மொக்கல வாதம்
கொடிமகரக்
கோபுரமும்நெடுமதிலுங் குடிஞைகளும்
தொடிமகரத்
தூணிரையுஞ்சொலற்கரிதாய்ச் சுவர்க்கத்தின்
படிமகரப்
படிமையதப்பள்ளிகண் டளியள்போய்க்
கடிமகரக்
கடல்கடந்துகலந்தந்த நலமென்றாள்.
268
ஒழுக்கமுங்
கல்விகளுமுரைத்தனவே யொப்பனகள்
இழுக்கில்லாப்
பெருந்தவத்திலிங்கிகளைத் தான்கண்டு
முழுத்தாள
தாய்ப்பள்ளிமுற்றத்தோ ரரைமரத்தின்
குழுக்கொம்பர்
பிடித்தொருகாற்குஞ்சித்து நின்றுதான்.
269
துன்னஞ்செய்
தாடையைத்துவர்தோய்த்துக் கொட்டியும்
பொன்னஞ்செய்
புத்தங்கப்புகையூட்டிக் கைசெய்து
தன்னமு
மளித்தாயதலைசொறியு மிடையிலையா
லென்னவற்றி
னாம்பயனையெனக்கறிய வுரையென்றாள்.
270
ஆங்கவ
ளதுவுரைப்பவதற்குரிய மறுமாற்றந்
தாங்களு
மரைக்கில்லார் தலைசாய்த்தங் கிருந்தார்
மூங்கைமையான்
மொழிகொண்டேன்மொக்கலநற் றேரயான்
பாங்கினால்
வினவுவன்படிறின்றி யுரையென்றாள்.
271
வீடிற்கே யெனின்
ஞானம்வேண்டாதே முடியுமாற்
பீடிற்கே
யெனினின்னிற்பெருஞ்செல்வர் திருந்தினார்
மூடிற்றின்
பயனென்னையெனவினவ மொக்கலன
மூடிற்றுஞ்
சிறிதுளதாலுருவறிதற் கெனமொழிந்தான்.
272
படைப்பெளிதாற்
கேடறிதாற்பலகள்வர் நவையாரா
லுடைக்கியைந்த
வொலியற்றாலூன்றருவார்க் குணர்த்துமால்
விடக்கமர்ந்த
வுள்ளத்தாய்வேடமு மறிவிக்குந்
தொடர்ப்பாடும் பெரிதன்றாற்றொட்டைந்
பூணியோ.
273
பொன்கொண்டா
ராயினும் போர்வைபூச் செனிற்புலையன்
வன்கண்மை
யாற்செய்தவஞ்சமே யெனவளைப்பர்
தன்றன்மை
யாகியதான்பழிப்பார் தாமுளரோ
வெண்கண்டு
வந்திங்கணிதுகொண்டா யெனச்சொன்னாள்.
274
உண்ணன்மை
தவமென்றங்குறுப்பெல்லா மறைக்கின்றாய்
திண்ணென்ற மனமிலைநீசிறைபலவுஞ்
செய்தலால்
பெண்ணென்றும்
பிறவென்றுந்தானோக்கிப் பெரும்பேதாய்
கண்ணன்றோ
வுள்ளத்தைக்கலக்குவன வவைகாவாய்.
275
பெண்பாலார்
கண்டக்காற் பேதுறுவ ரெனவுரைப்பாய்
திண்பான்மை
யவர்க்கழியச்சிதையுநின் றவமாயின்
மண்பாலா
ரவருள்ளமாண்புளதா யுரையாரா
லெண்பாலும்
படாதாகியிழுக்குநின் குணமந்தோ.
276
இழுக்கினு
மிழத்தியாலிடறினு மதுவேயால்
விழுக்கலமால்
வினைபெரிதால்வினைக்கேடாந் தொழிறருமா
லொழுக்கிற்கு
முரித்தன்றூணோரிடையூ றுடன்கொடுக்கும்
வழுக்கின்றித்
தவஞ்செய்யின்மண்டையாற் பயனென்னோ.
277
நிறந்தூய்தா
நீரினால்வாய்தூய்தாம் பாகாற்
பறைந்துபோய்
மெல்கோலாற்பல்லெலாந் தூயவாம்
புறந்தூய்மை
செய்தக்கால்புரிவள்ளந் தூய்தாமே
லறந்தூய்மை
கணிகையர்க்கேயாற்றவு முளதாமால்.
278
சவருடைய
மனைவாழ்க்கையெனப்போந்து தவம்புரிந்தாய்
பவருடைய
விறகிறுத்துப்பலகலங்க ளொருப்படுத்துற்
றுவரோடு
பல்கூறையுடன்புழுக்கி யொலித்திடு நீ
துவரடுதி
பூவடுதிசோறடலே முனிந்தாயோ.
279
வண்ணாரம்
துன்னாரம் மச்சிகமே கச்சாரஞ்
சண்ணார
மெனப்பிறவுந் தவத்துள் நீ கற்றனவா
லெண்ணார்ந்த
காரங்க ளில்லகத்தே பயின்றாயே
லுண்ணாயே வயிறார
வோர்ப்பொன்று மிலையேகாண்.
280
சிறந்தாய்க்கீ
துரைக்கலாஞ்சிந்தனையை முடிப்பதே
துறந்தார்க்குக்
கடனாகிற்சோறலாற் பிறவேண்டா
லிறந்தார்க்கு
மெதிரார்க்குமிவட்காலத் துள்ளார்வான்
பிறந்தார்க்கு
மிதுவன்றிப்பிறிதொன்று சொல்லாயோ.
281
உண்டியா
லுடம்புளதாலுடம்பினா லுணர்வாமென்
றெண்டிசையும்
பரந்திசைப்பவீதுனக்கே தெரியாதோ
தண்டியாய்க்
கழியாதுதவஞ்செய்த லுறுதியேற்
பண்டியாற்
போக்குநின்பஃறொடர்ப்பா டெனச்சொன்னாள்.
282
அருளுடையா
ளுரைப்பக்கேட்டாங்காரித் தவனுந்தன்
பொருளுடைமைத்
தருக்கினும்புன்ஞானக் களிப்பினு
மருளுடையார்
மதிப்பினுமாற்றந்தான் செயற்பொருட்டா
லிருளுடைந்த
கூந்தலாளிட்டத்தை யெண்ணுவான்.
283
தரணென்று
நன்றென்றாடன்றன்மை யுருவென்றாள்
அரணென்னத்
தெளிந்ததுதானாருகத மேமன்னு
முரணின்ற
துண்மையான்மொக்கலனு முனிந்துரைப்பா
னிரணியனைப்
போல்வந்திங்கிடர்ப்பட்டா யென்றானே.
284
என்னாலும்
வெலப்பட்டாரிருவருள ரிங்கவரைச்
சொன்னாலு
மறிதிநீதுடிகடியு மிடையுடைய
கொன்னாணு
நெடுவேற்கட்குண்டலமா கேசியு
மன்னாளுக்
கறமுரைத்தவருக்கமா சந்திரனும்.
285
என்றாளை
முகநோக்கியிதுபெரிதும் பொய்த்தனைநீ
யொன்றாத
கொள்கையாருலகினுள் யாவரையும்
வென்றாள்மள்
றிவள்சம்புவிரதியாய்த் திரிந்தெங்கும்
நன்றாரம்
பிறர்க்கீந்தான்றருமங் கொண்டென்றானாய்.
286
வேதியரை
முதலாகவெலப்பட்டா ரிவரிவரென்
றோதியாங் கவையவைதா
மிவையிவையென் றுரைப்பக்கேட்
டாதிகா
லாவணத்துளார்கதரை வென்றதனை
நீதியா
லுரைத்தியேனின்னையான் வெல்லேனோ.
287
எனக்கேட்டாங்
கெடுத்துரைப்பானிந்திரர்க டொழப்படுவான்
றனக்காய
தர்மமுமதர்மமுங் காலமுங்
கனப்பாட்டிற்
காயமேயுயிருருவே புண்ணியமே
நினைக்குங்காற்
பாவமேகட்டுவீ டெனநிறுத்தி.
288
இப்பொருட்க
ணிகழ்ச்சியு
மிவையிவையா
மெனவிரித்துச்
செப்பினா னாதன்றன்
சிந்தைக்
கெழுந்தவா
றப்பொருளு
மந்நிகழ்வு
மவையவையா வறியாதை
வப்பிள வனமுலையார்
மணல்விளையாட்
டதுவேபோல்.
