறையும் சங்கும் பரந்து ஒலித்து ஆர்த்து எழ
உறை கொள் வாளினோடு ஒண் சுடர் வேல் மின
சிறை அழிந்தது ஓர் செம் புனல் போன்று அவண்
அறை கடல் படை ஆர்ப்பொடு எழுந்தவே
#1777
காய்த்த செந்நெலின் தாழ் கதிர் நெற்றி மேல்
பூத்த முல்லையின் போது பொழிந்து உக
நீத்த நீர் வயல் அன்னமும் நாரையும்
ஏத்தல் சால் முருடு ஆர்ப்ப இரிந்தவே
#1778
அளகு சேவலொடு ஆடி அம் காய் குலை
மிளகு வார் கொடி ஊசல் விருப்புறூஉம்
சுளகு வார் செவி தூங்குகை குஞ்சரம்
இளகு காடு இளக பரி கொண்டவே
#1779
அருவி குன்றமும் ஐவன சாரலும்
குருவி ஆர்த்து எழு கொய் புன கானமும்
திரு இல் தீர்ந்தவர் தேயமும் தேர்ந்து போய்
பரிவின் மாதவர் பள்ளியுள் விட்டதே
#1780
வண்டு துயில் கொண்டு குயில் ஆலி மயில் அகவி
விண்டு மது விட்டு விரி போது பல பொதுளி
கொண்டு தளிர் வேய்ந்து சினை தாழ்ந்து நனை ஆர்ந்து ஒன்று
உண்டு பொழில் இமையவர்கள் உலகம் உறுவதுவே
#1781
காவி கழுநீர் குவளை ஆம்பல் கடி கமலம்
தூவி மட நாரை துணை அன்னம் பயில் முது மீன்
மேவி உறை வண்டினொடு மல்கி விழைதகைய
வாவியொடு காவின் இடை மாந்தர் பதி கொண்டார்
#1782
ஐயர் உறை பள்ளி இடம் ஆண்டு அழகர் காண
செய் கழலர் தாரர் அவர் எங்கும் திரிகின்றார்
கொய்தகைய பூம் பொதும்பர் குளிரும் மர பலகை
செய்யவளின் சிறிது மிகை சேயவளை கண்டார்
#1783
அ நுண் துகில் கல் அரத்தம் அல்குல் அது வருத்த
செம் நுண் துகில் உத்தரியம் புதைந்து சுவல் வருத்த
மை நுண் குழல் சிறுவன் மனம் வருத்த வடி வேல் கண்
கைந்நொண்டன கவற்சி நனி வருத்த கலுழ்ந்து ஆற்றாள்
#1784
மாசொடு மிடைந்து மணி நூற்று அனைய ஐம்பால்
பூசுதலும் இன்றி பிணி கொண்டு புறம் தாழ
வாச மலர் மறைந்த வழி வாமன் அடிக்கு ஏற்றி
தோசம் அற துதிகள் மனத்து ஓதி தொழுது இருந்தாள்
#1785
சிந்திப்பல் என் சிறுவன் திறம் இனி என்று எழில் நெடும் கண்
வந்து பனி வார்ந்து முலை கலிங்கம் அது நனைப்ப
அந்தில் இருந்தாள் அவளுக்கு அடைந்து மனம் நடுங்கி
வந்தித்து இருந்தார் மகிழ்ந்து காதல் மிக-மாதோ
#1786
வரை உடுத்த பள்ளி இடமாக அதில் மேயோள்
விரை உடுத்த போது உறையும் வேல் நெடும் கணாள்-கொல்
உரை உடுத்த நா உறையும் ஒள்_நுதல்-கொல் அன்றி
திரை உடுத்த தே_மொழி-கொல் என்று தெரிகல்லார்
#1787
மங்கலம் மடிந்த திரு மா மகளை ஒப்பீர்
இங்கு வரவு என்னை குலம் யாது அடிகட்கு என்ன
எம் குலமும் எம் வரவும் வேண்டில் எளிது அன்றே
நும் குலமும் நும் வரவும் நீர் உரை-மின் என்றாள்
#1788
மோட்டு முது நீர் மலங்கு மொய்த்த இள வாளை
பூட்டு சிலை இறவினொடு பொருது துயில் மடியும்
ஈட்டம் உடையவர்கள் உறை இராசபுரம் என்னும்
நாட்டம் உடை நகரம் எமது ஆகும் உறை பதியே
#1789
பொன் உடைய மார்பின் புகழ் மந்திரி பொலம் தார்
தன்னுடைய நுண் உணர்வின் சாகரற்கு தக்காள்
கொன் நெடிய வாள் கண் குருதத்தை சீதத்தன்
மன் நடுங்க வீங்கு திரள் தோள் மடங்கல் அன்னான்
#1790
அளப்பு அரிய நான்மறையினான் அசலன் என்பான்
திளைக்கும் திரு ஒப்பு உடைய திலோத்தமை-தன் சிறுவன்
விளைத்து இரும்பு மேய்ந்து ஒழிந்த மிச்சில் வரை மார்பன்
