seevagachinthamani - 4



3 காந்தருவதத்தையார் இலம்பகம்

 
#493
இங்கு இவர்கள் இவ்வாறு இருந்து இனிது வாழ
சங்கு தரு நீள் நிதியம் சால உடை நாய்கன்
பொங்கு திரை மீது பொரு மால் களிறு போன்றோர்
வங்கமொடு போகி நிதி வந்து தரல் உற்றான்

#494
மின் ஒழுகு சாயல் மிகு பூண் பதுமை கேள்வன்
கொன் ஒழுகு வேல் யவதத்தன் குளிர் தூங்கும்
தன் வழிய காளை சீதத்தன் அவன் தன் போல்
பொன் ஒழுகு குன்றில் உறை போர் புலியொடு ஒப்பான்

#495
இம்மியன நுண் பொருள்கள் ஈட்டி நிதி ஆக்கி
கம்மியரும் ஊர்வர் களிறு ஓடை நுதல் சூட்டி
அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது அறம் சால்க என்று
உம்மை வினை நொந்து புலந்து ஊடல் உணர்வு அன்றே

#496
உள்ளம் உடையான் முயற்சி செய்ய ஒரு நாளே
வெள்ள நிதி வீழும் விளையாதது அதனின் இல்லை
தொள்ளை உணர்வு இன்னவர்கள் சொல்லின் மடிகிற்பின்
எள்ளுநர்கட்கு ஏக்கழுத்தம் போல இனிது அன்றே

#497
செய்க பொருள் யாரும் செறுவாரை செறுகிற்கும்
எஃகு பிறிது இல்லை இருந்தே உயிரும் உண்ணும்
ஐயம் இலை இன்பம் அறனோடு அவையும் ஆக்கும்
பொய்யில் பொருளே பொருள் மற்று அல்ல பிற பொருளே

#498
தூங்கு சிறை வாவல் உறை தொல் மரங்கள் என்ன
ஓங்கு குலம் நைய அதனுள் பிறந்த வீரர்
தாங்கல் கடன் ஆகும் தலை சாய்க்க வரு தீ சொல்
நீங்கல் மடவார்கள் கடன் என்று எழுந்து போந்தான்

#499
மோதுபடு பண்டம் முனியாது பெரிது ஏற்றி
மாதுபடு நோக்கினவர் அவர் வாள் கண் வடு உற்ற
தாது படு தார் கெழிய தங்கு வரை மார்பன்
கோது படல் இல்ல குறி கொண்டு எழுந்து போந்தான்

#500
வானம் உற நீண்ட புகழ் மாரி மழை வள்ளல்
தானம் என வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி
நானம் மிக நாறு கமழ் குஞ்சியவன் ஏறி
ஊனம் எனும் இன்றி இனிது ஓடுக இது என்றான்

#501
ஆடு கொடி உச்சி அணி கூம்பின் உயர் பாய் மூன்று
ஈடுபட செய்து இளையர் ஏத்த இமிழ் முந்நீர்
கோடு பறை ஆர்ப்ப கொழும் தாள் பவழம் கொல்லா
ஓடு களிறு ஒப்ப இனிது ஓடியதை அன்றே

#502
திரைகள் தரும் சங்கு கலம் தாக்கி திரள் முத்தம்
கரை கடலுள் கால கணை பின் ஒழிய முந்நீர்
வரை கிடந்து கீண்டது என கீறி வளர் தீவின்
நிரை இடறி பாய்ந்து இரிய ஏகியது மாதோ

#503
மின்னும் மிளிர் பூம் கொடியும் மென் மலரும் ஒப்பார்
அன்னமொடும் தோகை நடை சாயல் அமிர்து அன்னார்
துன்னி இனிது ஆக உறை துப்புரவின் மிக்க
நன்மை உடை நல் பொன் விளை தீவம் அடைந்தது அஃதே

#504
தீவினுள் இழிந்து தேன் தார் செம்மலும் திரு முத்தாரம்
கோவினை குறிப்பில் கண்டு கொடுத்து அருள் சுமந்து செம்பொன்
பூவின் உள்ளவளை அன்ன பொங்கு இள முலையினார்-தம்
நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து சின்னாள்

#505
புணர்ந்தவர் பிரிதல் ஆற்றா போகம் ஈன்று அளிக்கும் சாயல்
அணங்கினுக்கு அணங்கு அனாரோடு அறு மதி கழிந்த பின்றை
கொணர்ந்தன பண்டம் விற்ற கொழு நிதி குப்பை எல்லாம்
உணர்ந்து தன் மதலை ஏற்றி ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான்

#506
அரசனை கண்டு கண்ணுற்றவர்களை விடுத்து நல் நாள்
இரைவதி வியாழ ஓரை இரும் சிலை முளைப்ப ஏறி
கரை கடல் அழுவம் நீந்தி காற்றினும் கடுகி ஐஞ்ஞாறு
உரை உடை காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே

#507
களி தலை மயங்கி இப்பால் இருத்தலும் கலந்து ஓர் காற்றில்
துளி தலை முகில்கள் ஈண்டி தூங்கு இருள் மயங்கி மான்று
விளிப்பது போல மின்னி வெடிபட முழங்கி கூற்றும்
ஒளித்து உலைந்து ஒழிய வெம்பி உரறி நின்று இடிப்ப நாய்கன்

#508
எண் திசை வளியும் ஈண்டி எதிரெதிர் கலாவி பவ்வம்
கொண்டு மேல் எழுவது ஒப்ப குளிறி நின்று அதிர்ந்து மேகம்
தண் துளி பளிக்கு கோல் போல் தாரையாய் சொரிந்து தெய்வம்
கொண்டது ஓர் செற்றம் போலும் குலுங்கன்-மின் என்று கூறும்

#509
இடுக்கண் வந்து உற்ற காலை எரிகின்ற விளக்கு போல
நடுக்கம் ஒன்றானும் இன்றி நகுக தாம் நக்க போழ்து அ
இடுக்கணை அரியும் எஃகாம் இருந்து அழுது யாவர் உய்ந்தார்
வடுப்படுத்து என்னை ஆண்மை வருப வந்து உறுங்கள் அன்றே

#510
ஆடக செம்பொன் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெண்ணீர்
கூடகம் கொண்ட வாழ் நாள் உலந்ததேல் கொல்லும் பவ்வத்து
ஊடகம் புக்கு முந்நீர் அழுந்தினும் உய்வர் நல்லார்
பாடகம் போல சூழ்ந்த பழவினை பயத்தின் என்றான்

#511
வினை அது விளைவின் வந்த வீவு அரும் துன்பம் முன்னீர்
கனை கடல் அழுவம் நீந்தி கண் கனிந்து இரங்கல் வேண்டா
நனை மலர் பிண்டி நாதன் நலம் கிளர் பாத மூலம்
நினையும்-மின் நீவிர் எல்லாம் நீங்கும்-மின் அச்சம் என்றான்

#512
பருமித்த களிறு அனானும் பை என கவிழ்ந்து நிற்ப
குருமித்து மதலை பொங்கி கூம்பு இற பாய்ந்து வல்லே
நிருமித்த வகையின் ஓடி நீர் நிறைந்து ஆழ்ந்த போதில்
உரும் இடித்திட்டது ஒப்ப உள்ளவர் ஒருங்கு மாய்ந்தார்

#513
ஓம்பி படைத்த பொருளும் உறு காதலாரும்
வேம்பு உற்ற முந்நீர் விழுங்க விரையாது நின்றான்
கூம்பு இற்ற துண்டம் தழுவி கிடந்தான் கொழித்து
தேம் பெற்ற பைம் தார் அவனை திரை உய்த்தது அன்றே

#514
நாவாய் இழந்து நடு யாரும் இல் யாமம் நீந்தி
போவாய் தமியே பொருளை பொருள் என்று கொண்டாய்
வீவாய் என முன் படையாய் படைத்தாய் வினை என்
பாவாய் என போய் படு வெண் மணல் திட்டை சேர்ந்தான்

#515
பொரி அரை ஞாழலும் புன்னையும் பூத்து
வரி தரு வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
திரு விரி பூம் பொழில் செவ்வனம் சேர்ந்து ஆங்கு
அரு வரை மார்பன் அவலித்து இருந்தான்

#516
ஓடும் திரைகள் உதைப்ப உருண்டு உருண்டு
ஆடும் அலவனை அன்னம் அருள் செய
நீடிய நெய்தல் அம் கானல் நெடும் தகை
வாடி இருந்தான் வரும் கலம் நோக்கா

#517
ஆளிய மொய்ம்பன் இரும் தவ பூம் பொழில்
தாள் வலியான் ஓர் மகனை தலைப்பட்டு
கேளிர் எனக்கு உற்ற கேண்ம்-மின் நீர் என
தோள் வலி மிக்கான் தொடர்ந்து உரைக்கின்றான்

#518
கரும் கடல் போயிற்றும் காற்றில் கவிழ்ந்து
திருந்திய தன் பொருள் தீது உற்றவாறும்
அரும் புணை சார்வா அவண் உய்ந்தவாறும்
இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான்

#519
மானும் மரனும் இரங்க மதவலி
தான் உற்ற துன்பம் தரனுக்கு உரைத்த பின்
தேனும் அமிழ்தும் திளைத்து ஆங்கு இனியன
ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான்

#520
விஞ்சைகள் வல்லேன் விளிந்த நின் தோழரொடு
எஞ்சிய வான் பொருள் எல்லாம் இமைப்பினுள்
வஞ்சம் ஒன்று இன்றி மறித்தே தருகுவன்
நெஞ்சில் குழைந்து நினையன்-மின் என்றான்

#521
உரை அகம் கொள்ள உணர்த்தினன் ஆகி
வரை அகம் ஏற வலி-மின் என்னா
விரை செலல் வெம் பரி மேழகம் ஏற்றி
குரை கழல் மைந்தனை கொண்டு பறந்தான்

#522
விசும்பு இவர் மேகம் விரைவினர் போழ்ந்து
பசும் புயல் தண் துளி பக்கம் நனைப்ப
நயந்தனர் போகி நறு மலர் சோலை
அசும்பு இவர் சாரல் அரு வரை சார்ந்தார்

#523
கண்டால் இனியன காண்டற்கு அரியன
தண் தாமரை அவள் தாழும் தகையன
கொண்டான் கொழும் கனி கோட்டு-இடை தூங்குவ
உண்டான் அமிழ்து ஒத்து உடம்பு குளிர்ந்தான்

#524
மழை தவழ் சோலை மலை மிசை நீண்ட
குழை தவழ் குங்குமம் கோழ் அரை நாகம்
தழை தவழ் சந்தன சோலையின் நோக்கி
இழை தவழ் மார்பன் இனிதின் உவந்தான்

#525
கோதை அருவி குளிர் வரை மேல் நின்று
காதம் கடந்த பின் கன்னி கொடி மதில்
நாதன் உறைவது ஓர் நல் நகர் உண்டு அங்கு
போதும் எழுக என போயினர் சார்ந்தார்

#526
மேகமே மிடைந்து தாழ இருள் கொண்ட வெள்ளி குன்றம்
மாகத்து விளங்கி தோன்றும் வனப்பு நாம் வகுக்கல் உற்றால்
நாகம் தான் கரியது ஒன்று கீழ் நின்று நடுங்க கவ்வி
பாகமே விழுங்கப்பட்ட பால் மதி போன்றது அன்றே

#527
துளங்கு பொன் நகரின் தன்மை சொல்லலாம் சிறிது ஓர் தேவன்
விளங்கு பொன் உலகத்து உள்ள துப்புரவு இடங்கள் எல்லாம்
அளந்து கொண்டு இன்பம் பூரித்து அணி நகர் ஆக்கி மேலால்
இளம் கதிர பருதி சூட்டி இயற்றியது என்னல் ஆமே

#528
பொங்கி ஆயிரம் தாமரை பூத்த போல்
செம் கண் ஆயிரம் சேர்ந்தவன் பொன் நகர்
கொங்கு தோய் குழலாரொடும் குன்றின் மேல்
தங்குகின்றது போல் தகை சான்றதே

#529
கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூம் கொடி
மடங்கல் நோக்கியர் வாள் முகம் போலும் என்று
உடங்கு வெண் மதி உள் குளிர தம்
குடங்கையால் கொம்மை கொட்டுவ போன்றவே

#530
திருவ மேகலை தெள் அரி கிண்கிணி
பரவை யாழ் குழல் பண் அமை மென் முழா
உருவம் யார் உடையார் என்று ஒளி நகர்
அரவம் வாய் திறந்து ஆர்ப்பது போன்றதே

#531
செம்பொன் மாடங்கள் சென்னி அழுத்திய
அம் பொன் திண் நிலை ஆய் மணி தூவிகள்
வெம்பு நீள் சுடர் வீழ்ந்து சுடுதலின்
பைம்பொன் கொப்புள் பரந்தன போன்றவே

#532
உருளி மா மதி ஓட்டு ஒழித்து ஓங்கிய
வெருளி மாடங்கள் மேல் துயில் எய்தலின்
மருளி மான் பிணை நோக்கின் நல்லார் முகத்து
அருளினால் அழல் ஆற்றுவ போன்றவே

#533
அசும்பு பொன் வரை ஆய் மணி பூண்களும்
பசும்பொன் மாலையும் பட்டுழி பட்டவை
நயந்து கொள்பவர் இன்மையின் நல் நகர்
விசும்பு பூத்தது போன்றன வீதியே

#534
தேக்கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து
ஆக்க பட்ட அளவில் கொழும் புகை
வீக்கி மாடம் திறந்திட மெல்லவே
ஊக்கி வாய் விட்டு உயிர்ப்பன போன்றவே

#535
தப்பு இல் வாய் மொழி தானவர் வைகிய
ஒப்பு இல் மாநகர் ஒண்மை மற்று யாது எனில்
கப்பத்து இந்திரன் காமுறும் மாமணி
செப்பு வாய் திறந்த அன்னது ஓர் செம்மற்றே

#536
நல் நகர் நோக்கி நாய்கன் நாகம்-கொல் புகுந்தது என்ன
பொன்னகர் பொலிய புக்கு பொங்கு மா மழைகள் தங்கும்
மின் அவிர் செம்பொன் மாடத்து இருவரும் இழிந்து புக்கு
பின் அவன் விருந்து பேணி பேசினன் பிறங்கு தாரான்

#537
மாடியம் தானை மன்னர் மா மணி நாகம் ஆக
கேடு இல் சீர் கலுழன் ஆய கலுழ வேகற்கு தேவி
தோடு அலர் கோதை தொல் சீர் தார் அணி சுரும்பு உண்கண்ணி
ஆடவர் அறிவு போழும் அணி முலை அணங்கின் அன்னாள்

