கடவுள் வாழ்த்து.
நல்லார் வணங்கப்
படுவான்பிறப் பாதி நான்கு
மில்லா னுயிர்கட்
கிடர்தீர்த்துய ரின்ப மாக்குஞ்
சொல்லான் றருமச்
சுடரானெனுந் தொன்மை யினா
னெல்லா முணர்ந்தா
னவனேயிறை யாக வேத்தி.
1
அன்னான் பயந்த
வறவாரமிர் துண்டு நின்றார்
இன்னா ரினைய
ரெனவேண்டுவ தில்லை யார்க்கும்
பன்னாந் துணையும்
பணிந்தாகிய பத்தி யினா
னென்னா லுரைக்கப்
படுகின்றதொன் றீங்கு ளதே.
2
பண்டாக மத்துட்
பயிலாவுரை யென்று மிக்கார்
விண்டீங் கிதனை
வெகுளார்விடல் வேண்டு வன்யான்
தண்டா மரைமே
னடந்தான்றடந் தாள்வ ணங்கிக்
கண்டேன் கிடந்தேன்
கனவின்னிது கண்ட வாறே.
3
ஆய்நீல வுண்க
ணவளாயடங் காமை செய்யும்
பேய்நீல கேசி
பெரியோனறங் கொண்ட பின்னைத்
தீநீல வுள்ளந்
திரிந்தேறு திருவத் தளாய்
மாஞால மெல்லா
மறமாற்றிய மாட்சி யளா.
4
தேவன் னுரைப்பத்
தெளிந்தேன்பிற் றெளிந்த வெல்லாம்
மாவென் றுகொண்டேன்
மடனேவலி யாக நின்று
நாவல் புலவ
ரவைநாப்பண்ணி நாட்ட லுற்றேன்
பாவின் னவென்று
பழிப்பாரினி யில்லை யன்றே.
5
கண்டிங்கு நாளுங்
கடல்வையகங் காதல் செய்யும்
வெண்டிங்க டானும்
விமலந்தனக் கில்ல தன்றே
கொண்டென்சொ
லெல்லாங் குணனேயெனக்கூறு கென்னே
னுண்டிங்கோர்
குற்ற மெனில்யானுமொட் டாமை யுண்டோ.
6
தெள்ளி நரைத்துத்
தெருளாதுறு தீமை செய்யும்
புள்ளி னுரையும்
பொருளாமெனக் கோட லினா
லெள்ளுந் திறத்த.:
துரையென்றிது நீக்க லின்றாய்க்
கொள்ளும் முலகங்
குணமாணறம் வேண்டு மென்றால்.
7
பதிகம்
நாடும் மநாடா
ளரசுந்நக ருந்நகர்சூழ்
காடுங் கடவுள்
புகனீக்குதல் கார ணம்மாத்
தேடுஞ் சிறுபேய்
பெரும்பேய்த்தியைச் சென்று பற்றும்
பாடும் மவடான்
பகைகொண்டுபல் கால்வெ ருட்டி.
8
தான்கண்ட வன்செய்
தவந்தன்னைக் கலக்க கில்லா
மான்கொண்ட
நோக்கின் னவளாய்மற மாற்றி யபின்
னூன்கொண்ட காட்சி
முதலாக வுடைத்த தெல்லாம்
யான்கண்ட வாறே
யுரைப்பன்னவை யார்க் கிதனை.
9
----------------------
No comments:
Post a Comment