289
மொக்கலனு மிதுகூற
முல்லைநா றிருங்குழலா
ணக்கனளா யிதுகூறு
நாதன தியல்பறியா
யிக்கிரமத்
திந்திர னிருடிகளைத் தேவியரைத்
தக்கதாத்
தொழுதக்கா லவர்தலைவ ரெனலாமோ.
290
எந்தலைவ
ரியல்பொடுநூ
லின்னணமென்
றறியாதாய்
சிந்தனைக்க
ணாயினுந்
தீமையு
முரைத்திலையாற்
றந்துரைத்த
தலைவனூற்
றத்துவமா மாகவே
முந்துரைத்த
பொருணிகழ்வு
பிழைப்பின்மை முடியாவோ.
291
அத்தியைந்
தெனினல்லவறுபொருளு மவையாகா
வுத்தியா
வெடுத்தோதுமொன்பதனோ டொட்டலவாற்
குத்¢ய பல்குறையே யன்றியுமிப் பொருளெல்லாம்
பொத்தியுங்
காட்டுவாய்பொருளியைவோ பெரிதென்றாள்.
292
சலம்படவே
யுரைத்தனைநீதருமத்திற் செல்லுதுமென்
றிலம்படுமே
லியக்கில்லையென்பதெம் முரையென்போம்
கலஞ்செல்லுங்
கடலதனைக்காற்றேபோ லுந்தாதாம்
பலம்படு
முரைநினக்குப்மாம்புண்ட பாலேபோல்.
293
அல்லதற்க
மப்படியேயாமென்ற லதுகொள்ளாய்
செல்லவுஞ்
செலுத்தவுநில்லவு நிறுத்தவுஞ்
சொல்லியவாய்
தேய்க்குறுவாய்சொல்லிக்கொள் வலியதனால்
பல்லொடும்
படத்தேய்த்தாற்பயம்பெரிதும் படுமன்றோ.
294
கடனிலமா
காயமேயமையாவோ விவையிரண்டு
முடனில்லை
யாயினுமூனமிங் கெவனென்பாய்
மடனுடையை
நீபெரிதுமன்னுயிர்க்கும் புற்கலக்கு
மிடனெல்லா வுலகி
னெல்லையும் புறப்படுமோ.
295
பலசொல்லிக்
குறையென்னைப்பஞ்சமா கந்தமே
யலகில்லாப்
பெரும்பரப்பினாகாய நினக்கில்லை
நிலைசெலவிற் கிவை
வேண்டாநின்பொருளு மிவையல்லா
வுலகெல்லை
யுரைப்பான்புக்குணர்வினையே வருத்துதியால்.
296
காலநீ
வேண்டாயாய்க்கணிகமுங் கற்பமும்
சாலமும்
புனைந்துரைத்தி சமழ்ப்பென்னு மிலையாகிப்
பாலமா பண்டிதனே
பழநோன்பி யிவனென்பாய்
மாலுமிங்
குடையையோமயக்குவதொன் றுண்டனையோ.
297
இக்கோட்க
ளெழனோக்கியிவையிவையோ யாமென்றா
லக்கோட்க
ளெழனோக்கியவையவையாக் கண்டிருந்
தெக்கோளு
மில்லென்பாயாண்டெண்ணி யேத்துதியான்
மெய்க்கோளா
லென்றியான்மிகைதெருட்டுந் திறங்காணேன்.
298
கருத்தினாற்
பெற்றாமோ கண்கூடாக் கண்டோமோ
பொருத்தனையென்
றுரைக்கின்றாயுறுநோயைத் தீர்ப்பதோர்
மருத்துநூ
லில்லையான்மயங்கியே சொல்லாது
திருத்தியநின்
னுணர்வின்மைதெருட்டிக்கா ணெனச் சொன்னாள்.
299
பொறியுணர்வின்
புலமாயபுற்கலமே யுயிரறியு
மறிவினா
லறியாதேயாமாகா தெனவுரைப்பாய்
நெறியென்னை
யிந்திரன்றன்நெடுநகரக் கவன்றேவி
குறியளோ
நெடியளோநூலொழிப்பாய் கூறிக்காண்.
300
மெய்யளவிற்
றுயிரென்றுமெய்யகத் தடக்குரைத்தல்
பொய்யளவைக்
குடங்குடத்திற்புகலருமை போலென்பாய்
மெய்யளவ்¢ன் மெய்யுணர்வைமெய்யகத் தடக்குரைத்தி
யையனையே
யடங்கானென்றதுவாதன் வண்ணக்கால்.
301
அருவாத
லாலடங்குமுணர்வுதா னங்கென்னிற்
பெருவாத
மங்கில்லைபெற்றியொன் றறியாத
திருவாள
னுரைவண்ணந்தீட்டொட்டுக் கலப்பியாப்
புருவாய
வுடம்பினோடுணர்வினுக் குளதாமோ.
302
யாப்புண்டா
லுழப்பதவ்வுயிரென்றேற் கதுவன்று
போய்ப்பிண்டத்
துழப்புழப்பப்புலம்புவ தென்செயலென்பா
யேப்புண்பட்
டான்படநோயேதிலர்க்காய்ச் சோமாகிச்
சாப்புண்பட்
டேனென்றுசாற்றுவதுன் றத்துவமோ.
303
உழப்புழப்பச்
செய்கையானுறுதுயருற் றேனென்றல்
பிழைப்பதுவாக்
கருதாதேபெருவழியு ளிடறுதியா
லுழப்பறிவு
குறிசெய்கையொருவனவே யெனச்சொன்னார்க்
கிழிக்குவதிங்
கில்லாமையிதனாலே யறியனென்றாள்.
304
அருவாயில்
யாப்பில்லையன்றாயிற் குறைபடூஉ
மிருவாறின்
கூட்டமுந்தீதென்ப தெம்மிடமே
மருவாதா
யுரைத்ததனைமனங்கொள்ளா யதுவன்றிப்
பொருவாறொன்
றுரைத்தாலுமொருவாறு முணராயால்.
305
அறிவெழுந்
தவலிக்குமென்பதூஉ மதுவெழப்
பிறிதொன்று
பேதுறுமங்கென்பதூஉம் பெரும்பேதாய்
குறிகொண்டா
ருரையன்றாற்குற்றமே கொளலுறுவாய்
பொறிகொண்டு
காற்றினையும்போகாமற் சிமிழாயோ.
306
பிறன்சுமவான்
றானடவான்பெருவினையு முய்க்கில்லா
வறஞ்செய்தா
னமருலகிற்செல்லும்வா யரிதென்று
புறம்புறம்பே
சொல்லியெம்பொருணிகழ்ச்சி யறியாயாற்
கறங்குகளி
மல்லனவுங்காற்றெறியத் திரியாவோ.
307
மகனேயாய்ப்
பிறப்பினு மாதுயரங் கேடில்லை
யவனாகா னாயினு
மறஞ் செய்த லவமாகு
மெவனாகு மென்றெம
திட்டமே யுரைத்தியா
னகைநாணி நீநின்னை
நன்பகலே மறைக்கின்றாய்.
308
வீயுடம்பிட்
டுயிர்சென்று வினையுடம்பு முளகாகத்
தாயுடம்பி
னகத்துடம்பு தான்வைத்த தின்றியே
நீயுடம்பு பெற்றவா
றுரையென்பாய் நிழல்போலும்
டேயுடம்பு
பிறிதுடம்பிற் புகல்பேதாய் காணாயோ.
309
எப்பொருளு
மொன்றொன்றிற்கிடங்கொடுத்த விரும்புண்ணீர்
புககிடங்கொண்
டடங்குதலேபோலவும் தந்தைதாய்
சுக்கிலமுஞ்
சோணிதமுந்தழீஇச்சுதையு ணெய்யனைத்தா
யொத்துடம்பி
னகத்தடங்கியுடன்பெருக மெனவுரைத்தாள்.
310
செய்வினைதா
னிற்பவே பயனெய்து மென்பதூஉ
மவ்வினை
யறக்கெட்டா லதுவிளையு மென்பதூஉ
மிவ்விரண்டும்
வேண்டுத லெமக்கில்லை யெடுத்துரைப்பி
னைவினையி
னிலைதோற்ற நாசந்தா னாட்டுங்கால்.
311
பைம்பொன்செய்
குடமழித்து;பன்மணிசேர்
முடிசெய்தாற்
செம்பொன்னா
னிலையுதலுஞ்சிதைவாக்க மவைபெறலு
நம்பான்றிங்
கிவைபோலநரர்தேவ ருயிர்களையும்
வம்பென்று
கருதனீவைகலும்யா முரையாமோ.