இளைப்பல் இவன் தேசு உரைப்பின் புத்திசேன் இ இருந்தான்
#1791
செட்டி தனபாலன் மனையாள் சினவு வாள் கண்
பட்டம் நுதல் மின்னின் நகு பவித்திரைக்கு தோன்றி
மட்டு மலர் மார்பின் மத யானை எயிறு உழுது ஆங்கு
இட்ட குறி தார் திவள பதுமுகன் இ இருந்தோன்
#1792
பொன் நகருள் வேந்தன் பெயரால் பொறியும் பெற்றான்
வில் மரிய தோள் விசயதத்தன் உயிர் கவசம்
பின் அரிய கற்பினவள் பிரீதிமதி காதல்
தன் மகனென் யான் அடிகள் தேவதத்தன் என்பேன்
#1793
எங்கள் வினையால் இறைவன் வீடிய அ ஞான்றே
எங்கள் உயிர் நம்பியொடு யாங்கள் பிறந்தேம் ஆக
எங்கள் தமர் நம்பிக்கு இவர் தோழர் என ஈந்தார்
எங்கு எழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம்
#1794
யாண்டு நிறைந்து ஏகிய பின் நந்தன் அவற்கு இளையார்
மாண்ட குணத்தார் நபுல விபுலரொடு மன்னும்
ஈண்ட வளர்ந்தேம் ஏந்து தவிசின் உச்சி மிசை எய்தி
தீண்ட அரிய வெம்மையொடு திக்கயங்கள் எனவே
#1795
வில் தொழிலும் வாள் தொழிலும் வீணை பொரு தொழிலும்
மல் தொழிலும் தேர் தொழிலும் வாரணத்தின் தொழிலும்
நல் தொழில வாசியொடு நன் கலைகள் நீந்தி
கற்றனங்கள் யாமும் உடன் கற்பனகள் எல்லாம்
#1796
வெம் சிலையின் வேடர் தொறு மீட்டு விசும்பு ஏகும்
விஞ்சை அரையன் மகளை வீணை பொருது எய்தி
குஞ்சரமும் வென்று குணமாலை நலன் உண்ட
நம்பி அவன் நாமம் எவன் என்னின் இது ஆமே
#1797
கந்துக்கடன் என்ற நகர்க்கு ஆதி முது நாய்கன்
முந்தி பெறப்பட்ட மகன் மூரி சிலை தட கை
சிந்திப்பவர் அவலம் அறு சீவகன் என் தோழன்
அந்தில் ஒருநாள் அவனை அரசன் ஒரு தவற்றால்
#1798
தொடிகள் தவழ் வீங்கு திரள் தோள் இறுக யாத்து
கடிகள் தவழ் குழல் மகளிர் கசிந்து மனம் கரிய
கொடிகள் தவழ் மாட நகர் கொல்ல என மாழ்கி
இடிகள் தவழ்ந்திட்ட பட நாகம் என வீழ்ந்தாள்
#1799
மாதவ பெருமை வண்ணம் மாநகர் நம்பிக்கு உற்ற
ஏதத்தை கேட்டலோடும் இரு கணும் பிறந்து மாழ்கி
காதல் தம் மகனுக்கு உற்ற நவை என கலங்கி வீழ்ந்தார்
ஆதலால் நங்கை யாரே அருள் பெரிது உடையர் என்றார்
#1800
மாழ்குபு மயங்கி வீழ்ந்த மாபெரும்தேவி-தன்னை
ஆழ் துயர் அவித்தற்கு ஒத்த அரும் பெறல் யோகம் நாடி
காழ் பரிந்து அரைத்த சாந்தின் களி தரு நீரில் தேற்ற
யாழ் புரை கிளவி ஆற்றாள் மயங்கி வீழ்ந்து அரற்றுகின்றாள்
 
#1801
கை மாண் கடல் படையுள் காவலனை ஆண்டு ஒழிய
பொய் மா மயில் ஊர்ந்து போகி புறங்காட்டுள்
விம்மாந்து யான் வீழ வீழ்ந்தேன் துணை ஆகி
எம்மானே தோன்றினாய் என்னை ஒளித்தியோ
#1802
கையார் இலங்கு எஃகின் கந்து கடன் கொடுபோய்
மொய்யார் உவகையனாய் முற்று_இழைக்கு தான் கொடுப்ப
நையாள் வளர்த்த சுநந்தை நவையுற என்
ஐயா என் ஐயா என் ஐயா அகன்றனையே
#1803
மின் நிரைத்த பைம் பூண் விளங்கு இலை வேல் வேந்தன்
முன் உரைத்த மூன்று கனவும் புணை ஆக
என் உயிரை தாங்கி இருந்தேன் வலி ஆகாது
என் அரசே என் பூசல் கேளாது இறந்தனையே
#1804
கோ அ மா ஆகி குடியோம்பி நின் குடை கீழ்
பாவமே செய்தேன் பரிவு எலாம் நீங்கினால்
போ அம்மா என்று உரைப்ப போவேன் முன் போயினாய்
ஆ அம்மா அம்மா என் அம்மா அகன்றனையே
#1805