#538
விண்ணகம் வணங்க வெண் கோட்டு இளம் பிறை முளைத்ததே போல்
பண்ணகத்து இனிய சொல்லாள் பாவையை பயந்த ஞான்றே
எண் இடம் இன்றி மன்னர் இ மலை இறைகொண்டு ஈண்டி
அண்ணல் அம் களிற்றின் உச்சி அரும் கலம் வெறுக்கை ஈந்தார்

#539
மந்திரத்து அரசன் வல்லே நிமித்திகன் வருக என்றாற்கு
அந்தரத்து ஓடு கோளின் சாதகம் அவனும் செய்தான்
இந்திர திருவில் ஏய்ப்ப குலவிய புருவத்தாட்கு
வந்து அடை பான்மை மண் மேல் இராசமாபுரத்து என்றான்

#540
அவன் உரை தெளிந்து வேந்தன் ஆசையுள் அரசர் நிற்ப
கவனம் கொள் புரவி கொட்பின் காதலும் கரந்து வைத்தான்
அவன் அதே கருத்திற்றாம்-கொல் அன்று-கொல் அறியல் ஆகாது
இவண் அதும் அறிதும் என்று கோயிலுக்கு ஏகினானே

#541
பால் பரந்து அன்ன பட்டு ஆர் பூ அணை பசும்பொன் கட்டில்
கால் பரந்து இருந்த வெம் கண் கதிர் முலை கச்சின் வீக்கி
வேல் பரந்து அனைய கண்ணார் வெண் மதி கதிர் பெய் கற்றை
போல் இவர் கவரி வீச மன்னவன் இருந்த போழ்தின்

#542
என் வரவு இசைக்க என்ன வாயிலோன் இசைப்ப ஏகி
மன்னர் தம் முடிகள் வேந்த வயிரம் போழ்ந்து உழுது சேந்த
பொன் அவிர் கழல் கொள் பாதம் பொழி மழை தட கை கூப்ப
இன் உரை முகமன் கூறி தானத்தில் இருக்க என்றான்

#543
முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய் விட்டது ஒப்ப
அதிர் குரல் முரசம் நாண அமிர்து பெய் மாரி ஏய்ப்ப
கதிர் விரி பூணினாற்கு தந்தை தாய் தாரம் காதல்
மதுர மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான்

#544
இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர்-காறும்
நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால்
அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே
என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான்

#545
மந்திர மன்னன் சொல் நீர் மாரியால் வற்றி நின்ற
சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி
எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப
முந்தை தான் கேட்டவாறே முழுது எடுத்து இயம்புகின்றான்
#546
வெள்ளி வேதண்டத்து அம் கண் வீவில் தென் சேடி பாலில்
கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தார நாட்டு
புள் அணி கிடங்கின் விச்சாலோக மாநகரில் போகா
வெள்ளி வேல் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன்
#547
சங்கு உடைந்து அனைய வெண் தாமரை மலர் தடங்கள் போலும்
நம் குடி தெய்வம் கண்டீர் நமரங்காள் அறி-மின் என்ன
கொங்கு உடை முல்லை பைம் போது இருவடம் கிடந்த மார்ப
இங்கு அடி பிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான்
#548
பெரும் தகை குருசில் தோழன் பெரு விலை கடகம் முன்கை
திருந்துபு வணங்க பற்றி சென்று தன் உரிமை காட்ட
பொருந்துபு பொற்ப ஓம்பி பொன் இழை சுடர நின்ற
கரும் கண்ணி திறத்து வேறா கட்டுரை பயிற்று நின்றான்
#549
எரி மணி பளிக்கு மாடத்து எழுந்தது ஓர் காமவல்லி
அரு மணி கொடி-கொல் மின்-கொல் அமரர் கோன் எழுதி வைத்த
ஒரு மணி குயின்ற பாவை ஒன்று-கொல் என்று நாய்கன்
திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான்
#550
தூசு உலாய் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டை செ வாய்
வாச வான் குழலின் மின் போல் வரு முலை சாந்து நக்கி
ஊசல் பாய்ந்து ஆடி காதில் குண்டலம் இலங்க நின்றாள்
காசு இல் யாழ் கணம் கொள் தெய்வ காந்தர்வதத்தை என்பாள்
 
#551
விளங்கினாள் உலகம் எல்லாம் வீணையின் வனப்பினாலே
அளந்து உணர்வு அரிய நங்கைக்கு அரு மணி முகிழ்த்தவே போல்
இளம் கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னின்
துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே
#552
நின் மகள் இவளை நீயே நின் பதி கொண்டு போகி
இன் இசை பொருது வெல்வான் யாவனே யானும் ஆக
அன்னவற்கு உரியள் என்ன அடி பணி செய்வல் என்றான்
தன் அமர் தேவி கேட்டு தத்தைக்கே தக்கது என்றாள்
#553
முனிவு அரும் போக பூமி போகம் முட்டாது பெற்றும்
தனியவர் ஆகி வாழ்தல் சா துயர் அதனின் இல்லை
கனி படு கிளவியார் தம் காதலர் கவானில் துஞ்சின்
பனி இரு விசும்பில் தேவர் பான்மையிற்று என்று சொன்னான்
#554
நூல் படு புலவன் சொன்ன நுண்பொருள் நுழைந்து யானும்
வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன்
சேல் கடை மதர்வை நோக்கின் சில் அரி தடம் கண் நங்கை
பால் படு காலம் வந்தால் பான்மை யார் விலக்குகிற்பார்
#555
படைப்பு அரும் கற்பினாள் தன் பாவையை பரிவு நீக்கி
கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும்
விடைப்பு அரும் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கி
தொடுத்து அலர் கோதை வீணா பதிக்கு இது சொல்லினானே
#556
உடம்பினொடு உயிரில் பின்னி ஒருவயின் நீங்கல் செல்லா
நெடும் கணும் தோளும் போலும் நேர் இழை அரிவை நீ நின்
தடம் கணி தனிமை நீங்க தந்தையும் தாயும் ஆகி
அடங்கு அலர் அட்ட வேலான் ஆணையிர் ஆ-மின் என்றான்
#557
அரு மணி வயிரம் வேய்ந்த அரும் கல பேழை ஐந்நூறு
எரி மணி செம்பொன் ஆர்ந்த ஈர்_ஆயிரம் யவன பேழை
திரு மணி பூணினாற்கு சினம் தலை மழுங்கல் இன்றி
குரு மணி முடியின் தேய்த்த தரன் தமர் கொள்க என்றான்
#558
பல் வினை பவள பாய் கால் பசு மணி இழிகை வம்பு ஆர்
நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலை கண்ணாடி
மெல்லிய தூபமுட்டி மேதகு நான செப்போடு
அல்லவும் கொள்க என்றான் அணங்கு உடை நிணம் கொள் வேலான்
#559
விளக்கு அழல் உறுத்த போலும் விசியுறு போர்வை தீம் தேன்
துளக்கு அற ஒழுகி அன்ன துய்யற திரண்ட திண் கோல்
கொளத்தகு திவவு திங்கள் கோள் நிரைத்து அனைய ஆணி
அளப்ப அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான்
#560
அரக்கு எறி குவளை வாள் கண் அம் வளை தோளினாளை
பரப்பு அமை கதல் தாயர் பற்பல்-கால் புல்லி கொண்டு
திரு புற கொடுத்த செம்பொன் தாமரை போன்று கோயில்
புரி குழல் மடந்தை போக புலம்பொடு மடிந்தது அன்றே
#561
காம்பு பொன் செய்த பிச்சம் கதிர் மணி குடையொடு ஏந்தி
தாம் பலர் கவரி வீச கிண்கிணி ததும்ப நாக
பாம்பு பைத்து அனைய அல்குல் பல் கலை மிழற்ற ஏகி
ஆம்பல் நாறு அமுத செ வாய் அரசனை தொழுது நின்றாள்
#562
அடி கலம் அரற்ற ஏகி அரும் பெறல் தாதை பாதம்
முடி கலம் சொரிய சென்னி இறைஞ்சலும் முரிந்து மின்னு
கொடி பல நுடங்கி ஆங்கு தோழியர் குழாத்துள் நிற்ப
அடுத்தனன் புல்லி வேந்தன் ஆற்றுகிலாது சொன்னான்
#563
வலம்புரி ஈன்ற முத்தம் மண் மிசை அவர்கட்கு அல்லால்
வலம்பரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன
நலம் புரிந்து அனைய காதல் தேவி தன் நவையை நீங்க
குலம் புரிந்து அனைய குன்றிற்கு அதிபதி கூறினானே
#564
இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை
பொன் புனை யூகம் மந்தி பொறி மயிர் புறவம் பொன்னார்
மென் புனம் மருளின் நோக்கின் மான் இனம் ஆதி ஆக
தன் புறம் சூழ போகி தளிர் இயல் விமானம் சேர்ந்தாள்
#565
வெற்றி வேல் மணி முடி கொற்றவன் ஒரு மகள்
அற்றம் இல் பெரும் படை சுற்றமோடு இயங்கினாள்
#566
கண் அயல் களிப்பன அண்ணல் யானை ஆயிரம்
விண்ணகத்து இயங்கு தேர் எண் அவற்று இரட்டியே
#567
வில்படை விலக்குவ பொன் படை புரவியும்
முற்பட கிளந்த அவற்றின் நல் புடைய நாற்றியே
#568
பாறு உடை பருதி வேல் வீறு உடை இளையரும்
ஆறு இரட்டி ஆயிரர் கூறுதற்கு அரியரே
#569
மாகம் நீள் விசும்பு-இடை மேகம் நின்று இடித்தலின்
நாகம் நின்று அதிர்ந்து அவர்க்கு ஏகல் ஆவது இல்லையே
#570
வெம் சின வெகுளியில் குஞ்சரம் முழங்கலின்
மஞ்சு தம் வயிறு அழிந்து அஞ்சி நீர் உகுத்தவே
#571
வேழம் மும்மதத்தொடு தாழ் புயல் கலந்து உடன்
ஆழ் கடல் அகம் புறம் வீழ் தர விரைந்ததே
#572
மல்லல் மா கடல்-இடை கல் என கலம் கவிழ்த்து
அல்லல் உற்று அழுங்கிய செல்வன் உற்ற செப்புவாம்
#573
பால் நிற பனி வரை மேல் நிறம் மிகுத்தன
நீல் நிற நிழல் மணி தான் நிரைத்து அகம் எலாம்
#574
வஞ்சம் இல் மனத்தினான் நெஞ்சு அகம் புகன்று உக
விஞ்சை அம் பெருமகன் வஞ்சம் என்று உணர்த்தினான்
#575
நங்கை தன் நலத்தினால் மங்குல் வெள்ளி மால் வரை
எங்கும் மன்னர் ஈண்டினர் சங்கு விம்மு தானையார்
#576
ஈர் அலங்கல் ஏந்து வேல் ஆர் அலங்கல் மார்பினான்
கார் கலந்த கை கணி சீர் கலந்து செப்பினான்
#577
மாதர் வாழ்வு மண்ணதே ஆதலால் அலங்கல் அம்
தாது அவிழ்ந்த மார்ப நின் காதலன் கடல் உளான்
#578
என்று கூற என்னையே துன்று காதல் தோழனை
சென்று நீ கொணர்க என அன்று வந்த வண்ணமே
#579
துன்பம் உற்றவர்க்கு அலால் இன்பம் இல்லை ஆதலின்
அன்ப மற்று யான் நினை துன்பத்தால் தொடக்கினேன்
#580
பீழை செய்து பெற்றனன் வாழி என்று மா கடல்
ஆழ்வித்திட்ட அம்பியை தோழர் சுட்டி காட்டினான்
#581
தேன் தரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மால்
ஊன் தரு குருதி வேலான் உள் அகம் குளிர்ந்து விஞ்சை
கோன் தரு துன்பம் மற்று என் குலத்தொடு முடிக என்றான்
கான்று வில் வயிரம் வீசும் கன மணி குழையினானே
#582
தோடு அலர் தெரியலான் தன் தோழரை கண்டு காதல்
ஊடு அலர்ந்து எழுந்து பொங்க உருவ தார் குழைய புல்லி
பாடு இரும் பௌவம் முந்நீர் பட்டது பகர்தலோடும்
நாடகம் நாங்கள் உற்றது என்று கையெறிந்து நக்கார்
#583
கட்டு அழல் கதிய புண்ணில் கருவரை அருவி ஆரம்
பட்டது போன்று நாய்கன் பரிவு தீர்ந்து இனியர் சூழ
மட்டு அவிழ் கோதையோடு மண்கனை முழவம் மூதூர்
கட்டு அவிழ் தாரினான் தன் கடி மனை மகிழ்ந்து புக்கான்
#584
பெரு மனை குறுகலோடும் பிறை என இலங்கி தோன்றும்
திரு நுதல் மனைவி செம்பொன் கொடி என இறைஞ்சி நிற்ப
வரு முலை பொதிர்ப்ப வாங்கி வண்டு இனம் இரிய புல்லி
கதிர் நகை முறுவல் மாதர் கண் உறு கவலை தீர்த்தான்
#585
சந்திரகாந்தம் என்னும் தண் மணி நிலத்தின் அங்கண்
வெந்து எரி பசும்பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்தி
கந்து எரி மணியில் செய்த கன்னியா மாடம் எய்தி
பைம் தொடி பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாளே
#586
பாசிழை பரவை அல்குல் பசும் கதிர் கலாபம் வீங்க
காசு கண் பரிய வைகி கடன் தலை கழிந்த பின்னா
தூசு அணி பரவை அல்குல் துளங்கும் நுண் நுசுப்பின் பாவை
ஆசு அறு வரவும் தந்தை வலித்ததும் அறிய சொன்னான்
#587
வண்டு உண மலர்ந்த கோதை வாய் ஒருப்பட்டு நேர
தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு என செறிந்து வீங்கி
பெண்டிரும் ஆண்மை வெஃகி பேதுறு முலையினாளை
கண்டவர் மருள நாளை கடிவினை முடித்தும் என்றான்
#588
மால் வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியில் தந்த
பால் வரை மணியும் பொன்னும் பற்பல கொண்டு புக்கு
கால் பொரு கழலினானும் காவலன் கண்டு சொன்னான்
வேல் பொரு தானையானும் வேண்டுவ விதியின் நேர்ந்தான்
#589
மையல் மத யானை நிரை மன்னவன் மகிழ்ந்து ஆனா
பொய் இல் புகழ் நாய்கன் மத ஒளியினொடு போகி
நொய்தின் மனை எய்தி இது செய்க என நொடித்தான்
மொய் கொள் முலை பாய முகை விண்டு அலர்ந்த தாரான்
#590
நான கிடங்கு ஆடை நகர் நாகத்து-இடை நன் பொன்
வான் நக்கிடும் மாட்சியது ஓர் மண்டபம் செய்க என்ன
மீனத்து-இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம்
கானத்து-இடை வேங்கை எழ கண்ணினர்கள் அன்றே
#591
நட்பு பகை உட்கினொடு நன் பொன் விளை கழனி
பட்டினொடு பஞ்சு துகில் பைம்பொன்னொடு காணம்
அட்ட சுவை வல்சியினொடு யாதும் ஒழியாமல்
ஒட்டி பதினாயிரவர் உற்று முயல்கின்றார்
#592
வண்டு படு தேறல் நறவு வாய்விடொடு பருகி
கண்ட தொழில் கணிச்சிகளின் கயம்பட நன்கு இடித்து ஆங்கு
எண் திசையும் ஏற்ப படுத்து ஏற்றி அதன் மேலால்
கண்டு உருகு பொன்னின் நிலம் காமுறுவ புனைந்தார்
#593
பொன் செய் குடம் கோத்த அனைய எருத்தில் பொலி பொன் தூண்
மின் செய் பசும்பொன் நிலத்து வீறு பெற நாட்டி
மன் பவள மேல் நவின்று பளிக்கு அலகு பரப்பி
நன் செய் வெளி வேய்ந்து சுவர் தமனியத்தின் அமைத்தார்
#594
பாவை அவள் இருக்கும் இடம் பளிக்கு சுவர் இயற்றி
கோவை குளிர் முத்தின் இயல் கோதையொடு கொழும் பொன்
மாலையொடு மாலை தலை மணந்து வர நாற்றி
ஆலையம் இது ஓவியர்கட்கு என்ன அணி அமைத்தார்
#595
ஆய் இதழ் பொன் அலங்கல் கால் அசைப்ப ஒல்கி
வாய் அருகு வந்து ஒசித்து மறிய மழை மின் போல்
சேயவர்க்கும் தோன்றியது ஓர் திலகம் எனும் தகைத்தாய்
பாய திரை முத்த மணல் பரந்து பயின்று உளதே
#596
காமர் களிறும் பிடியும் கன்றும் கலை மானும்
தாமரைய வாவிகளும் புள்ளும் தகை நலத்தின்
ஏமுறுவ பாவையினொடு இயக்கி நிலை எழுதி
ஆம் ஓர் ஐயம் காண்பவர்க்கு இது அகம் புறம் இது எனவே
#597
உழந்தவரும் நோக்கி மகிழ் தூங்க ஒளி வாய்ந்து
விழுங்கும் என பறவைகளும் பிற விலங்கும் அடையா
முழங்கு திரை வேலியினின் இல்லை என மொய் கொண்டு
எழுந்து கொடி ஆடும் இது அ எழில் நகரின் இயல்பே
#598
ஓடும் முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்தே
மாடம் அது வார் சடைய வள்ளலையும் ஒக்கும்
நாடி முகம் நான்கு அதனின் நான்முகனை ஒக்கும்
நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும்
#599
கண்டவர்கள் காமுறலின் காமனையும் ஒக்கும்
கொண்டு உலகம் ஏத்தலின் அ கொற்றவனை ஒக்கும்
வண் தெரியல் ஆரம் முலை மாதார் மகிழ் அமுதம்
உண்டவர்கள் எவ்வகையர் அவ்வகையது ஒன்றே
#600
முகில் தலை மதியம் அன்ன முழு மணி மாடத்து இட்ட
அகில் புகை தவழ்ந்து வானத்து அரு விசும்பு அறுத்து நீண்டு
பகல் கதிர் பரப்பிற்று ஆகி பஞ்சவர் விமானம் முட்டி
புகற்கு அரும் அமரர் கற்பம் புக்கு அயா உயிர்த்தது அன்றே
 
