குண்டலகேசி வாதம்
கொல்லை முல்லைபைங்
கோங்குருந்தங் கோடறண் குரவ
நல்ல மல்லிகை
நறவம்ஞாழல் தாழைபுன் னாகம்
பல்லி தழ்ப்பனிக்
குவளை பானல் பாதிரி பிறவு
மெல்லை யின்மல
ரேந்தி றைவன திடவகைக் கெழுந்தாள்.
150
நீட்சி யோக்கமோ
டகலநினையநின் றெங்கணு நோக்கி
மாட்சி யால்வலங்
கொண்டுமாதவத் திறைவனிற் பிழையாக்
காட்சி யேனெனி
லெல்லாக்கதவமுந் திறக்கெனத் திறப்ப
வாட்சி மூவுல
குடையவடிகட மடியிணை தொழுதாள்.
151
அத்தி யாளியோ
டாமானட்ட மங்கல மரிய
பத்தி பாவைபல்
பறவைபயில்கொடி திமிசொடு பிறவும்
வித்த கம்பெரி
துடையவசித்திர வுருவநன் மலராற்
சித்த நன்னெறி
பயந்தான்திருவடிக்கு அருச்சனை செய்தாள்.
152
தூமஞ் சாந்தொடு
சுண்ணந்துதியொடு பரவுபு தொழுதே
தாமந் தாழ்தர
நாற்றித்தத்துவ தரிசிய துருவே
யாமென றையென
வியந்தாங்கன்ன வாயிரத் தோரெண்
ணாம நல்லிசை
தொடுத்துநாதகீ தங்களை நவிற்றும்.
153
கன்று காலனைக்
கடந்தாய்காதற் காமனைக் கடிந்தாய்
தொன்று மூத்தலைத்
துறந்தாய்தோற்ற மாக்கட லிறந்தா
யொன்ற நோய்பகை
யொருங்கே யுடைந்து வெங்களத் துதிர
வென்றி ருந்தனை
நீயே வீரர்தம் வீரர்க்கும் வீரா.
154
சாத னோய்சரை
பிறவிதாஞ்செய் திவினைக் கடலுண்
மாது யருழந்
துறுநோய்மறுகு மன்னுயிர்க் கெல்லாந்
தீதி னன்னெறி
பயந்துதிரைசெய் நீள்கரை யொருவிப்
போத ரும்புணை
படைத்தாய்புலவர்தம் புலவர்க்கும் புலவா.
155
அரிய வாயின
செய்திட்டமரர் துந்துபி யறைந்து
புரிய பூமழை
பொழியப்பொன்னெயில மண்டிலம் புதைந்த
விரிகொ டண்டளிர்ப்
பிண்டிமரநிழ லிருந்திரு வினையும்
பிரியும் பெற்றியை
யுரைத்தாய்பெரியவர்ப் பெரியவர்ப் பெரியாய்.
156
பொங்கு சாமரை
யேந்திப் புடைபுடை யியக்கார்நின் றிரட்டச்
சிங்க வாசனத்
திருந்துதெளிந்தொளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை
கவிப்பத்தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம
தறைந்தாயறிவர்தம் மறிவர்க்கு மறிவா.
157
ஊறி யாவது
முணராயுறல்வகை யிதுவென வுரைத்தி
கூறு வேனெனக்
கூறாய்குரன்முர சனையதோர் குணத்தை
செற லுள்ளமு
மில்லையாய்த்திருமலர் மிசையடி யிடுதி
தேறு மாறென்னை
நின்னைத்தேவர்தந் தேவர்க்குந் தேவா.
158
கண்ணி னாலொன்றும்
காணாய்காணவு முளபொரு ளொருங்கே
பெண்ணு மல்லவுஞ்
சாராய்பிரிதலில் போ¢ன்ப முடையை
யுண்ணல் யாவது
மிலையாயொளிதிக ழுருவம· துனதா
லெண்ணில் யார்நினை
யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா.
159
சொற்றி யாவதுங்
கேளாய்சுதநயந் துணிவுமங் குரைத்தி
கற்றி யாவது
மிலையாய்க்கடையில்பல் பொருளுணர் வுடையை
பற்றி யாவது
மிலையாய்ப்பரந்தவெண் செல்வமு முடையை
முற்ற யார்நினை
யுணர்வார்முனைவர்தம் முனைவர்க்கு முனைவா.
