seevagachinthamani - 5



4 குணமாலையார் இலம்பகம்

 
#851
காசு அறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல
மாசு அறு விசும்பின் வெய்யோன் வட திசை அயணம் முன்னி
ஆசு அற நடக்கும் நாளுள் ஐம்_கணை_கிழவன் வைகி
பாசறை பரிவு தீர்க்கும் பங்குனி பருவம் செய்தான்

 
#852
தோடு அணி மகளிர் போன்ற துணர் மலர் கொம்பர் கொம்பின்
ஆடவர் போல வண்டும் அடைந்தன அளியிற்கு ஒல்கி
ஊடிய மகளிர் போல ஒசிந்தன ஊடல் தீர்க்கும்
சேடரின் சென்று புல்லி சிறுபுறம் தழீஇய தும்பி

 
#853
நானம் மண்ணிய நல் மண மங்கையர்
மேனி போன்று இனிதாய் விரை நாறிய
கானம் காழ் அகிலே கமழ் கண்ணிய
வேனிலாற்கு விருந்து எதிர்கொண்டதே

 
#854
கொம்பர் இன் குயில் கூய் குடை வாவியுள்
தும்பி வண்டொடு தூ வழி யாழ் செய
வெம்பு வேட்கை விரும்பிய வேனில் வந்து
உம்பர் நீள் துறக்கத்து இயல்பு ஒத்ததே

 
#855
நாக நாள்மலர் நாறு கடி நகர்
ஏக இன்பத்து இராசபுரத்தவர்
மாகம் நந்து மணம் கமழ் யாற்று அயல்
போகம் மேவினர் பூ மர காவினே

 
#856
முழவம் கண் துயிலாத முதுநகர்
விழவு நீர் விளையாட்டு விருப்பினால்
தொழுவில் தோன்றிய தோமறு கேவல
கிழவன் மூதெயில் போல் கிளர்வுற்றதே

 
#857
வள்ள நீர் அரமங்கையர் அம் கையால்
உள்ளம் கூர திமிர்ந்து உகுத்து இட்ட சாந்து
அள்ளலாய் அடி யானை இழுக்கின
வெள்ள நீர் வளை வெள்ளம் முரன்றவே

 
#858
நீந்தும் நித்தில ஊர்தி நிழல் மருப்பு
ஏந்து கஞ்சிகை வையம் இள வெயில்
போந்து காய் பொன் சிவிகை நல் போதகம்
கூந்தல் மாலை குமரி பிடி குழாம்

 
#859
ஏறுவார் ஒலி ஏற்று-மினோ என
கூறுவார் ஒலி தோடு குலைந்து வீழ்ந்து
ஆறின் ஆர்ப்பு ஒலி அம் சிலம்பின் ஒலி
மாறுகொண்டது ஓர் மா கடல் ஒத்தவே

 
#860
பொன் செய் வேய் தலை பூ மரு மண்டலம்
மின் செய் வெண்குடை பிச்சம் மிடைந்து ஒளி
என் செய்கோ என்று இரிந்தது இழை நிலா
மன் செய் மாண் நகர் வட்டம் விட்டிட்டதே
 
#861
திருந்து சாமரை வீசுவ தெண் கடல்
முரிந்த மொய் திரை போன்ற அகில் புகை
புரிந்த தாமங்கள் ஆக அ பூம் துகள்
விரிந்து வானின் விதானித்தது ஒத்ததே
 
#862
சோலை சூழ் வரை தூங்கு அருவி திரள்
மாலை ஊர்திகள் வையம் இவற்று-இடை
சீலக்கு அஞ்சி நல் போதகம் செல்வன
நீல மேகம் நிரைத்தன போன்றவே
 
#863
வழங்கு வங்க கலிங்க கடகமும்
அழுங்கும் மாந்தர்க்கு அணிகல பேழையும்
தழங்கு வெம் மது தண்டும் தலைத்தலை
குழங்கல் மாலையும் கொண்டு விரைந்தவே
 
#864
வாச வெண்ணெயும் வண்டு இமிர் சாந்தமும்
பூசு சுண்ணமும் உண்ணும் அடிசிலும்
காசு இல் போக கலப்பையும் கொண்டு அவண்
மாசு இல் மாசனம் வாயில் மடுத்தவே
 
#865
பாடல் ஓசையும் பண் ஒலி ஓசையும்
ஆடல் ஓசையும் ஆர்ப்பு ஒலி ஓசையும்
ஓடை யானை உரற்று ஒலி ஓசையும்
ஊடு போய் உயர் வான் உலகு உற்றவே
 
#866
பூக்கள் நீர் விளையாடிய பொன் உலகு
ஓக்கம் நீள் விசும்பு ஊடு அறுத்து ஒய்யென
வீக்க மாநகர் வீழ்ந்தது போன்று அவண்
மாக்கள் மா கடல் வெள்ளம் அடுத்ததே
 
#867
மின்னு வாள் தடம் கண்ணியர் வெம் முலை
துன்னு வாட்டம் தணித்தலின் தூ நிறத்து
அன்ன வாட்டத்து அணி மலர் பூம் பொழில்
என்ன வாட்டமும் இன்றி சென்று எய்தினார்
 
#868
அள் உடை குவளை கயம் நீடிய
கள் உடை கழுநீர் புனல் பட்டமும்
புள் உடை கனியின் பொலி சோலையும்
உள் உடை பொலிவிற்று ஒருபால் எல்லாம்
 
#869
செம் புற கனி வாழையும் தேன் சொரி
கொம்பு உற பழுத்திட்டன கோ அரை
வம்புற கனி மா தொடு வார் சுளை
பைம் புற பலவிற்று ஒருபால் எல்லாம்
 
#870
கள்ள வானரமும் கன்னி யூகமும்
துள்ளும் மானொடு வேழ தொகுதியும்
வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து அவண்
உள்ளும் மாந்தரை உள்ளம் புகற்றுமே
 
#871
கோக்கணம் கொதித்து ஏந்திய வேல் என
நோக்கு அணங்கு அனையார் நுகர்வு எய்தலின்
தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரை
பூ கணம் பொழில் பட்டது போன்றதே
 
#872
கூறப்பட்ட அ கொய் மலர் காவகம்
ஊறி தேன் துளித்து ஒண் மது ஆர் மணம்
நாறி நாள்மலர் வெண் மணல் தாய் நிழல்
தேறி தெண் கயம் புக்கது போன்றதே
 
#873
காவில் கண்ட திரை வளைத்து ஆயிடை
மேவி விண்ணவர் மங்கையர் போன்று தம்
பூவையும் கிளியும் மிழற்ற புகுந்து
ஆவி அம் துகிலார் அமர்ந்தார்களே
 
#874
பௌவ நீர் பவள கொடி போல்பவள்
மௌவல் அம் குழலாள் சுரமஞ்சரி
கொவ்வை அம் கனி வாய் குணமாலையோடு
எவ்வம் தீர்ந்து இருந்தாள் இது கூறினாள்
 
#875
தூமம் சூடிய தூ துகில் ஏந்து அல்குல்
தாமம் சூடிய வேல் தடம் கண்ணினாள்
நாமம் சூடிய நல்_நுதல் நீட்டினாள்
காமம் சூடிய கண் ஒளிர் சுண்ணமே
 
#876
சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு சோர் குழல்
வண்ண மாலை நுசுப்பு வருத்துவான்
எண்ணி வந்தன கூறு இவையோ என
நண்ணி மாலையை நக்கனள் என்பவே
 
#877
பைம்பொன் நீள் உலகு அன்றி இ பார் மிசை
இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள-எனில்
செம்பொன் பாவை அன்னாய் செப்பு நீ என
கொம்பு அனாளும் கொதித்து கூறினாள்
 
#878
சுண்ணம் தோற்றனம் தீம் புனல் ஆடலம்
எண் இல் கோடி பொன் ஈதும் வென்றாற்கு என
வண்ண வார் குழல் ஏழையர் தம்முளே
கண் அற்றார் கமழ் சுண்ணத்தின் என்பவே
 
#879
மல்லிகை மாலை மணம் கமழ் வார் குழல்
கொல் இயல் வேல் நெடும் கண்ணியர் கூடி
சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள்
வெல்வது சூது என வேண்டி விடுத்தார்
 
#880
இட்டிடையார் இரு மங்கையர் ஏந்து பொன்
தட்டு-இடை அம் துகில் மூடி அதன் பினர்
நெட்டு-இடை நீந்துபு சென்றனர் தாமரை
மொட்டு அன மெல் முலை மொய் குழலாரே
 
#881
சீர் தங்கு செம்பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து
வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர்
ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர்
கார் தங்கு வண் கை கழல் சீவகன் காண்-மின் என்றார்
 
#882
வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர்
தாள் மின்னு வீங்கு கழலான்-தனை சூழ மற்ற
பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில்
கோள் மின்னும் மீன் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே
 
#883
காளை சீவகன் கட்டியங்காரனை
தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல்
வாளை வவ்விய கண்ணியர் வார் கழல்
தாளை ஏத்துபு தம் குறை செப்பினார்
 
#884
சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு
அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும்
கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல்
வண்ண மாலையினீர் என கூறினான்
 
#885
மற்று இ மாநகர் மாந்தர்கள் யாவரும்
உற்று நாறியும் கண்டும் உணர்ந்து இவை
பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி
கற்றதும் அவர் தங்களொடே-கொலோ
 
#886
ஐயனே அறியும் என வந்தனம்
பொய் அது அன்றி புலமை நுணுக்கி நீ
நொய்தில் தேர்ந்து உரை நூல் கடல் என்று தம்
கையினால் தொழுதார் கமழ் கோதையார்
 
#887
நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது
அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல்
புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம்
அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே
 
#888
வாரம் பட்டுழி தீயவும் நல்ல ஆம்
தீர காய்ந்துழி நல்லவும் தீய ஆம்
ஓரும் வையத்து இயற்கை அன்றோ எனா
வீர வேல் நெடுங்கண்ணி விளம்பினாள்
 
#889
உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால்
வள்ளல் நீங்க பெறாய் வளைத்தேன் என
கள் செய் கோதையினாய் கரி போக்கினால்
தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான்
 
#890
கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும்
எண்ணின் நின் சொல் இகந்து அறிவார் இலை
நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா
அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள்
 
#891
காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி
போவர் பொன் அனையாய் என கைதொழுது
ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள்
கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள்
 
#892
மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று
எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்
வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது
உண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள்
 
#893
சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும்
மாலை என்னும் மட மயில் சுண்ணமும்
சால நல்லன தம்முளும் மிக்கன
கோலம் ஆக கொண்டு உண்-மின் என சொன்னான்
 
#894
வண்ண வார் சிலை வள்ளல் கொண்டு ஆயிடை
விண்ணில் தூவி இட்டான் வந்து வீழ்ந்தன
சுண்ண மங்கை சுரமைய மாலைய
வண்ணம் வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே
 
#895
தத்தும் நீர் பவளத்து உறை நித்திலம்
வைத்த போல் முறுவல் துவர் வாயினீர்
ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு
உய்த்து உரை-மின் இவ்வண்ணம் என சொன்னான்
 
#896
நீலம் நன்கு தெளித்து நிறம் கொளீஇ
கோலம் ஆக எழுதிய போல் குலாய்
ஞாலம் விற்கும் புருவத்து நங்கை கண்
போலும் வேலவனே புகழ்ந்தேன் என்றாள்
 
#897
சோலை அம் சுரும்பின் சுண்ணம் தேற்றிய தோன்றல்-தன்னை
வேல் ஐயம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி
மாலைக்கு வென்றி கூற மழை இடிப்புண்டு ஓர் நாகம்
ஆலையத்து அழுங்கி ஆங்கு மஞ்சரி அவலம் உற்றாள்
 
#898
திங்கள் அம் கதிர் செற்று உழக்கப்பட்ட
பங்கய படு ஒத்து உளை பாவாய்
நங்கை என்னொடு உரையாய் நனி ஒல்லே
இங்கண் என்று அடி வீழ்ந்து இரந்திட்டாள்
#899
மாற்றம் ஒன்று உரையாள் மழை வள்ளல் என்
ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல்
தோற்று வந்து என் சிலம்பு அடி கைதொழ
நோற்பல் நோற்றனை நீ என ஏகினாள்
#900
கன்னி மாநகர் கன்னியர் சூழ் தர
கன்னிமாடம் அடைய கடி மலர்
கன்னி நீல கண் கன்னி நற்றாய்க்கு அவள்
கன்னிக்கு உற்றது கன்னியர் கூறினார்
 