#601
அரைசனது அருளினொடு அகல் மனை அவன் எய்தி
உரை செலல் வகையினொடு உலகம் அறிவுற
முரைசு அதிர் இமிழ் இசை முதுநகர் அறைக என
விரை செலல் இளையரை வியவரின் விடவே
#602
விடு கணை விசையொடு வெரு வரு தகையவர்
படு பணையவர் உறை பதி அது குறுகி
நெடு மதி அகடு உற நிழல் தவழ் கொடி உயர்
கடி நகர் இடி முரசு அறை-மின்அம் எனவே
#603
மங்கல அணியினர் மலர் கதிர் மதி அன
புங்கவன் அற நெறி பொலிவொடு மலிக என
அம் கதிர் மணி நகை அலமரும் முலை வளர்
கொங்கு அணி குழல் அவள் கோடணை அறைவாம்
#604
வான் தரு வளத்தது ஆகி வையகம் பிணியில் தீர்க
தேன் தரு கிளவியாரும் கற்பினில் திரிதல் இன்றி
ஊன்றுக ஊழி-தோறும் உலகின் உள் மாந்தர் எல்லாம்
ஈன்றவர் வயத்தர் ஆகி இல்லறம் புணர்க நாளும்
#605
தவம் புரிந்து அடங்கி நோற்கும் தத்துவர் தலைப்பட்டு ஓம்பி
பவம் பரிக எமக்கும் என்று பணிந்து அவர் உவப்ப ஈ-மின்
அவம் புரிந்து உடம்பு நீங்காது அரும் தவம் முயல்-மின் யாரும்
சிவம்புரி நெறியை சேர செப்பும் இ பொருளும் கேள்-மின்
#606
அம் மலர் அனிச்சத்து அம் போது அல்லியோடு அணியின் நொந்து
விம்முறு நுசுப்பு நைய வீற்றிருந்து அணங்கு சேர்ந்த
வெம் முலை பரவை அல்குல் மிடை மணி கலாபம் வேய் தோள்
செம் மலர் திருவின் சாயல் தே மொழி தத்தை என்பாள்
#607
மற்று அவள் தந்தை நாய்கன் வண் கை சீதத்தன் என்பான்
கொற்றவன் குலத்தின் வந்தான் கூறிய பொருள் இது ஆகும்
முன் தவம் உடையள் ஆகி மூரி நூல் கலைகள் எல்லாம்
கற்றவள் கணம் கொள் நல் யாழ் அனங்கனை கனிக்கும் நீராள்
#608
தீம் தொடை மகர வீணை தெளி விளி எடுப்பி தேற்றி
பூம் தொடி அரிவை தன்னில் புலம் மிகுத்து உடைய நம்பிக்கு
ஈந்திடும் இறைவர் ஆதி மூவகை குலத்து உளார்க்கும்
வேந்து அடு குருதி வேல் கண் விளங்கு இழை தாதை என்றான்
#609
மண்ணக மடந்தை ஆகம் மார்புற முயங்கி நின்ற
அண்ணலை ஆதி ஆக அரும் கடி நகரை வாழ்த்தி
விண்ணகம் முழக்கின் ஏய்ப்ப வீதி-தொறும் எருக்கி எங்கும்
கண் ஒளிர் கடிப்பின் ஓச்சி கடி முரசு அறைந்த-காலை
#610
வணக்கரும் தானை மன்னர் மத்தகம் பிளந்து வாய்த்த
நிண கொழும் குருதி வாள் கை நிலம் புடைபெயர்க்கும் ஆற்றல்
அணைப்ப அரும் களி கொள் வேழத்து அத்தினபுரத்து வேந்தன்
கணை கவின் அழித்த உண்கண் கன்னியை கருதி வந்தான்
#611
சிதைப்ப அரும் சீற்ற துப்பின் செய் கழல் நரல வீக்கி
மத களிறு அடர்த்து குன்றம் மணி வட்டின் உருட்டும் ஆற்றல்
கத களி ஒளிறு வை வேல் காம்பிலி காவல் மன்னன்
பதைப்பு அரும் பரும யானை பாலமாகுமரன் வந்தான்
#612
இலை பொர எழுதி அன்ன எரி மணி கடக முன்கை
சிலை பொர திரண்ட திண் தோள் சில் அரி சிலம்பினார்-தம்
முலை பொர உடைந்த தண் தார் மொய் மது துளிப்ப வந்தான்
மலை பொர அரிய மார்பின் வாரணவாசி மன்னன்
#613
கதிர் முடி மன்னர் சூழ்ந்து கைதொழுது இறைஞ்சி மாலை
திரு முடி வயிர வில்லால் சேவடி திளைப்ப ஏத்தி
அரு முடி அணிந்த கொற்றத்து அவந்தியன் முரசம் ஆர்ப்ப
ஒரு பிடி நுசுப்பினாளை உள்ளுபு வந்துவிட்டான்
#614
வெள் அணி அணிந்த ஞான்றே வேந்தர்-தம் முடியில் கொண்ட
கள் அணி மாலை மோந்து கனை கழல் இலங்கும் நோன் தாள்
புள் அணி கொடியினானின் போர் பல தொலைத்த ஆற்றல்
அள் இலை அணிந்த வை வேல் அயோத்தியர் இறையும் வந்தான்
#615
நீள் நிதி வணிகர் ஈறா நில மிசை அவர்கள் எல்லாம்
வீணையின் பொருது வெல்வான் விரைவினர் துவன்றி மூதூர்
கோணமும் மறுகும் எல்லாம் குச்சு என நிரைத்து அம் மாந்தர்
மாண் மது நசையின் மொய்த்த மதுகர ஈட்டம் ஒத்தார்
#616
உருக்கு அமைந்து எரியும் செம்பொன் ஓர் ஐவில் அகலம் ஆக
திரு குழல் மடந்தை செல்ல திரு நிலம் திருத்தி பின்னர்
விரை தகு நான நீரால் வெண் நிற பொடியை மாற்றி
பரப்பினர் படு வண்டு ஆர்ப்ப பல் மலர் பக்கம் எல்லாம்
#617
விலை வரம்பு அறிதல் இல்லா வெண் துகில் அடுத்து வீதி
அலர் தலை அனிச்சத்து அம் போது ஐம் முழ அகலம் ஆக
பல பட பரப்பி பாவை மெல் அடி பரிவு தீர
நில வரை தன் அனாரை நிதியினால் வறுமை செய்தான்
#618
மண்டலம் நிறைந்த மாசு இல் மதி புடை வியாழம் போன்று ஓர்
குண்டலம் இலங்க நின்ற கொடியினை குறுகி தோழி
விண்டு அலர் கோதை விம்மும் விரை குழல் தொழுது நீவி
பண்டு இயல் மணங்கள் எல்லாம் பரிவு அற பணிந்து சொன்னாள்
#619
எரி மணி நெற்றி வேய்ந்த இளம் பிறை இது-கொல் என்ன
புரி மணி சுமந்த பொன் பூண் பொறுக்கலா நுசுப்பில் பாவை
திரு மணி வீணை குன்றத்து இழிந்த தீம் பாலை நீத்தத்து
அரு முடி அரசர் ஆழ்வர் அம்மனை அறிவல் என்றாள்
#620
மண் இடம் மலிர எங்கும் மாந்தரும் வந்து தொக்கார்
ஒள் நிற உரோணி ஊர்ந்த ஒளி மதி ஒண் பொன் ஆட்சி
தெள் நிற விசும்பில் நின்ற தெளி மதி முகத்து நங்கை
கண்ணிய வீணை வாள் போர் கலாம் இன்று காண்டும் என்றே
#621
பசும் கதிர் கடவுள் யோகம் பழிப்பு அற நுனித்து வல்லான்
விசும்பு இவர் கடவுள் ஒப்பான் விரிச்சிகன் அறிந்து கூற
அசும்பு தேன் அலங்கல் ஐம்பால் அரிவையோடு ஆய்ந்து நாய்கன்
விசும்பு போல் மாந்தர் ஆர விழு நிதி சிதறினானே
#622
வாச நெய் வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்ப
பூசி வெள்ளிலோத்திரத்தின் பூம் பொருக்கு அரைத்த சாந்தின்
காசு அறு குவளை காமர் அக இதழ் பயில மட்டித்து
ஆசு அற திமிர்ந்து மாதர் அணி நலம் திகழ்வித்தாரே
#623
கங்கையின் களிற்றின் உச்சி கதிர் மணி குடத்தில் தந்த
மங்கல வாச நல் நீர் மணி நிறம் கழீஇயது ஒப்ப
நங்கையை நயப்ப எல்லாம் விரையொடு துவரும் சேர்த்தி
அங்கு அரவு அல்குலாளை ஆட்டினார் அரம்பை அன்னார்
#624
வெண் நிற மழையின் மின் போல் வெண் துகில் கலாபம் வீக்கி
கண் நிறம் முலையும் தோளும் சந்தன தேய்வை கொட்டி
தெள் நிற சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி
பண் நிற சுரும்பு சூழும் பனி முல்லை சூட்டு வேய்ந்தார்
#625
எரி மணி சுண்ணம் மின்னும் இரும் சிலை முத்தம் சேர்த்தி
திரு மணி முலையின் நெற்றி சிறுபுறம் செறிய தீட்டி
புரி மணி ஆகத்து ஐதா விரல் நுதி கொண்டு பூசி
விரி மணி வியப்ப மேனி ஒளிவிட்டு விளங்கிற்று அன்றே
#626
அரும் கயம் விசும்பில் பார்க்கும் அணி சிறு சிரலை அஞ்சி
இரும் கயம் துறந்து திங்கள் இடம் கொண்டு கிடந்த நீலம்
நெருங்கிய மணி வில் காப்ப நீண்டு உலாய் பிறழ்வ செம் கேழ்
கரும் கயல் அல்ல கண்ணே என கரி போக்கினாரே
#627
பொருந்து பொன் தூண்கள் நான்கின் பொலிந்து நூல் புலவர் செந்நா
வருந்தியும் புகழ்தல் ஆகா மரகத மணி செய் கூடத்து
இருந்து இளையார்கள் கோலம் இந்திரன் நிருமித்தால் போல்
திருந்த செய்து அதன் பின் நங்கை திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள்
#628
மண் கனை முழவம் விம்ம வரி வளை துவைப்ப வள் வார்
கண் கனைந்து இடியின் வெம்பி கடல் என முரசம் ஆர்ப்ப
விண் கனிந்து உருகு நீர்மை வெள் வளை தோளி போந்தாள்
பண் கனிந்து உருகு நல் யாழ் படை பொருது உடைக்கல் உற்றே
#629
பரந்து ஒளி உமிழும் பைம்பொன் கண்ணடி பதாகை தோட்டி
விரிந்து இருள் மேயும் செம்பொன் விளக்கு வெண் முரசு கும்பம்
சுரந்த வெண் மதியை சூன்று கதிர் கொண்டு தொகுத்த போலும்
பொருந்து பொன் கதிர் பெய் கற்றை புணர் கயல் போந்த அன்றே
#630
வென்றவன் அகலம் பூட்ட விளங்கு ஒளி மணி செய் செப்பின்
நின்று எரி பசும்பொன் மாலை போந்தது நெறியில் பின்னர்
ஒன்றிய மணி செய் நல் யாழ் போந்தன உருவம் மாலை
தின்று தேன் இசைகள் பாட திருநகர் சுடர அன்றே
#631
ஆரம் துயல்வர அம் துகில் சோர்தர
வீரம் பட கையை மெய்-வழி வீசி
தேரை நடப்பன போல் குறள் சிந்தினொடு
ஓரும் நடந்தன ஒண்_தொடி முன்னே
#632
வட்ட சூரையர் வார் முலை கச்சினர்
பட்டு வீக்கிய அல்குலர் பல் கணை
விட்ட தூணியர் வில்லினர் வாளினர்
ஒட்டி ஆயிரத்து ஓர் எண்மர் முன்னினார்
#633
வம்பு வீக்கி வரு முலை உள் கரந்து
அம்பின் நொய்யவர் ஆண் உடை தானையர்
பைம்பொன் கேடகம் வாளொடு பற்றுபு
செம்பொன் பாவையை சேவித்து முன்னினர்
#634
ஆணை ஆணை அகலும்-மின் நீர் என
வேணு கோலின் மிடைந்தவர் ஒற்றலின்
ஆணை இன்று எமதே என்று அணி நகர்
காணும் காதலில் கண் நெருக்கு உற்றவே
#635
கண்ணினோடு பிறந்தது காரிகை
வண்ணம் காண்டற்கு அன்றோ என்று வைது அவர்
விண்ணும் மண்ணும் விருந்து செய்தால் ஒப்ப
எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார்
#636
இனம் சேரா ஆகி இளையார் உயிரின் மேல் எண்ணம் கொள்வான்
புனம் சேர் கொடி முல்லை பூம் பவளத்துள் புக்கு பூத்த போலும்
வனம் சேர் துவர் செ வாய் வாள் எயிறும் கண் மலரும் வளையல் ஆகா
கனம் சேர் கதிர் முலையும் கண்டார்கள் வீட்டுலகம் காணார் போலும்
#637
மீன் சேர் குழாம் அனைய மேகலையும் வெம் முலையும் கூற்றம் கூற்றம்
ஊன் சேர் உயிர் உய்ய கொண்டு ஓடி போ-மின்கள் உரைத்தேம் என்று
கான் சேர் கமழ் கோதை கால் தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற
தேன் சேர் திருவடி மேல் கிண்கிணி பொன் ஆவதற்கே தக்கது என்பார்
#638
கள் வாய் பெயப்பட்ட மாலை கரும் குழல்கள் கண்டார் நைய
உள் வாய் பெயப்பட்ட வெம் மது செப்பு ஓர் இணை மெல் ஆகம் ஈன்ற
புள் வாய் மணி மழலை பொன் சிலம்பின் இ கொடியை ஈன்றாள் போலும்
கொள்வான் உலகுக்கு ஓர் கூற்று ஈன்றாள் அம்மவோ கொடியவாறே
#639
செய்ய தாமரை மேல் திருவே-கொலோ
வெய்ய நோக்கின் விச்சாதரியே-கொலோ
மையில் வானவர்-தம் மகளே-கொல் என்று
ஐயம் உற்று அலர் தார் மன்னர் கூறினார்
#640
வீணை வென்று இவள் வெம் முலை பூம் தடம்
ஆணை தோய்வது அல்லால் பிறன் வெளவுமேல்
கோணை போரில் குளிக்குவம் அன்று-எனின்
மாண நல் தவம் செய்குவம் என்மரும்
#641
குலிக செப்பு அன கொம்மை வரி முலை
நலியும் எம்மை என்பார் நல்ல கண்களால்
வலிய வாங்கி எய்தாள் எம்மை வாழ்கலேம்
மெலிய ஆவி விடுக்கும் மற்று என்மரும்
#642
ஊட்டி அன்ன உருக்கு அரக்கு ஆர் அடி
நீட்டி மெல் மலர் மேல் வந்து நின் நலம்
காட்டி எம்மை கொன்றாய் என கைதொழுது
ஓட்டை நெஞ்சினராய் உழல்வார்களும்
#643
திங்கள் மதி முகத்த சேலும் பவளமும் சிலையும் முத்தும்
கொங்கு உண் குழலாள் மெல் ஆகத்த கோங்கு அரும்பும் கொழிப்பில் பொன்னும்
அம் கை குழியா அரக்கு ஈத்த செம் தளிர் நெய் தோய்த்த போலும்
மங்கை மலர் அடியும் தாமரையே யாம் அறியேம் அணங்கே என்பார்
#644
பொன் மகரம் வாய் போழ்ந்த முத்த நூல் தோள் யாப்பில் பொலிந்த ஆறும்
மின் மகரம் கூத்தாடி வில்லிட்டு இரும் குழை கீழ் இலங்கும் ஆறும்
மன் மகர வெல் கொடியான் மால் கொள்ள கால் கொண்ட முலையினாளை
என் அரம்பை என்னாவாறு என்பார் இமைக்கும் கண் இவையோ என்பார்
#645
கோள் வயிர நீள் அருவி குன்று இவர்ந்த செம்_சுடர் போல் கொலை வேல் மன்னர்
நீள் வயிர வெண் மருப்பின் நீல களிற்றின் மேல் நிரை தார் பொங்க
தோள் வயிரம் தோன்ற தொழுவார் அழுது நைவார் தொக்கோர் கோடி
வாள் வயிரம் விற்கும் மட நோக்கி யார்-கொலோ பெறுவார் என்பார்
#646
பைம்பொன் நிமிர் கொடி பாவை வனப்பு என்னும் தளிரை ஈன்று
செம்பொன் மலர்ந்து இளையார் கண் என்னும் சீர் மணிவண்டு உழல சில் என்று
அம் பொன் சிலம்பு அரற்ற அன்னம் போல் மெல்லவே ஒதுங்கி அம் பூம்
செம்பொன் புரிசை அடைந்தாள் செந்தாமரை மேல் திருவோடு ஒப்பாள்
#647
பட்டு இயன்ற கண்ட திரை வளைத்து பல் மலர் நல் மாலை நாற்றி
விட்டு அகலா சாந்தின் நிலம் மெழுகி மெல் மலர்கள் சிதறி தூமம்
இட்டு இளையர் ஏத்த இமையார் மட மகள் போல் இருந்து நல் யாழ்
தொட்டு எழீஇ பண் எறிந்தாள் கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே
#648
புன் காஞ்சி தாது தன் புறம் புதைய கிளி என கண்டு
அன்பு கொள் மட பெடை அலமந்து ஆங்கு அகல்வதனை
என்பு உருகு குரல் அழைஇ இரும் சிறகர் குலைத்து உகுத்து
தன் பெடையை குயில் தழுவ தலைவந்தது இளவேனில்
#649
தண் காஞ்சி தாது ஆடி தன் நிறம் கரந்ததனை
கண்டு ஆனா மட பெடை கிளி என போய் கை அகல
நுண் தூவி இளம் சேவல் நோக்கோடு விளி பயிற்றி
தன் சிறகால் பெடை தழுவ தலைவந்தது இளவேனில்
#650
குறும் தாள் குயில் சேவல் கொழும் காஞ்சி தாது ஆடி
வெறுத்து ஆங்கே மட பெடை விழைவு அகன்று நடப்பதனை
மறுத்து ஆங்கே சிறகு உளர்ந்து மகிழ்வு ஆனா கொள தேற்றி
உறுப்பினால் அடி பணிய தலைவந்தது இளவேனில்
 