கோமான் மகனே குரு குலத்தார் போர் ஏறே
ஏமாங்கதத்தார் இறைவா என் இன்னுயிரே
காமா கடலுள் கலம் கவிழ்த்தேன் கண்ணுள் நீர்
பூ மாண் புனை தாராய் நோக்காது போதியோ
#1806
கந்தார் களி யானை காவலனார் கான் முளையை
வந்தார் வாய் தீது இன்மை கேட்டு மறைந்திருந்து
நொந்தேன் பல-காலும் நோயோடே வீகின்றேன்
அந்தோ அறனே மற்று ஆற்றேனால் ஆற்றேனால்
#1807
முன் ஒரு-கால் என் மகனை கண்டேன் என் கண் குளிர
பின் ஒரு-கால் காண பிழைத்தது என் தேவிர்காள்
என் ஒப்பார் பெண் மகளிர் இ உலகில் தோன்றற்க என்று
அன்ன பெடை நடையாள் ஆய் மயில் போல் வீழ்ந்தனளே
#1808
புண் மல்கு மத்தகத்த போர் வேழம் பொற்பு அழித்த
மண் மல்கு தாரான் பெருமாட்டி வாய் மொழி கேட்டு
உள் மல்கு நெஞ்சினராய் ஒய்யெனவே வெய்துயிரா
கண் மல்கு நீரார் முக முகங்கள் நோக்கினரே
#1809
கண்டீர் கருமம் விளைந்த ஆறு என்றாராய்
வண் தாரார் வண் கடகம் மின்ன தம் கை மறித்து
கொண்டாம் கடல் வேலி கீழ் மகனை கூற்றம் ஆய்
உண்டாம் உயிர் என்று உவப்பு எழுந்து ஆடினரே
#1810
வீழ்ந்து மயில் போல் விசயை கிடந்தாளை
தாழ்ந்து பல தட்பம் தாம் செய்ய ஏல் பெற்று
போழ்ந்து அகன்ற கண்ணாள் புலம்பா எழுந்திருப்ப
சூழ்ந்து தொழுது இறைஞ்சி சொன்னார் அவன் திறமே
#1811
கொலைக்களம் குறுகலும் கொண்டு ஓர் தெய்வதம்
நிலைக்களம் இது என நீக்க நீங்கினான்
இலக்கண மட பிடி இயைந்து ஓர் போதகம்
மலைக்கணத்து-இடை மகிழ்ந்து அனைய மைந்தனே
#1812
பூ உடை தெரியலான் போர்வை நீத்து இனி
கோ உடை பெருமகன் ஆதல் கொண்டனம்
சேவடி சேர்ந்தனம் தொழுது சென்று என
மாவடு நோக்கி உள் மகிழ்ந்து கூறினாள்
#1813
தரணி காவலன் சச்சந்தன் என்பவன்
பரணி நாள் பிறந்தான் பகை யாவையும்
அரண் இலான் என்-கண் தங்கிய அன்பினால்
இரணியன் பட்டது எம் இறை எய்தினான்
#1814
விசயை என்று உலகு ஓடிய வீறு இலேன்
பசையினால் துஞ்சி யான் பட்ட தீது எலாம்
இசைய நம்பிக்கு எடுத்து உரைத்து என்னுழை
அசைவின்று ஐயனை தம்-மின் என சொன்னாள்
#1815
கோதை வேல் நம்பிக்கு அல்லதை இ பொருள்
யாதும் கூறன்-மின் யாரையும் தேறன்-மின்
ஏதம் இன்னன இன்னணம் எய்தலால்
பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்-மின்
#1816
பகைவர் உள்ளமும் பாம்பின் படர்ச்சியும்
வகை கொள் மேகலை மங்கையர் நெஞ்சமும்
மிகை செல் மேகத்து மின்னும் செம் நில்லலா
புகை செய் வேலினீர் போற்றுபு செல்-மினே
#1817
வணக்கரும் சிலையினானை ஒரு மதி எல்லை நாளுள்
குணத்தொடு மலிந்த பாதம் குறுக யாம் கொணர்ந்த பின்றை
பணித்ததே செய்து பற்றார் பகை முதல் அடர்த்தும் என்றார்
மணி கொடி மாசு உண்ட அன்னாள் மற்றதே துணி-மின் என்றாள்
#1818
பொறி தவ நெருங்க நோற்று புகர் அற நிறைந்த கொள்கை
செறி தவ விசயை பாதம் சென்னியின் வணங்கி மீண்டு
வெறி கமழ் சோலை நண்ணி வேண்டிய அடிசில் கை தொட்டு
எறி படை எழுக என்றார் வளை எழுந்து ஆர்த்த அன்றே
#1819
பைம் துகில் மகளிர் தேன் சோர் பவள வாய் திகழ நாணி
சிந்தித்து கூந்தல் வாங்கி செவ்வணம் துடைப்பதே போல்
இந்திரகோபம் கௌவி இறகு உளர்கின்ற மஞ்ஞை
அந்தரத்து இவர்ந்த பாய் மா அரும் பொன் தார் அரவத்தாலே