#901
கண்கள் கொண்ட கலப்பின ஆயினும்
பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று
ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு
பண் கொள் தே மொழியால் பய கூறினாள்
#902
விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார்
எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில்
கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும்
உண்ணலேன் இனி என்று உரையாடினாள்
#903
இன்று நீர் விளையாட்டினுள் ஏந்து_இழை
தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு
இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் என நையா
நின்று நீல கண் நித்திலம் சிந்தினாள்
#904
பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும்பொன் அல்குல்
மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலி தோற்றாள்
கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள்
அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள்
#905
பள்ளி கொள் களிறு போல பரிவு விட்டு உயிர்த்து என் பாவை
உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன்
வள் இதழ் கோதை மற்று நகரொடும் கடியுமேனும்
வெள்ள நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான்
#906
இன்னது ஓர் காலத்து இன்னான் ஒரு மகள் இன்னது ஒன்றிற்கு
இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல்
இன்னது ஓர் நகரில் என்றாங்கு என் பெயர் நிற்க வேண்டும்
இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே
#907
வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி
செய் கழல் மன்னற்கு உய்த்து தன் குறை செப்பலோடும்
ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப
கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே
#908
சென்று காலம் குறுகினும் சீவகன்
பொன் துஞ்சு ஆகம் பொருந்தின் பொருந்துக
அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா
ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள்
#909
இன்ப காரணம் ஆம் விளையாட்டினுள்
துன்ப காரணமாய் துறப்பித்திடும்
என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன்
அன்பினால் அவலித்து அழுதிட்டாள்
#910
தண் அம் தீம் புனல் ஆடிய தண் மலர்
வண்ண வார் தளிர் பிண்டியினான் அடிக்கு
எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை
வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள்
#911
ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என
மாசை மா கடல் மன்னவன் ஆடலின்
மீசை நீள் விசும்பில் தலைச்சென்றது ஓர்
ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே
#912
மகர வெல் கொடி மைந்தனை வாட்டிய
சிகர செவ்வரை தீ நிற பொன் எயில்
நிகர் இல் நேமி-தன் நீள் நகர்க்கு ஆகு எனா
நகரம் நால் இரு கோடி நயந்ததே
#913
உவா முதல் இரவலர்க்கு உடைமை உய்த்தவர்
கவான் முதல் கூப்பிய கனக மாழையால்
தவா வினை அடைகரை தயங்கு சிந்தை நீர்
அவா எனும் உடை கடல் அடைக்க பட்டதே
#914
சீர் அரவ சிலம்பு ஏந்தும் மென் சீறடி
யார் அரவ கழல் ஆடவரோடும்
போர் அரவ களம் போன்று பொன்னார் புனல்
நீர் அரவம் விளைத்தார் நிகர் இல்லார்
#915
கார் விளையாடிய மின் அனையார் கதிர்
வார் விளையாடிய மென் முலை மைந்தர்
தார் விளையாட்டொடு தங்குபு பொங்கிய
நீர் விளையாட்டு அணி நின்றதை அன்றே
#916
விடா களி வண்டு உண விரிந்த கோதையர்
படா களி இள முலை பாய விண்ட தார்
கடா களிற்று எறுழ் வலி காளை சீவகன்
அடா களியவர் தொழில் காண ஏகினான்
#917
ஒன்றே உயிரை உடையீர் ஒருவி போ-மின் இவள் கண்
அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது
என்றே கலையும் சிலம்பும் இரங்க இன வண்டு ஆர்ப்ப
பொன் தோய் கொடியின் நடந்து புனல் சேர்பவளை காண்-மின்
#918
அழல் செய் தடத்துள் மலர்ந்த அலங்கல் மாலை-அதனை
நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடும் கண் இணையின் நோக்கி
குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று
இழை கொள் புனலுக்கு ஈயும் இளையோள் நிலைமை காண்-மின்
#919
கோல நெடும் கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்ப
பீலி மஞ்ஞை நோக்கி பேடை மயில் என்று எண்ணி
ஆலி சென்று புல்லி அன்மை கண்டு நாணி
சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்-மின்
#920
மின் ஒப்பு உடைய பைம் பூண் நீருள் வீழ காணாள்
அன்ன பெடையே தொழுதேன் அன்னை கொடியள் கண்டாய்
என்னை அடிமை வேண்டின் நாடி தா என்று இறைஞ்சி
பொன் அம் கொம்பின் நின்றாள் பொலிவின் வண்ணம் காண்-மின்
#921
தூமம் கமழும் கோதை தொடுத்த துயரின் முலையா
தே மென் கீதம் பாலா சுரந்து திறத்தின் ஊட்டி
காம குழவி வளர்ப்ப கணவன் புனலுள் நீங்கி
பூ மென் பொழிலுக்கு இவர்வான் புகற்சி காண்-மின் இனிதே
#922
கடல் அம் பவளம் மணையில் கன பொன் கயிற்றில் காய் பொன்
மடல் அம் கமுகின் ஊசல் மடந்தை ஆட நுடங்கி
நடலை நடுவின் மகளிர் நூக்க பரிந்த காசு
விடலில் விசும்பின் மின் போல் மின்னி வீழ்வ காண்-மின்
#923
நான நீரில் கலந்து நலம் கொள் பூம் பட்டு ஒளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட்டதற்கு நாணி
மான மகளிர் போல மணி மேகலைகள் பேசா
தானம் தழுவி கிடப்ப செல்வோள் தன்மை காண்-மின்
#924
தீம் பால் பசியின் இருந்த செ வாய் சிறு பைங்கிளி தன்
ஓம்பு தாய் நீர் குடைய ஒழிக்கும் வண்ணம் நாடி
பாம்பால் என்ன வெருவி பைம்பொன் தோடு கழல
காம்பு ஏர் தோளி நடுங்கி கரை சேர்பவளை காண்-மின்
#925
துணை இல் தோகை மஞ்ஞை ஈயற்கு இவரும் வகை போல்
மணி ஆர் வளை சேர் முன்கை வலனும் இடனும் போக்கி
இணை இல் தோழிமார்கள் இறுமால் இடை என்று இரங்க
அணி ஆர் கோதை பூம்பந்து ஆடும் அவளை காண்-மின்
#926
திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான்
குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி
அரவம் முற்றும் விழுங்கி உமிழும் பொழுதின் மதி போன்று
உருவ தெண் கணாடி காண்-மின் தோன்றும் வகையே
#927
பலகை செம்பொன் ஆக பளிங்கு நாயா பரப்பி
அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள
குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி
இலவம் போது ஏர் செ வாய் இளையோர் பொருவார் காண்-மின்
#928
தீம் பால் அடிசில் அமிர்தம் செம்பொன் வண்ண புழுக்கல்
ஆம் பால் அக்காரடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம்
தாம் பாலவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய
ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்-மின்
#929
அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்து ஆங்கு அனைய மெய்யின்
கள் செய் கடலுள் இளமை கூம்பின் கடி செய் மாலை
துள்ளு தூம கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம்
உள்ளு காற்றா உழலும் காம கலனும் காண்-மின்
#930
தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய
ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல
தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமல பள்ளி
மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்-மின்
#931
நீல துகிலில் கிடந்த நிழல் ஆர் தழல் அம் மணிகள்
கோல சுடர்விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி
சால நெருங்கி பூத்த தடம் தாமரை பூ என்ன
ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்-மின்
#932
வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள்
ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழை அம் பிணை ஒன்று அணுகி
கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப
தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்-மின்
#933
இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன்
கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில்
சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான்
நவை இல் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம்
#934
அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை
வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டு அவர்
உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர்
சிந்தையில் நின்று ஒளிர் தீயன நீரார்
#935
கல்லொடு வன் தடி கையினர் காற்றினும்
வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி
கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும்
வல்வினையார் வலைப்பட்டதை அன்றே
#936
வேள்வியில் உண்டி விலக்கிய நீவிர்கள்
ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார்
தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை
நீள் கயம் பாய்ந்து அது நீந்துதலோடும்
#937
மண் குடம் அல்லன மதியின் வெள்ளிய
கள் குட கன்னியர் இருவரோடு உடன்
துட்கென யாவரும் நடுங்க தூய்மை இல்
உட்கு உடை களிமகன் ஒருவன் தோன்றினான்
#938
தோன்றிய புண் செய் வேலவற்கு தூமது
வான் திகழ் கொடி அனார் வெள்ளி வட்டகை
ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர்
கான்றிடு கதிர் மதி இரண்டு போன்றவே
#939
அழல் அம் பூ நறவு ஆர்ந்து அழல் ஊர்தர
சுழலும் கண்ணினன் சோர்தரும் மாலையன்
கழலன் காழகம் வீக்கிய கச்சையன்
மழலை சொற்களின் வைது இவை கூறினான்
#940
புடைத்து என் நாயினை பொன்றுவித்தீர் உயிர்
கடுக்க பேர்த்தனிர் தம்-மின் கலாய்க்குறின்
தட கை மீளிமை தாங்கு-மின் அன்று-எனின்
உடைப்பென் கள் குடம் என்று உரையாடினான்
#941
நல்வினை ஒன்றும் இலாதவன் நான்மறை
வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே
செல் சுடர் வேல் வல சீவகசாமி சென்று
அல்லல் அகற்றி அரும் துயர் தீர்த்தான்
#942
மீண்டு அவர் ஏகுதலும் விடை அன்னவன்
ஈண்டிய தோழரோடு எய்தினன் ஆகி
மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது
காண்டலும் கட்கு இனியான் கலுழ்ந்திட்டான்
#943
நாய் உடம்பு இட்டு இவண் நந்திய பேர் ஒளி
காய் கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வது ஓர்
சேய் உடம்பு எய்துவை செல்கதி மந்திரம்
நீ உடம்பட்டு நினை-மதி என்றான்
#944
என்றலும் தன் செவியோர்த்து இரு கண்களும்
சென்று உகு நீரொடு செம்மலை நோக்கி
ஒன்றுபு வால் குழைத்து உள் உவப்பு எய்தலும்
குன்று அனையான் பதம் கூற வலித்தான்
#945
நல் செய்கை ஒன்றும் இல்லார் நாள் உலக்கின்ற போழ்தின்
முன் செய்த வினையின் நீங்கி நல்வினை விளைக்கும் வித்து
மல் செய்து வீங்கு தோளான் மந்திரம் ஐந்தும் மாதோ
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து ஆங்கு அதன் செவி செப்புகின்றான்
#946
உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில்
மறுகல் நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து
இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தம் உண்டால்
பெறுதி நல் கதியை என்று பெரு நவை அகற்றினானே
#947
மனத்து-இடை செறும்பு நீக்கி மறவலை ஆகி ஐந்தும்
நினைத்திடு நின்-கண் நின்ற நீல் நிற வினையின் நீங்கி
எனை பகல்-தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு
அனை பத அமிர்தம் நெஞ்சின் அயின்று விட்டு அகன்றது அன்றே
#948
பாடு பாணி முகம் எனும் பான்மையின்
ஓடி ஆங்கு ஓர் உயர் வரை உச்சி மேல்
கூடி கோலம் குயிற்றி படம் களைந்து
ஆடு கூத்தரின் ஐயென தோன்றினான்
#949
ஞாயில் சூடிய நல் நெடும் பொன் நகர்
கோயில் வட்டம் எல்லாம் கொங்கு சூழ் குழல்
வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி அங்கு
ஆயினார் பரியாளம் அடைந்ததே
#950
மிடைந்த மா மணி மேகலை ஏந்து அல்குல்
தடம் கொள் வெம் முலை தாமரை வாள் முகத்து
அடைந்த சாயல் அரம்பையர் தம் உழை
மடங்கல் ஏறு அனையான் மகிழ்வு எய்தினான்
 