160
அன்மை யாரவர்
தாந்தாமறிந்தன வுரைத்த பொய்யாக்கி
நின்மெ யாகிய
ஞானநிகழ்ச்சி நீவிரித் துரைத்த
சொன்மை யாரிடை
தெரிந்தார்தொடர்வினை முழுவதுஞ் சுடுநின்
றன்மை யார்பிற
ரறிவார்தலைவர்தம் தலைவர்க்குந் தலைவா.
161
ஆதி யந்தளப் பரிய
அருகந்த பகவர்த மறஞ்சால்
சேதி யம்புக்க
வர்தந்திருந்தடி களைப்பெருந் துதிசேர்
போதி யிற்பணிந்
திருந்தாள்புன்னெறி தாம்பல வவற்றுள்
யாதுகொ றான்மு னென்னாலடர்க்கற்
பாலது வென்றாள்.
162
ஊன்றின்ற
லிழுக்கென்னானுயிரினையு முளதென்னா
னோன்றலையு
நோன்பென்னானோக்குடைய கணிகையரே
போன்றிருந்து
பொதியறுக்கும்புத்தன்றன் புன்னெறியை
யான்சென்ற·
தடிப்படுப்பறைக்கரும மிதுவென்றாள்.
163
மண்டலத்தி
னோக்குவாள்யடுத்ததன தவதியால்
கண்டனடான்
காம்பிலிக்காவலன் கடைமுகத்தோர்
தண்ட¨¡ய பொழில்நாவற்சாகைநட் டுரைபெறாக்
குண்டலகே
சிப்பெயரைக்குறியாக வேகொண்டாள்.
164
தருமத்திற்
றிரிவில்லாடயாச்செய்தற் பொருட்டாக
நிருமித்த
வகையினதாநெடுநகரை வலஞ்செய்து
திருமுத்தப்
பீடிகைக்கட்சித்தரையுஞ் சிந்தித்தோர்
பெருமுத்தப்
பெண்ணுருவங்கொண் டியைந்த பெற்றியளாய்.
165
அந்தரமே
யாறாச்சென்றழனுதிவே லரசர்கட்
கிந்திரனே
போன்றிருந்தவிறைமகன திடமெய்திக்
கந்திருவ மகளேன்
யான்காவலனைக் காண்குறுவேன்
வந்திருந்த
துரைவிரைந்து வாயிலோ யெனச்சொன்னாள்.
166
கருங்களிறுங்
களிமாவுங் கந்தோடு பந்தியவே
நெருங்குபுபோய்
நீருண்ணாதேர்பண்ணா நெடுங்கடைக்குப்
பெரும்படையுஞ்
சாராதிப் பெண்பாவி மரநட்டிங்
கிருந்ததன்
றிறத்தினாலெனக்கரிது புகலென்றான்.
167
வாயிலோ னுரைகேட்டு
வடிக்கண்ணாண் முகநோக்கி
கோயிலையான்
புகவிலக்குங்குறையென்னை முறைதிருத்தும்
பூசலிங்
குடையையோபொருளிழவோ வுயிரிழவோ
நீயிலையார்
புதனடற்குநிமித்தமிங் கென்னென்றாள்.
168
என்கருமம்
வினவுதியேலிலிங்கியரு ளென்னோடு
நன்குரைப்பார்த்
தரவ்வேண்டிநாவற்கொம் பிதுநட்டே
னுன்கரும நீ
செய்வாய்நுழைந்தறிவு முடையையேல்
மன்பெரியான்
றிருந்தவையுண்மாற்றந்தா வெனச்சொன்னாள்.
169
அப்படித்தே யெனின்வாயிலடைப்பொழிக
யானைதே
ரெப்படியு
மியங்குகநும்மிறைமகற்கு மிசைமினென்
றிப்படியா
லிவையுரையாவிலைநாவ லிறுத்திட்டா
டுப்போடு
கனிதொண்டை துயில்கொண்ட துவர்வாயாள்.
170
வேந்தனு மதுகேட்டே
விம்முயிர்த்த வுவகையனாய்ப்
பூந்தடங்க ணல்லார்
புகுதுக வெனப்புகலும்
போந்திருக்க வெனவிருக்கை
பொருந்திய வாறவர்கட்
கீந்துலகத்
தியற்கையு மினிதினிற் செய்திருந்தான்.