#1820
சாந்தின் மேல் தொடுத்த தீம் தேன் தண் மதி கோடு போழ
போந்து மட்டு அருவி வீழும் பொன் நெடும் குன்றும் அம் தண்
ஏந்து பூம் காவு சூழ்ந்த இரும் புனல் ஆறும் நீந்தி
மாந்தரே மலிந்த நாடு மடுத்து உடன் சென்றது அன்றே
#1821
மது குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செம் தீ
புது கலத்து எழுந்த தீம் பால் பொங்கலின் நுரையின் பொங்கி
கதிர்த்து வெண் மாடம் தோன்றும் செவ்வையில் காதம் நான்கின்
நதி கரை வந்துவிட்டார் நச்சு எயிற்று அரவோடு ஒப்பார்
#1822
மான் அயா நோக்கியர் மருங்குல் போல்வது ஓர்
கான யாற்று அடைகரை கதிர் கண் போழ்கலா
தேன் அயாம் பூம் பொழில் திண்ணை வெண் மணல்
தானையாம் நால்வரும் தணப்பின்று எய்தினார்
#1823
வார்ந்து தேன் துளித்து மட்டு உயிர்த்து வார் மணல்
ஆர்ந்து போது அரும் தவிசு அடுத்தது ஒத்துமேல்
தூர்ந்து தேன் வண்டொடு துதைந்து உள் புக்கவர்
போந்து போக்கு அரியது அ பொழிலின் பெற்றியே
#1824
தாது அணி கொழு நிழல் இருந்து தண் மது
போது அணி அலங்கல் தாழ் பொரு இல் மார்பனை
யாது நாம் அடை திறம் உரை-மின் நீர் என
காதலால் பதுமுகன் கண்டு கூறினான்
#1825
திரு கிளர் மன்னவன் சேனை மாநகர்
பொருக்கு ஒளி இன நிரை கோடும் கொண்ட பின்
முருக்கு ஒளி மலர் அடி மூரி மொய்ம்பனை
செருக்களத்து எதிர்ப்பட சிதைவது இல்லையே
#1826
சேண் குலாம் சிலையொடு திளைத்த பின் அவர்
வாள் கலாம் வலித்து அமர் தொடங்கின் வல்லையே
மீட்கலாம் விருப்பு உடைத்து எழுக என்று தன்
ஆட்கு எலாம் செப்பினன் அலர்ந்த தாரினான்
#1827
இரும் கடல் மணி நிரை எய்தி நாம் கொண்ட பின்
அரும் கடி அணி நகர் ஐயன் அங்கு இல்லையேல்
பெரும் படை தான் வரின் பின்றி நீங்கின் பழி
தரும் படித்து அன்றியும் சாற்றுவல் கேள்-மினோ
#1828
மஞ்சு சூழ் விசும்பு-இடை மணந்து மின் மிளிர்வ போல்
வஞ்சம் இல் மறவர் வாள் மிளிர்ந்து பாய் குருதியுள்
குஞ்சரம் குளிப்பது ஓர் நீத்தமாம் ஆதலால்
எஞ்சல் இல் கொள்கையீர் எண்ணி சூழ்-மின்களே
#1829
என்றனன் புத்திசேன் என்னும் நான்மறையினான்
நன்று அதே பொருள் என நால்வரும் இருந்துழி
ஒன்றி முன் விடுத்தவர் மூவர் ஒற்று ஆட்கள் வந்து
இன்று இதால் பட்டது என்று இயம்புகின்றார்களே
#1830
வளையசுந்தரம் எனும் வாரண மால் வரை
முளை இளம் திங்கள் போல் முத்து உடை கோட்டது
கிளை இளம் பிடிகள் ஐஞ்நூற்று-இடை கேழ் அரக்கு
அளைய அஞ்சன வரை அனையது அ களிறு-அரோ
#1831
கடு மத களிப்பினால் கார் என முழங்கலின்
விடுகலார் பாகரும் வெருவர கொன்றிட
பிடியொடும் கந்து அணைவு இன்றி நீர் உருள் பிளந்து
அடு களிறு அந்த போதிகை பரிந்து அழன்றதே
#1832
கண் உமிழ் தீயினால் சுட நிறம் கரிந்த போல்
பண் உமிழ் வண்டு உலாய் பரத்தரா நின்ற சீர்
அண்ணல் அம் களிற்றினை அடக்கினான் சீவகன்
வண்ண மேகலையினார் மனம் என படிந்ததே
#1833
இறுவரை இவர்வது ஓர் இலங்கு எயிற்று அரி என
உறு வரை மார்பினான் தூசம் கொண்டு ஒய்யென
பெறலரும் குஞ்சரம் ஏறலின் பெரும் சனம்
அறை கடல் திரை ஒலித்து ஆங்கு என ஆர்த்ததே
#1834
அம் கை அம் தலத்தினால் அப்புது ஆது ஐ என
