Tuesday, September 30, 2014

GOONAMPADI - கூனம்பாடி



Shri MALLINATHAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ மல்லிநாதர் ஜிநாலயம் 





Goonambadi lies on the clicked map in the coordination of (12.42132, 79.52981) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கூனம்பாடி கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )
(முழுவதும் குறிக்கபடாதது )




ROUTE:

Tindivanam → Vandavasi road → Thellar   GOONAMPADI = 29 k.m.

Gingee → Pennagar road → vedal → Kunnagampundi →  GOONAMPADI = 25 k.m.

Vandavasi → Tindivanam road  → Kunnagampundi road  GOONAMPADI = 18 k.m.

Villupuram → Gingee → Pennagar road vedal → KunnagampundiGOONAMPADI = 65 k.m.

Chetpet  → Mazhaiyur   → Desur turn → Desur (Thellar road) GOONAMPADI = 30 k.m.



செல்வழி:.

திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → தெள்ளாறு கூனம்பாடி  = 29கி.மீ.

செஞ்சி → பென்னகர்   வெடால் கூனம்பாடி  = 25 கி.மீ.

வந்தவாசி → திண்டிவனம்  சாலை   → கூனம்பாடி  18 கி.மீ.

விழுப்புரம் செஞ்சி → பென்னகர்   வெடால்  கூனம்பாடி  = 65 கி.மீ.

சேத்பட்  வந்தவாசி சாலை → தேசூர்   → தெள்ளாறு சாலை  
கூனம்பாடி  =  30 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மல்லி தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து மிதிலாபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து கும்பன் மஹாராஜாவிற்கும், ப்ராஜாவதி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 25 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 55 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும், கலசம் (கும்பம்) லாஞ்சனத்தை உடையவரும், குபேர யக்ஷ்ன், அபராஜிதா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விசாகராத் முதலிய 28  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல பஞ்சமி  திதியில் 96 கோடி முனிவர்களுடன் சம்பல கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீமல்லி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





Koonambadi,  a village in Vandavasi, about 18 kms.  in the southwest direction near Agarakorakottai. A beautiful, well-maintained Jinalaya built by the native jains, living several centuries ago. However, the Panchkalyan was celebrated 45 years ago, the frequent cleaning, regular colour washing, repairing and polished metal idols make the temple as new one.

The nineteenth Thirthankar Shri Mallinathar statue resides in the sanctum with eight features. That is crownd by two stages shikara and a kalash. In the Arthamandap a white marble made Shri Mallinathar statue, for daily rituals; 24 thirthankars stone made idol, metal idols of Thirthankars, Yakshas, Yakshis , Nandheeswara Dheepam, Maha meru models are arranged on a dias. Muga mandap comprises of Shri Dhrmadevi shrine and multicolored art pictures.

East facing entry and compound wall are surrounded the corridor. An altar and a tall Manasthamp has thirthankars engravings on four sides of bottom and a vimanam with four statues of Shri mallinathar on the top.

Regarding Poojas: Daily pooja, Nandheeswara pooja, margazhi month Mukkudai and special Poojas are conducted regularly.

Annually a procession festival  celebrated on the day of Akshaya thirithiyai for Shri Ananthanathar idol.      



கூனம்பாடி என்னும் கிராமம், வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் (அகரகொரக்கோட்டைக்கு அருகில்) மேற்கு திசையில் தெள்ளாறுகுன்னகம்பூண்டி சாலையில் 18 கி.மீ. தொலைவில்  அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்த ஊரில் சமண இல்லறத்தார்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கான சான்றே இவ்வாலயம் ஆகும். 45 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சகல்யாணம் செய்யப்பட்டிருந்தாலும் , தற்போது சீரமைக்கப் பட்டது போன்ற புது பொலிவுடன் பராமரித்து வருகின்றனர். அடிக்கடி வர்ணம் பூசுவதோடு மட்டுமல்லாது, புதிது போல் காணும் திருமேனிகளின் அணிவகுப்பும், பல சீரமைப்பு பணிகளும் சான்றுகளாக உள்ளது.

நிகழ்கால ஜினர்களின் வரிசையில் 19 வது தீரத்தங்கரரான  ஸ்ரீமல்லிநாதரை கருவறையில் மூலவராக  கொண்டு  விளங்குகிறது.  எட்டு சிறப்புகளையும் கொண்டுள்ள அவரது கற்படிமம் பல நூற்றாண்டைக் கடந்து நிற்கிறது. கருவறையில் மேல் இரு அடுக்குகள் கொண்ட சிகரமும், மேற் கலசமும் பாங்காக அமைக்கப் பட்டுள்ளது.  அதற்கடுத்து  அர்த்த மண்டபம்; அதனுள் ஸ்ரீமல்லிநாதரின் வெண்பளிங்கு கல்லால் ஆன படிமம் நித்ய நியமங்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே 24 தீர்த்தங்கரர்கள் கற்சிலையும் , மற்றும் பல உலோக படிமங்களால் ஆன தீர்த்தங்கரர்கள் (பிரபையுடன்), யக்ஷன், யக்ஷி யின் திருவுருவங்கள், நந்தீஸ்வர தீபம், போன்ற சமண சமய விழாக்களுக்கு கேற்ற படிமங்கள் வரிசையாக மேடையில் வைக்கப்பட்டுள்ளன. முக மண்டபத்தில்; சுவர்களில் வண்ண ஓவியங்களும், ஸ்ரீதர்மதேவி சன்னதியும் அமைக்கப் பட்டுள்ளது.

திறந்த வெளி திருச்சுற்றில் அழகிய பலிபீடமும், உயரமான மனத்தூய்மைக் கம்பம்: நாற்புரம் தீர்த்தங்கரர் உருவ சிற்பங்களுடனும், மேற்புர விமானத்தில் நான்கு திசையிலும்  ஸ்ரீமல்லி நாதரின் சிலைகளுடனும் அமைக்கப் பட்டுள்ளது. ஆலய  திருக்சுற்றுக்கு, கிழக்கு நோக்கிய நுழைவாயிலும், மதிற்சுவரும் கட்டப்பட்டுள்ளது.  மேலும் அழகிய நந்தவனமும் பராமரிக்கப்பட்டுள்ளது.

நித்ய பூஜை, நந்தீஸ்வர பூஜை மற்றும் விசேஷ பூஜைகளும் வளமைபோல்  நடைபெற்று வருகின்றது. அக்ஷய திரிதியை அன்று ஸ்ரீஅனந்தநாதர் திருவீதியுலா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.





No comments:

Post a Comment