 
#651
தளை அவிழ் கோதை பாடி தான் அமர்ந்து இருப்ப தோழி
விளை மது கண்ணி வீணாபதி எனும் பேடி வேல் கண்
இளையவள் பாட வீரர் எழால் வகை தொடங்கல் அன்றேல்
வளையவள் எழாலின் மைந்தர் பாடுக வல்லை என்றாள்
#652
வேயே திரள் மென் தோள் வில்லே கொடும் புருவம்
வாயே வளர் பவளம் மாந்தளிரே மா மேனி
நோயே முலை சுமப்பது என்றார்க்கு அருகு இருந்தார்
ஏஏ இவள் ஒருத்தி பேடியோ என்றார்
எரி மணி பூண் மேகலையாள் பேடியோ என்றார்
#653
பலி கொண்டு பேராத பாசம் இவள் கண்
ஒலி கொண்டு உயிர் உண்ணும் கூற்றம் என்று எல்லே
கலி கொண்டு தேவர் முலை கரந்து வைத்தார்
இலை கொண்ட பூணினீர் என்று எழினி சேர்ந்தாள்
இலங்கு பொன் கிண்கிணியாள் நக்கு எழினி சேர்ந்தாள்
#654
நுண் துகில் அகல் அல்குல் நொசித்த வெம் முலை
உண்டு இவள் நுசுப்பு என உரைப்பின் அல்லது
கண்டு அறிகிலா இடை காமவல்லி யாழ்
கொண்டவர் குழாத்து-இடை கொடியின் ஒல்கினாள்
#655
பளிக்கு ஒளி மணி சுவர் எழினி பையவே
கிளி சொலின் இனியவர் நீக்க கிண்கிணி
ஒளிக்கும் இன்று ஆடவர் உயிர்கள் என்ன நொந்து
அளித்து அவை இரங்க சென்று அணையில் ஏறினான்
#656
உறை கழித்து இலங்கு வாள் உடற்றும் கண்ணினாள்
மறை ஒளி மணி சுவர் இடையிட்டு இத்தலை
இறை வளை யாழ் தழீஇ இருப்ப அத்தலை
கறை கெழு வேலினார் கண்ணி தீந்தவே
#657
சிலை தொழில் சிறு நுதல் தெய்வ பாவை போல்
கலை தொழில் பட எழீஇ பாடினாள் கனிந்து
இலை பொழில் குரங்கின ஈன்ற தூண் தளிர்
நிலத்து-இடை பறவை மெய்ம்மறந்து வீழ்ந்தவே
#658
கரும் கொடி புருவம் ஏறா கயல் நெடும் கண்ணும் ஆடா
அரும் கடி மிடறும் விம்மாது அணி மணி எயிறும் தோன்றா
இரும் கடல் பவள செ வாய் திறந்து இவள் பாடினாளோ
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார்
#659
இசை திறத்து அனங்கனே அனைய நீரினார்
வசைத்திறம் இலாதவர் வான் பொன் யாழ் எழீஇ
விசைத்து அவர் பாடலின் வெருவி புள் எலாம்
அசிப்ப போன்று இரு விசும்பு அடைந்த என்பவே
#660
மாதர் யாழ் தடவர வந்த மைந்தர் கை
கீதத்தான் மீண்டன கேள்வி கின்னரம்
போதர பாடினாள் புகுந்த போயின
தாது அலர் தாரினார் தாங்கள் பாடவே
#661
சுரும்பு எழுந்து இருந்து உணும் தொங்கல் வார் குழல்
அரும் பெறல் அவட்கு இசை அரசர் தோற்ற பின்
நரம்பு உறு தெள் விளி நவின்ற நான்மறை
வரம் பெறு நெறியவர் மலைதல் மேயினார்
#662
திரு மலர் கமலத்து அம் கண் தேனின் முரல்வது ஒப்ப
விரி மலர் கோதை பாட எழால் வகை வீரர் தோற்றார்
எரி மலர் பவள செம் வாய் இன் நரம்பு உளர மைந்தர்
புரி நரம்பு இசை கொள் பாடல் உடைந்தனர் பொன் அனாட்கே
#663
வால் அரக்கு எறிந்த காந்தள் மணி அரும்பு அனைய ஆகி
கோல் பொர சிவந்த கோல குவி விரல் மடந்தை வீணை
நூல் பொர புகுந்த நுண் நூல் வணிகரும் தொலைந்து மாதோ
கால் பொர கரிந்த காமர் பங்கய பழனம் ஒத்தார்
#664
தேன் உயர் மகரவீணை தீம் சுவை இவளை வெல்வான்
வான் உயர் மதுகை வாட்டும் வார் சிலை காமன் ஆகும்
ஊன் உயர் நுதி கொள் வேலீர் ஒழிக ஈங்கு இல்லை என்றான்
கான் உயர் அலங்கல் மாலை கட்டியங்காரன் அன்றே
#665
மறு முயற்கு இவர்ந்த வேக மாசுணம் அடைய பட்ட
நிறை மதி போன்று மன்னர் ஒளி குறைந்து உருகி நைய
அறு பகல் கழிந்த பின்றை அ நகர்க்கு ஆதி நாய்கன்
சிறுவன் ஓர் சிங்க ஏற்றை சீவகசாமி என்பான்
#666
தம்பியும் தோழன்மாரும் தானும் மற்று எண்ணி சூழ்ந்து
வெம்பிய வீணை போருள் செல்குவம் யாமும் முன்னே
தும்பு அற புத்திசேனன் சொல் இது குரவற்கு என்ன
கந்துகற்கு அவனும் சொன்னான் அவன் இது விளம்பினானே
#667
ஐயனுக்கு அமைந்த நீரார் அறுபத்து நால்வர் அம் பொன்
வையகத்து அமிர்தம் அன்னார் வாக்கு அமை பாவை ஒப்பார்
எய்திய இளமை மிக்கார் இயைந்தனர் என்று பின்னும்
கை அமை சிலையினாற்கு கந்துகன் இதுவும் கூறும்
#668
மறைவல்லாற்கு உரைக்கும் போழ்தில் கோயிலுள் நின்று மாலை
பிறை வெல்லும் நுதலினாள் ஓர் பெண்_கொடி வந்து கூந்தல்
உறை செல நீக்கி பைம் தாள் ஒண் மணி குவளை நீட்ட
நறை வெல்லும் நாக மாலை நோக்கொடு பூ கொண்டானே
#669
நல்லவள் நோக்கம் நாய்கன் தேர்ந்து பூம் குவளை போதின்
அல்லியுள் கிடந்த ஓலை தாள் அது சலாகை ஆதல்
சொல்லும் என்றும் ஆய்ந்து கொண்டு துகிலிகை கணக்கு நோக்கி
வல்லிதின் சலாகை சுற்றி ஓலையை வாசிக்கின்றான்
#670
நம்பனை நகரின் நீக்கி சேமத்தால் வைக்க தீயுள்
செம்பொன் போல் பெரிதும் சேந்து செகுத்திடல் உற்று நின்றான்
வெம்பினான் காரி உண்டி கடவுளின் கனன்று வேந்தன்
இம்பர் இன்று எனக்கு சொன்னான் இது பட்டது அடிகள் என்றான்
#671
ஓலையை அவட்கு நீட்டி ஒண் மணி குழையும் முத்தும்
மாலையும் படுசொல் ஒற்றி வம் என மறைய நல்கி
வேலை நெய் பெய்த திங்கள் விரவிய பெயரினாற்கு
மேலை நாள் பட்டது ஒன்று விளம்புவல் கேள் இது என்றான்
#672
கடி அரங்கு அணிந்து மூதூர் கடல் கிளர்ந்தது அனையது ஒப்ப
நடை அறி புலவர் ஈண்டி நாடகம் நயந்து காண்பான்
குடை உடையவனொடு எண்ணி சீவகன் கொணர்-மின் என்ன
தொடையல் சூழ் வேலினானும் தோழரும் காண சென்றார்
#673
நிலம் அறிந்து அணிக ஐயன் சீவகன் நெறியின் என்ன
நல் நுதல் பட்டம் கட்டி நகை முடி கோதை சூட்டி
அலர் முலை குருதி சாந்தும் ஆரமும் பூணும் சேர்த்தி
குலவிய குருதி பட்டின் கலை நலம் கொளுத்தி இட்டான்
#674
திருவிலே சொரிந்து மின்னும் குண்டலம் செம்பொன் ஓலை
உருவு கொள் மதியம் அன்ன ஒளி முகம் சுடர ஆக்கி
பரி அகம் சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி
அரிவையை அரம்பை நாண அணிந்தனன் அனங்கன் அன்னான்
#675
தோல் பொலி முழவும் துளை பயில் குழலும் ஏங்க
காற்கு ஒசி கொம்பு போல போந்து கை தலங்கள் காட்டி
மேல் பட வெருவி நோக்கி தானையை விட்டிட்டு ஒல்கி
தோற்றினாள் முகம் செய் கோலம் துளக்கினாள் மனத்தை எல்லாம்
#676
தெள் மட்டு துவலை மாலை தேனொடு துளிப்ப திங்கள்
உள் நட்ட குவளை போலும் உருவ கண் வெருவி ஆட
விண் விட்டு கடவுள் வீழ நுடங்கின புருவம் நெஞ்சம்
பண் விட்டது இருந்து காணும் பல் மணி கழலினார்க்கே
#677
செம் கதிர் சிலம்பு செம்பொன் கிண்கிணி சிலம்ப கோதை
பொங்க பொன் ஓலை வட்டம் பொழிந்து மின் உகுப்ப போர்த்த
குங்கும சாந்து வேய்ந்து குண்டலம் திருவில் வீச
அம் கதிர் ஆரம் மின்ன அரிவை கூத்து ஆடுகின்றாள்