கொங்கு அலர் கண்ணியான் கொம்மை தான் கொட்டலும்
பொங்கிய உவகையில் பொலிந்து மா களிறு அவன்
தங்கிய பயிர் தொழில் தட கையால் செய்ததே
#1835
கொட்டை அம் புரோசைதான் இரு வடம் கொண்டு உடன்
கட்டினான் கரு வலி தட கையால் தோட்டியும்
இட்டனன் இரண்டுடன் இமிழ் கொளீஇ இலங்கு பொன்
பட்டமும் பனி வரை மின் என கட்டினான்
#1836
கச்சையும் வீக்கினன் கறங்கு இரு மணி அணிந்து
அச்சுறு கொழும் தொடர் யாப்பு அழித்து அடி இணை
உச்சியும் புரோசையுள் குளிப்ப உய்த்து உறு வலி
மெச்சி மேல் வேந்தனும் விழைதக தோன்றினான்
#1837
கோல் தொடி புரிசையுள் கொற்றவன் நின்று ஐயன்
ஏற்று இயல் காண்டும் நாம் இவண் தருக என்னவே
காற்று என கடல் என கரு வரை உரும் என
கூற்று என குஞ்சரம் கொண்டு புக்கான்-அரோ
#1838
குழவி அம் செல்வன் ஓர் குன்று கொண்டு ஒய்யென
அழகிதா பறப்பதே போலவும் ஆர் புயல்
மழையை ஊர்ந்து ஓடும் ஓர் வானவன் போலவும்
எழுதல் ஆகா-வணம் இருந்தனன் என்பவே
#1839
வனை கல திகிரியும் வாழ் உயிர் மேல் செலும்
கனை கடும் கதழ் பரி கால சக்கரமும் போல்
வினை தகு வட்டமும் வீதியும் பத்தியும்
இனையவை ஏமுற இமைப்பினின் இயற்றினான்
#1840
ஒருவனே களிறும் ஒன்று ஓர் நூறு ஆயிரம்
திரிவவே போன்றன திசை எலாம் குஞ்சரக்கு
உரியவன் இவன் அலால் உலகினில் இலன் என
அரிது உணர் வேத்து அவை அமைக மற்று என்றதே
#1841
வள் உகிர் நுதியினால் வரி நுதல் உறுத்தலும்
உள் உணர் குஞ்சரம் ஒய்யென நிற்றலும்
எள்ளரும் இரு மணி கிணினென இசைத்தன
வெள்ள நீர் பெரும் சனம் வியந்து கை விதிர்த்ததே
#1842
என் மனம் நின் மனம் என்று இரண்டு இல்லையால்
தன் மனத்து உள பொருள் தான் தனக்கு உரைப்பது ஒத்து
உன் மனம் என் மனம் என்பது ஒத்து இழைத்ததால்
நன் மன குஞ்சர நம்பியோடு என்மரும்
#1843
தேவனே மகன் அலன் செல்வன் மற்று என்மரும்
பாவையே நோற்றனள் பாரின் மேல் என்மரும்
கோவனும் மக்களும் குளிர்ந்து தோள் நோக்கினார்
ஓ என வையகத்து ஓசை போய் உயர்ந்ததே
#1844
பிண்டம் உண்ணும் பெரும் களிறு பூட்டி அவண்
வண்டரும் ஓவரும் பாட மாநகர் தொழ
கொண்ட தன் தம்பியும் தானும் கோயில் புக
கண்டனம் கண்ணினே என்று கண்டவர் சொனார்
#1845
பாத்தில் சீர் பதுமுகன் படிவ ஒற்றாளர் சொற்கு
ஓத்து என கொடுத்தனன் கொழு நிதி உவகையில்
தூ திரள் சுறா இனம் தொக்க போல் மறவரும்
ஏத்தரும் சிலை கை வாள் இலங்கு வேல் ஏந்தினார்
#1846
வேல் நிரை வாள் மதில் பிளந்து வெம் சமத்து-இடை
தேன் நிரை களிற்றின் மேல் திண் குளம்பு அழுத்துவ
ஆன் நிரை வளைப்பது ஓர் பொருள் என சிரித்து உடன்
மா நிரை பண்ணினார் வடித்த நூல் கேள்வியார்
#1847
விடை உடை இன நிரை விழுங்கல் மேயினார்
துடியொடு சிறுபறை துவைத்த வால் வளை
முடி உலகு உற நிமிர்ந்து ஆர்த்த மொய் கழல்
அடு படை இளையரும் அரணம் வீசினார்
#1848
காந்தள் அம் கடி மலர் கண்ணி நெற்றியர்
ஆய்ந்து அளந்து இயற்றிய அத்து உண் ஆடையர்
வேய் துணி அலமரும் புறத்தர் வெம் சுடர்
ஏந்து எழில் நவியமும் ஏந்து தோளினார்
#1849
கோன் உடை இன நிரை காக்கும் கோவலர்
தேனொடு கடி சுரும்பு அரற்றும் தே மலர்