171
முதலவனோ
டவனூலுமந்நூலின் முடிபொருளு
நுதலிய
பொருணிகழ்வுந்நுங்கோளு மெமக்கறியத்
திதலைமா
ணல்குலீர்தெருட்டுமி னெனச்சொன்னா
னதலையும்
பெருங்கதவமடைப்பொழித்திட் டலைவேலான்.
172
நன்றாக வுரைத்தனைநீநரதேவ
நின்னவையுள்
வென்றார்க்கோர்
விழுப்பொருளும்தோற்றார்க்கோர் பெரந்துயரும்
ஒன்றாக
வுரையாக்காலுரையேன்யா னெனச்சொன்னாள்
குன்றாத
மதிமுகத்துக்குண்டலமா கேசியே.
173
அறத்தகைய
வரசனுமதுகேட்டாங் கவர்க்குரைப்பான்
சிறப்பயர்வ
னன்றாகவென்றார்கட் கின்றேயான்
புறப்படுப்பன்
றோற்றாரைப்பொல்லாங்கு செய்தென்றாற்
கிறப்பவும்
பெருதுவந்தாரிலங்கிழையா ரிருவருமே.
174
வேனிரைத்த
விரிதானைவேத்தவையார் வியப்பெய்தக்
கோனுரைத்த
வுரைகேட்டே குண்டலமா கேசியுந்
தானுரைத்தாள்
தான்வேண்டுந்தலைவனூற் பொருணிகழ்ச்சி
தேனிரைத்த
கருங்குழலா டானும்பின றெருட்டினாள்.
175
ஆதிதான்
பெரியனாயறக்கெடு மளவெல்லா
மூதியமே
யுணர்ந்தவனுறுதரும மேயுரைத்தான்
யாதனையுந்
தான்வேண்டானயலார்க்கே துன்புற்றான்
போதியா
னெம்மிறைவன்பொருந்தினா ருயக்கொள்வான்.
176
முந்துரைத்தான்
முந்நூலு மந்நூலின் முடிபொருடா
மைந்துரைப்பி
லுருவுழப்பறிவோடு குறிசெய்கை
சிந்தனைகட்
செலவோடுவரவுமே நிலையில்லை
தந்துரைப்பி
னெரிநுதிபோற்றாங்கேடு நிகழ்வென்றாள்.
177
சொல்லியவந்
நான்மைமேற்றுணிவினையுந் தான்பெயர்த்து
நல்லவையை
மனங்கொளீஇநான்மையின் முதல்வைத்த
வெல்லையில்
குணத்தலைவரிலக்கணமென் றெடுத்ததன்மேற்
பல்வகைய
பெருங்குற்றம் பதம்பதமாயக் கேளென்றாள்.
178
முன்னெனப்
படுவதுதான்முதலில்லாத் தடுமாற்றம்
அன்ன தன்கட்
பெரியனேலறங்கொண்ட தவமாகும்
பின்னதன்கட்
பெரியனேற்பிறழ்வெய்துங் காலச்சொ
லென்னென்றான்
பெரியவாறிருமையினுந் திரிந்தென்றாள்.
179
பெருமைமுன்
பெற்றனனேற்பின்னைத்தான் முடிப்பதோர்
கருமமிங் கெவனாகுங்காட்டுதியேற்
பெற்றிலன்முன்
றருமந்தான்
கருதிநீசொன்னாயேற் றலைவரே
யொருமையா
லறந்தெளிந்தவுழப்புலையர் முதலானார்.
180
தான்கெடினுந்
தக்கார்கே டெண்ணற்க வென்பதனை
யூன்கொடுமை
யுரைத்தான்·துணர்ந்திலனே
யாகாதோ
தான்கெடு
மளவெல்லாநினைந்துரைத்த தத்துவந்தான்
மான்கடியு நோக்கினாய்வழியறக்கெட்
டொழிவதோ.
181
வழிவாழக்
கெடுகின்றார்மாந்தருள் மேலாயார்
பழிபாவ
மோராதான்பற்றினார்ப் பாழ்செய்வான்
ஒழிபாவி
தலைவனென்றுரைப்பதனை யுலகத்தார்
கிழியோடு
மாறாக்காசென்றான்சொற் கேட்பவோ.