#951
கற்ற ஐம்பதங்கள் நீரா கருவினை கழுவ பட்டு
மற்று அவன் தேவன் ஆகி வான் இடு சிலையின் தோன்றி
இற்ற தன் உடம்பும் இன்னா இடர் ஒழித்து இனியன் ஆகி
உற்றவன் நிலையும் எல்லாம் ஓதியின் உணர்ந்து கண்டான்
#952
இரும்பின் நீர்மை கெடுத்து எரி தன் நிறத்து
அரும் பொன் ஆக்கிய ஆருயிர் தோழனை
விரும்பி விண் இறுத்து ஒய்யென தோன்றினான்
சுரும்பு உண் கண்ணி சுதஞ்சணன் என்பவே
#953
ஓசனை நறும் புகை கமழ் ஒள் நிலா
வீசிய கதிர் பரந்து இமைக்கும் மேனியன்
மாசு அறு மணிமுடி மிடைந்த மாலையன்
பூசு உறு பருதியில் பொலிந்து தோன்றினான்
#954
குன்று என திரண்ட தோளான் குறுகலும் குமரன் நோக்கி
நின்றவன் நெடும் கண் ஒன்றும் இமைப்பு இல நிழல் இல் யாக்கை
அன்றியும் கண்ணி வாடாது அமரனே என்று தேறி
நன்று அவன் வரவு கேட்பான் நம்பி நீ யாரை என்றான்
#955
குங்கும குவட்டின் வீங்கி கோலம் வீற்றிருந்த தோளாய்
இங்கு நின் அருளில் போகி இயக்கருள் இறைவன் ஆகி
சங்க வெண் மலையின் மற்று சந்திர உதயத்தின் உச்சி
அங்கு யான் உறைவல் எந்தை அறிக மற்று என்று சொன்னான்
#956
என்று அவன் உரைப்ப கேட்டே இமயமும் நிகர்க்கல் ஆற்றா
பொன் தரு மாரி வண் கை புரவலன் புகன்று நோக்கி
வென்றவர் உலகம் பெற்ற வேந்து உடை இன்பம் எல்லாம்
இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் எரி உமிழ்ந்து இலங்கும் வேலான்
#957
சூடுறு கழலினாற்கு சுதஞ்சணன் இதனை சொன்னான்
பாடல் வண்டு அரற்றும் பிண்டி பகவனது இறைமை போல
மூடி இ உலகம் எல்லாம் நின் அடி தருவல் இன்னே
ஆடியுள் பாவை போல் நீ அணங்கியது அணங்க என்றான்
#958
வாளொடு வயவர் ஈண்டி வாரண தொழுவின் முற்றி
மீளிமை செய்யின் வெய்ய நண்ப நின் நினைப்பது அல்லால்
நாளொடு பக்கம் நைந்து வீழினும் வீழ்தல் இல்லா
கோள் உடை கிழமை ஒப்பாய் குறைவு இலன் பிறவின் என்றான்
#959
இன் நிழல் இவரும் பூணான் இரு விசும்பு இவர்தலுற்று
பொன் எழு அனைய தோளான் புல்லி கொண்டு இனைய கூறி
நின் நிழல் போல நீங்கேன் இடர் வரின் நினைக்க என்று
மின் எழூஉ பறப்பது ஒத்து விசும்பு இவர்ந்து அமரன் சென்றான்
#960
சொல்லிய நன்மை இல்லா சுணங்கன் இ உடம்பு நீங்கி
எல் ஒளி தேவன் ஆகி பிறக்குமோ என்ன வேண்டா
கொல் உலை அகத்து இட்டு ஊதி கூர் இரும்பு இரதம் குத்த
எல்லை இல் செம்பொன் ஆகி எரி நிறம் பெற்றது அன்றே
#961
எரி மாலை வேல் நுதியின் இறக்கி காமன் அடு கணையால்
திருமாலை வெம் முலை மேல் திளைக்கும் தேவர் திரு உறுக
அரு மாலை எண் வினையும் அகற்றி இன்ப கடல் ஆக்கி
தரும் மாலை அல்லது யான் தலையின் தாழ்ந்து பணிவேனோ
#962
ஒன்று ஆய ஊக்க ஏர் பூட்டி யாக்கை செறு உழுது
நன்று ஆய நல் விரத செந்நெல் வித்தி ஒழுக்க நீர்
குன்றாமல் தாம் கொடுத்து ஐம்பொறியின் வேலி காத்து ஓம்பின்
வென்றார் தம் வீட்டு இன்பம் விளைக்கும் விண்ணோர் உலகு ஈன்றே
#963
இத்தலை இவர்கள் ஏக இமயம் நட்டு அரவு சுற்றி
அத்தலை அலற முந்நீர் கடைந்தவர் அரவம் ஒப்ப
மை தலை நெடும் கணாரும் மைந்தரும் மறலி ஆட
மொய்த்து இள அன்னம் ஆர்க்கும் மோட்டு இரும் பொய்கை புக்கார்
#964
கலந்து எழு திரை நுண் ஆடை கடி கய மடந்தை காமர்
இலங்கு பொன் கலாபத்து அல்குல் இரு கரை பரப்பும் ஆக
அலர்ந்த தண் கமலத்து அம் போது அணிதக்க முகத்திற்கு ஏற்ப
நலம் கெழு குவளை வாள் கண் நன்_நுதல் நலத்தை உண்டார்
#965
தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் பிறவும் ஓசை
எண்ணிய விரலோடு அங்கை புறங்கையின் இசைய ஆக்கி
திண்ணிதின் தெறித்தும் ஓவார் கொட்டியும் குடைந்தும் ஆடி
ஒண் நுதல் மகளிர் தம்மோடு உயர் மிசை அவர்கள் ஒத்தார்
#966
சிவிறியின் மாறு தூயும் குங்குமம் எறிந்தும் தேம் கொள்
உவறு நீர் உழக்கி ஓட்டி உடை புறம் கண்டு நக்கு
தவறு என தாமம் பூட்டி தரு திறை கொண்டும் இன்பத்து
இவறினார் காம வெள்ளத்து ஏத்து அரும் தன்மையாரே
#967
சாந்து அகம் நிறைந்த தோணி தண் மலர் மாலை தோணி
பூம் துகில் ஆர்ந்த தோணி புனை கலம் பெய்த தோணி
கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டுகொண்டு எறிய ஓடி
தாம் திரை கலங்கள் போல தாக்குபு திரியும் அன்றே
#968
கலி வளர் களிறு கை நீர் சொரிவ போல் முத்த மாலை
பொலிவொடு திவண்டு பொங்கி பூம் சிகை அலமந்து ஆட
குலிக நீர் நிறைந்த பந்தின் கொம்பனார் ஓச்ச மைந்தர்
மெலிவு கண்டு உவந்து மாதோ விருப்பொடு மறலினாரே
#969
வண்ண ஒண் சுண்ணம் பட்டும் மாலையும் சாந்தும் ஏந்தி
எண் அரும் திறத்து மைந்தர் எதிரெதிர் எறிய ஓடி
விண் இடை நுடங்கு மின்னும் மீன்களும் பொருவ போல
மண் இடை அமரர் கொண்ட மன்றல் ஒத்து இறந்தது அன்றே
#970
உரைத்த வெண்ணெயும் ஒள் நறும் சுண்ணமும்
அரைத்த சாந்தமும் நானமும் மாலையும்
நுரைத்து நோன் சிறை வண்டொடு தேன் இனம்
இரைத்து நீர் கொழித்து இன்பம் இறந்ததே
#971
கத்தி கை கண்ணி நெற்றி கைதொழு கடவுள் அன்ன
வித்தக இளையர் எல்லாம் விழு மணி கலங்கள் தாங்கி
முத்து அணிந்து ஆவி ஊட்டி முகிழ் முலை கச்சின் வீக்கி
பித்திகை பிணையல் சூழ்ந்து பெண் கொடி பொலிந்த அன்றே
#972
திருந்து பொன் தேரும் செம்பொன் சிவிகையும் மிடைந்து தெற்றி
கரும் கய களிறும் மாவும் கால் இயல் பிடியும் ஈண்டி
நெருங்குபு மள்ளர் தொக்கு நெடு வரை தொடுத்த வெள்ளம்
கரும் கடற்கு இவர்ந்த வண்ணம் கடி நகர்க்கு எழுந்த அன்றே
#973
கடல் என காற்று என கடும் கண் கூற்று என
உடல் சின உரும் என ஊழி தீ என
தொடர் பிணி வெளில் முதல் முருக்கி தோன்றியது
அடல் அரும் கடா களிற்று அசனி வேகமே
#974
பொருது இழி அருவி போன்று பொழி தரு கடாத்தது ஆகி
குருதி கொள் மருப்பிற்று ஆகி குஞ்சரம் சிதைந்தது என்ன
கருதிய திசைகள் எல்லாம் கண் மிசை கரந்த மாந்தர்
பருதியின் முன்னர் தோன்றா மறைந்த பல் மீன்கள் ஒத்தார்
#975
கரும்_தடம்_கண்ணி-தன் மேல் காமுகர் உள்ளம் போல
இரும் களிறு எய்த ஓட சிவிகை விட்டு இளையர் ஏக
அரும் பெறல் அவட்கு தோழி ஆடவர் இல்லையோ என்று
ஒருங்கு கை உச்சி கூப்பி களிற்று எதிர் இறைஞ்சி நின்றாள்
#976
என்னை கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி
இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என்-கண் மாய்ந்தால்
பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி
மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள்
#977
மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால்
அணி இரும் குஞ்சி ஏற கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து
தணி அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச
பணி வரும் குருசில் செல்வான் பாவை-அது இடரை கண்டான்
#978
பெண் உயிர் அவலம் நோக்கி பெருந்தகை வாழ்வில் சாதல்
எண்ணினன் எண்ணி நொய்தா இன மலர் மாலை சுற்றா
வண்ண பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா
அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே
#979
குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் விழும் மின் போல்
ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒலித்து வீழ
மண்டில முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க
விண்டலர் கண்ணி சிந்த மின்னில் சென்று எய்தினானே
#980
படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல
மடவரல் அவளை செற்று மத களிறு இறைஞ்சும் போழ்தில்
குட வரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத்து
உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான்
#981
கூற்று என முழங்கி கையால் கோட்டு-இடை புடைப்ப காய்ந்து
காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி
ஆற்றல் அம் குமரன்-தன் மேல் அடு களிறு ஓட அஞ்சான்
கோல் தொடி பாவை-தன்னை கொண்டு உய போ-மின் என்றான்
#982
மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே
பதி அமை பருதி-தன் மேல் படம் விரித்து ஓடி ஆங்கு
பொதி அவிழ் கோதை-தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார்
கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே
#983
கையகப்படுத்தலோடும் கார் மழை மின்னின் நொய்தா
மொய் கொள பிறழ்ந்து முத்தார் மருப்பு-இடை குளித்து கால் கீழ்
ஐயென அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப
செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே
#984
மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள்
கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அ
செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல்
பில்கும் மும்மத வேழம் பெயர்ந்ததே
#985
ஒரு கை இரு மருப்பின் மும்மதத்தது ஓங்கு எழில் குன்று அனைய வேழம்
திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இளையாட்கு உடைந்து தேன் ஆர்
முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கும் மார்பினன் ஐந்நூற்று நால்வர்
அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே
#986
மணி செய் கந்து போல் மருள வீங்கிய
திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய
அணி பொன் கொம்பினை அழுங்கல் என்று தன்
தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார்
#987
முழங்கு தெண் திரை மூரி நீள் நிதி
வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான்
விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய்
குழைந்த கோதையை கண்டு கூறினாள்
#988
நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய
கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம்
நைய வந்தது என் நங்கைக்கு இன்று என
உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார்
#989
முருகு விண்டு உலாம் முல்லை கத்திகை
பருகி வண்டு உலாம் பல் குழலினாள்
வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து
உருகும் நுண் இடை ஒசிய புல்லினாள்
#990
கடம்பு சூடிய கன்னி மாலை போல்
தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும்
குடங்கை உண்கணாள் கொண்ட பண்ணையுள்
அடைந்த துன்பம் என்று அறிவின் நாடினாள்
#991
கம்ம பல் கலம் களைந்து கண்டு தெறூஉம்
விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து
அம் மென் மாலையும் அடைச்சி குங்குமம்
கொம்மை மட்டித்தார் கொடி அனாளையே
#992
அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம்
கொம்பின் அவ்வையை கொணர்-மின் சென்று என
பைம்பொன் அல்குலை பயிரும் பைங்கிளி
செம்பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள்
#993
நிறத்து எறிந்து பறித்த நிணம் கொள் வேல்
திறத்தை வெளவிய சேய் அரி கண்ணினாள்
பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம்
வெறுத்து யாவையும் மேவலள் ஆயினாள்
#994
குமரி மாநகர் கோதை அம் கொம்பு அனாள்
தமரின் நீங்கிய செவ்வியுள் தாமரை
அமரர் மேவர தோன்றிய அண்ணல் போல்
குமரன் ஆக்கிய காதலின் கூறினாள்
#995
கலத்தல் காலம் கல்லூரி நல் கொட்டிலா
முலை தடத்து இடை மொய் எரு குப்பையா
இலக்கம் என் உயிரா எய்து கற்குமால்
அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையான்-அரோ
#996
பூமியும் பொறை ஆற்ற அரும் தன்மையால்
வேம் என் நெஞ்சமும் வேள்வி முளரி போல்
தாம மார்பனை சீவகசாமியை
காமனை கடிதே தம்-மின் தேவிர்காள்
#997
கையினால் சொல கண்களின் கேட்டிடும்
மொய் கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேன்
செய் தவம் புரியா சிறியார்கள் போல்
உய்யல் ஆவது ஓர் வாயில் உண்டாம்-கொலோ
#998
கண்ணும் வாள் அற்ற கை வளை சோருமால்
புண்ணும் போன்று புலம்பும் என் நெஞ்சு-அரோ
எண் இல் காமம் எரிப்பினும் மேல் செலா
பெண்ணின் மிக்கது பெண் அலது இல்லையே
#999
சோலை வேய் மருள் சூழ் வளை தோளி தன்
வேலை மா கடல் வேட்கை மிக்கு ஊர்தர
ஓலை தாழ் பெண்ணை மா மடல் ஊர்தலை
கால வேல் தடம் கண்ணி கருதினாள்
#1000
உய்யுமாறு உரை உன்னை அல்லால் இலேன்
செய்ய வாய் கிளியே சிறந்தாய் என
நையல் நங்கை இ நாட்டு அகத்து உண்டு எனில்
தையலாய் சமழாது உரை என்றதே
 
