அர்க்க சந்திர
வாதம்
உஞ்சை மாநக
ரெய்தின ளாயத
னிஞ்சி மாட்சியு
மெல்லையில் செம்மலு
மஞ்சு தோய்நெடு
மாடமும் வீதியு
மஞ்சி லோதி யவையவை
கண்டபின்
232
பருக்கை மால்களி
யானைப்பல் வேந்தரு
மிருக்க போதக
வென்னும் பெருமையான்
றருக்க நீட்டமுந்
தன்னிக ரில்லவ
னருக்க சந்திர
னென்னு மவாச்சியன்.
233
போதி சத்துவர்
புத்த ரெனப்படு
நீதி யிற்பெரி
யாரன நீரமையா
னோதி நூன்மும்மை
யொப்ப வுணர்ந்தவன்
வாதி கட்கோர்
வயப்புலி யேறனான்.
234
மாடமோங்கி
மழைநுழைந் தின்குயில்
பாடு பூம்பொழிற்
பாங்கரோர் பள்ளியுட்
பீட மேறிப்
பெருந்தகை யார்க்கெலாம்
வீடு பேறும்
வினையு முரைப்புழி.
235
சென்று தானெய்திச்
சிற்பிடத் தாற்புக்குத்
துன்று நீண்மணித்
தூணணிந் தெண்ணென
நின்று நீலவைம்
பாற்பெய ராளுமங்
கொன்று பல்வகை
யோத்துரை கேட்டனள்.
236
கொள்ளு மாறுந்தன்
கோரகை யுட்கஞ்சி
மொள்ளு மாறு
முதுகு நெளித்துண்டு
னள்ளு மாறு
மணலெடுத் திட்டவை
மெள்ள மெள்ள
விழுங்கு மவைகளும்.
237
வழிக்கு மாறுந்தம்
மண்டையி னுண்டுமன்
ஒழிக்கு மாறுமஃ தூட்டு மவைகளும்
மழிக்கு மாறுந்
தலைகளை மையிட்டு
விழிக்கு மாறும்
வினைய விதியினால்.
238
இனைய வேசொல்லி
யிட்ட தலையராய்
வினைய நூலை
வியப்பெய்து வார்க்கெலா
மனைய தேநு மறநெறி
யென்றனள்
முனைவன் றன்னெறி
முன்ன முணர்ந்தவள்.
239
அவ்வு ரையம ரானுய
ராசனச்
செவ்வ ரைம்மிசைத்
தீத்திரள் போல்பவ
னிவ்வு ரையிவ
ணென்னெனச் சொல்லினான்
றெவ்வ ரைத்திறல்
வாட்டிய திண்மையான்.
240
வீரஞ் செய்து விழியல்
வினையநூல்
பேர தஃதேல் பெரிது
மழகிதே
யோரு மஃதோ
ருறுவினை யென்பதைத்
தேரச் சொல்லுநின்
றிண்பொரு ளென்றனள்.
241
வினைய தாகிய
பெற்றி விரித்துநீ
தினையி னேரும்
தெருட்டெனக் கென்னவே
அனைய வவ்விர தத்தோ
டறிசல
மினைய கேளென்
றெடுத்தன சொல்லுமே.
242
தன்னை யீந்ததும்
தாரங்க ளீந்தது
மன்ன தன்பொருள்
கேட்டறங் கொண்டவன்
மன்னு மில்லயன்
மாந்தரைக் காணுமேற்
பின்னைச் செய்வன
பேசலு மாகுமோ.
243
காம மூரிற் கணிகைய
ரோடன்ன
தூய்மை யுண்மையிற்
றோற்றங் கரந்தவட்
சேம மாவகைச்
செல்கமற் றென்பதும்
வாம நூலின்
மறைபொரு ளல்லவோ.
244
சிங்க தத்த
ரெனப்படுந் தேரனார்
சங்க போதியி
லாள்கட் டயாச்செய
விங்கி தென்னென
வேழாய் தவசிகட்
கெங்கெங் காமி
லெனவுரைத் தானரோ.