312
கொன்ற பாவமுண்
டாயின் குறட்கண்ணும்
ஒன்று மேயென்
றுரைப்பனெப் பாரியார்
பொன்றினும் புத்த
ரேநீவி¡; சொல்லின
சென்று சேர்தலைச்
சித்தம தின்மையால்.
313
சொன்ன சூனைத்
துறந்தவற் றட்டன
பின்னை யுண்டல்
பிழைப்புடைத் தென்றியா
னன்னு தல்லைத்
துறந்தவ ளட்டது
தன்னை யுண்டுந்
தவசியை யல்லையோ
314
கொன்ற பாவங்
கெடுகெனக் கையிட்டு
நின்ற தென்பது
நீயுரைப் பாயெனி
னன்று துன்னின
தாதன்மை யாற்சொன்னாய்
சென்றும் வந்துந்
தியானம் புகலென்றாள்.
315
இன்ப துன்ப
மிருவினைக் காரிய
மென்ப வர்க்கென்னை
யேதமுண் டென்றியேற்
பின்பு பேணுந்
தவத்தினி னாகிய
துன்ப வர்க்குந்
துதாங்கனத் தொன்றுமே.
316
செய்த தீவினை
சென்றின்ப மாக்குமென்
றிஃது ரைப்பவ
ரீங்கில்லை யாயினும்
பொய்கள் சொல்லிப்
புலைமக னேயெம்மை
வைதல் காரண
மாநின்று வைதியோ.
317
இந்திரி யங்களை
வென்றற் பொருட்டென
வந்து டம்பு
வருத்தல் பழுதென்பாய்
தந்து ரைத்த
தலைமழி யாதிய
சிந்த னைக்கிவை
செய்வதெ னோசொல்லாய்.
318
புனைவு வேண்டலர்
போக நுகர்விலர்
நினைவிற் கேயிடை
கோளென நேர்தலா
லினைய வும்மல
மேறினு மென்செய
மனைய தான்மக்கள்
யாக்கையின் வண்ணமே.
319
பாவந்
துய்த்துமென் றோமல்ல துய்ப்பினு
மாவ தின்மைக்
கரசுரைத் தாயன்றோ
வோவ லின்பந் தருமெ
னுயிரென்பாய்
தேவ னாகித்
திரிந்துதான் காட்டிக்காண்.
320
அழிவு காலத்
தறத்தொடர்ப் பாடெலா
மொழியல்
வேண்டுமென் றொற்றுமை தாங்கொளீஇ
வழியுங் காட்டுமம்
மாண்புடை யார்கண்மேற்
பழியிங்
கிட்டுரைத் தாற்பய னென்னையோ.
321
சிந்த னையினுந்
தீவினை யாமென்பார்க்
கைந்திற் காம
மமையுமென் றீரென்பாய்
சுந்த மாகச்
சுவடறு வீரென
வந்தி தோறும்
புடைக்க வமையுமோ.
322
பெண்ம கள்ளிர்
பிறகிட வுண்பவர்
கண்ணி னாலில்லுட்
கந்தியைக் காணினு
முண்ண லம்மெனும்
மோத்துடை யார்களைத்
திண்ண தாவைது
தீவினை கோடியோ.
323
பிள்ளை பெண்ணலி
யாயினும் மாண்வயிற்
றுள்ள தேயென்
றொழுக்கங் கொடுத்தியாற்
பிள்ளை பெண்ணலி
யன்மையை யாதினா
லுள்ளங் கொண்டிழ
வூசி யுரைப்பதே.
324
மோனம் பொய்யஞ்சிக்
கொண்டவன் மெய்யுரைக்
கூனந் தோன்றி
லுரைத்தன னென்றியேற்
றானம் யாவர்க்குஞ்
செய்வது நன்றனென்பா
யீன மென்னோ
தெருச்சுமக் கிற்றியோ.
325
உய்யக் கொள்வ னெனச்
சொல்லி யுள்ளத்தாற்
கையிற் காட்டல்
கரவுள தாமெனிற்
பொய்சி தைத்ததென்
சொல்லிப் பெயர்ந்துரை
பொய்யு ரைத்தில bனன்றல் பொருந்துமோ.
326
கொல்வினை யஞ்சிப்
புலால் குற்ற மென்பதை
நல்வினை யேயென
நாட்டலு மாமென்னை
வில்லினை
யேற்றிநும் மெய்ம்மை கொளீஇயது
சொல்லினை யாதலிற் சொல்வன்
யானே.
327
புத்தர்கட்
பத்தியிற் போதி மரந்தொழிற்
புத்தர்கட் பத்தரை
யேதொழு புத்தர்கட்
பத்தியை யாக்கு
மதுவெனிற் (பற்றிய)
பத்தங் குடைசெருப்
புந்தொழு பாவீ.
328
ஆங்கவர் போல
வருள்செய் பவர்களை
நீங்குமி னென்பது
நீர்மை யெனினது
வீங்கிதற் கெய்தா
விடினிலை போதிக்கும்
தீங்கே
நுமர்செய்கை தேரமற் றென்றாள்.
329
பல்லுடை
யான்றன்னைப் பண்டுகண் டேத்தினுந்
தொல்லுரை
கேட்டுறுப் பேதொழு தாலும்பி
னல்வினை யாமென்று
நாட்டுதி யாய்விடிற்
கொல்வதுந்
தின்பதுங் குற்றமற் றென்னாய்.
330
ஏத்தின ரேத்துக
வென்றிறை போல்வன
பாத்தில பைம்பொற்
படிமைசெய் தாலவை
யேத்துநர் பெய்தவ
ரெய்துவ நன்றெனில்
வீத்தவர் தின்பவர்
வெவ்வினைப் பட்டார்.
331
வெற்றுடம்
புண்பதும் வேலின் விளிந்தவை
தெற்றென வுண்பதுந்
தீமை தருமென்னை
யொற்றைநின் றாடுணை
யூறு படுத்தவட்
குற்றமன் றோசென்று
கூடுவ தேடா.
332
பிடிப்பது பீலி
பிறவுயி ரோம்பி
முடிப்ப தருளது
போன்முடை தின்று
கடிப்ப தெலும்பதன்
காரண மேனி
தடிப்பத லாலரு
டானுனக் குண்டோ.
333
ஆட்டொரு கான்மயிற்
பீலி யுகமவை
ஈட்டுதல்
போலுதிர்ந் துக்க விறைச்சியைக்
காட்டியுந்
தின்னுங் கருத்திலை நீ தசை
வேட்டுநின்
றேயழைத் தீவினை யாளோ.
334
மானொடு மீனில
மன்னு முடம்பட
லூனடு வாரிடு வாரை
யொளித்தலிற்
றானடை யாவினை
யாமென்ற றத்துவந்
தீனிடை நீபட்ட
தீச்செய்கை யென்னோ.
335
குறிக்கப்
படாமையிற் கொல்வினை கூடான்
பறித்துத்
தின்பானெனிற் பாவமாம் பூப்போற்
செறிக்கப்
படுமுயிர் தீவினை பின்னு
நெறிக்கட்
சென்றாறலைப் பாரொப்ப னேர்நீ.
336
விலையறம் போலு
மெனின்வினை யாக்க
நிலையுமீ றென்பது
நேர்குவை யாயின்
வலையினின்
வாழ்நர்க்கும் வைகலு மீந்தாற்
கொலையென்றும்
வேண்டலன் றோகுண மில்லாய்.
337
நும்பள்ளிக்
கீபொரு ளாலுணர் வில்லவ
ரெம்பள்ளி
தாஞ்சென் றெடுப்ப வெனினது
கம்பலை யாம்வினை
யில்கறிக் கீபொருள்
செம்பக லேகொலை
யாளரிற் சேரும்.
338
நாவின்கண் வைத்த
தசைபய னேயென
வேவினை நீயுமற்
றின்பமஃ தாதலிற்
றேவன்கண் வைத்த
சிரத்தை செயலன்று
தூவென வெவ்வினை
யைத்துடைத் தாயால்.
339
கன்றிய
காமந்துய்ப் பான்முறைக் கன்னியை
யென்றுகொ லெய்துவ
தோவெனுஞ் சிந்தையன்
முன்றினப் பட்ட
முயன்முத லாயின
நின்றன வுந்தின
நேர்ந்தனை நீயே.
340
தூய்மையி லாமுடை
சுக்கில சோணித
மாமது போன்மெனி
னான்முலைப் பாலன்ன
தூய்மைய தன்றது
சொல்லுவன் சோர்வில
வாம னுரைவையந்
தன்னொடு மாறே.