#1001
தெளி கயம் அம் மலர் மேல் உறை தேவியின்
ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள்
களி கொள் காமத்தில் கையறவு எய்தி தன்
கிளியை தூதுவிட்டான் கிளந்து என்பவே
#1002
பூணொடு ஏந்திய வெம் முலை பொன் அனாள்
நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட
வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து
ஆணு பைங்கிளி ஆண்டு பறந்ததே
#1003
கூட்டினான் மணி பல தெளித்து கொண்டவன்
தீட்டினான் கிழி மிசை திக வாள்_நுதல்
வேட்ட மால் களிற்று-இடை வெருவி நின்றது ஓர்
நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே
#1004
நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே
மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும்
முகிழ்ந்து வீங்கு இள முலை முத்தம் தைவரும்
புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே
#1005
படை மலர் நெடும் கணாள் பரவை ஏந்து அல்குல்
மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில்
புடை திரள் வன முலை பூணும் நோற்றன
அடி மலர் தாமரை சிலம்பு நோற்றவே
#1006
மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு
இன்னணம் இறைமகன் புலம்ப யாவதும்
தன் அணங்குறு மொழி தத்தை தத்தையை
மன் அணங்குறலொடு மகிழ்ந்து கண்டதே
#1007
ஆடும் பாம்பு என புடை அகன்ற அல்குல் மேல்
சூடிய கலை புறம் சூழ்ந்த பூம் துகில்
ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை
கூடி மற்று அதன் புறம் குலாய கொள்கைத்தே
#1008
கொன் வளர் குவி முலை கோட்டில் தாழ்ந்தன
மின் வளர் திரள் வடம் விளங்கு பைம் கதிர்
இன் வளர் இளம் பிறை எழுதப்பட்டன
பொன் வளர் செப்பின் மேல் பொலிந்த போன்றவே
#1009
குண்டலம் ஒருபுடை குலாவி வில்லிட
விண்டு அலர்ந்து ஒருபுடை தோடு மின்செய்
மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே
ஒண்_தொடி திருமுகத்து உருவ மாட்சியே
#1010
பூண் நிறம் முலையவள் பொருவில் பூ நுதல்
மாண் நிற கரும் குழல் மருங்கில் போக்கிய
நாள் நிறம் மிகு கதிர் பட்டம் நல் ஒளி
வாள் நிறம் மின் இருள் வளைத்தது ஒத்ததே
#1011
கடி கமழ் பூம் சிகை காமர் மல்லிகை
வடிவு உடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது
நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மா மலர்
கொடியின் மேல் குயில் குனிந்து இருந்தது ஒத்ததே
#1012
சிலம்பொடு மேகலை மிழற்ற தேன் இனம்
அலங்கல் உண்டு யாழ் செயும் அம் பொன் பூம் கொடி
நலம்பட நல் நடை கற்றது ஒக்கும் இ
இலங்கு அரி தடம் கணாள் யாவள் ஆம்-கொலோ
#1013
யாவளே-ஆயினும் ஆக மற்று இவள்
மேவிய பொருளொடு மீண்ட பின் அலால்
ஏவலால் சேர்கலேன் என்று பைங்கிளி
பூ அலர் சண்பகம் பொருந்திற்று என்பவே
#1014
மது களி நெடும் கணாள் வான் பொன் கிண்கிணி
ஒதுக்கிடை மிழற்ற சென்று எய்தி ஊன் கவர்
கத களி வேலினான் கண்டு காம நீர்
புது தளிர் அனையவள் புலந்து நோக்கினாள்
#1015
இது என உரு என இயக்கி என்றலும்
புதிது இது பூம் துகில் குழல்கள் சோர்தலால்
மது விரி கோதை அம் மாலை நின் மனம்
அது முறை இயக்கலின் இயக்கி ஆகுமே
#1016
முளைத்து எழு மதியம் முத்து அரும்பி யாங்கு என
விளைத்தது திருமுகம் வியர்ப்பு வெம் சிலை
வளைத்தன புருவமும் முரிந்த வல்லையே
கிளை கழுநீர் கணும் சிவப்பில் கேழ்த்தவே
#1017
பாவை நீ புலவியில் நீடல் பாவியேற்கு
ஆவி ஒன்று இரண்டு உடம்பு அல்லது ஊற்று நீர்
கூவல் வாய் வெண் மணல் குறுக செல்லுமே
மேவி பூம் கங்கையுள் விழைந்த அன்னமே
#1018
பேரினும் பெண்டிரை பொறாது சீறுவாள்
நேர் மலர் பாவையை நோக்கி நெய் சொரி
கூர் அழல் போல்வது ஓர் புலவி கூர்ந்ததே
ஆர்வுறு கணவன்-மாட்டு அமிர்தின் சாயற்கே
#1019
புலந்தவள் கொடி என நடுங்கி பொன் அரி
சிலம்பொடு மேகலை மிழற்ற சென்னி மேல்
அலங்கல் வாய் அடி மலர் அணிந்து குண்டலம்
இலங்க பேர்ந்து இன மலர் சிதறி ஏகினாள்
#1020
துனிப்புறு கிளவியால் துணைவி ஏகலும்
இனி பிறர்க்கு இடம் இலை எழுவல் ஈங்கு எனா
கனிப்புறு சொல் அளைஇ பறந்து காளை தன்
பனி கதிர் பகை மலர் பாதம் சேர்ந்ததே
#1021
வாழ்க நின் கழல் அடி மைந்த என்னவே
தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என
சூழ் மணி மோதிரம் சுடர்ந்து வில் இட
யாழ் அறி வித்தகன் அங்கை நீட்டினான்
#1022
பொன் இயல் குரும்பையின் பொலிந்த வெம் முலை
கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி
முன்னமே வந்து என முறுவல் நோக்கமோடு
என்னை-கொல் வரவு என இனிய செப்பினான்
#1023
மையல் அம் களிற்றொடு பொருத வண் புகழ்
ஐயனை செவ்வி கண்டு அறிந்து வம் என
பை அரவு அல்குல் எம் பாவை தூதொடு
கை இலங்கு எஃகினாய் காண வந்ததே
#1024
வெம் சின வேழம் உண்ட வெள்ளிலின் வெறியம் ஆக
நெஞ்சமும் நிறையும் நீல நெடும் கணால் கவர்ந்த கள்வி
அஞ்சன துவலை ஆடி நடுங்கினாள் நிலைமை என்னை
பைம் சிறை தத்தை என்ன பசுங்கிளி மொழியும் அன்றே
#1025
பூ அணை அழலின் மேல் சேக்கும் பொன் செய் தூண்
பாவை தான் பொருந்துபு நிற்கும் பல் பல்கால்
ஆவியா அழல் என உயிர்க்கும் ஐயென
மேவி பூ நிலம் மிசை இருக்கும் மெல்லவே
#1026
பணி தகு கோலமும் பந்தும் பார்ப்புறாள்
மணி கழங்கு ஆடலள் மாமை தான் விளர்த்து
அணி தகை யாழினோடு அமுதம் விட்டு ஒரீஇ
துணை பெரு மலர் கணில் துயிலும் நீங்கினாள்
#1027
திருந்து வேல் சீவகசாமியோ எனும்
கரும் கடல் வெள் வளை கழல்பவோ எனும்
வருந்தினேன் மார்புற புல்லு வந்து எனும்
பொருந்து பூம் கொம்பு அன பொருவின் சாயலே
#1028
கன்னியர் உற்ற நோய் கண் அனார்க்கும் அஃது
இன்னது என்று உரையலர் நாணின் ஆதலான்
மன்னும் யான் உணரலேன் மாதர் உற்ற நோய்
துன்னி நீ அறிதியோ தோன்றல் என்றதே
#1029
புள்ளின் வாய் உரை கேட்டலும் பொன் செய்வேல்
எள்ளி நீண்ட கண்ணாள் திறத்து இன் உரை
உள்ளினார் உழை கண்டது ஒத்தான்-அரோ
வள்ளல் மா தடிந்தான் அன்ன மாண்பினான்
#1030
சொல் மருந்து தந்தாய் சொல்லு நின் மனத்து
என் அமர்ந்தது உரைத்து கொள் நீ என
வில் நிமிர்ந்த நின் வீங்கு எழில் தோள் அவட்கு
இன் மருந்து இவை வேண்டுவல் என்றதே
#1031
பொன் குன்று-ஆயினும் பூம் பழனங்கள் சூழ்
நெல் குன்று ஆம் பதி நேரினும் தன்னை யான்
கல் குன்று ஏந்திய தோள் இணை கண் உறீஇ
சொல் குன்றா புணர்கேன் சொல்லு போ என்றான்
#1032
சேலை வென்ற கண்ணாட்கு இவை செப்ப அரிது
ஓலை ஒன்று எழுதி பணி நீ என
மாலை மார்பன் கொடுப்ப தினை குரல்
ஓலையோடு கொண்டு ஓங்கி பறந்ததே
#1033
திருந்து கோதை சிகழிகை சீறடி
மருந்தின் சாயல் மணம் கமழ் மேனியாள்
பொருந்து பூம் பொய்கை போர்வையை போர்த்து உடன்
கரும் கண் பாவை கவின் பெற வைகினாள்
#1034
மறம் கொள் வெம் கதிர் வேலவன் வார் கழல்
கறங்க ஏகி தன் காதலி ஊடலை
உறைந்த ஒண் மலர் சென்னியின் நீக்கினான்
நிறைந்தது இன்ப நெடும் கணிக்கு என்பவே
#1035
தன் துணைவி கோட்டியினின் நீங்கி தனி இடம் பார்த்து
இன் துணைவன் சேர்வான் இருந்தது-கொல் போந்தது-கொல்
சென்றது-கொல் சேர்ந்தது-கொல் செவ்வி அறிந்து உருகும்
என் துணைவி மாற்றம் இஃது என்றது-கொல் பாவம்
#1036
செம் தார் பசுங்கிளியார் சென்றார்க்கு ஓர் இன் உரைதான்
தந்தாரேல் தந்தார் என் இன் உயிர் தாம் தாராரேல்
அந்தோ குணமாலைக்கு ஆ தகாது என்று உலகம்
நொந்து ஆங்கு அழ முயன்று நோற்றானும் எய்துவனே
#1037
சென்றார் வரைய கருமம் செரு வேலான்
பொன் தாங்கு அணி அகலம் புல்ல பொருந்துமேல்
குன்றாது கூடுக என கூறி முத்த ஆர் மணல் மேல்
அன்று ஆங்கு அணி இழையாள் ஆழி இழைத்தாளே
#1038
பாக வரை வாங்கி பழுதாகின் பாவியேற்கு
ஏகுமால் ஆவி என நினைப்ப பைங்கிளி யார்
மாகமே நோக்கி மடவாளே அவ்விருந்தாள்
ஆகும் யான் சேர்வல் என சென்று அடைந்ததே
#1039
கண்டாள் நெடிது உயிர்த்தாள் கைதொழுதாள் கை அகத்தே
கொண்டாள் தினை குரல் தான் சூடினாள் தாழ் குழல் மேல்
நுண் தார் பசுங்கிளியை நோவ அகட்டு ஒடுக்கி
வண் தாரான் செவ்வி வாய் கேட்டாள் தன் மெய் மகிழ்ந்தாள்
#1040
தீம் பால் அமிர்து ஊட்டி செம்பொன் மணி கூட்டில்
காம்பு ஏர் பணை தோளி மென் பறவை கண்படுப்பித்து
ஆம்பால் மணி நாம மோதிரம் தொட்டு ஐயென்ன
தேம்பா எழுத்து ஓலை செவ்வனே நோக்கினாள்
#1041
கொடும் சிலையான் ஓலை குணமாலை காண்க
அடும் துயரம் உள் சுட வெந்து ஆற்றாதேன் ஆற்ற
விடுந்த சிறு கிளியால் விம்மல் நோய் தீர்ந்தேன்
நெடும் கணாள் தானும் நினைவு அகல்வாள் ஆக
#1042
ஈட்டம் சால் நீள் நிதியும் ஈர்ம் குவளை பைம் தடம் சூழ்
மோட்டு வளம் சுரக்கும் ஊரும் முழுது ஈந்து
வேட்டார்க்கு வேட்டனவே போன்று இனிய வேய் மென் தோள்
பூட்டார் சிலை நுதலாள் புல்லாது ஒழியேனே
#1043
குங்குமம் சேர் வெம் முலை மேல் கொய்தார் வடு பொறிப்ப
செம் கயல் கண் வெம் பனியால் சிந்தை எரி அவித்து
மங்கை மகிழ உறையேனேல் வாள் அமருள்
பங்கப்பட்டார் மேல் படை நினைந்தேன் ஆக என்றான்
#1044
நூல் புடைத்தால் போல் கிடந்த வித்தகம் சேர் நுண் வரிகள்
பால் மடுத்து தீம் தேன் பருகுவாள் போல் நோக்கி
சேல் படுத்த கண்ணீர் சுமந்து அளைஇ மெய்ம்மகிழ்ந்து
மால் படுத்தான் மார்பில் மணந்தாளே போல் மகிழ்ந்தாள்
#1045
பால் அவியும் பூவும் புகையும் படு சாந்தும்
கால் அவியா பொன் விளக்கும் தந்து உம்மை கைதொழுவேன்
கோல் அவியா வெம் சிலையான் சொல் குன்றான் ஆக எனவே
நூல் அவையார் போல் நீங்கள் நோக்கு-மினே என்றாள்
#1046
மவ்வல் அம் குழலினாளை மதியுடன்படுக்கலுற்று
செவ்வியுள் செவிலி சொல்லும் சிலை இவர் நுதலினாய் நின்
அவ்வைக்கு மூத்த மாமன் ஒரு மகற்கு இன்று உன் தாதை
நவ்வியம் பிணை கொள் நோக்கி நகை முக விருந்து செய்தான்
#1047
பண்டியால் பண்டி செம்பொன் பல் வளை பரியம் ஆக
கொண்டு வந்து அடிமை செய்வான் குறை உறுகின்றது அன்றி
கண்டவர் கடக்கல் ஆற்றா கிழி மிசை உருவு தீட்டி
வண்டு இமிர் கோதை நின்னை வழிபடும் நாளும் என்றாள்
#1048
மைத்துனன் வனப்பின் மிக்கான் வளர் நிதி கிழவன் காளை
உத்தமன் உனது நாமம் அல்லது ஒன்று உரைத்தல் தேற்றான்
இத்திறத்து இவன்-கண் நின்னை எண்ணினார் என்னலோடும்
தத்தை அம் கிளவி கையால் செவி முதல் அடைச்சி சொன்னாள்
#1049
மணி மத களிறு வென்றான் வருத்த சொல் கூலி ஆக
அணி மத களிறு அனானுக்கு அடி பணி செய்வது அல்லால்
துணிவது என் சுடு சொல் வாளால் செவி முதல் ஈரல் என்றாள்
பணிவரும் பவள பாவை பரிவு கொண்டு அனையது ஒப்பாள்
#1050
கந்துக புடையில் பொங்கும் கலினமா வல்லன் காளைக்கு
எந்தையும் யாயும் நேராராய்விடின் இறத்தல் ஒன்றோ
சிந்தனை பிறிது ஒன்று ஆகி செய் தவம் முயறல் ஒன்றோ
வந்ததால் நாளை என்றாள் வடு என கிடந்த கண்ணாள்
 