182
நுனைத்தலைய
நுண்மயிரைநுனியுறீஇ விதிர்த்திட்டா
லனைத்துணைய தடங்கலுமறக்கிடந்த
பிறந்துழப்பு
நினைக்குங்காற்
பிறர்க்கேயாமென்றியா னீயன்னா
யனைத்துணைய
பெரும்பாவமவன் செய்தா னாகானோ.
183
துன்பந்தான்
றீவினையின் வழித்தோன்றுந் துன்பேயா
மென்பதனை நுமரேடீ
யெப்பொழுது முரைப்பவாற்
பின்புந்தான்
பிறர்பிறர்க்குப் பிறந்துழப்பே யாக்கினா
லன்பினான்
முன்செய்த தருவினையே யாகாதோ.
184
தனக்கொன்றும்
பயனின்றித்தளையாளென் றான்வருந்தி
யெனைப்பெருங்
குப்பையுமெருச்சுமப்பாற் கண்டக்கால்
நினைப்பதொன்
றுடைத்தவன்செய்நெடும்பாவ நிச்சலும்
மனக்கினிதா
வவன்றன்னையாள்வார்மாண் புரையாயோ
185
அவ்வகையா
லுழக்கின்றா னயலார்கள் படுகின்ற
வுய்வகையில் போ¢டரையொழிப்பதன் பொருட்டாக
விவ்வகையா
லருள்செய்யு மென்பதனை யெடுத்துரைத்தாள்
கொவ்வையந் துவர்ச்
செவ்வாய்க்குண்டலமா கேசியே.
186
அருளினாற்
பிறர்க்குழக்குமனனென்ற வவ்வுரையைப்
புரளல்நீ
பிறப்பொழியும்பொழுதின்க ணவ்வருளைப்
பொருளன்மை
கண்டானோபுற்கலர்தா முலர்ந்தாரோ
தெருளநீ
யுரைத்துக்காண்டிருந்தவையா ரிடையென்றாள்.
187
ஊடுபுக் குயிரடுந்
துயரந்தா னொழிக்கின்றான்.
வீடுபெற்
றிறந்தனனேல் விளிகவன தருள்பாவி
யோடுகிற்
றிலனொன்றுந் தாதையையே யுழப்பித்தோ
னாடைபற்
றெனவுரைத்த வவன்போன்றா னாகாதோ.
188
அங்கிருவ ருளரன்றோ
வறப்போக்கிப் போவாரென்
றிங்கிருந்து
நீயஙரைத்தா லிவனருள்யார் தெளிகிற்பார்
அங்கிருவ
ருளரெனினு மவரின் முன் னவையீரே
நங்கரும
முலைப்பித்து நாம்போது மெனநக்காள்.
189
முன்கொன்றான்
றன்றாயைமுழுமெய்யும் போர்த்திருந்து
தின்கின்றான்
பிணம்வீடுந்தெருட்டுங்காற் சூனியமே
யென்கின்றா
னிவன்போல்வாரிறைவரில் லெனவுரைப்பாய்
தன்கன்று
சாக்கறப்பான்றயாப்பிறிதிற் குடையவனோ.
190
கண்ணொடுகா
திவையிலள்கரந்தன முலையிரண்டு
முன்னும்வா
யுதட்டோடுமூக்கில ளுறுநோய்த்தி
பெண்ணழகிற்
கிவள்பிறராற்பேசவும் படுவாளோ
எண்ணுங்கா
லென்பேதையெனவுரைக்கு மவனொத்தாள்.
191
பருவரலொன்
றிலன்றாயைப்பழுப்பறித்தான் தலைவனிவள்
கருவரைமேற்
றன்கணவன்காலனையுங் கவிழ்த்திட்டாள்
இருவரையும்
போல்வாரிவ்விருநிலத்தின் மேலெங்கும்
பெருவழியார்
பேரருளார்பிறர்யாரே யெனநக்காள்.
192
ஒண்ணுதலா
யுன்றலைவனொழிவின்றி யுணர்கலான்
கண்முதலா
வுரையவிக்கருவியிற் கண்டுகேட்
டெண்ணியு
முணர்தலாவிலைசுமக்கு மொருவன்போ
னுண்ணுணர்வு
தனக்கில்லானுரைத்ததுதா னூலாமோ.