245
யாது மில்லை
யுயிரென் றறநெறி
யோதி னானவ்
வுயிரிலி தன்னொடு
வேத னைதணிப்
பான்வினை வீட்டிற்கும்
சாத னைநிற்குஞ்
சத்துவ னாமென்றீர்.
246
சித்த மோடிக்
கலங்கித் திரியாத
நத்தம் பெற்றது
நற்றவ மேற்கொண்டான்
பத்தின் மேலும்
பழிசெய்யு மேற்பள்ளி
வத்தன கண்டீர் வழக்கின்கட்
கூரியீர்.
247
போதி யாருரு
வெய்திய புற்கலர்
வேதி யாற்கிடந்
தாருள ராயினான்
ஞாதி யாரென
நாட்டிய கூட்டமும்
ஓதி வைத்ததொன்
றுண்மை யுணர்த்துமால்
248
ஆரம் பிச்சி
யலிவிலங் கவ்வுருச்
சீரிற் கொத்தாள்
கணிகை தெருண்டாள்பெண்
ஒரு மில்லா
ளுயிரிலி யூமையுந்
தார மாக்கொஃடி
ரென்றல் சலமதோ.
249
பிறந்த வில்லினுள்
வாழ்க்கை பிழைப்பெனு
மறங்கொண் டான்கொண்
டவாச்சிய வேடத்தாற்
சிறந்த வல்லன
சிங்கின வெங்கணுந்
துறந்த வான்பொருள்
சொல்லவும் வல்லையோ.
250
உரைப்ப பேரரு
ளுண்பன மீனொடூன்
றிரைப்ப மெல்லனை
செய்வ விழுத்தவம்
கரைப்ப தீவினை
கண்டது சூனியம்
புரைப்பின்
மார்க்கம் பொருத்த முடைத்தரோ.
251
எல்லா மசுசியு
மென்ப வனவா
லல்லா லழுக்குற்
றவனடிக் கேத்தலர்
சொல்லார் சுகமுஞ்
சுகத னவனென்று
பல்லார் வருத்தம்
பழுதெனப் பண்ணுப.
252
நிலையா
வெனெச்சொல்லி நேர்ப்ப பொருடூயே
மலையோ ரனையந்ன்
மாட மெடுப்ப
விலையே யுயிரென்
றிறந்த நினைப
புலைசே யமர்ந்தவர்
புத்தியின் வண்ணமே
253
மயித்திரம்
பாவித்து மற்றவற் றூனை
யசிப்பன வேபோ
லமர்ந்ததிருந்த துண்ணுஞ்
சயித்தியங் காணித்
தலையினை முட்டும்
பயித்தியங்
கொண்டவர் பண்புமாஃ தொக்கும்
254
புத்த
ருருவுக்கும் போலிக்கும் போலியை
மத்தகத் தேத்தி
வணங்கி வழிபடுஞ்
செத்த பொழுதினச்
செந்தடி மென்றிடு
மத்த னுடைய
வருள்வகை வண்ணம்.
255
பேனறாக் கூறை
பெருமுடுகுநாறுமேற் றுக்கந் துக்கம்
மானறா நோக்கி
மணற்சுமையுந்தான்பெரிதாற் றுக்கந் துக்கந்
கூனிறாக்
கண்டாலுங் கொள்ளமுடியாதேற் றுக்கந் துக்கந்
தானறாப் பஃறொழிலுந்
தான்றுக்கமாதலாற் சருவ்வந் துக்கம்.
256
பொய்பொத்திச்
சொல்லினவும்போங்கூலி கொண்டனவும்
வையத்தஞ்
சுட்டனவும்வாழ்மருது கொன்றனவும்
கையத்தி
னூனுக்கேகன்றிக் கலாய்த்தனவு
மையத்தை யின்றியடுப
வாலோவழல்நரகத் துள்ளேயடுப வாலோ.