#678
மருங்குலும் ஒன்று தாய்க்கு ஒரு மகள் ஆதல் ஓர்ந்தும்
இரும்பினால் இயன்ற நெஞ்சத்து இவர்களோ இருந்து காண்க
அரங்கின் மேல் இவளை தந்த தாய்-கொலோ கயத்தி அன்றேல்
சுரும்பு சூழ் கண்ணி சூட்டி அவர்-கொலோ கயவர் சொல்லீர்
#679
அகிலார் புகை அலால் சாந்து அணியாள் பூச்சார செல்லாள் செல்லின்
பகலே பகை வளர்த்த பாவை சிறு நுசுப்பு ஒன்று உண்டே பாவம்
இகல் ஏந்து இள முலை மேல் சாந்து எழுதி முத்து அணிந்து பூவும் சூட்ட
முகில் ஏந்து மின் மருங்குல் மொய் குழல் தாய் இது கண்டும் உளளே பாவம்
#680
தேம் தாமம் செம் பவள தாமம் செம்பொன் எரி தாமம் மின்னு திரள் தாமங்கள்
தாம்தாம் தாம் என தாழ்ந்த பொன் மேகலை தாம அரங்கின் மேல் தாது ஆர் முல்லை
பூம் தாம கொம்பு ஆட கண்டார் எல்லாம் புன மயிலே அன்னமே பொன்னம் கொம்பே
ஆம் தாமரை மகளே அல்லள் ஆயின் அமரர் மகள் என்பாரும் ஆயினாரே
#681
கொடியார் குளிர் முத்தம் சூட்டி வைத்தார் கொல்வானே குங்கும சேறு ஆட்டினார்கள்
அடி சார்ந்து வாழ்வாரை அம் முலைகள்-தாமே அழித்திடுமேல் தாமே அழித்திடுக என்று
ஒடியாத மாத்திரையால் உண்டே நுசுப்பு இருந்து காண்பாரும் உளரே செம் கண்
நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த நிழல் மதியோ வாள் முகமோ நோக்கி காணீர்
#682
நெய் பருகி நீண்ட இருள் கற்றை போலும் குழல் கற்றை கண்டு நிறை
கலங்குவார் மை பருகி நீண்டு மதர்த்த உண்கண் வாள் ஏறு பெற்று நைவார் மா நாகத்தின்
பை பருகு அல்குல் இலயம் பற்றி பதன் அமைத்த பாவை நிருத்தம் நோக்கி
மெய் உருகி கண் உருகி நெஞ்சு உருகி காம வெயில் வெண்ணெய் பாவை போல் மெலிகின்றாரே
#683
ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின் மேல் அனங்க மாலை
ஆடினாள் முறுவல் என்னும் தோழியை ஐயன் காண
ஓடு அரி நெடும் கண் என்னும் ஓலையை எழுதிவிட்டாள்
வாடியவாறு நோயும் உரைத்து வார் கொடி அனாளே
#684
வள மலர் அணியப்பெற்றேன் வால் வளை திருத்தப்பெற்றேன்
களன் என கரையும் அல்குல் கையினால் தீண்டப்பெற்றேன்
இள முலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன்
உள மெலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன்
#685
என்றவள் அரசன் தன்னை நோக்கலள் இவன்-கண் ஆர்வம்
சென்றமை குறிப்பில் தேறி கூத்து எலாம் இறந்த பின்றை
நின்றது மனத்தில் செற்றம் நீங்கி தன் கோயில் புக்கான்
மன்றல் மடந்தை-தன்னை வலிதில் கொண்டு ஒலி கொள் தாரான்
#686
தேன் உடைந்து ஒழுகும் செவ்வி தாமரை போது புல்லி
ஊன் உடை உருவ காக்கை இதழ் உக குடைந்திட்ட ஆங்கு
கான் உடை மாலை தன்னை கட்டியங்காரன் சூழ்ந்து
தான் உடை முல்லை எல்லாம் தாது உக பறித்திட்டானே
#687
கலையினில் கன்னி நீக்கி தாமரை கண்கள் தம்மால்
முலையினில் எழுதி செ வாய் பயந்த தேன் பருகி முள்கும்
சிலை வலாய் புல்லு நம்பி சீவகசாமியோ என்று
அலை கடல் புலம்பின் ஓவாது அரற்றுமால் அணங்கின் அன்னாள்
#688
பிறன் நலம் அரற்ற கேட்டும் பீடினால் கனிந்த காம
நறு மலர் அணிந்த மாலை நாற்றக்கு ஓர் நான்கு காதம்
உற நடந்து அறிதல் இல்லான் ஒண்_தொடிக்கு உருகி பின்னும்
திறன் அல தமர்க்கு செப்பும் தீ உமிழ்ந்து இலங்கும் வேலான்
#689
விலங்கல் அன்ன வேக வேழம் நான்கு வெல்லும் ஆற்றலான்
கலம் கலந்து இலங்கும் மார்பின் கந்துகன் மகன் என
நலம் கலந்து உரைக்குமால் இ நல் நகர்க்கு மன்னனோ
உலம் கலந்த தோளினீர் நீர் உரை-மின் நீவிர் என்னவே
#690
மட்டு அவிழ்ந்த தாரினான் இ மாநகர்க்குள் ஆயிரர்
தொட்டு எடுக்கலா உலம் ஓர் தோளின் ஏந்தி ஆடினான்
ஒட்டி நாகம் ஓர் இரண்டு எடுக்கலாத கல்லினை
விட்டு அலர்ந்த போது போல ஏந்தல் ஏந்தி நீக்கினான்
#691
வெம் சிலையின் வேடர் வெள்ளம் அப்பு மாரி தூவலின்
எஞ்சல் இன்றி நம் படை இரு முறையும் உடைந்த பின்
மஞ்சு சூழ் கணை மழை பொழிந்து மா நிரை பெயர்த்து
அம்_சில்_ஓதியார் புனைந்த செம் சொல் மாலை சூடினான்
#692
தீம் பயறு இயன்ற சோறு செப்பின் ஆயிரம் மிடா
நீங்கலா நறு நெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம்
ஏந்து வித்து நாம் மிசைய வந்து தந்து நீக்கினான்
ஆங்கு நாம் பசித்து அசைந்த-காலை அன்று அ அண்ணலே
#693
இன்னன் என்ன இன்புறான் இழந்தனன் அன்ன அரசு என
என்னை வெளவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான்
அன்னதால் அரில் தப அறிந்து கூத்தி கூறினாள்
இன்னதால் படை அமைத்து எழு-மின் என்று இயம்பினான்
#694
தாதை தான் உரைத்த எல்லாம் தன் உயிர் தோழன் கூற
கோதை முத்து அணிந்த மார்பன் கூர் எயிறு இலங்க நக்கு ஆங்கு
ஏதம் ஒன்று இல்லை சேறும் என்றலும் இலங்கு வாள் கை
போது உலாம் கண்ணி மைந்தர் போர் புலி குழாத்தின் சூழ்ந்தார்
#695
கண் நுதல் கடவுள் சீற கனல் எரி குளித்த காமன்
மண் மிசை தோன்றி அன்ன வகை நலம் உடைய காளை
தெள் மணி ஆர மார்பன் திரு நுதல் மகளிர் நெஞ்சத்து
உள் நிறை பருகும் வண் தார் உரு அமை திருவின் மிக்கான்
#696
கரு நெறி பயின்ற குஞ்சி காழ் அகில் கமழ ஊட்டி
வரி நிற வண்ண மாலை வலம்பட மிலைச்சி வாள் ஆர்
திரு நிற முகத்திற்கு ஏற்ப செம்பொன் ஓர் ஓலை சேர்த்தி
எரி நிற குழை ஓர் காதிற்கு இருள் அற சுடர வைத்தான்
#697
தென் வரை பொதியில் தந்த சந்தன தேய்வை தேம் கொள்
மன் வரை அகலத்து அப்பி வலம்புரி ஆரம் தாங்கி
மின் விரித்து அனையது ஒத்து விலை வரம்பு அறியல் ஆகா
இன் நுரை கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான்
#698
இரும்பு அற கழுவி எஃகின் இருள் அற வடிக்க பட்ட
அரும் பெறல் சுரிகை அம் பூம் கச்சு-இடை கோத்து வாங்கி
பெரும் தகை குருசில் கொண்டு பெரு வலம் சுடர வீக்கி
திருந்து இழை மகளிர் வெஃகும் தே இளம் குமரன் ஒத்தான்
#699
வரை விழித்து இமைப்பது ஒக்கும் வாள் ஒளி ஆர மார்பின்
விரை வழித்து இளையர் எல்லாம் விழு மணி கலங்கள் தாங்கி
நுரை கிழித்து அனைய நொய்ம்மை நுண் துகில் மருங்குல் சேர்த்தி
உரை கிழித்து உணரும் ஒப்பின் ஓவிய பாவை ஒத்தார்
#700
அரக்கு நீர் எறியப்பட்ட அஞ்சன குன்றம் அன்ன
திரு கிளர் ஓடை சூழ்ந்த செம் புகர் நெற்றித்து ஆகி
உருக்கி ஊன் உண்ணும் வேகத்து உறு புலி அனைய நாகம்
அருக்கன் ஓர் குன்றம் சேர்ந்த ஆங்கு அண்ணல் தான் ஏறினானே
 