கான் இடை இன நிரை காவல் போற்று-மின்
ஆன் இடை அழித்த புள் என்று கூறினார்
#1850
விடு பொறி அரவு என விளங்கு வெம் சிலை
அடு கணை சிதறினார் ஆர்த்த வால் வளை
கடுகின கால் இயல் இவுளி காண்டலும்
முடுகுபு கோவலர் முந்து கால் பெய்தார்
 
 
#1851
அளை செறி இரும் புலி அனைய ஆடவர்
வளைத்தனர் மணி நிரை வன்கண் ஆயரும்
விளைத்தனர் வெருவர தக்க வெம் சொலால்
உளைத்தனர் பூசல் விட்டு உணர்த்த ஓடினார்
#1852
தேர் தொகை தானை மன்னன் சீவகற்கு இளைய நம்பி
வார் தொகை முழவம் விம்ம மல் உறழ் தோளினானை
நீர் தொகை கழனி நாடு நெடு நகர் பெயரும் நுங்கள்
சீர் தொகை குலனும் எல்லாம் தெரிந்து எமக்கு உரைமோ என்றான்
#1853
திருக்குறிப்பு அன்னது ஆயின் செப்புவல் அடிகள் செம்பொன்
அரித்து அசும்பு ஒழுகு குன்றத்து அருவியின் வெரீஇய மஞ்ஞை
பரித்தவை பழன நாரை பார்ப்பொடு மருதில் சேக்கும்
உரைத்தகு நாடும் ஊரும் குலத்துடன் உணர என்றான்
#1854
பொரு கயல் உகளி பாய பூம் சிறை குமரி அன்னம்
குருகினோடு இரிய செந்நெல் கொழும் கதிர் குவளை எற்ற
முருகு விண்டு இரிய தீம் தேன் முழங்கு நீர் கழனி நல் நாடு
எரி உமிழ்ந்து இலங்கும் வேலோய் ஏமமாங்கதம் அது என்றான்
#1855
பூம் துகில் கொடுத்த தீம் தேன் அகில் புகை பொன் அனார்-தம்
கூந்தலில் குளித்த வண்டு கொப்புளித்து இட்ட வாசம்
மாந்தர் மேல் தவழ்ந்து மாடம் இருள் பட புதையும் செல்வத்து
ஏந்து பொன் இஞ்சி மூதூர் இராசமாபுரம் அது என்றான்
#1856
எம் குலம் அடிகள் கேட்க என்றலும் எழுந்த ஓர் பூசல்
பொங்கு உளை புரவி வெள்ளம் போக்கு அற வளைத்து முற்றி
இங்கு உள நிரையை எல்லாம் கவர்ந்தது என்று இட்ட-போழ்தே
திங்கள் வெண்குடையினான் தன் திரு செவிக்கு இசைத்தது அன்றே
#1857
எரி திறல் வென்றி வேந்தற்கு இற்றென இசைப்ப சீறி
மருப்புற கந்து பாய்ந்து முழங்கும் மால் களிறு போல
திரு கிளர் மணி செய் பொன் தூண் தீப்பட புடைத்து செம் கண்
உருத்து எரி தவழ நோக்கி உடல் சினம் கடவ சொன்னான்
#1858
நால் கடல் பரப்பும் வந்து நல் நகர் கண்ணுற்று என்ன
வேல் கடல் தானை பாய்மா விளங்கு ஒளி இவுளி திண் தேர்
கூற்று என முழங்கும் ஓடை குஞ்சர குழாத்தோடு ஏகி
பால்கடல் பரப்பின் வல்லே படு நிரை பெயர்க்க என்றான்
#1859
கண் அகன் கடல் அம் கோடும் பறைகளும் முழங்கி விம்ம
விண் அகத்து இயங்கும் மேக குழாம் என நிரைத்த வேழம்
திண் நுக புரவி திண் தேர் விரைந்தன நிரந்த பாய்மா
மண்ணகம் மலிர காலாள் கடல் கிளர்ந்து எழுந்தது அன்றே
#1860
பால் நிற கவரி நெற்றி பசுங்கிளி நிறத்த பாய்மா
தானுறப்பண்ணி திண் தேர் தம்பி கோல் கொள்ள ஏறி
கூன் நிற குழவி திங்கள் குளிர் கதிர் ஆர மார்பில்
தேன் நிறம் கொண்ட கண்ணி சீவககுமரன் சொன்னான்
#1861
மன்னவன் நிரை கொண்டாரை வள நகர் தந்து மன்னன்
பொன் அவிர் கழலில் தங்கள் புனை முடி இடுவியேனேல்
இன் இசை உலகம்-தன்னுள் என் பெயர் சேறல் இன்றாய்
கன்னிய மகளிர் நெஞ்சில் காமம் போல் கரக்க என்றான்
#1862
பார் மலி பரவை தானை பரப்பு-இடை பறப்பதே போல்
நீர் மலி கடாத்த கொண்மூ நெற்றி மேல் மின்னின் நொய்தா