193
ஐங்கந்த
மெனல்பிழைப்பா மறிவினின்வே றாதலாற்
சிங்குந்தன்
குறியுழப்புச்செய்கையென் றிவைமூன்று
மிங்கொன்று
முருவினோடிரண்டென்னாய் மிகவுரைத்தாய்
சங்கந்தா
மல்லவேற்றத்துவமுந் தலைப்பட்டாய்.
194
முன்னைத்தன்
முழுக்கேடுமுழுக்கேட்டின் வழித்தோன்றும்
பின்னைத்தன்
பிறிதறிவும்பெயர்த்துரைத்தல் பெரும்பேதாய்
என்னொக்கு
மெனினெருநலிற்புகுந்தா னிடையிராத்
தன்னைத்தந்
தெனைக்கொண்டுதான்சென்றா னெனலன்றோ.
195
கள்ளனுந்
தானேயாய்க்கையாப்புண் டவனேபோ
லுள்ளந்தா னின்றவற்றை
யுணர்ந்தவற்றோ டறக்கெட்டிங்
கெள்ளனைத்து
மில்லென்றாலிறப்பறித லெவனாகுந்
தெள்ளியாய்
தெளிந்திருந்துசிந்தித்துக் காணாயோ.
196
கோன்பட்டான்
குந்தத்தாற்கத்துண்டா னேனாதி
தான்பட்டான்
றளவீரன்தப்பியோ டவனருகே
யான்பட்டே
னென்பவன் போல்யாத்திருந்தே சொல்லுதியால்
தான்பட்டான்
பட்டார்க்குத் தன்பாட்டை யுரைக்குமோ!
197
பிறைப்பிறப்பும்
பிள்ளைகடம்பிறப்பினையு மெடுத்துரைப்பின்
மறைபொருள்கள்
வெளிப்பட்டாமன்னுந்தாங் கருதுபவால்
குறையென்னை
வான்வயிற்றாற்குண்டலமா கேசியித்
தறையகத்துப்
பிறப்புரைத்தாள்றத்துவமாக் கொள்வாமோ.
198
பின்னசந் தானமும்
பிறிதில் சந் தானமு
மின்னவென்
றிரண்டுரைத்தெத்துணையோ பொழுதோதிச்
சொன்னதன்
பொருளெல்லாஞ்சுவடின்றி யறக்கெடுத்தற்
கன்னதே
யெனிலாதனாழிநாட் டாகாதோ.
199
எண்ணிலாப் பலகந்த
மிடையறா வென்றுரைப்பிற்
கண்ணுறா
தொன்றுதலாற்கலப்பிலவா மாகவே
திண்ணிதா
மிடையறவுதீண்டுமேற் றிரண்டொன்றா
அண்ணறான்
முடிந்தறக்கே டரியதே போலுமால்.
200
வாசனையி
னாமெனினும் வழியதனின் முதலதொன்
றாசனைத்து
மில்லையே லறிந்துரைப்பு மரிதரோ
பேசினைநீ
உளதெனினும் பெருந்தாமத் துண்ணூல்போல்
லோசனையி னெடியதோ
ருயிருரைத்தா யாகாயோ.
201
பாதிரிப்பூப்
புத்தோடு பாழ்ப்பினுந்தான் பல்வழியும்
தாதுரித்தாங்
கேடின்மை யென்பதுநுன் றத்துவமோ
போதுரைத்த
வோடுநீர் போலுடம்பு பொன்றிடினும்
மூதுரைத்த
வாசம்போன் முடிவுயிர்க்கே யாகாதோ.
202
சத்திதான் சென்றதே
யென்றியே லைந்தன்றிப்
பொத்திநீ
யுரைக்கின்ற பொருளோடா றாகாவோ
சத்திதா னதுவன்றி
யைந்துமே யாயினும்
பித்தியாய்
முழுக்கேடு பேசினா யாகாயோ.
203
அலைபலவே
யுரைத்தாளென்றருகிருந்தோர் கருதுதலுந்
தலைவனூல்
பொருணிகழ்ச்சிதங்கண்மேற் குற்றங்க
ணிலைபெற
வுரைத்தின்மைநிறுத்துவன்யா னென்றுதன்
தலைவனீ
பொருள்களேதானாட்ட லுறவினால்.