 
#1051
தேன் நெய் போன்று இனிய சொல்லாள் சிறுமுதுக்குறைமை கேட்டே
ஊன் நைந்து உருகி கைத்தாய் உள் நிறை உவகை பொங்க
ஆன் நெய் பாற்கு இவர்ந்தது ஒத்தது அழேற்க என் பாவை என்று
தானையால் தடம் கண் நீரை துடைத்து மெய் தழுவி கொண்டாள்
#1052
துகள் மனத்து இன்றி நோற்ற தொல் வினை பயத்தின் அன்றே
தகண் இலா கேள்வியான் கண் தங்கியது என்று பின்னும்
மகள் மனம் குளிர்ப்ப கூறி மறுவலும் புல்லி கொண்டு ஆங்கு
அகல் மனை தாய்க்கு சொன்னாள் அவளும் தன் கேட்கு சொன்னாள்
#1053
வினையமாமாலை கேள்வன் குபேரமித்திரற்கு சொல்ல
அனையதே பட்டது என்றால் ஐயனே நங்கைக்கு ஒத்தான்
வனையவே பட்ட போலும் மணி மருள் முலையினாளை
புனையவே பட்ட பொன் தார் புண்ணியற்கு ஈதும் என்றான்
#1054
கற்றார் மற்றும் கட்டுரை வல்லார் கவி என்னும்
நல் தேர் மேலார் நால்வரை விட்டாற்கு அவர் சென்றார்
சுற்றார் வல் வில் சூடுறு செம்பொன் கழல் நாய்கன்
பொன் தார் மார்பீர் போது-மின் என்று ஆங்கு எதிர்கொண்டான்
#1055
சீந்தா நின்ற தீ முக வேலான் மணி செப்பின்
ஈந்தான் கொண்டார் இன் முக வாசம் எரி செம்பொன்
காந்தா நின்ற கற்பகம் அன்னீர் வர பெற்றேன்
சேர்ந்தேன் இன்றே வீடு என நாய்கற்கு அவர் சொன்னார்
#1056
யாம் மகள் ஈதும் நீர் மகள் கொள்-மின் என யாரும்
தாம் மகள் நேரார்-ஆயினும் தண் என் வரை மார்பில்
பூமகள் வைகும் புண்ணிய பொன் குன்று அனையானுக்கு
யாம் மகள் நேர்ந்தேம் இன்று என நாய்கற்கு அவர் சொன்னார்
#1057
சுற்றார் வல் வில் சூடுறு செம்பொன் கழலாற்கு
குற்றேல் செய்தும் காளையும் யானும் கொடியாளை
மல் சேர் தோளான் தன் மருமானுக்கு அருள் செய்ய
பெற்றேன் என்ன பேசினன் வாசம் கமழ் தாரான்
#1058
விடை சூழ் ஏற்றின் வெல் புகழான் தன் மிகு தாதை
கடல் சூழ் வையம் கை படுத்தான் போன்று இது கூற
குடர் சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும் அ
படர் சூழ் நெஞ்சின் பாவை-தன் பண்பும் அவர் சொன்னார்
#1059
மறையார் வேள்வி மந்திர செம் தீ கொடியே போல்
குறையா கற்பில் சீவகன் தாயும் கொலை வேல் கண்
பொறை ஒன்று ஆற்றா போது அணி பொன் கொம்பு அனையாளை
நறையார் கோதை நன்று என இன்புற்று எதிர்கொண்டாள்
#1060
பொன் கச்சு ஆர்த்த பூண் அணி பொம்மல் முலையாளை
அற்க செய்த யாப்பினர் ஆகி அவண் வந்தார்
பொற்ப கூறி போகுதும் என்றார்க்கு எழுக என்றார்
வற்கம் இட்ட வண் பரி மாவின் அவர் சென்றார்
#1061
மடந்தை திறத்தின் இயைய அம் மகள் கூறி வந்தார்
விடம் தைத்த வேலாற்கு உரைத்தார்க்கு அவன் மெய்ம்மகிழ்ந்தான்
நுடங்கும் கொடி போல்பவள் நூபுரம் ஆர்ப்ப வந்து
தடம் கண்ணவள் தாய் அது கேட்டலும் தக்கது என்றாள்
#1062
திருவிற்கு அமைந்தான் திசை பத்தும் அறிந்த தொல் சீர்
உருவிற்கு அமைந்தாற்கு அமைந்தாள் என யாரும் ஒட்ட
பெருகும் கணியின் கணி பேசிய பேது இல் நாளால்
பருகற்கு அமைந்த அமிர்தின் படர் தீர்க்கலுற்றார்
#1063
கரை கொன்று இரங்கும் கடலில் கலி கொண்டு கல் என்
முரசம் கறங்க முழவு விம்ம வெண் சங்கம் ஆர்ப்ப
பிரசம் கலங்கிற்று என மாந்தர் பிணங்க வேட்டான்
விரை சென்று அடைந்த குழலாளை அ வேனிலானே
#1064
மழை மொக்குள் அன்ன வரு மென் முலை மாதர் நல்லார்
இழை முற்று அணிந்தார் எழு நூற்றவர் கோடி செம்பொன்
கழை முற்று தீம் தேன் கரும்பு ஆர் வயல் ஐந்து மூதூர்
குழை முற்று காதின் மணி கொம்பொடு நாய்கன் ஈந்தான்
#1065
கண்ணார் கதிர் மென் முலை காம்பு அடும் மென் தோள்
விண்ணோர் உலகினொடும் இ நிலத்து இல்லா
பெண்ணார் அமிர்தே அவன் பெற்ற அமிர்தே
பண்ணார் கிளவி பவழம் புரை செ வாய்
#1066
தேதாவென வண்டொடு தேன் வரி செய்ய
போது ஆர் குழலாள் புணர் மென் முலை பாய
தாது ஆர் கமழ் தார் மது விண்டு துளிப்ப
ஈதாம் அவர் எய்திய இன்பம் அதே
#1067 
முந்நீர் பவளத்து உறை நித்தில முத்தம்
அ நீர் அமிர்து ஈன்று கொடுப்ப அமர்ந்தான்
மை நீர் நெடும் கண் புருவங்கள் மலங்க
பொன் ஆர் அரி கிண்கிணி பூசல் இடவே
#1068
கம்பு ஆர் களி யானை கலக்க மலங்கி
அம்பேர் அரிவாள் நெடும் கண் புதைத்து அஞ்சி
கொம்பே குழைவாய் எனக்கே குழைந்திட்டாய்
வம்பே இது வையகத்தார் வழக்கு அன்றே
#1069
பூவார் புனல் ஆட்டினுள் பூ நறும் சுண்ணம்
பாவாய் பணை தோள் சுரமஞ்சரி தோற்றாள்
காவாது அவள் கண்ணற சொல்லிய வெம் சொல்
ஏவோ அமிர்தோ எனக்கு இன்று இது சொல்லாய்
#1070
நல் தோளவள் சுண்ண நலம் சொல்லுவான்
உற்றீர் மறந்தீர் மனத்துள் உறைகின்றாள்
செற்றால் அரிதால் சென்-மின் போ-மின் தீண்டாது
எற்றே அறியாத ஓர் ஏழையேனோ யான்
#1071
தூமம் கமழ் பூம் துகில் சோர அசையா
தாமம் பரிந்து ஆடு தண் சாந்தம் திமிர்ந்திட்டு
ஏமன் சிலை வாள் நுதல் ஏற நெருக்கா
காமன் கணை ஏர் கண் சிவந்து புலந்தாள்
#1072
மின் நேர் இடையாள் அடி வீழ்ந்தும் இரந்தும்
சொல் நீர் அவள் அற்பு அழலுள் சொரிந்து ஆற்ற
இ நீரன கண் புடைவிட்டு அகன்று இன்பம்
மன் ஆர்ந்து மதர்ப்பொடு நோக்கினள்-மாதோ
#1073
இன் நீர் எரி மா மணி பூண் கிடந்து ஈன்ற
மின் ஆர் இள மென் முலை வேய் மருள் மென் தோள்
பொன் ஆர் கொடியே புகழின் புகழ் ஞாலம்
நின் வாள் நெடும் கண் விலை ஆகும் நிகர்த்தே
#1074
தோளால் தழுவி துவர் தொண்டை அம் செ வாய்
மீளா மணிமேகலை மின்னின் மிளிர
வாள் ஆர் மணி பூண் அவன் மாதர் அம் பாவை-தன்னை
நாளால் பெற்ற நல் அமிர்து என்ன நயந்தான்
#1075
சித்திர மணி குழை திளைக்கும் வாள் முகத்து
ஒத்து ஒளிர் பவள வாய் ஓவ கைவினை
தத்தரி நெடும் கணாள் தன்னொடு ஆடும் நாள்
வித்தகற்கு உற்றது விளம்புகின்றதே
#1076
அரும் பெறல் குருசிற்கு அஞ்ஞான்று ஓடிய நாகம் நாணி
கரும்பு எறி கடிகையோடு நெய் மலி கவளம் கொள்ளாது
இரும்பு செய் குழவி திங்கள் மருப்பு-இடை தட கை நாற்றி
சுரும்பொடு வண்டு பாட சுளிவொடு நின்றது அன்றே
#1077
பகை புறம் கொடுத்த வேந்தின் பரிவொடு பகடு நிற்ப
தகை நிற குழைகள் தாழ்ந்து சாந்தின் வாய் நக்கி மின்ன
புகை நிற துகிலில் பொன் நாண் துயல் வர போந்து வேந்தன்
மிகை நிற களிற்றை நோக்கி வேழம் என் உற்றது என்றான்
#1078
கொற்றவன் குறிப்பு நோக்கி குஞ்சர பாகன் கூறும்
இற்றென உரைத்தல் தேற்றேன் இறைவ நின் அருளினாம்-கொல்
செற்றம் மிக்கு உடைமையால்-கொல் சீவகன் இன்ன நாளால்
மற்று இதற்கு உடற்சி செய்ய மதம் இது செறித்தது என்றான்
#1079
ஈண்டு அழல் குட்டம் போல எரி எழ திருகி நோக்கி
கோண் தரு குறும்பர் வெம் போர் கோக்குழாம் வென்றது உள்ளி
மாண்டது இல் செய்கை சூழ்ந்த வாணிகன் மகனை வல்லே
ஆண் திறம் களைவென் ஓடி பற்றுபு தம்-மின் என்றான்
#1080
கன்றிய வெகுளி வேந்தன் கால் வலி இளையர் காய்ந்து
கொன்று உயிர் கொணர ஓடும் கொழும் குடர் கண்ணி மாலை
ஒன்றிய உதிர செச்சை ஒள் நிணம் மீக்கொள் தானை
தென் திசைக்கு இறைவன் தூதின் செம்மலை சென்று சேர்ந்தார்
#1081
சண்பக மாலை வேய்ந்து சந்தனம் பளிதம் தீற்றி
விண் புக நாறு சாந்தின் விழு முலை காமவல்லி
கொண்டு எழுந்து உருவு காட்டி முகத்து-இடை குளித்து தோள் மேல்
வண் தளிர் ஈன்று சுட்டி வாள்_நுதல் பூப்ப வைத்தான்
#1082
பண் அடி வீயும் தீம் சொல் பாவை நின் வனப்பிற்கு எல்லாம்
கண்ணடி கரும் கண் என்னும் அம்பறாத்தூணி தன்னால்
புண் உடை மார்பத்து ஓவாது எய்தியால் எங்கு பெற்றாய்
பெண் உடை பேதை என்று ஓர் நாள் முற்றும் பிதற்றினானே
#1083
திங்கள் சேர் முடியினானும் செல்வியும் போன்று செம்பொன்
இங்கு வார் கழலினானும் கோதையும் இருந்த போழ்தில்
சிங்க ஏறு எள்ளி சூழ்ந்த சிறு நரி குழாத்தின் சூழ்ந்தார்
அங்கு அது கண்ட தாதி ஐயனுக்கு இன்னது என்றாள்
#1084
என்று அவள் உரைப்ப கேட்டே இடிபட முழங்கி செம் தீ
நின்று எரிவதனை ஒத்து நீள் முழை சிங்க ஏறு
தன் துணை பெட்டையோடு தான் புறப்பட்டது ஒத்தான்
குன்று இரண்டு இருந்த போலும் குங்கும குவவு தோளான்
#1085
பொன் அரி மாலை தாழ போது அணி கூந்தல் ஏந்தி
பன்னரு மாலையாற்கு பட்டதை எவன்-கொல் என்னா
பின்னரும் மாலை ஓராள் பெரு நடுக்குற்று நின்றாள்
மன்னரு மாலை நாகம் மழை இடிப்பு உண்டது ஒத்தாள்
#1086
கடுகிய இளையர் நோக்கும் கண்ணிய பொருளும் எண்ணி
அடு சிலை அழல ஏந்தி ஆருயிர் பருகற்கு ஒத்த
விடு கணை தெரிந்து தானை வீக்கற விசித்து வெய்தா
தொடு கழல் நரல் வீக்கி சொல்லு-மின் வந்தது என்றான்
#1087
அடி நிழல் தருக என்று எம் ஆணை வேந்து அருளி செய்தான்
வடி மலர் தாரினாய் நீ வருக என வானின் உச்சி
இடி உரும் ஏற்றின் சீறி இரு நிலம் சுடுதற்கு ஒத்த
கடி மதில் மூன்றும் எய்த கடவுளின் கனன்று சொன்னான்
#1088
வாள் இழுக்குற்ற கண்ணாள் வரு முலை நயந்து வேந்தன்
கோள் இழுக்குற்ற பின்றை கோ தொழில் நடாத்துகின்றான்
நாள் இழுக்குற்று வீழ்வது இன்று-கொல் நந்த திண் தேர்
தோள் இழுக்குற்ற மொய்ம்ப பண் என சொல்லினானே
#1089
வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழில் அது ஆகும்
காய்ந்திடு வெகுளி நீக்கி கை கட்டி இவனை உய்த்தால்
ஆய்ந்து அடும் அழற்சி நீங்கும் அது பொருள் என்று நல்ல
சாந்து உடை மார்பன் தாதை தன் மனத்து இழைக்கின்றானே
#1090
ஊன் பிறங்கு ஒளிறும் வேலான் ஓர்த்து தன் உவாத்தி சொல்லால்
தான் புறம் கட்டப்பட்டு தன் சினம் தணிந்து நிற்ப
தேன் பிறங்கு அலங்கல் மாலை சுநந்தையும் துணைவன் தானும்
கோன் புறம் காப்ப சேறல் குணம் என கூறினாரே
#1091
ஈன்ற தாய் தந்தை வேண்ட இ இடர் உற்றது என்றால்
தோன்றலுக்கு ஆண்மை குன்றாது என்ற சொல் இமிழின் பூட்டி
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முட்டினும் முருக்கும் ஆற்றல்
வான் தரு மாரி வண் கை மதவலி பிணிக்கப்பட்டான்
#1092
குழல் உடை சிகழிகை குமரன் தோள் இணை
கழல் உடை இளையவர் கச்சின் வீக்கலின்
அழல் உடை கடவுளை அரவு சேர்ந்து என
விழவு உடை முதுநகர் விலாவிக்கின்றதே
#1093
தோள் ஆர் முத்தும் தொல் முலை கோட்டு துயல் முத்தும்
வாள் ஆர் உண்கண் வந்து இழி முத்தும் இவை சிந்த
காளாய் நம்பி சீவகசாமி என் நல் தாய்
மீளா துன்ப நீள் கடல் மின்னின் மிசை வீழ்ந்தாள்
#1094
பாலார் ஆவி பைம் துகில் ஏந்தி பட நாகம்
போல் ஆம் அல்குல் பொன் தொடி பூம் கண் குணமாலை
ஏலாது ஏலாது எம் பெருமானுக்கு இஃது என்னா
நூலார் கோதை நுங்கு எரிவாய்ப்பட்டது ஒத்தாள்
#1095
எரி தவழ் குன்றத்து உச்சி இரும் பொறி கலாப மஞ்ஞை
இரிவன போன்று மாடத்து இல் உறை தெய்வம் அன்னார்
பரிவுறு மனத்தின் ஓடி பட்டதை உணர்ந்து பொன் தார்
அரி உறழ் மொய்ம்பவோ என்று ஆகுல பூசல் செய்தார்
#1096
கங்கையின் சுழியில் பட்ட காமரு பிணையின் மாழ்கி
அங்கு அவர்க்கு உற்றது உள்ளி அவல நீர் அழுந்துகின்ற
குங்கும கொடியோடு ஏந்தி கோலம் வீற்றிருந்த கொம்மை
பொங்கு இள முலையினார்க்கு புரவலன் இதனை சொன்னான்
#1097
கண் துயில் அனந்தர் போல கதிகளுள் தோன்றுமாறும்
விட்டு உயிர் போகுமாறும் வீடு பெற்று உயருமாறும்
உள்பட உணர்ந்த யானே உள் குழைந்து உருகல் செல்லேன்
எள் பகவு அனைத்தும் ஆர்வம் ஏதமே இரங்கல் வேண்டா
#1098
நல் மணி இழந்த நாகர் நல் இளம் படியர் போல
இன் மணி இழந்து சாம்பி இரு நிலம் இவர்கள் எய்த
மின் அணி மதியம் கோள் வாய் விசும்பு-இடை நடப்பதே போல்
கல் மணி உமிழும் பூணான் கடை பல கடந்து சென்றான்
#1099
வெந்தனம் மனம் என வெள்ளை நோக்கின் முள் எயிற்று
அந்துவர் பவள வாய் அம் மழலை இன்சொலார்
பந்து பாவை பைம் கழங்கு பைம்பொன் முற்றில் சிற்றிலுள்
நொந்து வைத்து நூபுரம் ஒலிப்ப ஓடி நோக்கினார்
#1100
மல்லிகை மலிந்த மாலை சோர ஆர்ந்த குண்டலம்
வில் இலங்க மின்னு கோட்ட வீணை விட்டு வெய்து உராய்
ஒல் என சிலம்பு அரற்ற வீதி மல்க ஓடினார்
சில் சுணங்கு இள முலை செழு மலர் தடம் கணார்
 