தார் மலி மார்பன் திண் தேர் தோன்றலும் தறு கண் மைந்தன்
சீர் மலி பகழி ஏந்தி பதுமுகன் சிலை தொட்டானே
#1863
குடை நிழல் கொற்ற வேந்தன் ஒரு மகன் காண குன்றா
அடி நிழல் உறைய வந்தேம் அடியம் யாம் என்ன எய்த
விடு கணை சென்று தேர் மேல் பின் முனா வீழ்தலோடும்
தொடு கழல் குருசில் நோக்கி தூ துகில் வீசினானே
#1864
ஏந்தலை தோழர் எல்லாம் இணை அடி தொழுது வீழ
சேந்தன கண்ணினாலும் திண் எழில் தோளினாலும்
வாய்ந்த இன் சொல்லினாலும் மாலை தாழ் முடியினாலும்
ஆய்ந்தவன் சிறப்பு செய்தான் அவல நோய் அவரும் தீர்ந்தார்
#1865
கழல் அவாய் கிடந்த நோன் தாள் காளை தன் காதலாரை
நிழல் அவாய் இறைஞ்சி நீங்கா நெடும் களிற்று எருத்தம் மேல் ஏற்றி
அழல் அவாய் கிடந்த வை வேல் அரசிளங்குமரர் சூழ
குழல் அவாய் கிடந்த கோதை தாதையூர் கொண்டு புக்கான்
#1866
வான் நக்கி நின்று நுடங்கும் கொடி மாட மூதூர்
பால் நக்க தீம் சொல் பவளம் புரை பாவை அன்ன
மான் நக்க நோக்கின் மடவார் தொழ மைந்தர் ஏத்த
யானை குழாத்தின் இழிந்தார் அரிமானொடு ஒப்பார்
#1867
செம்பொன் புளகத்து இள ஞாயிறு செற்ற கோயில்
வம்பில் துளும்பு முலை வாள் நெடும் கண் மடவார்
நம்ப புகுந்து நரதேவன் அருளின் எய்தி
பைம்பொன் புளக களிற்றான் அடி தாம் பணிந்தார்
#1868
வல்லான் புனைந்த வயிர குழை வார்ந்து வான் பொன்
பல் பூண் எருத்தில் பரந்த அம் சுடர் கால மன்னன்
மல்லார் திரள் தோள் மருமான் முகம் நோக்க மைந்தர்
எல்லாம் அடிகள் எனக்கு இன்னுயிர் தோழர் என்றான்
#1869
வார் பொன் முடி மேல் வயிரம் உழ சேந்த செல்வத்து
ஆர் பொன் அடி சூழ் மணி அம் கழல் ஆனை வேந்தன்
கார் மின் நுடங்கும் இடை மங்கையை காண்க சென்று என்று
ஏர் மின்னு தாரான் அருள தொழுது ஏகினாரே
#1870
தழு முற்றும் வாரா திரள் தாமங்கள் தாழ்ந்த கோயில்
முழு முற்றும் தானே விளக்காய் மணி கொம்பின் நின்றாள்
எழு முற்றும் தோளார் தொழுதார் இன்னர் என்று நோக்க
கழுமிற்று காதல் கதிர் வெள் வளை தோளினாட்கே
#1871
துறக்கம் இதுவே எனும் தொல் நகர் மன்னன் மங்கை
தொறு கொண்ட கள்வர் இவரோ என சொல்லி நக்கு ஆங்கு
ஒறுக்கப்படுவார் இவர் என்று அங்கு அசதியாடி
வெறுக்கை கிழவன் மகள் என்ன விருந்து செய்தாள்
#1872
அரும் தீ தொழிலே புரிந்தான் மறை ஆய எல்லாம்
விருந்தா விரிப்பான் அவன் சீவகசாமி வேறா
இருந்தாற்கு ஓர் ஓலை கொடுத்தான் எரி குண்டலத்தால்
பொருந்தார் பொறியை புறம் நீக்குபு நோக்குகின்றான்
#1873
மற்று அடிகள் கண்டு அருளி செய்க மலர் அடி கீழ்
சிற்றடிச்சி தத்தை அடி வீழ்ச்சி திருவடிகட்கு
உற்ற அடிசில் மஞ்சனத்தை உள்ளுறுத்த காப்பும்
பொற்பு உடைய ஆக என போற்றி அடி வீழ்ந்தேன்
#1874
வயிர மணி கலன் கமழும் கற்பக நல் மாலை
உயிரை மதம் செய்யும் மது தண்டொடு உடை ஆடை
செயிரில் நறும் சாந்து சிலை அம்பு மணி அயில் வாள்
மயிர் எலியின் போர்வையொடு எம் மன்னன் விடுத்தானே
#1875
வந்தவனை யாரும் அறியாமல் மறையாக
தந்து தரன் கேட்ப இது சாமி வலித்தானா
ஐந்து மதி எல்லையினை ஆண்டு உடையன் ஆகி
அம் தில் அகன்றான் தமரொடு ஆங்கண் என சொன்னேன்
#1876
பட்ட பழி வெள்ளி மலை மேல் பரத்தல் அஞ்சி