மேல்
 
#701
விடு கணை விசையின் வெய்ய விளங்கு ஒளி இவுளி திண் தேர்
கடு நடை கவரி நெற்றி கால் இயல் புரவி காய்ந்து
வடி நுனை ஒளிறும் மாலை வாள்படை மறவர் சூழ
அடு திரை சங்கம் ஆர்ப்ப அணி நகர் முன்னினானே
#702
தோற்றனள் மடந்தை நல் யாழ் தோன்றலுக்கு என்று நிற்பார்
நோற்றனள் நங்கை மைந்தன் இள நலம் நுகர்தற்கு என்பார்
கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன
ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணும் ஆயினாரே
#703
சுறா நிற கொடும் குழை சுழன்று எருத்து அலைத்தர
அறா மலர் தெரியலான் அழன்று நோக்கி ஐ என
பொறா மன பொலிவு எனும் மணி கை மத்திகையினால்
அறாவி வந்து தோன்றினான் அனங்கன் அன்ன அண்ணலே
#704
குனிகொள் பாக வெண் மதி கூர் இரும்பு தான் உறீஇ
பனி கொள் மால் வரை என படு மத களிறு இரீஇ
இனிது இழிந்து இளையர் ஏத்த இன் அகில் கொழும் புகை
முனிய உண்ட குஞ்சியான் முரண் கொள் மாடம் முன்னினான்
#705
புதிதின் இட்ட பூம் தவிசின் உச்சி மேல் நடந்து அவண்
புதிதின் இட்ட மெல்லணை பொலிந்த வண்ணம் போகு உயர்
மதி-அது ஏறி வெம் சுடர் வெம்மை நீங்க மன்னிய
உதயம் என்னும் மால் வரை உவந்து இருந்தது ஒத்ததே
#706
முருகு விம்மு கோதையார் மொய் அலங்கல் வண்டு போல்
பருகுவான் இவள் நலம் பாரித்திட்ட இ நகர்
உருகும் ஐங்கணை ஒழித்து உருவின் ஐய காமனார்
கருதி வந்தது என்று தம் கண்கள் கொண்டு நோக்கினார்
#707
முனை திறத்து மிக்க சீர் முனைவர் தம் முனைவனார்
வனப்பு மிக்கவர்களின் வனப்பு மிக்கு இனியனா
நினைத்து இருந்து இயற்றிய நிருமித மகன் இவன்
கனைத்து வண்டு உளர்ந்த தார் காளை சீவகன்-அரோ
#708
பொன்னை விட்ட சாயலாள் புணர் முலை தடத்தினால்
மின்னை விட்டு இலங்கு பூண் விரை செய் மார்பம் ஓலையா
என்னை பட்டவாறு-அரோ எழுதி நங்கை ஆட்கொள்வான்
மன்னும் வந்து பட்டனன் மணி செய் வீணை வாரியே
#709
இனைய கூறி மற்று அவள் தோழிமாரும் இன்புற
வனையலாம் படித்து அலா வடிவிற்கு எல்லை ஆகிய
கனை வண்டு ஓதி கை தொழும் கடவுள் கண்ணில் கண்டவர்
எனையது எனையது எய்தினார் அனையது அனையது ஆயினார்
#710
குட்ட நீர் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றா
கட்டழகு அமைந்த கண்ணாள் நிறை எனும் சிறையை கைபோய்
இட்ட நாண் வேலி உந்தி கடல் என எழுந்த வேட்கை
விட்டு எரி கொளுவ நின்றாள் எரி உறு மெழுகின் நின்றாள்
#711
நலத்தை மத்து ஆக நாட்டி நல் வலி இளமை வாரா
குல பிறப்பு என்னும் கையால் கோல பாசம் கொளுத்தி
கலக்கி இன் காமம் பொங்க கடைந்திடுகின்ற காளை
இலை பொலி அலங்கல் மார்பம் இயைவது என்று ஆகும்-கொல்லோ
#712
தீம் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன்
நாம் கணால் பருகியிட்டு நலன் உணப்பட்ட நம்பி
பூம் குழல் மகளிர் முன்னர் புலம்பல் நீ நெஞ்சே என்றாள்
வீங்கிய காமம் வென்றார் விளைத்த இன்பத்தோடு ஒப்பாள்
#713
கண் எனும் வலையின் உள்ளான் கை அகப்பட்டு இருந்தான்
பெண் எனும் உழலை பாயும் பெரு வனப்பு உடைய நம்பி
எண்ணின் மற்று யாவன்-ஆம்-கொல் என் இதில் படுத்த ஏந்தல்
ஒள் நிற உருவ செம் தீ உருவுகொண்ட அனைய வேலான்
#714
யாவனே யானும் ஆக அரு நிறை கதவம் நீக்கி
காவல் என் நெஞ்சம் என்னும் கன்னிமாடம் புகுந்து
நோவ என் உள்ளம் யாத்தாய் நின்னையும் மாலையாலே
தேவரின் செறிய யாப்பன் சிறிது இடைப்படுக என்றான்
#715
கழித்த வேல் ஏறு பெற்ற கடத்து-இடை பிணையின் மாழ்கி
விழித்து வெய்துயிர்த்து மெல்ல நடுங்கி தன் தோழி கூந்தல்
இழுக்கி வண்டு இரிய சேர்ந்து ஓர் கொடி புல்லும் கொடியின் புல்லி
எழில் தகை மார்பற்கு இன் யாழ் இது உய்த்து கொடுமோ என்றாள்
#716
தடம் கணாள் பணியினால் தான் அ வீணை ஒன்றினை
நெடும் கணால் எழினியை நீக்கி உய்த்து நீட்டினாள்
மடங்கல் அன்ன மொய்ம்பினான் வருக என்று கொண்டு தன்
கிடந்த ஞானத்து எல்லையை கிளக்கல் உற்று நோக்கினான்
#717
சுரந்து வானம் சூல் முதிர்ந்து மெய் நொந்து ஈன்ற துளியே போல்
பரந்த கேள்வி துறைபோய பைம் தார் மார்பன் பசும்பொன் யாழ்
நரம்பு தேன் ஆர்த்து என தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை
இருந்த முலையாள் நின்றாளை நோக்கி இசையின் இது சொன்னான்
#718
நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இது போக
வார் நின்று இளகும் முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க
ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒண் பொன் உகு கொடியே
சீர் சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான்
#719
கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காம தீயால் வெந்தவர் போல்
கொல்லை உழவர் சுடப்பட்டு குரங்கி வெந்தது இது களிறு
புல்ல முரிந்தது என போக்கி தூமம் ஆர்ந்த துகில் உறையுள்
நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான்
#720
இரு நில மடந்தை ஈன்றது இரு விசும்பு என்னும் கைத்தாய்
திரு நலம் மின்னு பொன் ஞாண் முகில் முலை மாரி தீம் பால்
ஒரு நலம் கவின் ஊட்ட உண்டு நோய் நான்கும் நீங்கி
அரு நலம் கவினி வாள் வாய் அரிந்து இது வந்தது என்றான்
#721
தீம் தொடை நரம்பின் தீமை சிறிது அலா பொழுதும் ஓதி
பூம் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்ட
தேம் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன்
வாங்குபு நபுலன் கையுள் வார் புரி நரம்பு கொண்டான்
#722
பணிவரும் பைம்பொன் பத்தர் பல் வினை பவள ஆணி
மணி கடை மருப்பின் வாளார் மாடக வயிர தீம் தேன்
அணிபெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல் யாழ்
கணி புகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கலுற்றான்
#723
குரல் குரல் ஆக பண்ணி கோதை தாழ் குஞ்சியான் தன்
விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு என தெரிதல் தேற்றார்
சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும்
உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇ பாடுகின்றான்
#724
கன்னி நாகம் கலங்க மலங்கி
மின்னும் இரங்கும் மழை என்கோ யான்
மின்னும் மழையின் மெலியும் அரிவை
பொன் நாண் பொருத முலை என்கோ யான்
#725
கருவி வானம் கான்ற புயலின்
அருவி அரற்றும் மலை என்கோ யான்
அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும்
மருவார் சாயல் மனம் என்கோ யான்
#726
வானம் மீன் அரும்பி மலர்ந்து
கானம் பூத்த கார் என்கோ யான்
கானம் பூத்த கார் கண்டு அழுங்கும்
தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான்
#727
அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணி விரல் தவழ்ந்தவாறும்
பண்ணிய இலயம் பற்றி பாடிய வனப்பும் நோக்கி
விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார்
மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார்
#728
வீழ் மணி வண்டு பாய்ந்து மிதித்திட கிழிந்த மாலை
சூழ் மணி கோட்டு வீணை சுகிர் புரி நரம்பு நம்பி
ஊழ் மணி மிடறும் ஒன்றாய் பணி செய்தவாறு நோக்கி
தாழ் மணி தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே
#729
விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த
மண்ணவர் மகிழ வான் கண் பறவை மெய்ம்மறந்து சோர
அண்ணல்தான் அனங்கன் நாண பாடினான் அரசர் எல்லாம்
பண் அமைத்து எழுதப்பட்ட பாவை போல் ஆயினாரே
#730
பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும்
திருந்து தார் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி
விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான்
இருந்தாள் இளம் மயில் போல் ஏந்து இலை வேல் கண்ணாள்
#731
கோதை புறம் தாழ குண்டலமும் பொன் தோடும்
காதின் ஒளிர்ந்து இலங்க காமர் நுதல் வியர்ப்ப
மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுர
கீதம் கிடை இலாள் பாட தொடங்கினாள்
#732
இலையார் எரி மணி பூண் ஏந்து முலையும்
சிலையார் திரு நுதலும் செம் பசலை மூழ்க
மலையார் இலங்கு அருவி வாள் போல மின்னும்
கலையார் தீம் சொல்லினாய் காணார்-கொல் கேள்வர்
#733
பிறையார் திரு நுதலும் பேர் அமர் உண்கண்ணும்
பொறையார் வன முலையும் பூம் பசலை மூழ்க
நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும்
கறை வேல் உண்கண்ணினாய் காணார்-கொல் கேள்வர்
#734
அரும்பு ஏர் வன முலையும் ஆடு அமை மென் தோளும்
திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க
நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும்
கரும்பார் தீம் சொல்லினாய் காணார்-கால் கேள்வர்
#735
பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளை கை
மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா
விண் நின்று இயங்கி மிடறு நடுநடுங்கி
எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே
#736
மையார் நெடும் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து
நையா நடுநடுங்கா நனி நாணம் மீது ஊரா
பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன் மாலை
பெய் பூம் கழலாற்கு பெண் அரசி ஏந்தினளே
#737
மெல் என்று சிலம்பு அரற்ற மேகலைகள் மின் உமிழ
நல்ல பெடை அன்னம் நாண அடி ஒதுங்கி
ஒல்லென் உயர் தவமே செய்ம்-மின் உலகத்தீர்
எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே
#738
நாகத்து படம் கொள் அல்குல் நலம் கிளர் செம்பொன் மாலை
மேகத்து பிறந்தது ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல்
ஆகத்து பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள்
போகத்து நெறியை காட்டும் பூமகள் புணர்ந்தது ஒப்பாள்
#739
செம் மலர் அடியும் நோக்கி திரு மணி அல்குல் நோக்கி
வெம் முலை தடமும் நோக்கி விரி மதி முகமும் நோக்கி
விம்மித பட்டு-மாதோ விழுங்குவான் போல ஆகி
மை மலர் தடம் கண் நங்கை மரை மலர் தேவி என்றான்
#740
கோதையும் தோடும் மின்ன குண்டலம் திருவில் வீச
மாதரம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்ப
காதல் அம் தோழிமார்கள் கரும் கயல் கண்ணினாளை
ஏதம் ஒன்று இன்றி பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார்
#741
வெள் இலை வேல் கணாளை சீவகன் வீணை வென்றான்
ஒள்ளியன் என்று மாந்தர் உவா கடல் மெலிய ஆர்ப்ப
கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன்
உள்ளகம் புழுங்கி-மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம்
#742
வட திசை குன்றம் அன்ன வான் குலம் மாசு செய்தீர்
விடு கதிர் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர்
வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல்
முடி துறந்து அளியிர் போகி முனிவனம் புகும்-மின் என்றான்
#743
மல்லு பூத்து அகன்ற மார்பீர் புகழ் எனும் போர்வை போர்த்து
செல்வ பூமகளும் நாளை அவன் உழை செல்லும் என்றான்
முல்லை பூம் பந்து தன்னை மும்மத களிற்று வேலி
கொல்லை பூம் குன்றம் செய்தீர் குங்கும குழங்கல் மாலை
#744
திருமகள் இவளை சேர்ந்தான் தெண் திரை ஆடை வேலி
இரு நில மகட்கும் செம்பொன் நேமிக்கும் இறைவன் ஆகும்
செரு நிலத்து இவனை வென்றீர் திருவினுக்கு உரியீர் என்றான்
கரு மனம் நச்சு வெம் சொல் கட்டியங்காரன் அன்றே
#745
அனிச்ச பூம் கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சி
பனிக்கும் நுண் நுசுப்பின் பாவை ஒருத்தி நாம் பலர் என்று எண்ணி
துனித்து நீர் துளங்கல் வேண்டாம் தூ மணி சிவிறி நீர் தூய்
தனி கயத்து உழக்கி வென்றீர் தையலை சார்-மின் என்றான்
#746
வெம் திறலாளன் கூற வேகமோடு உரறி மன்னர்
பந்து அணி விரலினாள் தன் படா முலை போகம் வேண்டி
கந்து என திரண்ட திண் தோள் கந்துகன் சிறுவன் காயும்
ஐம் தலை அரவின் சீற்றத்து ஆர் அழல் குளிக்கலுற்றார்
#747
பண்ணியல் யானை மேலான் பதுமுகன் பரவை தானை
கண்ணியது உணர்ந்து கல்லா கட்டியங்காரன் நெஞ்சில்
எண்ணியது எண்ணி மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில்
தண்ணிய சிறிய வெய்ய தழல் சொலால் சாற்றுகின்றான்
#748
இசையினில் இவட்கு தோற்றாம் யானையால் வேறும் என்னின்
இசைவது ஒன்று அன்று கண்டீர் இதனை யான் இரந்து சொன்னேன்
வசை உடைத்து அரசர்க்கு எல்லாம் வழிமுறை வந்தவாறே
திசை முகம் படர்க வல்லே தீ தொட்டால் சுடுவது அன்றே
#749
தோளினால் மிடைந்து புல்லும் தொண்டை வாய் அமிர்தம் வேட்டோர்
வாளினால் மலைந்து கொள்ளின் வாழ்க நும் கலையும்-மாதோ
கோள் உலாம் சிங்கம் அன்னான் கொடியினை எய்தப்பெற்றீர்
தாளினால் நொய்யீராகி தரணி-தாம் விடும்-மின் என்றான்
#750
நாறும் மும்மதத்தினாலே நாகத்தை இரிக்கும் நாகம்
ஆறிய சினத்தது அன்றி அதிங்கத்தின் கவளம் கொண்டால்
வேறு நீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்கல் ஆகாது
ஊறி தேன் ஒழுகும் கோதை நம்பிக்கும் அன்னள் என்றான்
 