341
மேன்மக்க ணஞ்சொடு
கள்வரைந் தாரது
போன்மக்க ளாரும்
புலால்வரை யாரெனிற்
றான்மெய்க்க ணின்ற
தவசிமற் றெங்குள
னூன்மெய்க்கொண்
டுண்பவ னுன்னல தென்றாள்.
342
பார்ப்பனி
யோத்துநின் னோத்தும் பயமெனி
னீப்பவுங் கொள்பவு
நேர்து மவையவை
தூப்பெனு மில்லன
வேசொல்லி நிற்குமோர்
கூர்ப்பினை
நீயென்றுங் கோளிலை யென்றாள்.
343
தூவினி னுண்புழுத்
துய்ப்பனென் னாமையிற்
றீவினை
சேர்ந்திலன் றின்பவ னென்னினு
மோவெனு முன்விலை
வாணிக ரென்றினர்
மேவினர் தாம்விலை
யேவினை வேண்டார்.
344
அடங்கிய வம்பு
பறித்தன் முதலா
வுடங்குசெய்
தார்வினை யொட்டல ரென்பாய்
மடங்கினர் வாழ்க
வெனுமாற் றார்போற்
கடஞ்சொல்லித்
தின்பதிங் கியார்கட் டயாவோ.
345
தின்னு மனமுடைப்
பேயெய்துந் தீவினை
மன்னு மிகவுடைத்
தாய்வினைப் பட்டில்லா
ளென்னு முரைபெரி
தேற்கு மிகழ்ச்சி
தன்னை வினைப்பட
நீசொல்லி னாயால்.
346
அறஞ் சொல்லக்
கொள்ளு மறமென் றறிந்தாங்
கறஞ்சொல்லி
னார்க்கற மாமென் றறியாய்
புறஞ்சொல்லி தன்று
புலால்குற்ற மென்று
துறந்தொழிந்
தாற்கொலை துன்னினர் யாரோ.
347
அறந்தலை நின்றாங்
கருளொடு கூடித்
துரந்தனள்
யானென்னுஞ் சொல்லு முடையாய்
மறங்கொண்டி
துண்டென்னை மன்னுயிர்க் காமே
சிறந்ததுண் டோவிது
சிந்தித்துக் காணாய்.
348
பேயொப்ப நின்று
பிணங்கிக்கண் டார்க்கெனு
மாயத்தி னூனுண்ண
மன்னு மருமையி
னாயொப்பச் சீறி
நறுநுத லாளொடு
காயக் கிலேசத்திற்
கட்டுரைக் கின்றான்.
349
வெயிறெறவ்
வுணங்கியும் வெள்ளிடைந் நனைந்துமூன்
டயிறலிற்
பட்டினிகள் விட்டுமின்ன கட்டமாய்த்
துயிறுறந்
திராப்பகற் றுன்பவெங் கடலினார்க்
கயிறெறுந்
நெடுங்கணா யாவதில்லை யல்லதும்.
350
காயம்வாட்டி
யுய்த்தலிற் கண்டநன்மை யுண்டெனின்
தீயினாற்
சுடுதலுந் தெற்றியேறி வீழ்தலு
நோயினாற்
றிரங்கலுந் நோன்மையென்ன லாம்பிற
நீயனா யிதற்கினி
நேமியென்று சொல்லென.
351
புண்ணினைத்
தடிதலும் போழவாற்றி நிற்றலும்
கண்ணினைக்
கழிகள்ளான் மிண்டிக்கொண்டு நீட்டலும்
விண்ணுயர்
நெடுவரைவ் வீற்றுவீற்று வீழ்தலும்
அண்ணலார்தஞ்
செய்கையு மாவதில்லை யல்லதும்.
352
தூக்கடம்மை
யாக்கலே தொல்லைநல் லறம்மெனின்
நாக்களைப்
பறித்தலுந் நான்றுவீழ்ந்து பொன்றலுந்
தீக்கள்
பாய்ந்துசாதலுந் தீயசெங் கழுவ்வின்மேன்
மேக்கினைக்கொண்
டேறலு மேன்மையென்ன லாம்பிற.
353
தானஞ்சீல மும்பொறை
தக்கதாய வீரியம்
மூனமில் தியானமே
யுணர்ச்சியோ டுபாயமும்
மானமில் லருளினைவ்
வைத்தலேவ லிம்மையுஞ்
ஞானமீரைம் பாரமீதை
நாடுங்கா லிவைகளும்.
354
விருக்கமூலி
யாகலும் வெள்ளிடை யுறைதலும்
மிருத்தனிற்ற
லன்றியு மிட்டகூறை யெய்தலும்
மருக்கையின்
மயானத்துட் சேக்கையும் மனைகளை
வருச்சியார்
புகுதலும் மற்றவற்றொ டுண்டலும்.
355
அத்திட்டாடை
கோடலும்மமையுமென்ன நீங்கலும்
பெற்றதன்னிற்
சேக்கையும்பேர்த்துண்ணா தொழிதலும்
குற்றமென்னப்
பிச்சையுங்குறித்துழிப் புகாதுதான்
றுற்றியுய்த்த
றன்னொடுதுதாங்கென்றாத்தர் சொன்னவே.
356
பாரமீ துதாங்கொடு
பற்பல கிலேசமும்
நேருமனையி
லுண்மையா னீரும்வேண்டி னீரெனக்
கூரிமம் வெயில்பசி
கூடலுங் கூடினாற்
சேர்தலில்லை
நல்லறஞ் சிந்தையென்று செப்பலும்.
357
அருந்தடிக ளீரவும்
மறஞ்செய்வாளிற் போழவும்
வருந்தவான துள்ளநீ
மாட்சிநன்று மென்றியா
லிருந்துநின்று
நன்னெறிக் கிடைப்படாத சிந்தையாற்
பெருந்தவங்கள் செய்ந்நரைப்
பேசுவாயோர் பேதையே.
358
புத்தராகு
மாண்பினா போதிகத்து வர்கட்காம்
பத்துமாய பாரமீதை
பாரவட்ட மென்றலும்
சித்தராகு
மாண்பினாற் சீலமும் வதங்களும்
மெத்துணையும்
மாயிரம்மா மென்றுமியாமு மென்றனள்.
359
உடம்பினுள்ள
பல்லுயிர் சாவவூனுண் மானுக்குத்
தடங்கொண்மா வரைமிசைத்
தன்னையீத னன்மையேற்
படம்புனைந்த
வர்கடாம் பலருமுண்ணு நீரினுள்
விடம்பெய்தாற்கு
நன்றுகொல் வியாதியாளன் றீர்கென.
360
அல்லவர்கள் சாதலை
அறிந்தனன் னவனெனில்
நல்லதில்லை
நஞ்சினா லென்றுநாட்டு வாயெனி
னெல்லையில்ல
பல்லுயிர் தன்கணுள்ள வெஞ்சலுங்
கொல்லவந்த
வூன்களும் குற்றமென்ற வாறுகொல்.
361
நீட்சி திரிவா
மயிருகிர் காட்டினை
மாட்சியில்
லாமயிர் மன்னுயி ருள்வழித்
தாட்க ணிமிருந்
தலைநிமி ராவெழல்
காட்சி
மரத்திற்குக் காறலை யெங்கம்.
362
மரங்கள் வளருமென
மன்னுங் கூம்பி
விரிந்த விலையின்
வேற்றுமை சொன்னாய்
பொருந்து மிவையு
மல்லவு மன்றோ
வொருங்கிவ் வுலகத்
துயிர்களு மென்றாள்.
363
வயாத்திரு வாக்கி
வளர்பூ சணிக்குத்
தயார்செய்கை
தீதென்னுந் தத்துவங் கண்டா
யுயாப்பிழைத்
தாய்மெழு கூனொடு பட்ட
வயாவதற் கீண்டுப்
பயத்தலி லன்றே.
364
யாதினு மாழ்குமம்
மாழ்கியு மென்றுழி
நீதின்னுந் தோலை
நெருப்பொடு கூட்டத்தி
னோதினை தேறுற
நீர்க்குரைத் தாய்மற்றுஞ்
சேதனை யில்லாய்
திரிவென்னை வண்ணம்.
365
அரும்பு மலரு
மரும்பிணி தீர்வு
மொருங்குதங்
காரணத் தாக்க முணர்த்து
மரங்களு மன்னுயி
ரெய்தின வென்ன
விரும்பொடு காந்த
மியைவி றிரிவே.
366
ஒப்ப மரங்கட்
குயிருண்மை யாமினி
யிப்படித் தோன்று
மிருதுக்கள் சார்ந்தெனச்
செப்பிய வேதுத்
திரிவெனக் காட்டிய
வெப்பங் குளிரவை
தாமவை யேயால்.