257
பற்றே
மிகப்பெருக்கிப் பஃறொடர்ப்பா டேயாக்கி
யற்றீர் போற்
காட்டி யடைக்கலமே வவ்வுநீர்
பெற்றீரே பேயுடம்
பன்றேற் பெரும்பாலு
மெற்றே யிருணரகிற்
கீர்க்கு மாலோ
விரக்கமொன்
றில்லீரை யீர்க்கு மாலோ.
258
ஆங்கவ
ளறங்கூறக்கேட்ட வவாச்சியன்றான்
றேங்கம
ழொலிகோதாய்சித்தமே யல்லதில்லை
தீங்கொழுக்
கென்றதெல்லாந்தீவினையென் னல்வேண்டார்
பூங்கமழ்
காராடைபோர்த்தவெம் புத்தரென்றான்
259
துத்தலே
வேண்டிநின்றுதோந்தொடர்ப் பாடுநீக்காய்
சித்தமே
நல்லதென்றாற்றேற்றலு மாவதுண்டோ
கத்திகொண்டில்
லில்வாழ்பேய்காறலை வேறுசெய்து
குத்தவதின்
னும்போழ்திற்கூடுமோகன் மையேடா.
260
உள்ளமும்
பாயிரம்மு மொக்குமேல் வீடுமுண்டாம்
கொள்ளுமேற் குற்றமஃதாக்
கூடுமே பற்றுமாங்கண்
விள்ளுமேல் வேறதாய
வேடமு மன்னதேயாங்
கள்ளமே
சொல்லிநின்று கன்றினாற் காட்டலாமோ.
261
புனைந்துநீ
சொல்லும் வீடும்போகவுண் டாக தந்தே
நினைந்துநாங் காணி
னெல்லாநின்றதொன் றில்லை யென்றாற்
றுனைந்துதா னுண்மை
நன்றுசூனிய மாதற் கென்றாட்
கினைந்தினைந்
தேங்கி நல்லாயென்செயற் பால தென்றான்.
262
செத்தவ ரப்பொழுதே
தேவருட் செல்பவேனு
மத்தலை
யின்பநோக்கா ரஞ்சுவ மாக்களந்தோ
தொத்துள
வாகவென்னான் சூனிய வீடுசொன்ன
புத்தனை நோதுமத்த
புலம்பனீ போகவென்றாள்.
263
புன்னெறி
யவைகளெல்லாம்போக்கிய பாக்கியத்தாய்
நன்னெறி
நன்ஞானங்காட்சியு நன்குகொண்டென்
சொன்னெறி
திரிவாயேற்சோர்வில்பே ரின்பமெய்தி
மன்னுதி
யென்றுமற்றுங்கூறினாண் மாதராளே.
264
காட்டுழல் களிநல்
யானைகால்கையி னோர்ப்பித் தேறித்
தோட்டியிட் டூர்வ
தேபோற்சூரிய சோமன் றானும்
வாட்டடங் கண்ணி
நல்லாள்வாக்கெனுந் தூக்க யிற்றாற்
பூட்டுபு கொள்ளப்
பட்டான்போதியார்க் காதி யன்னான்.
265
அருக்கமா
சந்திரனையறங்கொளீஇ யாங்கவனை
யிருக்கும்வா
யொருப்படுத்திங்கீதுநுனக் குரைத்தாரைப்
பொருக்கநீ
சொல்லென்னப்புத்தனார் முதன்மாணி
முருக்குவாய்சென்
றவனாம்மொக்கல னெனச்சொன்னான்.
266
நீவருத
லொழியென்றுநிறைபதும புரத்துக்கே
மாதிரந்தா
னெறியாகமனம்போலச் சென்றெய்தி
மூதுரையுங்
காரணமுமுழுதெழுதி யழகிதாய்ப்
போதுகளும்
பொன்மணலும்புனைந்தினிய பொலிவிற்றாய்.
267
No comments:
Post a Comment