 
#1101
நெய் தலை கரும் குழல் நிழன்று எருத்து அலைத்தர
முத்து அலைத்து இள முலை முகம் சிவந்து அலமர
கைத்தலம் கடுத்து அடித்த பந்து நீக்கி வந்து அவண்
மை தலை நெடும் தடம் கண் மங்கையர் மயங்கினர்
#1102
கோதை கொண்ட பூம் சிகை கொம்மை கொண்ட வெம் முலை
மாது கொண்ட சாயல் அம் மடந்தையர் மனம் கசிந்து
ஓதம் முத்து உகுப்ப போல் உண்கண் வெம் பனி உகுத்து
யாது செய்கம் ஐய என்று அன்பு மிக்கு அரற்றினர்
#1103
செம்பொன் ஓலை வீழவும் செய் கலங்கள் சிந்தவும்
அம் பொன் மாலையோடு அசைந்து அவிழ்ந்து கூந்தல் சோரவும்
நம்பன் உற்றது என் எனா நாடகம் மடந்தையர்
வெம்பி வீதி ஓடினார் மின்னின் அன்ன நுண்மையார்
#1104
பூ அலர்ந்த தாரினான் பொற்பு வாடும் ஆயிடின்
போ உடம்பு வாழ் உயிர் பொன்று நீயும் இன்று எனா
வீ கலந்த மஞ்ஞை போல் வேல் நெடும் கண் நீர் மல்க
ஆகுலத்து அரிவையர் அம் வயிறு அதுக்கினார்
#1105
தேன் மலிந்த கோதை மாலை செய் கலம் உகுத்து உராய்
கால் மலிந்த காமவல்லி என்னது அன்னர் ஆயரோ
பால் மலிந்த வெம் முலை பைம் துகில் அரிவையர்
நூல் மலிந்த நுண் நுசுப்பு நோவ வந்து நோக்கினார்
#1106
மாதரார்கள் கற்பினுக்கு உடைந்த மா மணி கலை
தீது இல் ஆரம் நூல் பெய்வார் சிதர்ந்து போக சிந்துவார்
போது உலாம் அலங்கலான் முன் போந்து பூம் தெரிவையர்
ஆ தகாது என கலங்கி அம் வயிறு அதுக்கினார்
#1107
வட்டிகை மணி பலகை வண்ண நுண் துகிலிகை
இட்டு இடை நுடங்க நொந்து இரியல் உற்ற மஞ்ஞையின்
கட்டு அழல் உயிர்ப்பின் வெந்து கண்ணி தீந்து பொன் உக
மட்டு அவிழ்ந்த கோதையார்கள் வந்து வாயில் பற்றினார்
#1108
வினையது விளைவு காண்-மின் என்று கை விதிர்த்து நிற்பார்
இனையனாய் தெளிய சென்றால் இடிக்கும்-கொல் இவனை என்பார்
புனை நலம் அழகு கல்வி பொன்றுமால் இன்றோடு என்பார்
வனை கல திகிரி போல மறுகும் எம் மனங்கள் என்பார்
#1109
நோற்றிலர் மகளிர் என்பார் நோம் கண்டீர் தோள்கள் என்பார்
கூற்றத்தை கொம்மை கொட்டி குலத்தொடு முடியும் என்பார்
ஏற்றது ஒன்று அன்று தந்தை செய்த இ கொடுமை என்பார்
ஆற்றலள் சுநந்தை என்பார் ஆ தகாது அறனே என்பார்
#1110
தூக்கு-மின் காளை சீறின் துற்று இவன் உளனோ என்பார்
காக்குமால் வையம் எல்லாம் காவலன் ஆகி என்பார்
பாக்கியமே பெரிது காண் இதுவும் ஓர் பான்மை என்பார்
நோக்கன்-மின் நாணும் கண்டீர் நுதி கொள் நாகரிகன் என்பார்
#1111
பூ வரம்பு ஆய கோதை பொன் அனார் புலவி நீக்கி
நூபுரம் திருத்தி சேந்த நுதி விரல் நொந்த என்பார்
யாவரும் புகழும் ஐயன் அழகு கெட்டு ஒழியும்-ஆயின்
கோபுர மாட மூதூர் கூற்று உண விளிக என்பார்
#1112
கரும் சிலை மறவர் கொண்ட கண நிரை விடுக்க வல்ல
இரும் சிலை பயின்ற திண் தோட்கு இது தகாது என்று குன்றில்
கரும் கடல் துளுப்பிட்டு ஆங்கு கல் என கலங்கி காமர்
அரும் கடி அரண மூதூர் ஆகுலம் மயங்கிற்று அன்றே
#1113
இங்ஙனம் இவர்கள் ஏக எரி அகம் விளைக்கப்பட்ட
வெம் கணை விடலை தாதை வியன் நகர் அவலம் எய்தி
அங்கு அவர் உகுத்த கண்ணீர் அடி துகள் அவிப்ப நோக்கி
பொங்கு அமர் உழக்கும் வேலான் புலம்பு கொண்டு அழேற்க என்றான்
#1114
மின்னினால் மலையை ஈர்ந்து வேறு இரு கூறு செய்வான்
துன்னினான் துளங்கின் அல்லால் துளங்கல் அ மலையிற்கு உண்டே
அன்னதே துணிந்த நீதி அரு நவை நமனும் ஆற்றான்
என்னை நேர் நின்று வாழ்தல் இரு நிலத்து ஆவது உண்டே
#1115
வளை கடல் வலையின் சூழ்ந்து மால் வரை வேலி கோலி
உளை அரி படுக்கல் உற்றான் படுப்பினும் படுக்க மற்று என்
கிளை அழ என்னை வாள் வாய் கீண்டிடல் உற்று நின்றான்
தளை அவிழ் கண்ணி சிந்த தன் தலை நிலத்தது அன்றே
#1116
நீர் அகம் பொதிந்த மேகம் நீல் நிற நெடு நல் யானை
போர் முகத்து அழலும் வாள் கை பொன் நெடும் குன்றம் அன்னான்
ஆர் கலி யாணர் மூதூர் அழுது பின் செல்ல செல்வான்
சீர் உறு சிலம்பி நூலால் சிமிழ்ப்பு உண்ட சிங்கம் ஒத்தான்
#1117
மன்னர் தம் வெகுளி வெம் தீ மணி முகில் காணம் மின்னி
பொன் மழை பொழியின் நந்தும் அன்று எனின் புகைந்து பொங்கி
துன்னினார் தம்மை எல்லாம் சுட்டிடும் என்று செம்பொன்
பன்னிரு கோடி உய்த்து கந்துகன் பணிந்து சொன்னான்
#1118
மன்னவ அருளி கேண்மோ மடந்தை ஓர் கொடியை மூதூர்
நின் மத களிறு கொல்ல நினக்கு அது வடு என்று எண்ணி
என் மகன் அதனை நீக்கி இன் உயிர் அவளை காத்தான்
இன்னதே குற்றம் ஆயின் குணம் இனி யாது வேந்தே
#1119
நாண் மெய் கொண்டு ஈட்ட பட்டார் நடுக்குறும் நவையை நீக்கல்
ஆண் மக்கள் கடன் என்று எண்ணி அறிவு இன்மை துணிந்த குற்றம்
பூண் மெய் கொண்டு அகன்ற மார்ப பொறு-மதி என்று பின்னும்
நீண்மை கண் நின்று வந்த நிதி எலாம் தருவல் என்றான்
#1120
வாழியர் இறைவ தேற்றான் மா நிரை பெயர்த்த காளை
பீழைதான் பொறுக்க என்ன பிறங்கிணர் அலங்கல் மாலை
சூழ் கதிர் ஆரம் வீழ் நூல் பரிந்து அற நிமிர்ந்து திண் தோள்
ஊழ் பிணைந்து உருமின் சீறி உடல் சினம் கடவ சொன்னான்
#1121
ஆய் களிற்று அசனி வேகம் அதன் மருப்பு ஊசி ஆக
சீவகன் அகன்ற மார்பம் ஓலையா திசைகள் கேட்ப
காய்பவன் கள்வர் என்ன எழுதுவித்திடுவல் இன்னே
நீ பரிவு ஒழிந்து போய் நின் அகம் புகு நினையல் என்றான்
#1122
நஞ்சு அனான் உரைப்ப கேட்டே நாய்கனும் நடுங்கி உள்ளம்
வெம் சின வேழம் உண்ட விளங்கனி போன்று நீங்கி
எஞ்சினன் போல நின்றான் ஏத்த அரும் தவத்தின் மிக்க
வஞ்சம் இல் கொள்கையான் சொல் அமிர்தினால் வற்புற்றானே
#1123
மின் இலங்கு எஃகினானை பெறுகலான் தந்தை மீண்டு
தன் இலம் குறுகலோடும் தாய் அழுது அரற்றுகின்றாள்
என் நிலை ஐயற்கு என்ன யாவதும் கவல வேண்டா
பொன் நலம் கொடியனாய் ஓர் பொருள் உரை கேள் இது என்றான்
#1124
மது மடை திறந்து தீம் தேன் வார் தரு கோதை நீ முன்
செது மக பலவும் பெற்று சிந்தை கூர் மனத்தை ஆகி
இது மகவு அழியின் வாழேன் இறப்பல் யான் என்னும் ஆங்கண்
கதுமென கடவுள் தோன்றி கடை முகம் குறுக வந்தான்
#1125
கறவை காண் கன்றின் வெஃகி கண்டு அடி பணிந்து காமர்
நறவு அயா உயிர்க்கும் மாலை நாற்றிய இடத்துள் ஏற்றி
அறவியாற்கு ஆறும் மூன்றும் அமைந்த நால் அமிர்தம் ஏந்த
பறவை தாது உண்ட வண்ணம் பட்டினி பரிவு தீர்ந்தான்
#1126