367
மரங்களை யொப்புமை
யாலுயி ரென்னக்
கிரந்தியும்
வெப்பங் கிளக்குவை யாயி
னிரந்த வுடம்பின்
விகார நினக்குப்
பரந்துண
ருண்மையைப் பார்ப்படுத் தாயால்.
368
வாட்டங்க
ளுண்மையின் வாழ்மரஞ் சேர்ந்தவை
நாட்டிய வாதலி
னல்லுயி ரோவெனக்
காட்டிய தோலொத்
திராமையும் வாடுமத்
தோட்டஞ்செய்
சேம்புயிர் தொன்முடி வன்றோ.
369
அற்ற வுடம்புக
ளாறுத லான்மரந்
தெற்ற வுயிருண்மை
செப்பத்தி னாமெனப்
பெற்ற
பிழைசொல்லிப் பித்தெழுந் தாரொப்பக்
குற்ற மிவையெனக்
கூறிதி யன்றோ.
370
காட்டின மண்ணை
முதலா வுடையன
வோட்டி யுரைத்த
வுயிரென வொட்டலர்
நாட்டினுள் வாழ்பவ
ரின்னரென் றாவந்த
நாட்டை யவரென்ன
நாட்டிய வாறே.
371
தாவர மாய மரமிவை
தாமென
யாவருஞ் சொல்லுப வஃது
மறிந்திலை
நீவி ரெவர்சொல்லச்
சொல்லினீ ரென்றுநின்
சீவரம்போற்
கட்டில் செப்புவ தென்னோ.
372
மக்களுட் டோன்றிய
போழ்த மரவுயிர்க்
கொப்ப வுடம்பறி
வன்றியொன் றில்லெனிற்
றக்கதன்
றன்மையுடைப் போதி சத்துவன்
மிக்கதென்
னோதிக்கு வேற்றுமை வேண்டார்.
373
நாண முடைய மரமுத
லியாவையும்
மூணின
வாழ்ந்துமுண் ணாவிடிற் சாதலைக்
காணவும் பட்டது
கஞ்சியோ டல்லதை
யாண மிலாப்பொரு
ளாட்சியர் போன்றே.
374
மயக்குடை மாட்சியி
னார்க்கு மரங்கட்கு மன்னுயிர்தாம்
பயப்பட வொக்கு
மெனவே யெனமன்னும் பற்றிலனாய்
வியப்புடை யாகம
மீதென நீயும் விரித்துரைக்கு
நயப்பிர மாணங்கண்
மேற்குற்ற நாடுவன் யானெனவே.
375
நிற்றலுங்
கேட்டினோ டுண்மையு மின்மையு நேர்தலினு
மொற்றுமை வேற்றுமை
தம்மையு மொட்டப் படுதலினுங்
குற்ற மிவையிவை
யாதலைக் கேளெனக் கூறினனே
முற்ற மவளது பக்க
மறிதலில் மொக்கலனே.
376
வேயொத்த தோளி
நிலையுதல் வேண்டப் படுதலினாற்
காயத்தின் றன்மைய
வாயெக் கருமமுங் காண்பரிதா
நாசத் தவமெனிற்
றோன்றுவ தாமு நவநவமாம்
தோசத்த வாநின்
பொருளெனக் கேட்டிது சொல்லினனே.
377
நின்றன வேயென்று
நில்லலவேயென்று நேர்பவர்க்கு
மொன்றென
வேயும்பின் வேறெனவேயுந்தம் முண்மையின்கட்
சென்றன வேயென்றுஞ்
செல்லலவேயென்றுஞ் செப்பினர்க்கே
அன்றென லாமோ
வறைந்தபல்குற்ற மவையவையே.
378
நின்ற குணங்களி
னித்தியமென்று நிலையிலவா
மென்ற குணங்க
ளநியத மென்று மியம்புதலாற்
சென்ற குணங்க
ளிருமையு மல்ல தவற்றினிற்றீர்ந்
தொன்றங்கு நின்ற
பொருளுள்ள தேலா தெனவுரைத்தான்.
379
கேடில வாய குணத்தி
னிலையுங் கெடுங்குணத்தி
னீடில வென்பது
நேர்ந்தினி யப்பொரு ணேர்தலில்லாய்
மூடலை யாவதன் காரண
மென்னை முடிகுணத்திற்
கூடல தாய
குணிப்பொருள் கூறினர் யாவரென்றாள்.
380
குணங்களல்
லாற்பொருள் வேறில்லை யாயிற் குறிப்பொருளாம்
பிணங்கல வாகிப்
பிறபிற வாயிற பிறபொருளா
முணர்ந்தன தாமிகு
சொல்லினு மொன்றெனி னொன்றவையா
நுணங்கிய கேள்வியி
னாயொன் றுரையென நோக்கினனால்.
381
நிலையா தெனவு முயிரில்லையென்று
நெறிமையினாற்
றொலையாத் துயரொடு
தூய்தன்மையென்றின்ன தொக்குளவாக்
கலையா
விழுப்பொருட் கந்தங்களைந்திற்கும் காட்டுதலான்
மலையா திதுநுங்கண்
மார்க்கத்தொடென்றனள் மாணிழையே.
382
ஆரிய சத்தைய
லாற்கந்தம்வேறில்லை யேற்குறியா
மாரிய சத்தையுங்
கந்தமும்வேறெனின் வேறவையாம்
போ¢வை தாமிரண் டொன்றினுக்கேயெனி னொன்றவையாங்
கூரிய சிந்தையி
னாயொன்றுசொல்லென்று கூறினளே.
383
சொல்லலன் யானெனச்
சொல்லுவையாயினுஞ் சொன்மலைவாம்
சொல்லல னென்ன
வினவினுமென்னினுஞ் சொல்லிலையாம்
சொல்லுவ னல்லன்
ஒருவகையாச் சொலினவ் வகையாற்
சொல்லிய குற்றங்க
டுன்னுமெனவது சொல்லினனே.
384
தன்மையி னன்மையுந்
தன்னல்பொருள்களி னுண்மையுந்தம்
பன்மை யுடையவப்
பண்புகளெல்லா முடனுரையுஞ்
சொன்மை யுணரா
தவர்கட்குத்தான்சொலற் பாடின்மையாற்
புன்மை யுடைய
புறத்தீருரைக்கு முரையுமென்றாள்.
385
சேற்பொருள் போலரி
சிந்தியகண்ணாய் சிதர்ந்துரைக்கு
நூற்பொரு டாம்பரி
ணாமத்திரிவென நோக்குதியேற்
பாற்பொரு டான்றயி
ராயபொழுதின்கட் பாழ்த்திலதேற்
பாற்பொரு ளேயின்
றயிரெனச்சொல்லப் பழுததென்றான்.
386
உருவப் பிழம்பப்
பொருளென்றுரைப்பனிப் பாறயிர்மோர்
பருவத்தி னாம்பரி
யாயப்பெயரென்பன் பாலழிந்து
தருவித் துரைத்த
தயிருருவாய்மும்மைத் தன்மையதாந்
திருவத்த தென்பொரு
ளாதலைத்தேர தெளியிதென்றாள்.
387
பெற்றது
தானுங்கும் மாயத்திரிபு பயற்றியல்டே
யிற்ற திதுவென
திட்டமென்பாயிவ் விரும்மையினுந்
தெற்றெனத்
தீர்ந்தோர் பொருளென்னைதேற்றினித் தேற்றிலையேன்
மற்றது வாமை
மயிரெனச்சொல்லுவன் மன்னுமென்றான்.
388
கெட்ட
திரிட்சியுந் தோன்றியசாந்தும் பொருளெனவும்
பட்டன வப்பொருள்
பையைகளேஎன்னும் பான்மையினால்
விட்ட திரள்வினுந்
தோன்றியசாந்தினும் வேற்றுமையாம்
நட்டமுந் தோற்றமு
நாட்டேனுருவிற்கு நானுமென்றாள்.
389
திரியும் பொருள்க
டிரிந்தாம்பயறுகும் மாயமுமாய்
விரியும் மெனவது
வேண்டுகின்றாயறக் கேட்டமைக்கேற்
கரியும் முடையன்
பயறொடுநீருங் கலந்துபெய்தா
லெரியுறு கின்றதன்
றேயிதுவோவொப்ப விற்றதென்றான்.