204
கண்கொடுத்தான்
றடிகொடுத்தான்கயப்புலிக்குத் தற்கொடுத்தான்
பெண்கொடுத்தா
னுடம்பினையும் பிளந்திட்டுப் பிறர்க்கீந்தான்
மண்கொடுத்தான்
மகக்கொடுத்தான்மன்னுந்தற் சேர்ந்தார்க்கு
விண்கொடுத்தா
னவன்கொடுத்த விரித்துரைப்பன் கேளென்றாள்.
205
ஏதி லாரிடர்
தீர்க்கு மெமவிறை
சாத கம்மிவை
யென்று தலைத்தலை
யோகி னாணின்
றொருபக லெல்லையுங்
கோதை வார்குழற்
குண்டல கேசியே.
206
நூலு நாரு
மிசைத்தன வொத்தலா
னீல கேசி நெடுங்க
ணாள்சொல்லு
மாலும் பேயு
முடையவர் செய்கையே
போலு நீ சொன்ன
புத்தர் சரிதையை.
207
போழுங் கண்ணுந்
தலையுந் தடிகளுந்
தாழ மின்றி
யிவைதம்மி னோவென
வாழு மாந்த
ருழைவரு வாரில்லை
கூழன் றன்னுழை
யேகொளச் செல்பவோ.
208
பிளத்த லுள்ளிட்ட
வாய்ச்செல் வதிந்திர
னளத்தற் கேலவன்
றானறி யும்பிற
னுளத்தை யோரல
னேலவன் றேவனாக்
கிளத்த றானோர்
கிழமையும் போலுமே.
209
யாவ னாயினு மன்னவ
னின்மையிற்
றேவ னென்று
தெளியுந் தெளிந்தபின்
சாவ னென்பதோர்
சங்கைய மின்றியே
யீவ னென்பதோ ரிச்சையுந்
தோன்றுமே.
210
உறுதி யல்ல
துணர்வடையான்றனக
கிறுதி யேலென்று
மிந்திர னெண்ணலன்
மறுதி யின்மையின்
மாணிழை நீயெங்குப்
பெறுதி முன்னெடு
பின்னியை யாதவே.
211
ஆத னாற்குறந்
தாங்கெழு வான்றும்ம
வேத மில்சுட
ரேற்றொரு தாமென்றான்
சாத கம்மிவற்
றானருள் சாதிப்பா
னோதி னார்க்கு
முணர்வொருப் பாயதே.
212
எருது பாலின்மை
யெண்ணலன் றும்மலே
கருது மாதனுங் கண்
முத லாயின
தருத லல்லது
தங்குறை யீதெனார்
மருதின் வாழ்பகை
யானவிம் மாந்தரே.
213
பாக மேபிளந்
தாற்பர காயமொன்
றாகு மேயென வீவ·
தாதன்மை
காக மேயுண்ணுங்
கண்ணுமற் றன்னதே
யேக மெய்யும்விண்
டாலியை யார்களே.
214
உள்ளந் தானிரு
பாகினு முண்மையாற்
கொள்கின் றானிவ
னேகொல்லு வான்றனை
யெள்ளி நேரு
மறிவில்லை யேற்பிணங்
கொள்ளென் றீர்ந்து
கொடுப்பினுங் கூடுமோ.
215
கூறு கூறுசெய்
தாலுடம் புள்ளுயிர்
வேறு வேறு
செலல்வெளி றாக்கொளாய்
பாறு வாயுரைக்
கும்பர மாத்தங்க
டேறு வாருள
ரோதெருண் டார்களே.
216
புத்த னார்வண்ணங்
கண்ட புனையிழை
சித்த னேயென்னைச்
சேர்மின மென்றலி
னத்த கன்னருள்
செய்கல னாய்விடின்
மத்த கம்பிளந்
தானென்றன் மாயமே.
217
ஆவ தின்மை யறிந்து
மவத்தமே
சாவ தேயுங்கள்
சத்துவர் சால்பெனிற்
காவல் பூண்ட கணவனோ
டீமத்தின்
வேம வட்கும்
விழுக்குண மாங்கொலோ.