ஆய் மணி பவள திண்ணை அரும் பெறல் கரகத்து அங்கண்
தூய் மணி வாசம் நல் நீர் துளங்கு பொன் கலத்துள் ஏற்று
வேய் மணி தோளி நிற்ப விழுத்தவன் நியமம் முற்றி
வாய் மணி முறுவல் தோன்ற வந்தனை விதியின் செய்தேன்
#1127
ஆறு எலாம் கடலுள் வைகும் அரும் தவத்து இறைவன் நூலுள்
வேறு எலா பொருளும் வைகும் விழு தவ அறிதி நீயே
ஊறு இலா உணர்வின் நோக்கி உரை-மதி எவன்-கொல் மக்கள்
பேறு இலாள் அல்லள் பெற்ற உயிர் சென்று பிறக்கும் என்றேன்
#1128
வம்பு அவிழ் கோதை தந்த வான் துவர் காயை வீழ்த்து ஓர்
செம் பழு காயை வாங்கி திருநிலத்து எடுத்து கொண்டு ஆங்கு
அம்பு அழ நீண்ட வாள் கண் அலமரும் அணி செய் அம் பூம்
கொம்பு அடு நுசுப்பினாய்க்கு தந்தனென் பேணி கொண்டாய்
#1129
பெற்ற அ நிமித்தத்தானும் பிறந்த சொல் வகையினானும்
அற்றம் இல் மணியை அம் கை கொண்டு அவர் கண்டு காட்ட
கற்பகம் காமவல்லி அனைய நீர் கேண்-மின் என்று
முற்றுபு கனிந்த சொல்லான் முனிவரன் மொழியும் அன்றே
#1130
ஒன்றும் நீர் கவலல் வேண்டா உலகு எலாம் ஆளும் சீர்த்தி
பொன் திகழ் உருவினான் ஓர் புண்ணியன் பெறுதிர் என்ன
நின்ற நீ உவந்து நீங்க நிகழ் பொருள் எனக்கு செப்பி
பின்றையும் நிகழ்வது உண்டு பேசுவல் கேள் இது என்றான்
#1131
நிலவு உறழ் பூணினானை நெடு நகர் இரங்க கையாத்து
அலபல செய்து கொல்வான் அருளிலான் கொண்ட போழ்தில்
குலவிய புகழினானை கொண்டு போம் இயக்கன் அஞ்சல்
சில பகல் கழிந்து காண்டி சிந்தி ஈது என்று சொன்னான்
#1132
வசை அற நிறைந்த கற்பின் மாலையும் மாமி-தானும்
தசை அற உருகி வெந்து தம் உயிர் நீங்கும் ஆங்கண்
நொசி தவன் சொற்கள் என்றும் நோன் புணை தழுவி நெஞ்சில்
கசிவு எனும் கடலை நீந்தி கரை எனும் காலை கண்டார்
#1133
திரு குழல் மகளிர் நைய சீவகசாமி திண் தோள்
வரி கச்சில் பிணிக்கப்பட்டான் மன்னனால் என்ன கேட்டே
தருக்கு உடை வேழம் வாளார் ஞாட்பினுள் தகைமை சான்ற
மருப்புடன் இழந்தது ஒத்தார் மன் உயிர் தோழன்மாரே
#1134
நட்டவற்கு உற்ற கேட்டே பதுமுகன் நக்கு மற்று ஓர்
குட்டியை தின்னலாமே கோள் புலி புறத்தது ஆக
கட்டியங்காரன் என்னும் கழுதை நம் புலியை பாய
ஒட்டி இஃது உணரலாமே உரைவல்லை அறிக என்றான்
#1135
சிலையொடு செல்வன் நின்றால் தேவரும் வணக்கல் ஆற்றார்
முலை உடை தாயொடு எண்ணி தந்தை இ கொடுமை செய்தான்
கலை வல்லீர் இன்னும் கேண்-மின் இன்னது என்று உரைக்கும் ஆங்கண்
விரைவொடு சென்ற ஒற்றாள் விளைந்தவா பேசுகின்றான்
#1136
இட்டி வேல் குந்தம் கூர்வாள் இரும் சிலை இருப்பு சுற்றார்
நெட்டிலை சூலம் வெய்ய முளைத்தண்டு நெருங்க ஏந்தி
எட்டு எலா திசையும் ஈண்டி எழாயிரத்து இரட்டி மள்ளர்
கட்டு அழல் கதிரை ஊர்கோள் வளைத்தவா வளைத்து கொண்டார்
#1137
பிடியொடு நின்ற வேழம் பெரு வளைப்புண்ட வண்ணம்
வடி மலர் கோதையோடும் வளைத்தலின் மைந்தன் சீறி
விடு கணை சிலையொடு ஏந்தி வெருவர தோன்றலோடும்
அடு புலி கண்ட மான் போல் ஆறல ஆயினாரே.
#1138
சூழ் கழல் மள்ளர் பாற சூழ்ச்சியின் தந்தை புல்லி
வீழ்தரு கண்ணள் தம்மோய் விளங்கு தோள் பிணிப்ப மற்று என்
தோழரை வடு செய்திட்டேன் என்று தான் துளங்கி நின்றான்
ஊழ் திரை பாம்பு சேர்ந்த ஒளி மிகு பருதி ஒத்தான்
#1139
ஒற்றன் வந்து உரைப்ப கேட்டே ஒத்ததோ என் சொல் என்னா
சுற்றினார் முகத்தை நோக்கி சூழி மால் யானை அன்னான்
உற்ற இ இடரை தீர்க்கும் உபாயம் நீர் உரை-மின் என்றான்
பொன் திரள் குன்றம் போல பொலிவு கொண்டு இருந்த தோளான்
#1140
நிறை திங்கள் ஒளியோடு ஒப்பான் புத்திசேன் நினைந்து சொல்லும்
மறைத்து இங்கண் நகரை வல்லே சுடுதும் நாம் சுடுதலோடும்
இறை குற்றேல் செய்தல் இன்றி எரியின் வாய் சனங்கள் நீங்க
சிறை குற்றம் நீங்க செற்றான் செகுத்து கொண்டு எழுதும் என்றான்
#1141
கால தீ நகரை மேய கடி அரண் கடிந்த அம்பின்
சால தீ சவரர் கோலம் செய்து நம் மறவர் ஈண்டி
கோல தீ வேலினானை கோயிலுள் வளைப்ப இப்பால்
ஆலை தீ இடங்கள்-தோறும் ஆகுலம் செய்தும் என்றான்
#1142
சிறை புறம் காத்து செல்லு மதனனை தெருவில் வீழ
பிறை தலை அம்பில் சென்னி பெருநிலத்து இடுவல் இட்டால்
மறுக்கு உற்று மள்ளர் நீங்க மைந்தனை கொண்டு போகி
அறை தொழிலார்க்கும் செல்லா அரு மிளை புகு-மின் என்றான்
#1143
மாற்றவர் மலைப்பின் ஆங்கே வாள் கடா கொண்டு நொய்தா
வேற்று உலகு ஏற்றி நும் பின் விரை தர்வேன் உலகிற்கு எல்லாம்
ஆற்றிய நட்பு வல்லே வலிப்பு உறீஇ இடு-மின் என்றான்
கூற்றங்கள் பலவும் தொக்க கூற்றத்தில் கூற்றம் ஒப்பான்
#1144
காலனை சூழ்ந்த நோய் போல் நபுல மா விபுலர் சூழ
வேலினை ஏந்தி நந்தன் வெருவர தோன்றலோடும்
மாலை தன் தாதை தானும் மக்களும் வந்து கூடி
பாலவர் பிறரும் ஈண்டி பாய் புலி இனத்தின் சூழ்ந்தார்
#1145
மட்டு வாய் அவிழ்ந்த தண் தார் தாமரை நாமன் சொன்ன
கட்டமை நீதி தன் மேல் காப்பு அமைந்து இவர்கள் நிற்ப
பட்டு உலாய் கிடந்த செம்பொன் கலை அணி பரவை அல்குல்
இட்டு இடை பவள செ வாய் தத்தையும் இதனை கேட்டாள்
#1146
மணி இயல் யவன செப்பின் மங்கல துகிலை வாங்கி
கணை புரை கண்ணி ஏற்ப உடுத்த பின் செம்பொன் செப்பில்
பிணையலும் நறிய சேர்த்தி பெரு விலை ஆரம் தாங்கி
துணைவனுக்கு உற்ற துன்பம் சொல்லிய தொடங்கினாளே
#1147
பொன் அணி மணி செய் ஓடை நீரின் வெண்சாந்து பூசி
தன்னுடை விஞ்சை எல்லாம் தளிர் இயல் ஓதலோடும்
மின் அடு வாளும் வேலும் கல்லொடு தீயும் காற்றும்
மன்னுடன் ஏந்தி தெய்வ மாதரை சூழ்ந்த அன்றே
#1148
ஆரம் மின்னும் பணை வெம் முலை ஆடு அமை தோளினாள்
வீரன் உற்ற துயர் மின் என நீக்கிய மெல்லவே
நேர மன்னும் வருக என்று நின்றாள் நினைந்தாள்-அரோ
பாருள் மன்னும் பழி பண்பனுக்கு இன்று விளைந்ததே
#1149
மன்னன் செய்த சிறை மா கடலுள் குளித்து ஆழ்வுழி
தன்னை எய்தி சிறை மீட்டனள் தன் மனையாள் எனின்
என்னை ஆவது இவன் ஆற்றலும் கல்வியும் என்று உடன்
கொன்னும் வையகம் கொழிக்கும் பழிக்கு என் செய்கோ தெய்வமே
#1150
செல்வன் உற்ற சிறை செய்யவள் நீக்கும் என்றால் பழி
இல்லை-ஆயின் அவள் யான் எனும் வேற்றுமை இல்லையே
சொல்லின் வெள்ளி மலை தோடு அவிழ் தாமரை பொன் மலர்
எல்லை ஆகும் பொது பெண் அவள் யான் குல மங்கையே
 