390
பருமை யுடைய
பயற்றின்வழியொன்று பாவியுண்டா
யருமை யுடையவந்
நீருக்குமாவியன் றோவதன்றி
யிருமையுங்
கெட்டுட னாயிற்கும்மாயமு மில்லற்கனும்
பெருமையி னாலொன்று
பெற்றொன்றுபேறின்மை பேதைமையே.
391
கெடுவன தோன்றுவ
நிற்பன தாமுங் குணமென்றியேற்
கெடுவன தோன்றுவ
நிற்பன தாங்குண மாயினற்காற்
கெடுவது தோற்ற
நிலையுத றானப் பொருளெனவும்
படுவஃ தாக வுரைப்ப தியாதின்
பவத்ததென்றான்.
392
கூறிய தெக்குண
மக்குணந்தானக் குணிப்பொருளே
தேறிய தெக்குணி
யக்குணிதீர்ந்தில பல்குணமும்
வேறென வொன்றென
வில்வகைவேண்டுகின் றேற்கவைதா
மாறென்னுங் கொள்ளா
முடிபுமொழிநின் மயக்கமென்றாள்.
393
புற்கல மாய
முதற்பொருடத்தமுட் புல்லினவாய்க்
கற்களு நீருந்
நிலத்தொடுகற்றழ லென்றினைய
பற்பல கூற்றாற்
பிறங்கிப்பரக்குந் தியமென்னையோ
வுற்றவை
யொன்றொன்றி னுட்புகுமோத்துடை யாய்க்கெனலும்.
394
யாத்தற் கமைந்த
குணத்தின வாய வணுப்பொருள்க
ணீத்தற் கரியன
நீத்த வருக்க நெறிமையினா
லேத்தற் கியைந்த
விரண்டணு வாதியி னின்னணமா
மோத்திற்கிடந்த
வகையிது கேளென் றுரைத்தனளே.
395
இரண்டணு வாதியி
னின்னணமேறுநின் கந்தமெனிற்
றிரண்டன
வாய்த்தம்முட் சென்றுடன்றீண்டு மிடத்தவைதா
முருண்டன தாமொன்றி
னுள்ளும்புடையு முடைமையினாற்
றெருண்டனம் பாகுபா
டுற்றற்குமென்றனன் றேரனுமே.
396
ஓரிட மாய முதற்
பொருட் குள்ளும் புடையுஞ்சொல்லிப்
போ¢ட மாக்கிப் பிளப்ப னெனவும் பிதற்றுகின்றா
யாரிட மாய
வறிவிற்கு மின்னண மாதலினா
னோ¢டத் தாற்பன்மை யெய்தி யுருவா நெறியுமென்றாள்.
397
வண்டாயுங் கோதாய்
வரைநெல்லியின் காய தங்கை
யுண்டாய போதே
யுறையூரகத் தில்லை யென்பாய்
கண்டாயிம்
மெய்ம்மை பிறர்காண்டற் கரிய தென்றான்
பெண்டான மீயு
மறங்கொண்ட பெருமை யினான்.
398
வெய்தாய தீயுங்
குளிராகிய நீரும் விண்டோய்ந்
தைதாய காற்று
மவையாரு மறிப வென்றாற்
பொய்யாகு மென்னா
யவைபுத்த வசன மென்பாய்
செய்தாய் முழுக்கூ
ழதுபோலச் சிதைக்க வென்றான்.
399
கந்தின்கட்ட
காணாய் களியானையை யில்லை யென்பாய்
வந்திங்க ணின்ற
பொழுதுண்மை மறுக்க லாமோ
தந்திங் குரைத்த
வுரைதானுங் கெடுக வென்றான்
வெந்திங்கு
வித்தின் னனைத்தாகிய வீடு கண்டான்.
400
ஆண்டில்லை யென்பன்
னதுவுள்வழி யுண்டு மென்ப
னீண்டின்மை யுண்மை
யிவையாக விசைத்து நின்றேன்
வேண்டி யனவே
முடிப்பாய்விரி பொன்னெ யிலு
ளீண்டி யிமையோர்
தொழுவானெம் மிறையு மென்னாய்.
401
கொல்லேற்றின் கோடு
குழக்கன்றது வாயி னக்கா
லில்லாகு மென்றி
யிவையிங்ஙன முண்மை யின்மை
சொல்லேனு மல்லே
னதுசொல்லுவன் யானு மன்னாய்
கொல்லேற தாகப்
பொழுதேயுடன் கூறு கென்றான்.
402
ஏறாய காலத்
தெழினல்லது வத்து பேதங்
கூறாரெ ழாத
குழக்கன்றினுக் கின்மை முன்னா
வீறாகி நிற்கும் முதலுண்மையிற்
கின்மை யெங்கு
மாறியாது மில்லை
கலைக்குண்மையு மற்றுமென்றாள்.
403
கன்று முயலுங்
கழுதைப்பெயர் பெற்ற னவுங்
குன்றுந் தலையுட்
பெறப்பாடெய்தல் கோடு றுப்பா
வென்றும் மவற்றுக்
கெழலில்லைநின் பேத மென்றாற்
சென்றுஞ் சிலவிற்
சிலவின்மையு மாகு மென்றான்.
404
இல்லாத கோட்டை
யுளதாக வெடுத்து மென்று
சொல்லார்கள் பேதம்
சொலவேண்டுவை யாயி னக்காற்
புல்லாது நில்லாப்
பொருடங்களுக் குண்மைக் கின்மை
கல்லாது நீயுங்
கழுதைக்கருள் செய்தி யென்றாள்.
405
இல்லை வலக்கை
யிடக்கைவகை யால தென்றுஞ்
சொல்லின் னதற்கு
மதுவேயெனுஞ் சூழ்ச்சி மிக்கா
யொல்லை யிரண்டு
முளவாக வுணர்ந்தனை நீ
நல்லை பெரிதும்
மெனமொக்கல னக்க னனே.
406
இக்கை வகையா
லதுதானுள தாயி னக்காற்
றொக்க விரண்டும்
முடனாதலிற் றூய்தொ ருபால்
பக்கம் மதுவும்
படுபாழினிக் காலு மற்றாய்ச்
செக்கின்கணைபோன்றினிச்
சென்றுருள் சேம மென்றாள்.
407
கைகால் வகையால் பெறப்பாடிலை
காலு மற்றாய்
மெய்தா மொழிய
வவைபாறெய்தல் வேண்டு தலாற்
கொய்தார்
நறும்பூங் குழலாய்குழ மண்ணர் களாச்
செய்தா யுலகிற்
சிறுமானுயர் தம்மை யென்றான்.
408
கால்கால் வகையா
லுளகைகளுங் கையி னற்றாய்ப்
பாலாய் முடியு
மவைபண்டை யியல்பி னாலே
யேலா திவைதா
முளவெத்திறத் தானு மென்னி
னாலாவ தான முடிவி
னாயொடு நண்டு மொத்தாய்..
409
அல்லென் றுரைத்த
வுரைதானுமெம் மாக மத்து
ளில்லென்ற வாறென்
றிவையிங்ஙனம் வேண்டு கின்றாய்
சொல்லன்று நாயைந்
நரிதானென்னச் சொல்லு கின்றா
னில்லென்ற வாறோ
நரிதன்னையு மென்ற னனே.
410
நாய்கொன் னரிகொல்
லெனத்தோன்றுமுணர்வு நண்ணி
யாய்சொல்
லிரண்டின் னுணர்ந்தல்லதுவன்மை யென்றாய்
நீசொல் லறியா
யறிவார்நெறிநேடு கில்லாய்
பேய்சொல் லுபவே
பலசொல்லிப்பிதற்ற லென்றாள்.
411
பேரும் உணர்வும்
பொருளில்லதற் கில்லை யென்றி
சார்வும் மகல்வுந்
தலைப்பெய்தலோ டுள்ள மின்மை
நோ¢ங் கிவையு முணராமையிற் கென்ற னனாய்த்
தேரன் சிறிதே
தெரிகோதையை நக்க னனே.
412
ஆத்தன் னுரைத்த
பொருடன்னையவ் வாக மத்தாற்
சாத்தன் பயின்றா
லறியாவிடுந் தன்மை யுண்டோ
வீர்த்திங்
குரைத்த பலதம்முளொன் றின்ன தென்னா
யோத்தின் வகையாற்
பெயரோடுணர் வின்மைக் கென்றாள்
413
ஒன்றி னியற்கை
யொருவான்பொருட் கில்லை யென்றே
யென்று முரைத்தி
யிரும்பெய்திய வெம்மை யந்நீர்
சென்றும் மறுகித்
தீக்குணஞ் சேர்ந்த தற்றேற்
குன்றும் பிறவோ
வினிநீண்ட கோளு மென்றான்.