218
சாந்தி யாகத் தரும
முரைப்புழிக்
காந்தி பாவியைக்
கண்டு கலகன்றா
னேந்தி வெம்படை
யாலெறிந் தாற்கிடம்
போந்து கொண்டதும்
பொய்யினுட் பொய்யன்றோ.
219
யானை யுள்ளா
செங்குள தங்கெலாம்
வான நின்று
வழிபடல் காண்டுமான்
மீனு மல்லவும்
வேதனை யெய்துழித்
தான தாதற்றா
தாகதர் தன்மையோ.
220
குரங்கு மாயவை
கொல்லிய செல்வழி
யிரங்கி யேயுயக்
கொண்டது மென்றியாற்
குரங்கு நேர்குதி
யாக்குரங் கெங்குள
மரங்கள்
பாய்ந்திடு மாண்பின வல்லவோ.
221
சீல நல்லவர்
நீள்குவர் சேணெனிற்
கோல மில்குரங்
காட்டிக் கொல் வார்களைக்
காலுங் கையு மெழற்கெனக்
காண்கிலான்
வாலை நீட்டிக்
கிடத்தறன் மாட்சியோ.
222
தாய்க்கொன்
றான்றங்கு செங்குரு திப்புனல்
பேய்க்கொன் றீதல்
பெருங்கொடை யென்பதை
வாய்க்கின் றாயினி
மானுயர் மாசெலா
நாய்க்கென் றாலிது
நல்லற மாங்கொலோ.
223
யான்செ யும்பொரு
ளென்றங்கொ ரேகாந்தன்
தான்செய் திட்டனன்
சாதக கற்பங்கள்
மான்செய் நோக்கி
மதிப்பொழி நீயெனக்
கோன்சொ னானிது
குண்டல கேசிக்கே.
224
முயலுரை யிதுவெனெ
மூடிக் கொண்டிருக்ந்
தயலார்க் குரைப்பவ
ராத ரல்லரோ
புயலிருங் கோந்தலி
பொருந்தச் சொல்லினாள்
வியலவ ருரையொடு
விரோத மில்லையே
225
அரசிறை
யிட்ஜுசொலவவை நார்களு
முரைசெறி வுடையன
வுரைத்த நீர்மைபூண்
முரைசொடு
நெடுங்கொடி முலூங்க நாட்டுக
விரைவொடு படுகென
வேந்த னேயினான்.
226
இருப்பதென்
னினியன்னா யிதுநுமக் குரைத்தார்யார்
சும்க்கினைக்
கடிதாகச் சொல்லெளூக் கெனலோடுக்
திருக்கிளர்
மதிலுஞ்சை தென்றிசை யகனகரு
ளம்க்கசந்
திரனென்னு மவாச்சிய னெளூச்சொன்னாள்
227
கட்டுரை
பலசொல்லிக் காவல் நெடுங்கடை நாவலைமுன்
னட்டிவ ணகரிடை
நகைசெய்து புகுந்தவிந் நன்னுதலை
வட்டிகொள்
பறைகொட்டி வழுவுரை பலசொல்லி (வாரலென்று
பெட்டன பலசெய்து
பெருநகர் வாயிலைப் புறப்படுத்தார்.
228
புனத்திடை
நறுமலர்ப் பூங்கொடி யன்னதோர் பொற்பினளாய்
எனைப்பல நூல்களு
மியல்பினி னறிபவ ளேதமில்லாள்
தனக்கினி
யான்செயற் பாலதுதானென்னை யெனவுரைத்தான்
இனத்தகை யேற்றரி
யிடியுறுமேறெனு மிவற்றை யொப்பான்.
229
ஆண்டகை அரசிறை
அதுசொல்லக்கேட்டவவ் வறத்தகையா
டீண்டல னணிபிற
புனைவெனுநினைவிலன் றினையனைத்தும்
வேண்டல னிலனொடு
விழுநிதியினையவும் விறற்றகையா
யீண்டினி யறநெறி
யுறுகெனவேந்திழை யியம்பினளே.
230
வந்தது மிதுபொருண்
மன்னவயானென நன்னுதலா
ளிந்திர னனையநின்
னிறைமையினறநெறி யிகழலென்றாங்
கந்தர நெறிசெலற்
காயிழையரசனை விடுத்தருக்க
சந்திர னிருந்தவத்
திசைமுன்னித்தளிரிய றானெழுந்தாள்.
231
No comments:
Post a Comment