#751
இள வள நாகு புல்லி இனத்து-இடை ஏறு நின்றால்
உள வளம் கருதி ஊக்கல் உழப்பு எருது உடையது ஆமே
தள வள முகை கொள் பல்லாள் சீவகன் தழுவி நின்றால்
கொள உளைந்து எழுவது அல்லால் கூடுதல் நுங்கட்கு ஆமோ
#752
எழுந்து விண் படரும் சிங்கம் பெட்டை மேல் இவர்ந்து நின்றால்
மழுங்க மேல் சென்று பாய்தல் மற புலி-தனக்கும் ஆமோ
கொழும் கயல் கண்ணினாளை சீவககுமரன் சூழ்ந்தால்
அழுங்க சென்று அணைதல் பேய்காள் அநங்கற்கும் ஆவது உண்டோ
#753
மத்திரிப்பு உடைய நாகம் வாய் நிறை கடாத்தது ஆகி
உத்தம பிடி-கண் நின்றால் உடற்றுதல் களபக்கு ஆமே
பத்தினி பாவை நம்பி சீவகன்-பாலள் ஆனால்
அத்திறம் கருதி ஊக்கல் அரசிர்காள் நுங்கட்கு ஆமோ
#754
தூமத்தால் கெழீஇய கோதை தோள் துணை பிரித்தல் விண் மேல்
தாமத்தால் கெழீஇய மார்பன் இந்திரன் தனக்கும் ஆகாது
ஏம் உற்றீர் இன்னும் கேண்ம்-மின் இரதியை புணர்தும் என்று
காமத்தால் கெழுமினார்க்கு காமனில் பிரிக்கல் ஆமே
#755
எம்மை நீர் வெல்ல பெற்றீர் வென்ற பின் இருந்த வேந்தன்
நும்மையும் வேறு செய்து நும்முளே பொருது வீந்தால்
வெம்மை செய்து உலகம் எல்லாம் ஆண்டிட விளைக்கும் நீதி
அம்ம மற்று அதனை ஓரீர் அவன் கருத்து அன்னது என்றான்
#756
சொல் திறல் அன்றி மன்னீர் தொக்கு நீர் காண்ம்-மின் எங்கள்
வில் திறல் என்று வில் வாய் வெம் கணை தொடுத்து வாங்கி
கல் திரள் கழிந்து மண்ணுள் கரந்து அது குளிப்ப எய்திட்டு
இற்று எமர் கல்வி என்றான் இடி உருமேற்றொடு ஒப்பான்
#757
ஆழி அம் கழனி தன்னுள் அம்பொடு கணையம் வித்தி
சூழ் குடர் பிணங்கள் மல்க விளைத்த பின் தொழுதி பல் பேய்க்கு
ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சி சோறு ஊட்டி வென்றி
வீழ்தர வேட்டு நின்றார் எய்துப வெகுளல் வேண்டா
#758
போர் பறை முழங்கி எங்கும் பொரு வளி புடைக்கப்பட்ட
கார் கடல் போன்று சேனை கலக்கமோடு உரறி ஆர்ப்ப
தார் பொலி மார்பன் ஓர்த்து தன் கையில் வீணை நீக்கி
வார் பொலி முலையினாட்கு வாய் திறந்து இதனை சொன்னான்
#759
தேய்ந்து நுண் இடை நைந்து உக செப்பினை
காய்ந்த வெம் முலையாய் நின கண்கள் போல்
ஆய்ந்த அம்பினுக்கு ஆர் இரை ஆகிய
வேந்தர் வேண்டி நின்றார் விம்மல் நீ என்றான்
#760
அண்ணல் கூறலும் அம்மனையோ எனா
துண்ணென் நெஞ்சினளாய் துடித்து ஆய்_இழை
கண்ணின் நீர் முலை பாய கலங்கினாள்
வண்ண மா கவின் சொல்லொடு மாய்ந்ததே
#761
மேவி நம்பிக்கு வெம் பகை ஆக்கிய
பாவியேன் உயிர் பாழ் உடல் பற்று விட்டு
ஆவியோ நடவாய் என்று அழுது தன்
காவி வாள் கண் கலங்க அதுக்கினாள்
#762
பாழி நம் படை மேல் அது இ பார் எலாம்
நூழிலாட்டி நுடக்கி குடித்திடும்
வாழி நங்கை கண்டாய் என்று வாள் கண் நீர்
தோழி தூ துகில் தோகையின் நீக்கினாள்
#763
எங்கள் பெண்மையும் ஈர் மலர் தார் மன்னர்
தங்கள் ஆண்மையும் சால்வது காண்டும் என்று
இங்கு வார் முரலும் கலை ஏந்து அல்குல்
நங்கை வாள் படை நங்கையை சூழ்ந்ததே
#764
கூன்களும் குறளும் அஞ்சி குடர் வெந்து கொழும் பொன் பேழை
தான் கொள பாய ஓடி சாந்து கோய் புகிய செல்வ
தேன் கொள் பூ மாலை சூடி தாமம் ஆய் திரண்டு நிற்ப
வான் பளிங்கு உருவ தூணே மறைபவும் ஆய அன்றே
#765
இங்கித நிலைமை நோக்கி முறுவலித்து எரி பொன் மார்பன்
நங்கையை காக்கும் வண்ணம் நகா நின்று மொழிந்து பேழ் வாய்
சிங்கம் தான் கடியது ஆங்கு ஓர் செழும் சிங்க முழக்கின் சீறி
பொங்கி மேல் செல்வதே போல் பொலம் கழல் நரல சென்றான்
#766
பதுமுக குமரன் மற்று இ பாவையை காவல் ஓம்பி
மது முக மாலை நெற்றி மத களிறு உந்தி நிற்ப
நுதி முக வாளும் வில்லும் நுண் இலை வேலும் ஏந்தி
சதுமுகம் ஆக சேனை நமர் தலை பெய்க என்றான்
#767
வட்டு உடை மருங்குல் சேர்த்தி வாள் இரு புடையும் வீக்கி
தட்டு உடை பொலிந்த திண் தேர் தனஞ்செயன் போல ஏறி
கட்டளை புரவி சூழ்ந்து கால் புடை காப்ப ஏவி
அட்டு உயிர் பருகும் கூற்றம் கோள் எழுந்த அனையது ஒத்தான்
#768
புள் இரைப்பு அன்ன பொன் தார் புரவி தேர் இரவி போலா
உள் உறுத்து எழுந்து பொங்கி உடல் சினம் கடவ நோக்கி
முள் எயிறு இலங்க நக்கு முடி குழாம் மன்னர் கேட்ப
கள் அவிழ் அலங்கல் மார்பன் கார் மழை முழக்கின் சொன்னான்
#769
முருகு உலா முல்லை மாலை மூப்பு இலா முலையினார் நும்
அருகு உலாம் புலவி நோக்கத்து அமிர்தம் இன்று உகுப்ப-கொல்லோ
கருதலாம் படியது அன்றி கலதி அம்பு இவையும் காய்ந்த
பொருது உலாம் புகழை வேட்டு இ எஃகமும் புகைந்த என்றான்
#770
வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால்
ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் நெஞ்சத்து
ஏண் இகந்து இலேசு நோக்கி இரு முதல் கெடாமை கொள்வார்
சேண் இகந்து உய்ய போ நின் செறி_தொடி ஒழிய என்றார்
#771
தம்முடை பண்டம்-தன்னை கொடுத்து அவர் உடைமை கோடல்
எம்முடையவர்கள் வாழ்க்கை எமக்கும் அஃது ஒக்கும் அன்றே
அம் முடி அரசிர்க்கு எல்லாம் என் கையில் அம்பு தந்து
நும்முடை திருவும் தேசும் நோக்கு-மின் கொள்வல் என்றான்
#772
மட்டு உலாம் தாரினாய் நின் வனப்பினோடு இளமை கல்வி
கெட்டு உலாய் சிலம்பு செம்பொன் கிண்கிணி மகளிர் கோங்க
மொட்டு உலாய் முலைகள் பாய்ந்த அகலத்து சரங்கள் மூழ்க
பட்டு உலாய் கிடக்கல் உற்றாய் என் சொலாய் பாவி என்றார்
#773
எரி சுடர் பருதி முன்னர் இருள் என உடைந்து நீங்க
பொரு படை மன்னர் நுங்கள் புற கொடை கண்டு மற்று இ
முருகு உடை குழலினாள் தன் முகிழ் முலை கலப்பல் அன்றேல்
இரு_சுடர் வழங்கும் வையத்து என் பெயர் கெடுக என்றான்
#774
ஆள் மர வாள் நிலத்து அப்பு வேல் செய்முள்
காண் வரு காட்டு இன களிற்று நீள் வரை
நீள் நில வேந்து எனும் வேழ பேரினம்
பூண் முலை பிடிக்கு அவாய் போர் செய்குற்றவே
#775
தாழ் இரும் தட கையும் மருப்பும் தம்பியர்
தோழர் தன் தாள்களா சொரியும் மும்மதம்
ஆழ் கடல் சுற்றமா அழன்று சீவக
ஏழ் உயர் போதகம் இனத்தொடு ஏற்றதே
#776
குடை உடை வேந்து எனும் குழாம் கொள் நாகமும்
கொடி எனும் பிடி உடை குமர வேழமும்
வெடிபடு போர் தொழில் காண விஞ்சையர்
இடி உடை இன மழை நெற்றி ஏறினார்
#777
கரை பொரு கடலொடு கார் கண்ணுற்று என
முரைசொடு வரி வளை முழங்கி ஆர்த்தன
அரைசரும் அமர் மலைந்து அரணம் வீசினார்
குரை கடல் தானை போர் கோலம் செய்தவே
#778
தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுள் இட்டு
எய் கணை படு மழை சிதறி எங்கணும்
மொய் அமர் மலைந்தனர் முருகு விம்மு தார்
செய் கழல் சீவகன் வாழ்க என்னவே
#779
கலந்தது பெரும் படை கணை பெய் மாரி தூய்
இலங்கின வாள் குழாம் இவுளி ஏற்றன
விலங்கின தேர் தொகை வேழம் காய்ந்தன
சிலம்பின இய மரம் தெழித்த சங்கமே
#780
சுற்று அணி கொடும் சிலை மேகம் தூவிய
முற்று அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின்
அற்று வீழ் குழை முகம் அலர்ந்த தாமரை
மற்று அவை சொரிவது ஓர் மாரி ஒத்தவே
#781
மற படை பசித்தன வயிறு இன்று ஆர்க என
குறைத்தனர் குஞ்சரம் கூந்தல் மா துணித்து
இறக்கினரோடு தேர் மைந்தர் இன் உயிர்
துறக்கம் போய் புகுக என துணிய நூறினார்
#782
ஆற்றுவீர் வம்-மின் எம்மோடு ஆண்மை மேம்படீஇய என்பார்
ஏற்றவர் மார்பத்து அல்லால் இரும்பு மேல் விடாது நிற்பார்
கூற்றம் போல் கொடிய யானை கோடு உழுது அகன்ற மார்பம்
கீற்று பட்டு அழகிதாக கிடக்க என கொடுத்து நிற்பார்
#783
கழித்து வாள் அமலை ஆடி காட்டுவார் கண்கள் செம் தீ
விழித்து மேல் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார்
தெழித்து தேர் கயிறு வாளால் அரிந்திட்டு புரவி போக்கி
பழிப்பு இல கொணர்ந்து பூட்டு பாக நீ என்று நிற்பார்
#784
ஐம் கதி கலின பாய் மா சிறிது போர் களை ஈது என்பார்
வெம் கதிர் வேலில் சுட்டி வேந்து எதிர்கொண்டு நிற்பார்
நங்கை கல்யாணம் நன்றே நமக்கு என நக்கு நிற்பார்
சிங்கமும் புலியும் போன்றார் சீவகன் தோழன்மாரே
#785
ஒருங்கு அவன் பிறந்த ஞான்றே பிறந்தவர் உதயத்து உச்சி
இரும்பினால் பின்னி அன்ன எறுழ் வலி முழவு தோளார்
விரும்புவார் வேழ வேல் போர் நூற்றுவர் நூறு கோடிக்கு
இருந்தனம் வருக என்பார் இன்னணம் ஆயினாரே
#786
கூட்டுற முறுக்கி விட்ட குய மகன் திகிரி போல
வாள் திறல் தேவ தத்தன் கலின மா மாலை வெள் வேல்
ஈட்டம் போழ்ந்து யானை நெற்றி இரும் குளம்பு அழுத்தி மன்னர்
சூட்டொடு கண்ணி சூளாமணி சிந்தி திரியும் அன்றே
#787
பாய்ந்தது கலின மாவோ பறவையோ என்ன உட்கி
வேந்தர்-தம் வயிறு வேவ நபுல மா விபுலர் என்பார்
காய்ந்து தம் புரவி காமர் குளம்பினால் களிற்றின் ஓடை
தேய்ந்து உக சேர்த்தி மாலை திருமுடி திலகம் கொண்டார்
#788
காயத்தின் குழம்பு தீற்றி கார் இரும்பு எறிய மேகம்
தோயும் முள் இலவின் கூன் காய் சினை-தொறும் உதிர்வவே போல்
மாயம்-கொல் மறவர் மாலை பைம் தலை உதிர்ந்த செம் கண்
சேய் அனான் திருவின் பேரான் செழும் சிலை பகழியாலே
#789
நீல் நிற பௌவம் மேய்ந்து சூல் முற்றி நீல மேகம்
வால் நிற விசும்பின் நின்ற மாரியின் மறை_வலாளன்
போன் நிற புத்தி சேனன் பொன் அணி பகழி சிந்தி
வேல் நிற மன்னர் சேனை கூற்றிற்கு விருந்து செய்தான்
#790
வீர வேல் உடம்பு எலாம் சூழ வெம் புலால்
சோரும் செம் குருதியுள் மைந்தர் தோன்றுவார்
ஒருமேல் ஒண் மணி சூட்டு வைக்கிய
ஆரமே அமைந்த தேர் குழிசி ஆயினார்
#791
பொன் அனாள் புணர் முலை போகம் வேண்டிய
மன்னரோடு இளையவர் மறலி வாள் அமர்
இன்னணம் இத்தலை மயங்க அத்தலை
கொல் நவில் வேலினான் நிலைமை கூறுவாம்
#792
தம்பியை சீவகன் நோக்கி சாமரை
வெம் பரி மான் செவி வீர மந்திரம்
இம்பர் நம் இடர் கெட இரண்டும் வல்லையாய்
நம்பி நீ மொழிக என நயந்து கூறினான்
#793
மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டி புகுவவே போல்
அந்தரத்து இவர்ந்த ஆழி கால் நிலம் விட்ட மாலை
சுந்தர சுண்ண மேனி மகளிர்-தம் கண்ணுள் இட்ட
மைந்தரும் இரும்பும் ஒவ்வா வான் புலம் காவல் கொண்டார்
#794
வடி கயிறு ஆய்ந்து முள் கோல் வல கையால் தாங்கி வென்றி
முடிகென புரவி முள்ளால் உறுத்தினான் மொழிதல் தேற்றேன்
கடுகிய வண்ணம் மாவின் தார் ஒலி காமர் பொன் தேர்
படையது செவியும் கண்ணும் பற்றி நின்றிட்ட அன்றே
#795
அண்ணல் தேர் பறவை என்பார் அருவமே உருவம் என்பார்
மண்ணதே வான் அது என்பார் மனத்ததே முகத்தது என்பார்
கண்ணதே செவி அது என்பார் கலங்க நூல் கழிய நோக்கி
பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றினானே
#796
அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆருயிர் மேயும் நேமி
முகில் கொண்ட மின்னு தோற்ப முறுகிய விசையிற்று ஆகி
மிகல் கொண்ட இகலை தானே விழுங்கிய சிறகர் தோற்றி
பகல் கொண்டு பறக்கும் தேரால் காளை-தன் பைம்பொன் தேரே
#797
கால் அற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்சம்
மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்ற வில் ஞாண்
மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த வள்ளல்
கோல் ஒற்ற குனிந்தவாறே சிலை குனிந்து ஒழிந்தது அன்றே
#798
நுங்களை வீணை வென்ற நூபுர அடியினாள் தன்
வெம் களி தடம் கண் கண்டீர் விருந்து எதிர்கொள்-மின் என்னா
அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆக
செம் களி பகழி ஒப்பித்து உள்ளவாறு ஊட்டினானே
#799
நன் மன வேந்தர்-தங்கள் நகை மணி மார்பம் நக்கி
புன் மன வேந்தர்-தங்கள் பொன் அணி கவசம் கீறி
இன் உயிர் கவர்ந்து தீமை இனி கொள்ளும் உடம்பினாலும்
துன்னன்-மின் என்பவே போல் சுடு சரம் பரந்த அன்றே
#800
மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற
தேன் எறி குன்றம் ஒத்த திண் கச்சை துணிந்த வேழம்
மான் நெறி காட்டும் திண் தேர் கயிறு அற்று மறிய வேந்தர்
ஊன் எறி ஆழி ஏந்தி ஒய்யென உலம்பி ஆர்த்தார்
 