414
கொண்ட
வுடம்போடுயிர் தானுடன் கூடி நின்றாற்
கண்டு முணர்ந்து
மவையாவதென் கல்வி யில்லா
யுண்டங்க ணின்ற
வுயிர்க்காக வுரைப்ப தொக்கும்
பிண்டந் நிகழ்ச்சி
பிழைப்பாகு நினக்கு மென்றாள்.
415
மெச்சி யிடத்தாற்
பிறிதின்மை விளம்பு கின்றாய்
பிச்சை முதலாப்
பெரிதாவறஞ் செய்த வன்றா
னச்செல் கதியுள்
ளமரன்னெனப் பாடு மின்றே
விச்செய்கை யெல்லா
மிகழ்வாம்பிற வென்ற னனே.
416
ஊனத்தை யின்றி
வழங்காவுழல் கின்ற போழ்து
மானத்தி னீங்கி
வதங்காத்து வருந்தும் போழ்தும்
வானத்த தாய
பொழுதுமன் னுயிர தென்றா
டானத்தி னுண்மை
யிதுதத்துவ மாக்கொ ளென்றாள்.
417
காலம் பிறிதிற்
பொருளில்லெனக் காட்டு கின்றாய்
ஞால மறியத்
தவஞ்செய்தவ னல்லு யிர்தா
னேலங்கொள் கோதா
யெதிர்காலத்தி னின்மை யாமேற்
சீலங்கள் காத்தல்
வருத்தஞ்சிதை வாக வென்றான்.
418
ஆற்ற வருந்தித்
தவஞ்செய்து மரிய காத்துந்
நோற்றும் பெரிதுந்
நுணுகாநின்ற பொழுதி னானும்
மேற்ற முடைய
விமையானெனப் பட்ட போழ்துஞ்
சாற்றி னுயிர்தன்
பொழுதே யுண்மை தங்கு மென்றாள்.
419
நூறா னிரும்பாய்
நிகழாமை நொடிதி யாங்கே
பாறான் றயிரா
மெனநின்று பயிற்று தியான்
மாறா னுடையா
ருரையொக்குநின் மாற்ற மென்னாத்
தேறார் தெருண்டா
ரெனச் சொல்லினன் றேர னும்மே.
420
தத்தந் நிமித்தந்
தலைப்பெய்துதங் காரி யம்மா
யொத்த பொருள்க
ணிகழ்வாக்க முரைத்து நின்றேன்
பித்தனி னோப்பப்
பிறிதிற்பிறி தாமென் பனோ
வித்தின் வழியா
னுரைநீயும்வெள் யானை யென்றாள்.
421
கூடா பொருள்கள்
பிறிதின்குணத் துண்மை யென்பாய்
பாடாஅலப் புட்பத்
தனவாகிய பண்பு நாற்றம்
மோடாவ தெய்திற்
றெனவையமுரைக் கின்ற தஃதா
னாடாது சொன்னா
யதனன்மை யொழிக வென்றான்.
422
போதுக்க வாசம்
புதுவோட்டைப் பொருந்தினாலும்
மேதக்க நாற்ற
மிதுபூவின தென்ப மிக்கார்
தாதுக்க நின்று
மவைபோக்குந் ததாக தற்கென்
றேதுக்கள் காட்டி
முடித்தாளிணை யில்ல நல்லாள்.
423
வீட்டிட மென்று
நின்னால்வேண்டவும் பட்ட தன்னை
நாட்டுவ னதுவு
நாயிற்கென்றுநன் றென்றி யாயிற்
சூட்டடு நரகந்
தானுஞ்சுடர்ந்தநற் சுவர்க்கந் தானும்
பூட்டின முரைத்த
வக்காற்போந்ததங் கென்னை யென்றான்.
424
கதியின வகைய
வாறுங்கந்தபிண் டங்கள் சொன்னான்
பதியின வென்ன
நின்றாய்பாக்கனாய் காட்டு தீயால்
விதியினின்
விளையட் டார்தம்வீட்டிட மின்ன தென்றாற்
கதுவென்னை யென்னச்
சொன்னாலாகம மல்ல தாமோ.
425
பேர்த்தினவண் வார
லில்லாப்பிறவியாந் தான மென்னிற்
றீர்த்திவண் வார
லின்மைசேர்விடக் குண்மை யாமோ
கூர்த்தலில்
வினையி னின்மைகூறுவ னென்றி யாயி
னார்த்துள னவனே
யாயினண்ணுமே வினையு மென்றான்.
426
பிறப்பதை வீடு
மென்னேனவ்விடம் பேர்ப்பின் றென்னே
னுறத்தகு வினைக
டாமுமுண்மையா லொட்டு மென்னேன்
மறத்தலில் யோக
பாவமாசதா மீட்டு மென்ப
திறப்பவும் வேண்டு
கின்றேற்கெய்தல நின்சொ லென்றாள்.
427
பிறக்குந்தன்
ஞானத் தாலும்பின்னுந்தன் னுண்மை யாலும்
புறப்பொருள்
கொண்டு நின்றுபுல்லிய சிந்தை யாலுஞ்
சிறப்புடை வீடி
தென்றுசெப்புநீ தீவி னையைத்
துறக்குமா றில்லை
நல்லாய்சொல்லுநீ வல்ல தென்றான்.
428
நன்றியில் கார
ணங்கணாட்டிநீ காட்டி னவ்வு
மொன்றுநா னொட்டல்
செல்லேன்யோடுகொடு பாவ நின்றாற்
குன்றினிற்
கூர்ங்கை நாட்டாற்கூடுநோ யாதிற் குண்டோ
வொன்றுநீ யுணர
மாட்டாயொழிகநின் னுரையு மென்றாள்.
429
கருவிதா னொன்று
மின்றிக்கடையிலாப் பொருளை யெல்லா
மருவிய ஞானந்
தன்னாலறியுமெம் மிறைவ னென்பாய்
கருவிதா னகத்தி
னாயகடையிலா ஞான மன்றோ
மருவியார்க்
கமிர்த மொப்பாய்மாற்றந்தா விதனுக் கென்றான்.
430
வினையுமவ் வினையி
னாயவிகலஞா னங்க டாமு
மினையவே கருவி
யென்றாலிங்குநின் னுள்ளம் வையாய்
முனைவனாய்
மூர்த்தி யல்லான்மூடுமே மாசு மென்பாய்
கனைகட லென்லை
காணுங்காக்கையொத் தாங்கொ லென்றாள்.
431
கொண்டதன் கரணந்
தானுமில்லையேற் கூற்று மில்லை
மண்டினர் வினவு
வார்க்குமலைச்சிலம் பனைய னென்றா
லுண்டுதன் கரணந்
தானுமுரைக்குநர்க் குறுவ னென்னிற்
பண்டுசெய் நல்வி
னையைப்பகவனே யென்று மென்றான்.
432
தனுவெனுங் கருவி
தன்னாற்றன்னடைந் தார்க டன்னை
வினவின வுணர்ந்து
சொல்லும்வினையினுக் கின்ன துண்டோ
சினவினுந் தேர
வொன்றுசெப்புவன் செல்க தீயுட்
கனவினு நின்ன
னாரைக்காணல னாக வென்றாள்.
433
முறையினா லறிய
லன்னேன் மூத்தலே யிளமை சாக்கா
டுறையல வொருவன்
கண்ணே யுடனவை யாக வொட்டி
னிறைவனா ருணர்வு
தானுமின்மைமே லெழலும் வேண்டி
யறைதுநா மன்ன
மன்னா யன்னண மாக வென்றான்.
434
சீலவான் றெய்வ
யாக்கைதிண்ணிதா வெய்தி நின்றார்
காலமூன் றானு
முய்த்துக்காட்டலுங் காண்டு மன்றோ
ஞாலமூன் றானு
மிக்கஞானவா னான நாதன்
போலுமென் றோர்தல்
செல்லாய்போர்த்தனை யகமு மென்றாள்.
435
நாளெல்லா மாகி
நின்றநன்பொரு டம்மை யெல்லாங்
கோளெல்லாந் தானொ
ருங்கேகொள்ளுமே லீர்ங்கு வள்ளைத்
தாளெல்லாந் தானொ
ருங்கேதானுநல் லானோர் நல்ல
வாளினா லேறு
முண்டேல்வாய்க்குநின் னுரையு மென்றான்.