தொட்டு விடுத்தேன் அவனை தூது பிற சொல்லி
பட்ட பழி காத்து புகழே பரப்பின் அல்லால்
விட்டு அலர்ந்த கோதை அவரால் விளைவது உண்டோ
#1877
அல்லதுவும் எங்கை குணமாலை அவள் ஆற்றாள்
செல்லும் மதி நோக்கி பகலே சிறியை என்னும்
பல் கதிரை நோக்கி மதியே பெரியை என்னும்
எல்லி இது காலை இது என்பது அறிகல்லாள்
#1878
அரவு வெகுண்டு அன்ன அகல் அல்குல் நிலம் புல்லி
திருவில் வளைந்து அனைய திரு மேகலையின் நீங்கி
புருவ மதி முகமும் புகழ் தோளும் புணர் முலையும்
உருவம் அழிந்து அடிச்சி உளள் ஆம்-கொல் உணர்கலனே
#1879
நாளை வரும் நையல் என நன்று என விரும்பி
நாளை எனும் நாள் அணிமைத்தோ பெரிதும் சேய்த்தோ
நாளை உரை என்று கிளியோடு நக சொல்லும்
நாளினும் இ நங்கை துயர் நாளினும் அற்று இதுவே
#1880
நோக்கவே தளிர்த்து நோக்காது இமைப்பினும் நுணுகும் நல்லார்
பூ கமழ் அமளி சேக்கும் மது மணவாளனார் தாம்
நீப்பு இலார் நெஞ்சின் உள்ளார் ஆதலான் இனைத்தல் செய்யேன்
போக்குவல் பொழுதும் தாம் தம் பொன் அடி போற்றி என்றாள்
#1881
இலவம் பூ அரக்கு உண்டு அன்ன பஞ்சி மெல் அடியினாள் தன்
புலவி சொல் பொறித்த ஓலை திரு முடி துளக்கி நோக்கி
தலை வைத்த காப்பு விஞ்சை கொண்ட பின் தாமம் சூழ்ந்து
கொலை வைத்த குருதி வேலான் தோழரை குறுகினானே
#1882
எம் கோ மற்று என் திறம் நீர் கேட்டது என்றாற்கு எரி மணி பூண்
செங்கோல் மணி நெடும் தேர் செல்வன் காதல் பெரும் தேவி
தங்கா தவ உருவம் தாங்கி தண்டாரணியத்துள்
அங்காத்து இருந்தாளை தலைப்பட்டு ஐய அறிந்தோமே
#1883
என்னே மற்று என்னே நீர் மொழிந்தது என்னே என விரும்பி
முன்னே மொழிந்தால் போல் முறை நின்று எல்லாம் உடன் மொழிய
மன் ஆரம் சிந்துவ போல் மலர்ந்த செந்தாமரை கண்ணீர்
பொன் ஆர மார்பின் மேல் பொழிய புன்கண் உற்றானே
#1884
அஃதே அடிகளும் உளரோ என்றாற்கு அருளுமாறு
இஃதா இருந்தவாறு என்றார்க்கு என்னை பெற வல்லார்க்கு
எய்தா இடர் உளவே எங்கு எங்கு என்று அ திசை நோக்கி
வெய்தா அடி தொழுது வேந்தன் கோயிற்கு எழுந்தானே
#1885
இலை விரவு பூம் பைம் தார் வேந்தன் ஏந்தல் குலம் கேட்பான்
மலை விரவு நீள் மார்பின் மைந்தன் தோழர் முகம் நோக்கி
கொலை விரவு கூர் நுதி வேல் குமரன் என்ன குருகுலத்தான்
கலை விரவு தீம் சொல்லார் காமன் என்றார் கமழ் தாரார்
#1886
அண்ணல் குருகுலத்தான் என்றால் யான் முன் கருதியது என்
எண்ணம் வெளிப்பட்டான் கரந்த மைந்தன் எரி செம்பொன்
வண்ண வரை மார்பம் முயங்கி நுண் நூல் மதியாரோடு
எண்ணி விய நெறியால் விடுத்தான் கோயில் புக்கானே

#1887
விள்ளா வியன் நெடும் தேர் வேந்தன் காதல் மட மகளே
கள் ஆவி கொப்புளிக்கும் கமழ் பூம் கோதாய் என் மனத்தின்
உள் ஆவி உள்ளாய் நீ ஒழிந்தாய் அல்லை என கையில்
புள் ஆவி செம் கழுநீர் குவளை செய்தாள் புனை பூணாள்

#1888
வார் முயங்கு மெல் முலைய வளை வேய் தோளாள் மனம் மகிழ
நீர் முயங்கு கண் குளிர்ப்ப புல்லி நீள் தோள் அவன் நீங்கி
தேர் முயங்கு தானையான் சிறுவர் சேடார் அகல் மார்பம்
தார் முயங்கி கூந்தல்மா இவர்ந்தான் சங்கம் முரன்றவே
 


No comments:

Post a Comment