#801
ஆர்ப்பு எதிர்மாரி பெய்யும் அணி நெடும் குன்றம் போல
போர்க்கு எதிர்ந்தவரும் ஆர்த்தார் ஆர்த்தலும் பூண்ட வல் வில்
கார்க்கு எதிர் மேகம் போல கணை மழை கான்றது இப்பால்
ஈர்த்தது குருதி வெள்ளம் இறைச்சி குன்று ஆக்கினானே
#802
மன்னர்கள் வெகுண்டு விட்ட மற படை அழுவ மாரி
கொல் நுனை எஃகின் நீக்கி குனிந்து வில் பகழி கான்ற
மின் அவிர் இலங்கும் ஒள் வாள் விழித்து உயிர் விழுங்க இன்ன
தன்மையால் தானை நீந்தி தான் விளையாடுகின்றான்
#803
வேழ வெண்கோட்டு மெல் கோல் தின்று கூன் குருதி வாளால்
ஆழ நா வழித்து நெய்த்தோர் கொப்புளித்து அழிந்த மாவின்
சூழ் குடர் கண்ணி சூடி நிண துகில் உடுத்து வெள் என்பு
ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆட கண்டு உவந்து நக்கான்
#804
வெளிற்று உடல் குருதி வெள்ள நிலை இது என்பவே போல்
களிற்று உகிர் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சி கூப்பி
அளித்தவை பாடி ஆட குறுநரி நக்கு வேழம்
விளித்தன கழுகும் பாறும் விலா இற்றுக்கிடந்த அன்றே
#805
கடல் விளை அமுதம் கண்ட பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று
அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கு அண்ணல் அம் குமரன் ஒன்னார்
உடலின் மேல் திரியும் திண் தேர் காண்டலும் மைந்தர் நெஞ்ச
திடல் பிளந்து இட்ட எஃகம் சுமந்து அமர் திறத்தின் மிக்கார்
#806
கடாம் திறந்திட்டு வானின் களகள முழங்கும் வேழம்
படாம் திறந்து ஊழி தீயின் பதுமுகன் காட்டியிட்டான்
தடாம் பிறை மருப்பு திண் கை அபரகாத்திரங்கள்-தம்மால்
கொடாம் பிற குமரி போருள் பிறர்க்கு என கொன்றது அன்றே
#807
மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலில் சீறா
முருக்கி தேர் தட கை-தன்னால் முழங்கி பாய் மாக்கள் காலின்
நெரித்திடா கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர்
ஒருக்கி பேய் பாடி ஆட உறு சிலை உடன்று கொண்டான்
#808
கொண்டான் பகழி தொடுத்தான் சிலை கால் குனிந்தது
ஒண் தேர் மிசையும் உருவ களிற்று உச்சி மேலும்
வண் தார் புரவி நிறுத்தும் மற மன்னர் மேலும்
கண்டான் சொரிந்தான் கணை மாரி கலந்தது அன்றே
#809
பைம்பொன் புளக பரும களி யானை ஈட்டம்
செம்பொன் நெடும் தேர் தொகை மா கடல் சேனை வெள்ளம்
நம்பன் சிலை வாய் நடக்கும் கணை மிச்சில் அல்லால்
அம் பொன் மணி பூண் அரசும் இலை என்று நக்கான்
#810
ஒருவனே சிலையும் ஒன்றே உடையது ஓர் களிற்றின் மேலான்
அரு வரை மார்பில் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும்
பொருவரோ மன்னர் என்றான் பொரு சிலை மடக்கி இட்டார்
வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கி கொண்டார்
#811
செம் கண் மால் தெழிக்க பட்ட வலம்புரி துருவம் கொண்ட
சங்கு வாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி
பொங்கிய முழக்கில் வேழ பேரினம் புலம்பினால் போல்
தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே
#812
அரு வரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று
கருவரை குடையப்பட்ட கடல் என கலங்கி வேந்தர்
திருவரை மார்பன் திண் தேர் மஞ்ஞையே முருகன்தான் என்று
ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார்
#813
முளி மர காடு மேய்ந்த முழங்கு அழல் போன்று மைந்தன்
தெளி நல குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி
ஒளி நலம் உப்பு குன்றம் ஊர் புனற்கு உடைந்ததே போல்
களி நல மன்னர் தங்கள் கடல் படை உடைந்தது அன்றே
#814
உறு படை மன்னர் தம்மை உடற்றி ஒன்றானும் இன்றி
சிறு படையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா
செறி எயிற்று ஆளி வேழ பேரினம் செகுத்தது அன்றே
உறு புலி ஒன்றுதானே கலை இனம் உடற்றிற்று அன்றே
#815
நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா
அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா
வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலாம்
இல்லையே வென்றி தீமை இடம் கொண்ட மனத்தினார்க்கே
#816
குழை உடை முகத்தினாள்-கண் கோணை போர் செய்த மன்னர்
மழை-இடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர்
முழை உடை சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார்
விழவு உடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது அன்றே
#817
பார் மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு பற்றார்
போர்முக களிற்று வெண்கோடு உழுத செம் சால் கொள் மார்பின்
சீர் முக தோழர் சூழ சீவகன் திருவின் சாயல்
வார் முக முலையினாளை மனை-வயின் கொண்டு புக்கான்
#818
நெய் கிழி வைக்கப்பட்டார் நெய் பத்தல் கிடத்தப்பட்டார்
புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப்பட்டார்
மைக்கு இழிந்து ஒழுகும் கண்ணீர் மா நிலத்து உகுக்கப்பட்டார்
கை கிழி கொடுக்கப்பட்டார் கலம் பல நல்கப்பட்டார்
#819
முது மர பொந்து போல முழு மெயும் புண்கள் உற்றார்க்கு
இது மருந்து என்ன நல்லார் இழுது சேர் கவளம் வைத்து
பதுமுகன் பரவை மார்பின் நெய் கிழி பயில சேர்த்தி
நுதி மயிர் துகில் குப்பாயம் புகுக என நூக்கினானே
#820
பார் கெழு பைம்பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி
ஊர் கெழு விழவு செய்து ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கி
தார் கெழு மின்னு வீசி தனி வடம் திளைக்கும் மார்பன்
போர் கெழு களத்து பாவம் புலம்பொடு போக்கினானே
#821
செய்த அ பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம்
எய்திய சேடம் கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்தி
மை அறு மணியின் செய்த வலம்புரி அதன் நீர் கொண்டான்
வையகம் அளிக்க நீண்ட வலம்புரி தடக்கையானே
#822
கரு மணி அழுத்திய காமர் செம் கதிர்
திரு மணி செப்பு என செறிந்த வெம் முலை
அரு மணி அலம் வரும் அம் பொன் கொம்பு அனாள்
பெரு மண கிழமை யாம் பேசுகின்றதே
#823
நான்கு நூறு_ஆயிரம் குடத்து நல்லன
ஆன் தயிர் பால் நெயொடு அழகிதா நிறைத்து
ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு ஊர் மருள்
கோன் தொறு காவலன் கொண்டு முன்னினான்
#824
வளை நிற வார் செம் நெல் அரிசி பண்டியோடு
அளவு அறு சருக்கரை பண்டி ஆர்ந்தன
பிளவு இயல் பயறு பெய் பண்டி உப்பு நீர்
விளைவு அமை பண்டியின் வெறுத்தது ஆங்கு ஓர் பால்
#825
சினை துணர் முழவு அன பலவின் தீம் கனி
கனைத்து வண்டு உழல்வன வாழை மாங்கனி
எனைத்து உள கிழங்கு காய் குருகொடு ஏந்திய
சனத்தினால் தகைத்து இடம் பெறாது தான் ஓர் பால்
#826
மரகத மணி பசும் காய் கொள்வான் குலை
கவர் பழு காய் குலை கனிய கா உறீஇ
இவர் தரு மெல் இலை காவும் ஏந்திய
உவரியாய் சொரிந்து இடம் பெறாது தான் ஓர் பால்
#827
சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை
தண் கழுநீரொடு குவளை தாமரை
வண்டு இனம் மிசை கொள வாச பூ சுமை
கொண்டவர் குழாம் பொலிவுற்றது ஆங்கு ஓர் பால்
#828
ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன்
சீர் கெழு வள மனை திளைத்து மாசனம்
கார் கெழு கடல் என கலந்த அல்லதூஉம்
பார் கெழு பழு மர பறவை ஒத்தவே
#829
கையுறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து
ஐ என இருப்ப மற்று அன்னது ஆதலான்
வையக மருங்கினில் வாழ்நர் மற்று இவன்
செய் தவம் நமக்கு இசைக என்ன சென்றதே
#830
வால் அரி கழுவிய வண்ண செம் புனல்
கால் இயல் இவுளியும் களிறும் ஆழ்ந்து அவண்
கோல நீர் குவளையும் மரையும் பூத்து வண்டு
ஆலி இவண் குருகு பாய் தடங்கள் ஆனவே
#831
உடுப்பன துகில்களும் உரைக்கும் நானமும்
தொடுத்தன மாலையும் குழையும் சாந்தமும்
கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல் கலம்
அடுத்து விண் பூத்தது ஓர் அழகின் மிக்கதே
#832
இலங்கு பொன் கிண்கிணி இரங்கும் ஓசையும்
உலம்பு மால் உவர் கடல் ஒலியின் மிக்கவே
கலம் கழும் அரவமும் கருனை ஆக்குவார்
சிலம்பு ஒலி அரவமும் மிச்சில் சீப்பவர்
#833
மூழி வாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும்
ஊழி வாய் தீயொடு ஒக்கும் ஒளிறு வாள் தடக்கையானும்
ஆழி வாய் விரலில் காமன் அம்பொடு சிலை கை ஏந்த
தாழி வாய் குவளை வாள் கண் தையலார் பரவ சார்ந்தார்
#834
இன்னியம் முழங்கி ஆர்ப்ப ஈண்டு எரி திகழ வேதம்
துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப
மின் இயல் கலசம் நல் நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்து எழ முருகன் அன்னான்
#835
இட்ட உத்தரியம் மின்னும் எரி மணி பரு முத்து ஆரம்
மட்டு அவிழ் கோதை வெய்ய வரு முலை தாங்கல் ஆற்றா
நெட்டு இரும் கூந்தலாள் தன் நேர் வளை முன்கை பற்றி
கட்டு அழல் வலம் கொண்டு ஆய் பொன் கட்டில் தான் ஏறினானே
#836
மந்திரத்து அரசன் காதல் மாதர் அம் பாவை-தன்னை
கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்று ஓர்
அந்தர விசும்பில் தேவர்க்கு அதிபதி ஆய கோமான்
இந்திரன் தனக்கும் ஆகாது என்பது நடந்தது அன்றே
#837
அடி மனை பவளம் ஆக அரும் பொன்னால் அலகு சேர்த்தி
முடி மணி அழுத்தி செய்த மூரி காழ் நெற்றி மூழ்க
கடி மலர் மாலை நாற்றி கம்பல விதானம் கோலி
இடு புகை மஞ்சில் சூழ மணவறை இயற்றினாரே
#838
ஐந்து மூன்று அடுத்த செல்வத்து அமளி மூன்று இயற்றி பூம் பட்டு
எந்திர எழினி வாங்கி இன் முக வாச செப்பும்
சந்தன சாந்த செப்பும் தண் மலர் மாலை பெய்த
இந்திர நீல செப்பும் இளையவர் ஏந்தினாரே
#839
கடைந்து பெய் மணி கை செம்பொன் காசு அறு தட்டின் சூழ்ந்து
மிடைந்து பெய் மணி கண் பீலி மின்னு சாந்து ஆற்றி பொன்னார்
அடைந்து வீசு ஆல வட்டம் அரிவையர் ஏந்தி ஆற்ற
தடம் கண்கள் குவளை பூப்ப தையலோடு ஆடும் அன்றே
#840
பஞ்சு சூழ் பரவை அல்குல் பசும் கதிர் கலாபம் வீங்க
செம் தளிர் கோதை சோர கிண்கிணி சிலம்பொடு ஏங்க
மைந்தருள் காமன் அன்னான் மகளிருள் திரு அனாளை
அந்தரத்து அமரர் பெற்ற அமிர்து என பருகினானே
#841
இள முலை மணி கண் சேப்ப எழுது வில் புருவம் ஏற
கிளை நரம்பு அனைய தீம் சொல் பவள வாய் திகழ தேன் சோர்
வள மலர் கோதை தன்னை வாய்விடான் குழைய புல்லி
அளமரல் இலாத இன்ப கடல் அகத்து அழுந்தினானே
#842
இன்னணம் ஒழுகு நாளுள் இளமரக்காவு காண்பான்
பொன் அணி மார்பன் சென்று புகுதலும் ஒருவன் தோன்றி
துன்னி ஓர் ஓலை நீட்டி தொழுதனன் பெயர்ந்து நிற்ப
மன்னிய குருசில் கொண்டு மரபினான் நோக்குகின்றான்
#843
உருமு கதிர் வேல் கலுழன் ஓலை உலகு என்னும்
பருமை குரு பளிங்கில் புகழ் பஞ்சி முழுது அடுத்த
திரு மிக்கு உடை செல்வன் திறல் சாமி நனி காண்க
அருமை அறன் இன்பம் பொருள் ஆக என விடுத்தேன்
#844
தத்தையொடு வீணை மனர் தாம் பொருது தோற்ப
மொய்த்த கலை நம்பி முகிழ் முலையை இசை வெல்ல
வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்ன
சித்தம் கரிந்து ஆங்கு கொடியான் செரு விளைத்தான்
#845
தேன் முழங்கு தார் குரிசில் செம்பொன் நெடும் தேர் மேல்
வான் முழங்கு வெம் சிலையின் வாளி மழை தூவி
ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க
வேல் முழங்கு தானை விளையாடியதும் கேட்டேன்
#846
வந்து தரன் கூறிய இ வாய் மொழியும் அன்றி
முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும் வகை நாடி
பந்து புடை பாணி என பாயும் கலி மான் தேர்
எந்தை திறம் முன்னம் உணர்ந்து இன்னணம் விடுத்தேன்

#847
எள்ளுநர்கள் சாய என தோள் இரண்டு நோக்கி
வெள்ளி மலை முழுதும் கொடி எடுத்தது இகல் ஏத்தி
கள் செய் மலர் மார்பன் உறு காப்பு இகழ்தல் இன்றி
உள்ளு பொருள் எம் உணர்த்தி அன்றி உள வேண்டா

#848
ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்கொண்ணா
போம் பொருள்கள் போகும் அவை பொறியின் வகை வண்ணம்
தேம் புனலை நீர் கடலும் சென்று தரல் இன்றே
வீங்கு புனல் யாறு மழை வேண்டி அறியாதே

#849
மன் பெரிய மாமன் அடி மகிழ்ந்து திசை வணங்கி
அன்பின் அகலாதவனை விடுத்து அலர்ந்த கோதைக்கு
இன்ப நிலத்து இயன்ற பொருள் இவை இவை நும் கோமான்
தந்த என சொல்லி நனி சாமி கொடுத்தானே

#850
குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா
வெம் கண் இள முலையின் மிசை எழுதி விளையாடி
கொங்கு உண் மலர் கோதையொடு குருசில் செலும் வழிநாள்
அங்கண் நகர்ப்பட்ட பொருள் ஆகியது மொழிவாம்


No comments:

Post a Comment