436
நீருநீர் தோறு
முவ்வாநலையிற்றே திங்க ளென்று
மூரினூர் தோறு
மொவ்வாவொளியிற்றே ஞாயி றென்றும்
யாரின்யார் கேட்ட
றீவாரன்னனே யண்ண லென்றார்
தேரனீ சொன்ன
தன்னம்சேரல வாக வென்றாள்.
437
அளவிலாப் பல்பொ
ருள்கட்காகுபண் பாகி நின்ற
வுளவெலாப்
பொதுக்கு ணத்தானொருங்குகோ ளீயுமென்னிற்
பிளவெலா மாகு
மன்றேபெற்றிதா மொத்த லில்லேற்
கொளவெலா ஞானந்
தானுங்கொள்ளுமா றெவன்கொ லென்றான்.
438
ஒன்றல்லாப் பலபொ
ருளுமொத்தொவ்வாப் பெற்றி யாலே
நின்றுகோட் செய்யு
மென்றானீடிய குற்ற மாகா
தென்றலா லின்ன
தன்மையிறைவன தறிவு மெய்ம்மை
யின்றெலாங் கேட்டு
மோராயேடனீ யென்று சொன்னாள்.
439
எல்லையில் பொருள்க
டம்மை எல்லையி லறிவி னாலே
யெல்லையின் றறியு
மெங்க ளெல்லையி லறிவ னென்பாய்
எல்லையில் பொருள்க
டம்மை யெல்லையின் றறியி னின்ற
வெல்லையி லறிவு
தானு மெங்ஙன மெய்து மென்றான்.
440
துளக்கில்லாப்
பலபொ ருளுந்தொக்கதன் றன்மை யெல்லாம்
விளக்குமே ஞாயி
றொப்பவென்பது மேலுஞ் சொன்னேற்
களக்கிவர் தன்ன
மன்னாயாத்தன தறிவு மென்றென்
றிளக்கிநீ யின்னு
மஃதேசொல்லுதி யேழை யென்றாள்.
441
ஓதலி லுணர்வு
மின்றேலூறவற் குண்டு மாகு
மோதலி லுணர்வு
முண்டேலொன்றுமே பலவும் வேண்டா
மோதலி லுணர்பொ
ரூடாமுள்ளவும் மில்ல வும்மே
லேதமா மில்பொ
ருண்மேனிகழ்ச்சிதா னிறைவற் கென்றான்.
442
சென்றவக் குணங்க
டாமுஞ்செல்லுமக் குணங்க டாமு
மன்றையக் குணங்க
டாமுமப்பொருட் டன்மை யாலே
நின்றதன் ஞானந்
தன்னானிருமல னுணரு மென்றாற்
பொன்றின வெதிர்வ
வென்றல்பொருள்களுக் கில்லை யென்றாள்.
443
பிறவிதா னொன்று
மில்லான்பெரியனே யென்று நின்றான்
மறவிதா னில்லை
யோனிமன்னுநான் கென்னு மில்லா
னறவியா யுந்த
நூலுள் ளாத்தனா மாயி னக்காற்
புறவினிற் புரளுங்
கல்லும்புண்ணிய னாக வென்றான்.
444
பிறத்தலே தலைமை
யாயிற்பிள்ளைக ளல்ல தென்னை
யறக்கெட றான
தென்னிலட்டக வித்து வெந்தாம்
புறப்படும் போர்வை
யாலேற்புண்டொழு நோய ராகச்
சிறப்புடை யண்ண
றன்னைக்கல்லெனச் சொல்லு வாய்க்கே.
445
அடைவிலா யோனி
யானாயாருமொப் பாரு மின்றிக்
கடையிலா ஞான
மெய்திக்கணங்கணான் மூன்றுஞ் சூழ்ந்து
புடையெலாம் போற்றி
யேத்தப்பொன்னெயிற் பிண்டி மூன்று
குடையினா னிறைவ
னென்றாற்குற்றமிங் கென்னை யென்றாள்.
446
கோதியிட் டுள்ள
தெல்லாங்குண்டல கேசி யென்பா
ளாதிசா லாவ
ணத்துளார்கதர் தம்மை வென்ற
வீதியீ தென்று
சொல்லிவீழ்ந்தனை நீயு மென்றா
ணீதியாற் சொல்லி
வென்றநீலமா கேசி நல்லாள்.
447
பேதைக ளுரைப்பன
வேசொல்லிப்பெரிதலப் பாட்டினைநீ
பேதைமற் றிவன்பெரி
தெனப்படும்கருத்துடை மிகுதியினாய்
தாதையைத் தலைவனைத்
தத்துவதரிசியைத் தவநெறியி
னீதியை யருளிய
நிருமலன்றகைநினக் குரைப்ப னென்றாள்.
448
பகைபசி பிணியொடு
பரிவின பலகெட
முகைமலர் தளிரொடு
முறிமரம் வெறிசெய
மிசைநிலம்
விளைவெய்த விழைவொடு மகிழ்வன
திசைதொறு மிவைபிற
சுகதன செலவே.
449
குழுவன பிரிவன
குறைவில நிலையின
எழுவன விழுவன
விறுதியி லியல்பின
வழுவலில்
பொருள்களை மலர்கையின் மணியென
முழுவது முணருமெ
முனைவர னறிவே.
450
நிறைபொறி யுளவவை
யறிதலி னெறிமைய
முறைபொரு ணிகழினு
முறைபடு மறிவிலன்
மறைபொரு ளுளவவ
னறிவினை மறையல
விறைபொருண்
முழுவது மறிதிற மிதுவே.
451
பிணிதரு பிறவிய
மறுசுழி யறுவதொர்
துணிவிது வெனநம
துயர்கெடு முறைமையு
மணிதரு சிவகதி
யடைதலு மருளுதல்
பணிதரு பரமன
தருள்படு வகையே.
452
சொரிவன மலர்மழை
துளிகளு நறுவிரை
புரிவன வமரர்கள்
புகழ்தகு குணமிவை
விரிவன துதியொலி
விளைவது சிவகதி
எரிவன மணியிதெ
மிறைவன திடமே.
453
அரசரு மமரரு
மமர்வனர் வினவலின்
வரைவில பிறர்களு
மனநிலை மகிழ்வெய்த
உரைபல வகையினு
முளபொரு ளுணரவொர்
முரைசென வதிருமெ
முனைவரன் மொழியே.
454
வினையிரு ளடுவன
விரிகதி ரியல்பொடு
கனையிருள் கடிவன
கடுநவை யடுவன
மனையிரு ணெறிபெற
மதிகெட வடைவன
வினையமெ யிறையவ
னிணையடி யிவையே.
455
ஆத்த னிவனென் றடிக
ளிடமிசைப்
பூத்தனைத் தூவிப்
பொருந்து துதிகளி
னேத்துநர் கண்டா
யிருவினை யுங்கெடப்
பாத்தில் சிவகதிப்
பான்மைய ரென்றாள்.
456
ஏந்த றிறங்க
ளிவையே லமைந்தன
போந்த வகையாற்
பொருளும் பிழைப்பில
வீந்த விவற்றினின்
வேற்றுமை வீட்டிற்கு
மாய்ந்த வகையா
லறிவிமற் றென்றான்.
457
வித்தென்றும்
வெந்தால் முளையல தாயெண்மை
யொத்தினி துண்டா
முயிரும் பிறப்பின்றிச்
சித்தி யகத்துச்
சிதைவிலெண் டன்மையி
னித்திய மாகி
நிலையுள தென்னாய்.
458
ஒக்கு மிதுவென
வுள்ளங் குளிர்ந்தினி
மொக்கலன்
சொல்லுமிம் மோக்கத்தைப் பாழ்செய்த
தக்கில தாகுந்
தலைவ ரியல்பென
நக்கன னாய்க்கென்று
நன்னுத லென்றான்.
459
பண்டே யெனக்கிம்
மயக்கம் பயந்தவன்
கண்டார் மயங்குங்
கபில புரமென்ப
துண்டாங் கதனகத்
தோத்துரைக் கின்றனன்
றண்டா தவனொடு
தாக்கெனச் சொல்லி.
460
சிறப்பின
தென்பதைச் செப்பலுந் தெற்றெனப்
பிறப்பறுத்
தின்பெய்தும் பெற்றியின் மிக்க
வறப்புணை யாகிய
வாயிழை யாயான்
மறப்பில னென்று
வலஞ்செய் தொழிந்தான்.
461
அருளே யுடைய னறனே
யறிவா
டெருளா தவரைத்
தெருட்டல் லதுவே
பொருளா வுடையாள்
புலனே நிறைந்தாள்
இருடீர் சுடர்போ
லெழுந்தா ளவன்மேல்.
462
No comments:
Post a Comment