மேல்
 
#1151
ஆவது ஆக புகழும் பழியும் எழும் நாள் அவை
தேவர் மாட்டும் உள மக்களுள் இல்வழி தேர்கலேன்
நோம் என் நெஞ்சம் என நோக்கி நின்றாள் சிறைப்பட்ட தன்
காவல் கன்றின் புனிற்று ஆ அன கார் மயில் சாயலே
#1152
மாநகர் சுடுதல் ஒன்றோ மதனனை அழித்தல் ஒன்றோ
வான் நிகர் இல்லா மைந்தர் கருதியது அதுவும் நிற்க
வேய் நிகர் இல்ல தோளி விஞ்சையால் விடுத்து கொள்ள
போய் உயிர் வாழ்தல் வேண்டேன் என பொருள் சிந்திக்கின்றான்
#1153
கச்சு அற நிமிர்ந்து மாந்தர் கடாவிடு களிறு போல
உச்சியும் மருங்கும் பற்றி பிளந்து உயிர் பருகி கோண்மா
அச்சுற அழன்று சீறி ஆட்டு இனம் புக்கது ஒப்ப
குச்சென நிரைத்த யானை குழாம் இரித்திடுவல் என்றான்
#1154
மின் இலங்கு எயிற்று வேழம் வேழத்தால் புடைத்து திண் தேர்
பொன் இலங்கு இவுளி தேரால் புடைத்து வெம் குருதி பொங்க
இன் உயிர் அவனை உண்ணும் எல்லை நாள் வந்தது இல்லை
என்னை இ கிருமி கொன்று என் தோழனை நினைப்பல் என்றான்
#1155
தோழனும் தேவிமார் தம் குழாத்து உளான் துளும்பும் முந்நீர்
ஏழ் தரு பருதி-தன் மேல் இளம் பிறை கிடந்ததே போல்
தாழ் தகை ஆர மார்பின் சீவகன் குணங்கள் தம்மை
யாழ் எழீஇ பாட கேட்டு ஓர் அரம்பையை சேர்ந்து இருந்தான்
#1156
வயிரம் வேய்ந்த மணி நீள் முடி வால் ஒளி வானவன்
செயிரின் தீர்ந்த செழும் தாமரை கண் இடன் ஆடலும்
உயிர் அனானை நினைந்தான் உற்றது ஓதியின் நோக்கினான்
மயில் அனார்க்கு படி வைத்தவன் மால் விசும்பு ஏறினான்
#1157
இடியும் மின்னும் முழக்கும் இவற்றான் உலகம் நிறைந்து
ஒடியும் ஊழி இவண் இன்று உறு கால் வரை கீழ்ந்து என
நடலை நோக்கி கதிர் நாணுவது ஒப்ப மறைந்த பின்
கடலை ஏந்தி நிலத்து இட்டு என மாரி கலந்ததே
#1158
விண்ணும் மண்ணும் அறியாது விலங்கொடு மாந்தர்-தம்
கண்ணும் வாயும் இழந்து ஆம் கடல் கொண்டது காண்க என
பெண்ணும் ஆணும் இரங்க பெருமான் மகன் சாமியை
அண்ணல் ஏந்தி அகம் புலி கொண்டு எழுந்து ஏகினான்
#1159
குன்று உண்டு ஓங்கு திரள் தோள் அவன் கொண்டு எழுந்து ஏகலும்
நன்று உண்டாக என நல் நுதல் வாழ்த்தினள் வாழ்த்தலும்
ஒன்று உண்டாயிற்று அவள் உள் அழி நோயுறு காளையை
என்று உண்டாம்-கொல் இனி கண்படும் நாள் எனும் சிந்தையே
#1160
சந்த மாலை தொகை தாழ்ந்து சாந்தம் கமழ் பூமியுள்
வந்த விண்ணோர்களை வாழ்த்தி ஏத்தி இ மலர் மாலை தூய்
எந்தைமார்கள் எழுக என்ன ஏக விடுத்தாள் குரல்
சிந்தை செய்யும் சிறகர் கிளி தோற்கும் அம் தீம் சொலாள்
#1161
மலை தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான்
கொலை தொகை வேலினானை கொல்லிய கொண்டு போந்தான்
நலத்தகை அவனை காணான் நஞ்சு உயிர்த்து அஞ்சி நோக்கி
சிலை தொழில் தட கை மன்னற்கு இற்றென செப்புகின்றான்
#1162
மன்னனால் சீறப்பட்ட மைந்தனை கொல்ல போந்தாம்
என் இனி சொல்லி சேறும் என் செய்தும் யாங்கள் எல்லாம்
இன்னது பட்டது என்றால் எரி விளக்கு உறுக்கும் நம்மை
துன்னுபு சூழ்ந்து தோன்ற சொல்லு-மின் செய்வது என்றான்
#1163
வாழ்வதோர் உபாயம் நாடி மதி உடம்பட்டு வல்லே
சூழ்வினையாளர் ஆங்கண் ஒருவனை தொடர்ந்து பற்றி
போழ் பட பிளந்து வாளின் புரட்டி இட்டு அரிய கண்டே
ஆழ் கல மாந்தர் போல அணி நகர் அழுங்கிற்று அன்றே
#1164
காய் சின வெகுளி வேந்தே களிற்றொடும் பொருத காளை
மாசனம் பெரிதும் மொய்த்து மழையினோடு இருளும் காற்றும்
பேசின் தான் பெரிதும் தோன்ற பிழைத்து உய்ய போதல் அஞ்சி
வாசம் கொள் தாரினானை மார்பு போழ்ந்து உருட்டி இட்டேம்
#1165
அருள் வலி ஆண்மை கல்வி அழகு அறிவு இளமை ஊக்கம்
திரு மலி ஈகை போகம் திண் புகழ் நண்பு சுற்றம்
ஒருவர் இ உலகில் யாரே சீவகன் ஒக்கும் நீரார்
பெரிது அரிது இவனை கொன்றாய் பெறுக என சிறப்பு செய்தான்
 


No comments:

Post a Comment